எங்கேயோ பார்த்த மயக்கம் -22
நரசிம்மன் சொல்லுவதை இமை அசைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள் மலர்...
காலேஜ் போய் ஒழுக்கம் இல்லாது போயிட்டான்... நான் பயந்த மாதிரியே ஆயிட்டான் மலர்மா... நீ சொல்லுறதுக்கு முன்னாடியே ஜீஜேவை பற்றி எனக்கு தெரியும்டா காலேஜ்ஜில ப்ளே பாய் மாதிரி சுத்திட்டு இருக்கான்னு கேள்விபட்டேன்...
பிறகு , அவங்க அம்மா பிஸினஸை அவன் எடுத்து நடத்த ஆரம்பித்தான்... விளையாட்டுதனமா இருந்தவன்மேல் பெரிய பாரத்தை ஏற்றிட்டேன்...
இந்த பிஸினஸ்ல ராமனாவே இருந்தாலும் மாற்றிடுவாங்க மலர்... அந்தமாதிரியான நாகரிகம் அது.. கண்டிப்பா பார்ட்டி அட்டன் செய்யனும்.. போனா குடிக்கமாக இருப்பானா.. அப்பறம் பொண்ணுங்க சாவகாசம் ...
ப்ச்... ஆனா இனிமே எல்லாம் உன் கையிலதான் இருக்கு மலர்..
என்னிடமா தாத்தா...
ஹாங்...நீதான் உன் புருஷன கைக்குள் வச்சிக்கனும்டா... பாரு அவன் எப்பவுமே டென்ஷனா இருப்பான், எதிரிங்க வெளியில இல்ல மலர் , வீட்டுக்குள்ளே இருக்காங்க.. ஜீஜேக்கு..
வெளியிலே அவன் ராஜாவா இருந்தாலும்.. அவனை அடக்கி ஆளுற ராணியா நீ இருக்கனும்... அதாவது நல்ல ஆலோசகரா இருக்கனும்...
மனைவி என்பது அவனில் பாதிடா... கணவனின் முகம் பார்த்தே மனைவி புரிந்துக்கொள்ளனும்... ஒரு சிலநேரத்தில விட்டுக்கொடுத்து நடந்துக்கனும்.
தாத்தா... இந்த ஜீஜே என் பேச்சை எப்படி கேட்பாரு... அவனுக்கு கோபம் மூக்குமேல வரும்தாத்தா.. எனக்கு பயமா இருக்கும்...
பயப்படாத மலர்... எதையும் மறைக்காம உண்மையா பேசனும்.. அவன் எங்கபோறான், எதுக்கு போறான் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்... ஆபிஸூல என்ன நடக்குதுனு கேட்கனும்...
அய்யோ ஏற்கனவே ரொம்ப பேசுவான்.. இப்போ இதெல்லாம் கேட்டா... நைட்டு முழுக்க பேசுவான் என்று மனதிற்குள் புலம்பினாள்..
அவர் பேசுவதை பொறுமையாக கேட்டு தலையை ஆட்டியபடி சின்னபிள்ளைபோல் கேட்டுக்கொண்டாள்.. தாயோ, தகப்பனோ இருந்திருந்தால் புகுந்துவீட்டிற்கு போகும் பிள்ளைக்கு அறிவுரை கூறியிருப்பார்கள்.. இவளுக்குதான் யாருமேயில்லையே...
பெரியவர் பேசுவதை மனதில் வாங்கிக்கொண்டாள்... நீங்க ஃபீல் பண்ணாதீங்க தாத்தா.. அவனை நல்லா பார்த்துப்பேன்..
நீ கண்டிப்பா பார்த்துப்ப மலர், எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு மா..
.......
மாலை நேரம் காற்று வீசியது அந்த ஊட்டியின் க்ளைமெட் மாற தொடங்கியது...நேற்று ஜீஜே காண்பித்த பால்கனி ஞாபகம் வந்தது... கதவை திறந்து பால்கனிக்கு சென்றாள் மலர்..
சுற்றி ரோஜா தொட்டிகள் இருந்தன... கலர் கலரான ரோஜா செடிகள்.. இதெல்லாம் உனக்காக தான் மலர் வாங்கினேன், அங்கே காலை நீட்டி உட்காருவதுபோல் சோபா போடப்பட்டிருந்தது..
இங்கபாரு உனக்கு போரா இருந்துச்சுனா, இங்க வந்து ரெஸ்ட் எடு... காலையில பார்த்தா , சூப்பரா இருக்கும் மலர்.. இந்த ரோஸ், பின்னாடி தெரியற மலைகளோட வீவ்யூ.. எப்படியிருக்கும் தெரியுமா.. நீ என்னை நினைச்சு இந்த ரோஸ்கிட்ட பேசு.. டேரக்டா என்கிட்ட வந்து சொல்லுடும்..
லூஸூ மாதிரி உளராதே ஜீஜே.. போய் தூங்கு என்றாள் மலர்..
அந்த இடமே சிறிய ரோஸ் தோட்டம்போல் இருந்தது.. தரையில் ப்ளஸ்டிக் புல்வெளி விரிப்பு பால்கனி சுற்றி செடிகள்... அங்கிருந்த ஜக்கை எடுத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள்... உயரமா இருக்கும் தொட்டிக்கு தண்ணீர் ஊற்ற, ஸ்டூல் போட்டு ஏறினாள் மலர்..
ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்த ஜீஜே.. ப்ளவர் என்று கூப்பிட்டு கொண்டே தனது அறைக்கு வந்தான்... எங்கே ஆளையே காணோம்..
பால்கனி கதவு திறந்திருப்பதை பார்த்தான்..
ஓ... பால்கனியில இருக்காளா... அங்கே வந்தான்.. அவன் பார்த்த காட்சியில் வாயை பிளந்து அப்படியே நின்றான் மலரை கவர்ந்தவன்.. அய்யோ சுண்டி இழுக்குதே... அவள் உடுத்திய ரோஸ் நிற சேலை காற்றில் அசைந்தாடா.. மஞ்சள் நிற இடுப்பு தெரிந்தது..
ஹா..ஹா.. ஒரு கவிஞன் சொன்னது ஞாபகம் வந்தது அவனுக்கு, பிரம்மன் படைத்த சிலைக்கு திருஷ்டி பொட்டு அவள் நாபி,..
மலர் நிற்கவும், அவன் கண்ணேதிரே தெரிந்தது.. அய்யோ சுண்டி இழுக்குறாளே... ஹீரோ பெர்பாம்மென்ஸ் செய்ய விடமாட்டாளா..
மெல்லிய இடை... அதில் ஒரு..
தண்ணீரை ஊற்றி கீழே பார்த்தாள்.. அவன் பார்க்கும் பார்வையிலே பதட்டம் அடைந்து சேலையால் இடையை மறைத்தாள்...
அப்பவும் காற்று பலமாக வீச... மெல்லிய சேலை அவள் இடுப்பில் நிற்கவில்லை... இருவருக்குள் அமைதி.. சட்டென்று அவள் இறங்க பேலன்ஸ் ஆகாமல் கீழே விழ போனாள்.. பிடித்து விட்டான் ஜீஜே..
ஏய் பார்த்து இறங்குடி.. அவன் ஆசையோ அடுத்த நிமிடமே நிறைவேறியது.. அவள் இடையை வளைத்து பிடித்திருந்தான் கள்வன்..
இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் பயனிக்க...என்ன இவ்வளவு சாப்டா இருக்கு இன்னும் கைவிரலால் அழுத்தினான் அவள் இடையை.... அவ்வளவுதான் முழித்துக்கொண்டாள் மாது... விடு ஜீஜே என்று அவனைவிட்டு விலகினாள்..
அவனை முறைத்துக்கொண்டு நின்றாள் மலர்..
எதுக்கு முறைக்கிற.. பார்த்து கண்ணு வெளிய வந்திடபோது..
என்னைய தொடக்கூடாது தானே சொன்னேன்.. எதுக்கு அங்க கையை வச்சே..
எங்க.. ஓஓ.. உன் ஹிப்ல.. இதென்னடா வம்பா போச்சு... நீ கீழே விழற.. எப்படி உன்னை பிடிக்கிறதாம்.. காலையா பிடிப்பாங்க.. இது தற்செயலா நடந்த ஒரு விபத்து.. புரியுதா மக்கு...
இல்லையே, உன் பார்வை வேறமாதிரியா இருந்துச்சு..
எப்படி..
அவளுக்கு சொல்ல தெரியவில்லை, மயக்கம் கண்ணழகன், தடுமாறினாள்.. அது..அது.. என்று, இந்த பேச்சு வேற எங்கோ போகுதே.. இத்தோட முடிச்சிக்கனும்..அவள் மனதில் நினைத்து, ஜீஜே ஆபிஸிலிருந்து டயர்டா வந்திருப்ப.. நான் காபி எடுத்துட்டு வரேன்..
அதற்குள் ரூம் கதவு தட்டும் சத்தம்... ம்ம் நான் முனுசாமிக்கிட்ட சொல்லிட்டு வந்தேன் காபி கொடுத்தனுப்புங்க.. அவர்தான் வந்திருப்பார்.. வாங்கிட்டு வா என்றான்..
ஜீஜே சொன்னதுபோலவே அங்கே முனுசாமி காபி ட்ரேவுடன்..
ப்ளவர்.. சீக்கிரம் கிளம்பு ரெஸ்டாரன்ட் போறோம்.. நம்ம மேரேஜ் முடிஞ்சு இப்போதான் முதல்முறை உன்னை கூட்டிட்டு போறேன்.. குளிக்க சென்றான்..
அவனுக்கு தேவையான ட்ரஸை எடுத்து வைத்தாள் மலர்.. பிறகு தானும் மயிலிறகு நிறத்தில் சேலையை உடுத்தினாள்... முகத்துக்கு பவுடர் பூசி சிறிய பொட்டு வைத்து ரெடியாகி நின்றாள்..
ஜீஜே குளித்துமுடித்து வெளியே வந்தான்.. என்ன அதுக்குள் ரெடியாயிட்ட.. மேக் கப் எதுவும் போடலியா மலர்..
ஹோட்டல் தானே போறோம்.. அதுவும் ராத்திரி நேரம் சிம்பளா இருந்தா போதாதா ஜீஜே..
.....
ஊட்டியின் மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் ப்ளூ ஹீல், முன் கூட்டியே ரிசர்வ் செய்திருந்தான் ஜீஜே..
காரையை பார்க்கிங்ல் விட்டுவிட்டு உள்ளே வந்தனர்... பிரம்மாண்டமான ஹோட்டல்... இவர்கள் ரிசர்வ் செய்திருந்த டெபிளில் உட்கார்ந்தார்கள்.. சுற்றி வி சுவர்மாதிரி அமைக்கப்பட்டிருந்தது... இங்க ஸீ புட் நல்லாயிருக்கும் மலர்..
மலரை உட்கார வைத்துவிட்டு, நான் ஹாண்ட் வாஷ் செஞ்சுட்டு வரேன்... போனான் ஜீஜே.
அதற்குள் அங்கிருந்த ஒரு பேரர் உன்னொருவனிடம் நம்ம ஜீஜே ஸார் வந்திருக்காரு ரமெஷ் உன் டெபிளுக்கு போய் நல்லா கவனி என்றான்..
அங்கே சென்ற பேரர்.. மலரை பார்த்தான்.. ஹலோ இங்க மேடம் வந்து உட்காரவாங்க.. நீ அவங்க கூட வந்த வேலையாளா.. அந்தபக்கம் இருக்கிற டெபிள்ல உட்காரு..
எழுந்துக்கொண்டாள் மலர்விழியாள்.. ம்ம் என்று நகர்ந்து செல்ல..
வந்துவிட்டான் ஜீஜே... ஏன் நிற்கிறாள் என்ற யோசித்தான்..
ஸார் மேக்னா மேடம் எங்க ஸார்... அந்த பேரர் பழக்கபட்டவன் போல் கேட்டான்.. ஜீஜேவின் பின்னாடி எட்டி பார்த்தான்.
என்ன உளறான்..
மலர் உட்காரு ஏன் நிற்கற...
நான்தான் ஸார் உங்களுக்கு தொந்தரவா இருக்ககூடாதுன்னு மெயிடை பக்கத்து சீட்ல உட்கார சொன்னேன்..
என்னடா சொல்லுற.. அவனை கை ஓங்கி அடிக்கச் சென்றான்.. அவனை தடுத்தாள் மலர்..
ஜீஜே எதுக்கு அவரை அடிக்க போறீங்க... தெரியாம சொல்லிட்டாரு விடுங்க..
இல்ல மலர் இவனை என்று பல்லை கடித்துக்கொண்டு சென்றான்..
நீங்க போங்க... அவர் ஆர்டர் செஞ்சதை எடுத்துட்டு வாங்க என்றாள்..
புரியாமல் நகர்ந்தான் அந்த பேரர்.
ஜீஜேவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க ஜீஜே... உங்க கேர்ள் பிரன்ட்ஸை எல்லாம் அரையும் குறையுமா கூட்டிட்டு வந்திருப்ப...
அவனுக்கென்ன திமிரு... என் பர்சனல் விஷியத்தை எப்படி பேசலாம்..
வெளியே வந்தா எப்படி அது பர்சனல் ஆகும் ஜீஜே..
அவன் ஆர்டர் செய்த உணவுகள் பறிமாறினான் அந்த பேரர்... ஜீஜேவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.. அவன் கூட்டிட்டு வரும் தோழிகள் எதிரே தான் உட்கார வைப்பான்... மலர், ஜீஜே என்று அழைக்கும்போதே தெரிந்துக்கொண்டான் பேரர்...
ஸாரி மேடம் ஸாருக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது என்று தலைகுனிந்து நின்றான் அந்த பேரர்..
பரவாயில்ல தம்பி.. என்றாள்..
கோவத்தில் தலையை சிலுப்பிக்கொண்டிருந்தான்.. நல்ல மூட் கெடுத்துட்டான்..ப்ச் என்றான்..
ஜீஜே நீங்க சாப்பிடுங்க.. இன்னைக்கு பிரதோஷம் நான்-வெஜ் சாப்பிடமாட்டேன்..
இப்ப சொல்லுற... உனக்கு சாப்பிட இஷ்டமில்ல சொல்லுமலர்.. அந்த லூஸூ பேரர் சொன்னான் பொண்ணுங்களை கூட்டிட்டு வந்தேன்னு.. அது உனக்கு பிடிக்கல.. அதான் சாப்பாட்டை அவாய்ட் செய்யற..
அமைதியாக இருந்தாள்.. அப்படியில்லை ஜீஜே.. இந்த ஜூஸை குடிக்கிறேன்... நீங்க சாப்பிடுங்க ..
வேணாம் கிளம்பு என்று எழுந்துக்கொண்டான்.. அதற்கான பணத்தை ஜீபே செய்தான்..
கார் சீறி பறந்தது அந்த ஊட்டியின் மையின் ரோட்டில்.. ஜீஜே மெதுவா போங்க.. நைட் ஆயிடுச்சு.. தூறல்வேற ஆரம்பிச்சிடுச்சு பாருங்க..
பதில் எதுவும் பேசவில்லை அவன்.. கோபம் அவள் சாப்பிடமாட்டேன் சொன்னதற்கு..
ஜீஜே எனக்கு பயங்கரமா பசிக்குது என்றாள்..
போற வழியில , பெரிய ஹோட்டல் எதுவுமில்ல..
கார் சன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தாள் மலர்.. ஜீஜே இங்க வெஜ் ஹோட்டல் இருக்கு பாரு நிறுத்துங்க என்றாள்..
காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்... அது சின்ன ஹோட்டலா இருக்கு மலர்..
ஜீஜே இப்பவே மணி 9.00 ஆயிடுச்சு... அப்பறம் எதுவும் கிடைக்காது இங்கவே சாப்பிடலாமே ப்ளீஸ்..
ம்ம்.. இறங்கு என்றான்..
இருவரும் உள்ளே சென்றனர்.. கொஞ்சம் த்ரீ ஸ்டார் ஹோட்டல் போல் இருந்தது..
ப்ரைடு ரைஸ், பட்டர் நான் ஆர்டர்செய்தாள்... கொஞ்சம் நேரம் பிறகு வந்தது... அவன் மில்ஷேக் சொன்னான்..
இந்த ப்ரைடு ரைஸ் தான் உனக்கு பிடிச்சிருக்கா மலர்.. முகத்தை சுளித்துக் கொண்டே கேட்டான்..
ஆமாம் ஜீஜே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் பன்னீர் ரைஸ் ரொம்ப.. நீ ஏன் எதுவும் சாப்பிடல.
எனக்கு எதுவும் வேணாம்.. ஜூஸ் போதும் என்றான்.. அவள் சொன்னதை போல்..
ஜீஜே என்று முறைத்தாள்..
என்ன... எனக்கு பிடிக்கல.. சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு... நீ உன் இஷ்டத்திற்கு இருக்கும் போது நான் என் இஷ்டம்போலதான் இருப்பேன் மலர்... ஜீஜே கத்தி சொல்லவும்... பக்கத்து டெபிளில் உட்கார்ந்திருந்த வயதான பெண்மனி மலரை பார்த்தார்..
----மயக்கம்
நரசிம்மன் சொல்லுவதை இமை அசைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள் மலர்...
காலேஜ் போய் ஒழுக்கம் இல்லாது போயிட்டான்... நான் பயந்த மாதிரியே ஆயிட்டான் மலர்மா... நீ சொல்லுறதுக்கு முன்னாடியே ஜீஜேவை பற்றி எனக்கு தெரியும்டா காலேஜ்ஜில ப்ளே பாய் மாதிரி சுத்திட்டு இருக்கான்னு கேள்விபட்டேன்...
பிறகு , அவங்க அம்மா பிஸினஸை அவன் எடுத்து நடத்த ஆரம்பித்தான்... விளையாட்டுதனமா இருந்தவன்மேல் பெரிய பாரத்தை ஏற்றிட்டேன்...
இந்த பிஸினஸ்ல ராமனாவே இருந்தாலும் மாற்றிடுவாங்க மலர்... அந்தமாதிரியான நாகரிகம் அது.. கண்டிப்பா பார்ட்டி அட்டன் செய்யனும்.. போனா குடிக்கமாக இருப்பானா.. அப்பறம் பொண்ணுங்க சாவகாசம் ...
ப்ச்... ஆனா இனிமே எல்லாம் உன் கையிலதான் இருக்கு மலர்..
என்னிடமா தாத்தா...
ஹாங்...நீதான் உன் புருஷன கைக்குள் வச்சிக்கனும்டா... பாரு அவன் எப்பவுமே டென்ஷனா இருப்பான், எதிரிங்க வெளியில இல்ல மலர் , வீட்டுக்குள்ளே இருக்காங்க.. ஜீஜேக்கு..
வெளியிலே அவன் ராஜாவா இருந்தாலும்.. அவனை அடக்கி ஆளுற ராணியா நீ இருக்கனும்... அதாவது நல்ல ஆலோசகரா இருக்கனும்...
மனைவி என்பது அவனில் பாதிடா... கணவனின் முகம் பார்த்தே மனைவி புரிந்துக்கொள்ளனும்... ஒரு சிலநேரத்தில விட்டுக்கொடுத்து நடந்துக்கனும்.
தாத்தா... இந்த ஜீஜே என் பேச்சை எப்படி கேட்பாரு... அவனுக்கு கோபம் மூக்குமேல வரும்தாத்தா.. எனக்கு பயமா இருக்கும்...
பயப்படாத மலர்... எதையும் மறைக்காம உண்மையா பேசனும்.. அவன் எங்கபோறான், எதுக்கு போறான் கேட்டுத் தெரிஞ்சுக்கனும்... ஆபிஸூல என்ன நடக்குதுனு கேட்கனும்...
அய்யோ ஏற்கனவே ரொம்ப பேசுவான்.. இப்போ இதெல்லாம் கேட்டா... நைட்டு முழுக்க பேசுவான் என்று மனதிற்குள் புலம்பினாள்..
அவர் பேசுவதை பொறுமையாக கேட்டு தலையை ஆட்டியபடி சின்னபிள்ளைபோல் கேட்டுக்கொண்டாள்.. தாயோ, தகப்பனோ இருந்திருந்தால் புகுந்துவீட்டிற்கு போகும் பிள்ளைக்கு அறிவுரை கூறியிருப்பார்கள்.. இவளுக்குதான் யாருமேயில்லையே...
பெரியவர் பேசுவதை மனதில் வாங்கிக்கொண்டாள்... நீங்க ஃபீல் பண்ணாதீங்க தாத்தா.. அவனை நல்லா பார்த்துப்பேன்..
நீ கண்டிப்பா பார்த்துப்ப மலர், எனக்கு உன்மேல நம்பிக்கையிருக்கு மா..
.......
மாலை நேரம் காற்று வீசியது அந்த ஊட்டியின் க்ளைமெட் மாற தொடங்கியது...நேற்று ஜீஜே காண்பித்த பால்கனி ஞாபகம் வந்தது... கதவை திறந்து பால்கனிக்கு சென்றாள் மலர்..
சுற்றி ரோஜா தொட்டிகள் இருந்தன... கலர் கலரான ரோஜா செடிகள்.. இதெல்லாம் உனக்காக தான் மலர் வாங்கினேன், அங்கே காலை நீட்டி உட்காருவதுபோல் சோபா போடப்பட்டிருந்தது..
இங்கபாரு உனக்கு போரா இருந்துச்சுனா, இங்க வந்து ரெஸ்ட் எடு... காலையில பார்த்தா , சூப்பரா இருக்கும் மலர்.. இந்த ரோஸ், பின்னாடி தெரியற மலைகளோட வீவ்யூ.. எப்படியிருக்கும் தெரியுமா.. நீ என்னை நினைச்சு இந்த ரோஸ்கிட்ட பேசு.. டேரக்டா என்கிட்ட வந்து சொல்லுடும்..
லூஸூ மாதிரி உளராதே ஜீஜே.. போய் தூங்கு என்றாள் மலர்..
அந்த இடமே சிறிய ரோஸ் தோட்டம்போல் இருந்தது.. தரையில் ப்ளஸ்டிக் புல்வெளி விரிப்பு பால்கனி சுற்றி செடிகள்... அங்கிருந்த ஜக்கை எடுத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள்... உயரமா இருக்கும் தொட்டிக்கு தண்ணீர் ஊற்ற, ஸ்டூல் போட்டு ஏறினாள் மலர்..
ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்த ஜீஜே.. ப்ளவர் என்று கூப்பிட்டு கொண்டே தனது அறைக்கு வந்தான்... எங்கே ஆளையே காணோம்..
பால்கனி கதவு திறந்திருப்பதை பார்த்தான்..
ஓ... பால்கனியில இருக்காளா... அங்கே வந்தான்.. அவன் பார்த்த காட்சியில் வாயை பிளந்து அப்படியே நின்றான் மலரை கவர்ந்தவன்.. அய்யோ சுண்டி இழுக்குதே... அவள் உடுத்திய ரோஸ் நிற சேலை காற்றில் அசைந்தாடா.. மஞ்சள் நிற இடுப்பு தெரிந்தது..
ஹா..ஹா.. ஒரு கவிஞன் சொன்னது ஞாபகம் வந்தது அவனுக்கு, பிரம்மன் படைத்த சிலைக்கு திருஷ்டி பொட்டு அவள் நாபி,..
மலர் நிற்கவும், அவன் கண்ணேதிரே தெரிந்தது.. அய்யோ சுண்டி இழுக்குறாளே... ஹீரோ பெர்பாம்மென்ஸ் செய்ய விடமாட்டாளா..
மெல்லிய இடை... அதில் ஒரு..
தண்ணீரை ஊற்றி கீழே பார்த்தாள்.. அவன் பார்க்கும் பார்வையிலே பதட்டம் அடைந்து சேலையால் இடையை மறைத்தாள்...
அப்பவும் காற்று பலமாக வீச... மெல்லிய சேலை அவள் இடுப்பில் நிற்கவில்லை... இருவருக்குள் அமைதி.. சட்டென்று அவள் இறங்க பேலன்ஸ் ஆகாமல் கீழே விழ போனாள்.. பிடித்து விட்டான் ஜீஜே..
ஏய் பார்த்து இறங்குடி.. அவன் ஆசையோ அடுத்த நிமிடமே நிறைவேறியது.. அவள் இடையை வளைத்து பிடித்திருந்தான் கள்வன்..
இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் பயனிக்க...என்ன இவ்வளவு சாப்டா இருக்கு இன்னும் கைவிரலால் அழுத்தினான் அவள் இடையை.... அவ்வளவுதான் முழித்துக்கொண்டாள் மாது... விடு ஜீஜே என்று அவனைவிட்டு விலகினாள்..
அவனை முறைத்துக்கொண்டு நின்றாள் மலர்..
எதுக்கு முறைக்கிற.. பார்த்து கண்ணு வெளிய வந்திடபோது..
என்னைய தொடக்கூடாது தானே சொன்னேன்.. எதுக்கு அங்க கையை வச்சே..
எங்க.. ஓஓ.. உன் ஹிப்ல.. இதென்னடா வம்பா போச்சு... நீ கீழே விழற.. எப்படி உன்னை பிடிக்கிறதாம்.. காலையா பிடிப்பாங்க.. இது தற்செயலா நடந்த ஒரு விபத்து.. புரியுதா மக்கு...
இல்லையே, உன் பார்வை வேறமாதிரியா இருந்துச்சு..
எப்படி..
அவளுக்கு சொல்ல தெரியவில்லை, மயக்கம் கண்ணழகன், தடுமாறினாள்.. அது..அது.. என்று, இந்த பேச்சு வேற எங்கோ போகுதே.. இத்தோட முடிச்சிக்கனும்..அவள் மனதில் நினைத்து, ஜீஜே ஆபிஸிலிருந்து டயர்டா வந்திருப்ப.. நான் காபி எடுத்துட்டு வரேன்..
அதற்குள் ரூம் கதவு தட்டும் சத்தம்... ம்ம் நான் முனுசாமிக்கிட்ட சொல்லிட்டு வந்தேன் காபி கொடுத்தனுப்புங்க.. அவர்தான் வந்திருப்பார்.. வாங்கிட்டு வா என்றான்..
ஜீஜே சொன்னதுபோலவே அங்கே முனுசாமி காபி ட்ரேவுடன்..
ப்ளவர்.. சீக்கிரம் கிளம்பு ரெஸ்டாரன்ட் போறோம்.. நம்ம மேரேஜ் முடிஞ்சு இப்போதான் முதல்முறை உன்னை கூட்டிட்டு போறேன்.. குளிக்க சென்றான்..
அவனுக்கு தேவையான ட்ரஸை எடுத்து வைத்தாள் மலர்.. பிறகு தானும் மயிலிறகு நிறத்தில் சேலையை உடுத்தினாள்... முகத்துக்கு பவுடர் பூசி சிறிய பொட்டு வைத்து ரெடியாகி நின்றாள்..
ஜீஜே குளித்துமுடித்து வெளியே வந்தான்.. என்ன அதுக்குள் ரெடியாயிட்ட.. மேக் கப் எதுவும் போடலியா மலர்..
ஹோட்டல் தானே போறோம்.. அதுவும் ராத்திரி நேரம் சிம்பளா இருந்தா போதாதா ஜீஜே..
.....
ஊட்டியின் மிகப்பெரிய பைவ் ஸ்டார் ஹோட்டல் ப்ளூ ஹீல், முன் கூட்டியே ரிசர்வ் செய்திருந்தான் ஜீஜே..
காரையை பார்க்கிங்ல் விட்டுவிட்டு உள்ளே வந்தனர்... பிரம்மாண்டமான ஹோட்டல்... இவர்கள் ரிசர்வ் செய்திருந்த டெபிளில் உட்கார்ந்தார்கள்.. சுற்றி வி சுவர்மாதிரி அமைக்கப்பட்டிருந்தது... இங்க ஸீ புட் நல்லாயிருக்கும் மலர்..
மலரை உட்கார வைத்துவிட்டு, நான் ஹாண்ட் வாஷ் செஞ்சுட்டு வரேன்... போனான் ஜீஜே.
அதற்குள் அங்கிருந்த ஒரு பேரர் உன்னொருவனிடம் நம்ம ஜீஜே ஸார் வந்திருக்காரு ரமெஷ் உன் டெபிளுக்கு போய் நல்லா கவனி என்றான்..
அங்கே சென்ற பேரர்.. மலரை பார்த்தான்.. ஹலோ இங்க மேடம் வந்து உட்காரவாங்க.. நீ அவங்க கூட வந்த வேலையாளா.. அந்தபக்கம் இருக்கிற டெபிள்ல உட்காரு..
எழுந்துக்கொண்டாள் மலர்விழியாள்.. ம்ம் என்று நகர்ந்து செல்ல..
வந்துவிட்டான் ஜீஜே... ஏன் நிற்கிறாள் என்ற யோசித்தான்..
ஸார் மேக்னா மேடம் எங்க ஸார்... அந்த பேரர் பழக்கபட்டவன் போல் கேட்டான்.. ஜீஜேவின் பின்னாடி எட்டி பார்த்தான்.
என்ன உளறான்..
மலர் உட்காரு ஏன் நிற்கற...
நான்தான் ஸார் உங்களுக்கு தொந்தரவா இருக்ககூடாதுன்னு மெயிடை பக்கத்து சீட்ல உட்கார சொன்னேன்..
என்னடா சொல்லுற.. அவனை கை ஓங்கி அடிக்கச் சென்றான்.. அவனை தடுத்தாள் மலர்..
ஜீஜே எதுக்கு அவரை அடிக்க போறீங்க... தெரியாம சொல்லிட்டாரு விடுங்க..
இல்ல மலர் இவனை என்று பல்லை கடித்துக்கொண்டு சென்றான்..
நீங்க போங்க... அவர் ஆர்டர் செஞ்சதை எடுத்துட்டு வாங்க என்றாள்..
புரியாமல் நகர்ந்தான் அந்த பேரர்.
ஜீஜேவின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுறீங்க ஜீஜே... உங்க கேர்ள் பிரன்ட்ஸை எல்லாம் அரையும் குறையுமா கூட்டிட்டு வந்திருப்ப...
அவனுக்கென்ன திமிரு... என் பர்சனல் விஷியத்தை எப்படி பேசலாம்..
வெளியே வந்தா எப்படி அது பர்சனல் ஆகும் ஜீஜே..
அவன் ஆர்டர் செய்த உணவுகள் பறிமாறினான் அந்த பேரர்... ஜீஜேவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.. அவன் கூட்டிட்டு வரும் தோழிகள் எதிரே தான் உட்கார வைப்பான்... மலர், ஜீஜே என்று அழைக்கும்போதே தெரிந்துக்கொண்டான் பேரர்...
ஸாரி மேடம் ஸாருக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது என்று தலைகுனிந்து நின்றான் அந்த பேரர்..
பரவாயில்ல தம்பி.. என்றாள்..
கோவத்தில் தலையை சிலுப்பிக்கொண்டிருந்தான்.. நல்ல மூட் கெடுத்துட்டான்..ப்ச் என்றான்..
ஜீஜே நீங்க சாப்பிடுங்க.. இன்னைக்கு பிரதோஷம் நான்-வெஜ் சாப்பிடமாட்டேன்..
இப்ப சொல்லுற... உனக்கு சாப்பிட இஷ்டமில்ல சொல்லுமலர்.. அந்த லூஸூ பேரர் சொன்னான் பொண்ணுங்களை கூட்டிட்டு வந்தேன்னு.. அது உனக்கு பிடிக்கல.. அதான் சாப்பாட்டை அவாய்ட் செய்யற..
அமைதியாக இருந்தாள்.. அப்படியில்லை ஜீஜே.. இந்த ஜூஸை குடிக்கிறேன்... நீங்க சாப்பிடுங்க ..
வேணாம் கிளம்பு என்று எழுந்துக்கொண்டான்.. அதற்கான பணத்தை ஜீபே செய்தான்..
கார் சீறி பறந்தது அந்த ஊட்டியின் மையின் ரோட்டில்.. ஜீஜே மெதுவா போங்க.. நைட் ஆயிடுச்சு.. தூறல்வேற ஆரம்பிச்சிடுச்சு பாருங்க..
பதில் எதுவும் பேசவில்லை அவன்.. கோபம் அவள் சாப்பிடமாட்டேன் சொன்னதற்கு..
ஜீஜே எனக்கு பயங்கரமா பசிக்குது என்றாள்..
போற வழியில , பெரிய ஹோட்டல் எதுவுமில்ல..
கார் சன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தாள் மலர்.. ஜீஜே இங்க வெஜ் ஹோட்டல் இருக்கு பாரு நிறுத்துங்க என்றாள்..
காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்... அது சின்ன ஹோட்டலா இருக்கு மலர்..
ஜீஜே இப்பவே மணி 9.00 ஆயிடுச்சு... அப்பறம் எதுவும் கிடைக்காது இங்கவே சாப்பிடலாமே ப்ளீஸ்..
ம்ம்.. இறங்கு என்றான்..
இருவரும் உள்ளே சென்றனர்.. கொஞ்சம் த்ரீ ஸ்டார் ஹோட்டல் போல் இருந்தது..
ப்ரைடு ரைஸ், பட்டர் நான் ஆர்டர்செய்தாள்... கொஞ்சம் நேரம் பிறகு வந்தது... அவன் மில்ஷேக் சொன்னான்..
இந்த ப்ரைடு ரைஸ் தான் உனக்கு பிடிச்சிருக்கா மலர்.. முகத்தை சுளித்துக் கொண்டே கேட்டான்..
ஆமாம் ஜீஜே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுவும் பன்னீர் ரைஸ் ரொம்ப.. நீ ஏன் எதுவும் சாப்பிடல.
எனக்கு எதுவும் வேணாம்.. ஜூஸ் போதும் என்றான்.. அவள் சொன்னதை போல்..
ஜீஜே என்று முறைத்தாள்..
என்ன... எனக்கு பிடிக்கல.. சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு... நீ உன் இஷ்டத்திற்கு இருக்கும் போது நான் என் இஷ்டம்போலதான் இருப்பேன் மலர்... ஜீஜே கத்தி சொல்லவும்... பக்கத்து டெபிளில் உட்கார்ந்திருந்த வயதான பெண்மனி மலரை பார்த்தார்..
----மயக்கம்