காதல் 2:
“இப்ப எதுக்கு கண்ணு கலங்குற..? என்ன பிரச்சனை உனக்கு..?” என்றார் பார்வதி கடுமையாக.
“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் மதியின் தலை ஆட..
“இங்க பார் மதி..எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான் இங்க வந்திருக்க.உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் தான் பார்க்கணும். அதை விட்டுட்டு..பலசையே நினைச்சு கண்ணு கலங்குறதா இருந்தா..நீ மெட்ராஸ்க்கே போய்டு..!” என்றார்.
“இப்ப எதுக்கு பட்டுப் பட்டுன்னு பேசுற..?” என்ற மனோகரின் அதட்டலில் கொஞ்சம் மட்டுப் பட்டார் பார்வதி.
மதிக்கு தான் குற்ற உணர்வாய் இருந்தது.”மன்னிச்சுடுங்கம்மா..” என்றாள் குனிந்த தலையுடன்.
“என் பொண்ணு இப்படி யார் முன்னாடியும் தலை குனிய கூடாதுன்னு தான் சொல்றேன்..” என்று பார்வதி சொல்ல..
“புரியுதுமா..” என்றாள்.
“ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க..! போய் துர்க்கையம்மன் கோவில்ல விளக்கு போட்டுட்டு...சாமி கும்பிட்டு வந்திடு” என்றார்.
“முடியாது” என்று வாயைத் திறக்கப் போனவளுக்கு சற்று முன் பார்வதி சொன்னது நியாபகம் வர..”சரி” என்று தலையை ஆட்டினாள்.
ஆனால் அப்படி பட்டென்று அவளால் போக முடியுமா..? நடந்த விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுமா..? என்று யோசிக்க... எப்படியும் எல்லாவற்றையும் கடந்து வந்து தான் ஆக வேண்டும் என்ற முடிவில் தங்கையுடன் கிளம்பினாள் மதி.
மனோகரனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நிர்மூலம் தான்.அவர் ஆடிய ஆட்டமும் கொஞ்ச நஞ்சமில்லை என்பது அவருக்குத் தெரியும்.அதானால் அமைதியாய் இருப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
மதியோ..மாற்றங்கள் கண்ட தன் ஊரை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.இந்த பத்து வருடங்களில்..பல ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக மாறி இருந்தன.
முன்பு எல்லாம்..அந்த ஊரில் ஒரே மச்சு வீடுதான் இருக்கும். அதையே மச்சு வீடு என்று அனைவரும் பெருமையாக பார்ப்பார்கள். ஆனால் இன்று பல வீடுகள் மாறி இருந்தது.குடிசை வீடுகள் அவர்கள் ஊரில் அதிகம்.ஆனால் இன்று குடிசை வீடுகளே இல்லை.
“என்னாக்கா..?அப்படி பார்த்துட்டு வர..?” என்று சுத்தி கேட்க..
“இல்லை..இத்தனை வருஷத்துல..ஊர் கொஞ்சம் மாறி இருக்கும்ன்னு நினைச்சேன்..ஆனா ஒரே அடியா மாறி இருக்கும்ன்னு நினைக்கவேயில்லை சுமதி..” என்றாள்.
“அது என்னவோ உண்மைதான் க்கா...நம்ம ஊரு முன்ன மாதிரி இல்லை.மனுஷங்களும் முன்ன மாதிரி இல்லக்கா...பொறாமை,வஞ்சகம் எல்லாமே கூடி தான் போயிருக்கு..” என்றாள் சுமதி கடுப்பாய்.
“என்னாச்சு சுமதி..?” என்றாள்.
எதையோ சொல்ல வாயெடுத்த சுமதி..பிறகு என்ன நினைத்தாளோ... ”விடுக்கா வந்த உடனே இதையெல்லாம் பத்தி பேசிகிட்டு..நீ வா...நாம போய் முதல்ல சாமியை கும்பிட்டு வரலாம்...” என்றபடி பேச்சை மாற்றினாள்.
கிராமங்களில் பொதுவாக மாலை நேரங்களில் தான் அதிகமாக கோவிலுக்கு செல்வர்.அது அந்த ஊரிலும் வழக்கமாக இருந்தது.
வேண்டியதை கொடுக்கும் கோவில் என்ற பெருமை அந்த கோவிலுக்கு உண்டு.அந்த ஊரில் மட்டும் இல்லாமல் பக்கத்து கிராம மக்களும் அங்கு வந்து வழிபடுவது வழக்கம்.ஒரு சக்தி வாய்ந்த அம்மனாக.....அந்த துர்க்கை அம்மன் பிரசித்தி பெற்றிருந்தாள்.
கோவிலைப் பார்த்த மதிக்கு ஆச்சர்யம்.கோவிலும் மாறி இருந்தது. அம்மனும் மாறி இருந்தாள்.ஆம் முன்பு எல்லாம் சிறியதாக இருந்த அம்மன் சிலை இப்போது பெரிய சிலையாக இருந்தது.முன்பு சாதாரண கோவிலாக இருந்த இடம்..இன்று முற்றிலும் மாறி இருந்தது.அந்த கோவிலுக்கும் அவளுக்கும் உண்டான பந்தம்...சில வரிகளால் சொல்லக் கூடியது அல்ல.அவை பொக்கிஷமான நினைவுகள்.
அங்கே இரண்டு பெண்கள் கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.இடுப்பில் ஒன்றும்,கையில் ஒன்றுமாய் குழந்தைகளுடன் வந்தவர்களை அடையாளம் கண்டதும் மதிக்கு ஆனந்த மகிழ்ச்சி.
“ஹேய் கங்கா,செல்வி...!” என்றாள் சத்தமாய்.இவளைத் திரும்பிப் பார்த்தவர்கள்...இவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்து...
“ஏய் வண்ணம்...” என்றனர் சந்தோஷமாய்.
“எப்படி இருக்கீங்க டி?” என்றாள் சந்தோஷமாய்.
“நாங்க இருக்குறது இருக்கட்டும்..நீ எப்படி டி இருக்க..இப்பதான் இங்க வர வழி தெரிஞ்சதா..?” என்றனர் உரிமையாய்.
“நான் நல்லா இருக்கேண்டி...உங்க ரெண்டு பேருக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு...இது உங்க பிள்ளைங்களா..?” என்றாள் மதி.
“அது ஆச்சுடி அப்பவே.பன்னிரென்டாவது கூட முடிக்கலை.. கட்டி வச்சுட்டானுக..!” என்றனர் சலிப்பாய்.
அந்த ஊரில் அது ஒரு பழக்கம்.பன்னிரெண்டாம் வகுப்பே...அவ்வூர் பெண்களுக்கு அதிகப்படியான படிப்பு.அதற்கு மேல் யாரும் அனுப்ப மாட்டார்கள்.
ஆண் பிள்ளைகள் படித்தால் தங்களை காப்பாற்றுவான்.பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் காதல் கசமுசா என்று வந்து நிற்கும் என்ற அதீத நம்பிக்கை அவ்வூர் மக்களுக்கு.
அந்த வகையில் மனோகரனுக்கு மகளாய் பிறந்ததில் வண்ண மதி பெருமை தான் கொள்ள வேண்டும்.எப்பொழுதும் அவளின் விருப்பத்திற்கு அவர் தடை சொன்னதில்லை.
மதி நன்றாக படிக்க படிக்க..அவளை மேலே படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடத்தில் வளர்ந்ததே தவிர...ஒருநாளும் வேறு மாதிரி யோசிக்கவில்லை.
“இப்ப எதுக்கு கண்ணு கலங்குற..? என்ன பிரச்சனை உனக்கு..?” என்றார் பார்வதி கடுமையாக.
“ஒண்ணுமில்லை” என்பதைப் போல் மதியின் தலை ஆட..
“இங்க பார் மதி..எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி தான் இங்க வந்திருக்க.உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் தான் பார்க்கணும். அதை விட்டுட்டு..பலசையே நினைச்சு கண்ணு கலங்குறதா இருந்தா..நீ மெட்ராஸ்க்கே போய்டு..!” என்றார்.
“இப்ப எதுக்கு பட்டுப் பட்டுன்னு பேசுற..?” என்ற மனோகரின் அதட்டலில் கொஞ்சம் மட்டுப் பட்டார் பார்வதி.
மதிக்கு தான் குற்ற உணர்வாய் இருந்தது.”மன்னிச்சுடுங்கம்மா..” என்றாள் குனிந்த தலையுடன்.
“என் பொண்ணு இப்படி யார் முன்னாடியும் தலை குனிய கூடாதுன்னு தான் சொல்றேன்..” என்று பார்வதி சொல்ல..
“புரியுதுமா..” என்றாள்.
“ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்க..! போய் துர்க்கையம்மன் கோவில்ல விளக்கு போட்டுட்டு...சாமி கும்பிட்டு வந்திடு” என்றார்.
“முடியாது” என்று வாயைத் திறக்கப் போனவளுக்கு சற்று முன் பார்வதி சொன்னது நியாபகம் வர..”சரி” என்று தலையை ஆட்டினாள்.
ஆனால் அப்படி பட்டென்று அவளால் போக முடியுமா..? நடந்த விஷயங்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுமா..? என்று யோசிக்க... எப்படியும் எல்லாவற்றையும் கடந்து வந்து தான் ஆக வேண்டும் என்ற முடிவில் தங்கையுடன் கிளம்பினாள் மதி.
மனோகரனுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது நிர்மூலம் தான்.அவர் ஆடிய ஆட்டமும் கொஞ்ச நஞ்சமில்லை என்பது அவருக்குத் தெரியும்.அதானால் அமைதியாய் இருப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.
மதியோ..மாற்றங்கள் கண்ட தன் ஊரை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.இந்த பத்து வருடங்களில்..பல ஓட்டு வீடுகள் மாடி வீடுகளாக மாறி இருந்தன.
முன்பு எல்லாம்..அந்த ஊரில் ஒரே மச்சு வீடுதான் இருக்கும். அதையே மச்சு வீடு என்று அனைவரும் பெருமையாக பார்ப்பார்கள். ஆனால் இன்று பல வீடுகள் மாறி இருந்தது.குடிசை வீடுகள் அவர்கள் ஊரில் அதிகம்.ஆனால் இன்று குடிசை வீடுகளே இல்லை.
“என்னாக்கா..?அப்படி பார்த்துட்டு வர..?” என்று சுத்தி கேட்க..
“இல்லை..இத்தனை வருஷத்துல..ஊர் கொஞ்சம் மாறி இருக்கும்ன்னு நினைச்சேன்..ஆனா ஒரே அடியா மாறி இருக்கும்ன்னு நினைக்கவேயில்லை சுமதி..” என்றாள்.
“அது என்னவோ உண்மைதான் க்கா...நம்ம ஊரு முன்ன மாதிரி இல்லை.மனுஷங்களும் முன்ன மாதிரி இல்லக்கா...பொறாமை,வஞ்சகம் எல்லாமே கூடி தான் போயிருக்கு..” என்றாள் சுமதி கடுப்பாய்.
“என்னாச்சு சுமதி..?” என்றாள்.
எதையோ சொல்ல வாயெடுத்த சுமதி..பிறகு என்ன நினைத்தாளோ... ”விடுக்கா வந்த உடனே இதையெல்லாம் பத்தி பேசிகிட்டு..நீ வா...நாம போய் முதல்ல சாமியை கும்பிட்டு வரலாம்...” என்றபடி பேச்சை மாற்றினாள்.
கிராமங்களில் பொதுவாக மாலை நேரங்களில் தான் அதிகமாக கோவிலுக்கு செல்வர்.அது அந்த ஊரிலும் வழக்கமாக இருந்தது.
வேண்டியதை கொடுக்கும் கோவில் என்ற பெருமை அந்த கோவிலுக்கு உண்டு.அந்த ஊரில் மட்டும் இல்லாமல் பக்கத்து கிராம மக்களும் அங்கு வந்து வழிபடுவது வழக்கம்.ஒரு சக்தி வாய்ந்த அம்மனாக.....அந்த துர்க்கை அம்மன் பிரசித்தி பெற்றிருந்தாள்.
கோவிலைப் பார்த்த மதிக்கு ஆச்சர்யம்.கோவிலும் மாறி இருந்தது. அம்மனும் மாறி இருந்தாள்.ஆம் முன்பு எல்லாம் சிறியதாக இருந்த அம்மன் சிலை இப்போது பெரிய சிலையாக இருந்தது.முன்பு சாதாரண கோவிலாக இருந்த இடம்..இன்று முற்றிலும் மாறி இருந்தது.அந்த கோவிலுக்கும் அவளுக்கும் உண்டான பந்தம்...சில வரிகளால் சொல்லக் கூடியது அல்ல.அவை பொக்கிஷமான நினைவுகள்.
அங்கே இரண்டு பெண்கள் கோவிலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.இடுப்பில் ஒன்றும்,கையில் ஒன்றுமாய் குழந்தைகளுடன் வந்தவர்களை அடையாளம் கண்டதும் மதிக்கு ஆனந்த மகிழ்ச்சி.
“ஹேய் கங்கா,செல்வி...!” என்றாள் சத்தமாய்.இவளைத் திரும்பிப் பார்த்தவர்கள்...இவளை ஒரு நிமிடம் கூர்ந்து பார்த்து...
“ஏய் வண்ணம்...” என்றனர் சந்தோஷமாய்.
“எப்படி இருக்கீங்க டி?” என்றாள் சந்தோஷமாய்.
“நாங்க இருக்குறது இருக்கட்டும்..நீ எப்படி டி இருக்க..இப்பதான் இங்க வர வழி தெரிஞ்சதா..?” என்றனர் உரிமையாய்.
“நான் நல்லா இருக்கேண்டி...உங்க ரெண்டு பேருக்கும் எப்ப கல்யாணம் ஆச்சு...இது உங்க பிள்ளைங்களா..?” என்றாள் மதி.
“அது ஆச்சுடி அப்பவே.பன்னிரென்டாவது கூட முடிக்கலை.. கட்டி வச்சுட்டானுக..!” என்றனர் சலிப்பாய்.
அந்த ஊரில் அது ஒரு பழக்கம்.பன்னிரெண்டாம் வகுப்பே...அவ்வூர் பெண்களுக்கு அதிகப்படியான படிப்பு.அதற்கு மேல் யாரும் அனுப்ப மாட்டார்கள்.
ஆண் பிள்ளைகள் படித்தால் தங்களை காப்பாற்றுவான்.பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் காதல் கசமுசா என்று வந்து நிற்கும் என்ற அதீத நம்பிக்கை அவ்வூர் மக்களுக்கு.
அந்த வகையில் மனோகரனுக்கு மகளாய் பிறந்ததில் வண்ண மதி பெருமை தான் கொள்ள வேண்டும்.எப்பொழுதும் அவளின் விருப்பத்திற்கு அவர் தடை சொன்னதில்லை.
மதி நன்றாக படிக்க படிக்க..அவளை மேலே படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அவரிடத்தில் வளர்ந்ததே தவிர...ஒருநாளும் வேறு மாதிரி யோசிக்கவில்லை.
Last edited: