உன்னாலே என்
தூக்கத்தை
தொலைத்து விட்டு
அலை மோதுகிறேன்
உன் நினைவுகளால்…!!!
ஆனால் நீயோ
என் தூக்கத்தையும்
சேர்த்து வைத்து
உறங்கு கிறாயே
நன்றாக ???….!!!!
சூர்யா சென்ற பின் அவனது நண்பனான கார்த்திக் ஏதோ சாதித்து விட்டது போல் அவன் சென்ற பாதையை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தான்.
பின்னர் கார்த்திக் அவனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான் சந்தோஷமாக.
நேராக வீட்டிற்கு வந்த சூர்யா தன் ஹாலிலேயே தூக்கி எறிந்தான்.
இதனை கண்ட கங்கா அவனிடம் நெருங்கி ” என்ன ஆச்சி சூர்யா..??? எதுக்கு இவ்வளோ டென்ஷனா இருக்க..???போட்டில தோத்துட்டியா..???” என்று அக்கறையுடன் கேட்க
“அம்மா நந்தினி என் மானத்தையே அங்க வாங்கிட்டா மா ” என்றான் பற்களை கடித்துக் கொண்டே
” அவ என்ன பண்ணா ” என்று கேள்வியாய் வினவ
சூர்யா வேகமாக தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைலை எடுத்து அதில் கார்த்திக் மொபைலில் இருந்து எடுத்த போஃடோவை காட்டினான்.
அதில் கிருஷ் மற்றும் நந்தினி இருவரும் நெருங்கி நின்றிருந்தார்கள்.
இதனை கண்ட கங்காவிற்கு லட்டு தின்ன ஆசையா என்றிருந்தது.
” சரி இத பத்தி நீ யார் கிட்டயும் பேசாத இனி சரியா ” என்று கேட்க
சூர்யாவும் சரி என்று பதில் அளித்துவிட்டு அவனது அறைக்கு பையை எடுத்துக்கொண்டு சென்றான்.
சிறிது நேரத்திலே நந்தினி சுஜி கவி மற்றும் ஜீவா வந்து சேர்ந்தனர்.
கவி சுஜி மற்றும் ஜீவா சிறிது நேரத்திலே விளையாட சென்று விட..
இதுதான் சரியான நேரம் என்று கங்காவுக்கு தோன்ற ..,,உடனே ” நந்தினி இங்க வா ” என்று கத்தினாள்.
நந்தினி வேகமாக கங்காவை நோக்கி வந்தவள் ,,தன் ஆடையை பின்பக்கமாக பார்த்தபடியே வந்தாள்.
[the_ad id=”6605″]
” என்ன பின்னாடியே பார்த்துட்டு இருக்க ” என்று கோபத்துடன் கேட்க..
” அது வந்து அத்தை ” என்று திக்கி தடுமாற
” இப்போ சொல்ல போறியா..??? இல்லையா..???” என்று அதட்ட நந்தினி அழுக தொடங்கி விட்டாள் .
அந்த வயதில் அவளுக்கு அது என்னவென்று தெரியாமல்,, எப்படி சொல்வது கூட என்று தெரியாமல் தவித்தவளுக்கு அழுகை பீரிட்டு வந்தது.
அந்த அழுகையிலும் அவள் திரும்பி திரும்பி பார்க்க ..,,இவ என்னத்த திரும்பி திரும்பி பார்க்குறா என்று அவள் பின் சென்ற பின்பு தான் தெரிந்தது..,, நந்தினி பெரிய மணுஷி ஆகிவிட்டா என்பது.
பெண்மை ஒரு நொடி எழுந்தாலும் ,,அதை அடுத்த நொடி அடக்கியது அவளுடைய கோபம்.
“இங்க பாரு நீ பெரிய மணுஷி ஆகிட்ட சரியா ..,,அத நான் உங்க மாமா கிட்ட சொல்லனும்ன்னா நீ இனி ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொல்லனும் . சரியா..???” என்று அவளை அதட்ட
அந்த நேரம் பார்த்து சரியாக வந்த ஜீவா இதை எல்லாத்தையும் மறைந்து இருந்து கேட்டான்.
” அத்தை அப்படி பண்ணாதீங்க அத்த ப்ளிஸ் ” என்று கெஞ்சினாள்.
அவளது கெஞ்சளை கண்டுக்காதவள் ” அப்போ நீ உங்க மாமா கிட்ட ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு சொன்னா. இத நான் உங்க மாமா கிட்ட காட்ட வேண்டி வரும் ” என்றாள் அந்த புகைப்படத்தை காட்டி…
அவள் அதை பார்த்து அதிர்ச்சி ஆகிவிட்டாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அழுக தொடங்கினாள் அந்த பதிமூன்று வயது பேதை.
” இத மட்டும் நான் உங்க மாமா கிட்ட சொல்லன்னா ..,, நான் இத காட்ற மாதிரி வரும் . அப்பறம் உங்க மாமா உன்கிட்ட பேசுறதையே நிறுத்திடுவாறு. அப்பறம் சுஜி கவி ஜீவாவையும் பேச விடாம பண்ணுவாரு ” என்றாள்.
இதனை கேட்டு பதறியவள் ,,தேம்பிக் கொண்டே ” நான் மாமா கிட்ட ஸ்கூல்லுக்கு போகலன்னு சொல்றேன் அத்தை .இதை மட்டும் காமிக்காதீங்க ” என்று கெஞ்சினாள்.
” சரி வா ” என்று அவளுக்கு ஒரு உடையை கொடுத்து மாற்றி வர சொன்னாள்.
அதன் பின் இந்த விடயத்தை சிவசங்கரனிடம் சொன்னாள்.
அவளுக்கு தனியாக ஒரு இடம் ஒதுக்கி இருந்தனர்.ஜீவாவையும் சூர்யாவையும் கங்காவின் அக்கா வீட்டிற்கு சென்று விட்டனர்.
பின்பு மூன்று நாட்கள் கழித்து அவளுக்கு தண்ணி ஊற்றி தீட்டை கழித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
அன்று இரவே கங்கா அவளை தூண்டி விட …,,, அவளும் தயங்கிய படியே சிவசங்கரனை நோக்கி சென்று ” மாமா ” என்று அழைத்தாள்.
[the_ad id=”6605″]
” சொல்லு டா ” என்று அவளை பார்க்க ..,,” மாமா நான் இனி ஸ்கூல்லுக்கு போக போறது இல்ல ” என்றாள் தலையை கவிழ்ந்த படியே.
” ஏன் போக மாட்ட ” என்றார்.” இல்லை நான் ஸ்கூல்லுக்கு போக மாட்டேன்.என்ன ஸ்கூல்லுக்கு போக சொல்லி கட்டாய படுத்தாதீங்க ப்ளிஸ் ” என்று சொல்விட்டு அவளது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
” ஏதோ பயத்தினால் பேசுகிறாள் ” என்று நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
ஒருவாரம் கழித்து ஜீவாவும் சூர்யாவும் வீட்டிற்கு வந்தனர். அவன் நேராக சென்றது நந்தினியின் அறைக்கு தான். கங்கா அவனை தடுத்து அவனது அறைக்கு போக சொன்னாள்.
அடுத்த நாள் காலை அனைவரும் ஸ்கூல்லுக்கு கிளம்பி வர ,, சிவசங்கரன் ” நந்தினி மா சீக்கிரம் வா டா ஸ்கூல்லுக்கு டைம் ஆச்சு பாரு ” என்றார் சத்தமாக.
அவள் சாதாரண உடையில் வர ” ஸ்கூல்லுக்கு போலையா..???” என்றார்.
” நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல ஸ்கூல்லுக்கு போக மாட்டேன்னு ” என்று கூறிவிட்டு அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.
சுஜி கவி ஜீவாவிடம் சென்ற சிவசங்கரன் ” நீங்க இப்போ போங்க நந்தினி நாளைக்கு வருவா ” என்று கூறி அனுப்பி வைத்தார்.
அவர்களை அனுப்பி வைத்துவிட்டு நந்தினியின் அறையை நோக்கி சென்று பார்த்த போது அவள் மயங்கி கிடந்தாள்.
உடனே அவளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் சிவசங்கரன்..அவருடனே கங்காவும் சென்றாள்.
அவளை பரிசோதித்த டாக்டர்..,,நர்சை அழைத்து ” ஹார்ட் பண்ப் செக் பண்ணுங்க ” என்க வேகமாக சென்று நர்ஸ் அதை கொண்டு வந்து செக் செய்தார்.
” டாக்டர் ஹார்ட் பீட் ரொம்ப வேகமா இருக்கு ..,,அதோட அப்பப்ப குறையவும் செய்யுது ” என்றாள் .
” இந்த பொண்ணுக்கு ஆக்சிஜன் மாஸ்க் மாட்டுங்க “என்று கூறி வெளியே வந்தவர்.
” நீங்க ஒரு நிமிஷம் என்னோட கேபினுக்கு வாங்க ” என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் பின்னாடியே சிவசங்கரனும் சென்றார்.
[the_ad id=”6605″]
” வாங்க சிவசங்கரன் ” என்க
” சொல்லுங்க டாக்டர் … நந்தினிக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே ” என்று தவிப்புடன் கேட்க
“இப்போ அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்ல… அவுங்களுக்கு ஹார்ட் பீட் நார்மல்லா பீட் ஆகுறது இல்ல.அதுக்கு காரணம் டிப்ரஷன் . அவுங்க ரொம்ப டிப்பெர்ஸ்டா இருக்காங்க. சோ அவுங்கள எப்பொழுதும் மைண்ட் ஃபீரியா வச்சிக்கோங்க .அது மட்டும் தான் அவுங்கள காப்பாத்தும் ” என்றார்.
” இன்னைக்கு யீவுனிங் நீங்க அவுங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் ” என்றார்.
அவருக்கு தன் நன்றியை தெரிவித்து விட்டு வெளியே வந்தார்.
அதன் பின் மாலை அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
ஜீவா சுஜி கவி அவர்களுக்காக காத்திருக்க சூர்யா டீவி பார்த்துக் கொண்டு இருந்தான்.
அக்கா என்று கூறி கவி மற்றும் சுஜி அணைத்துக் கொள்ள ,, நந்தினியும் அணைத்து கொண்டாள்.
அதன் பின் ஜீவாவின் வற்புற்த்தலால் பள்ளிக்கு வர சம்மதித்தாள்.
தனது அன்னையால் அம்முக்கு இந்த நிலமை என்று அறிந்த ஜீவா,,அதன் பின் அவர்களிடம் தேவைக்கு அதிகமாக பேசுவதை நிறுத்திக் கொண்டான்.
அம்முவிற்கு தாயாகவும் தந்தையாகவும் அந்த 10 வயதிலே வாழ தொடங்கினான்.
சிவங்கரனிடம் கங்கா எவ்வளவு கேட்டும் அந்த டாக்டர் என்ன கூறினார் என்பதை கூறவே இல்லை. ஆனால் இதை பற்றி ஜீவாவிற்கு மட்டும் அவன் புரியும் வகையில் கூறினார்.
(ஃப்ளாஷ் பேக் ஓவர் )
கடந்த கால நினைவுகளில் இருந்த ஜீவாவை மருத்துவரின் பேச்சு சுயநினைவுக்கு கொண்டு வந்தது.
நந்தினியை பரிசோதித்து வந்த மருத்துவர் ,,ஜீவாவிடம் சென்று ” அவுங்க உங்களுக்கு என்ன வேணும் மிஸ்டர்..???” என்க
” என்னோட அத்த பொண்ணு டாக்டர்.அவளுக்கு ஒன்னும் இல்லையே…??” என்று பதற்றத்துடன் கேட்க
” இப்ப பரவால நீங்க கரக்ட் டைம்க்கு ஹாஸ்பிடல்ல சேத்துட்டதுனால காப்பாத்த முடிஞ்சது. இல்லைன்னா ரொம்ப கஷ்டமாயிருக்கும் ” என்றார்.
” டாக்டர் நான் போய் இப்போ நந்தினிய பாக்கலாமா..???” என்று தவிப்புடன் கேட்க
” போய் பாருங்க.ஆனா அவுங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்க ” என்று விட்டு சென்றார்.
வேகமாக அவள் இருந்த அறைக்கு சென்றவன் ,,அவளை கண்டு துடிதுடித்து போனான்.
அவளது கூந்தலை கோதியவாறே அவள் பக்கத்தில் அமர்ந்து..,,” நீ கவல படாத அம்மு…நாம்ம இன்னும் ஒரு வாரத்துல ஊருக்கு கிளம்புறோம். உன்ன இங்க தனியா விட்டுட்டு போக மனசு இல்ல… அதுனால உன்ன ஒரு பாதுகாப்பான இடத்துல சேக்க போறேன்.அங்க உனக்கு எந்த ஒரு குறையும் வராது.அவுங்க உன்ன நல்லா பாதுப்பாங்க ” என்றான் வழியும் கண்ணீரோடு…..
அதன் பின் வெளியே வந்தவன் ,,சுஜியிடம் சென்று ” நீ அம்மு கூட இரு ..,, நான் இங்க வெளிய இருக்கேன் ” என்று கூறி உள்ளே அனுப்பி வைத்தான்.
அடுத்தநாள் காலை அட்காசமாக பிறந்தது….
கதிரவனின் வெளிச்சை கண்டு இமைகளை திறந்த நந்தினி எதிரில் நின்றவரை பார்த்து கத்தினாள்.
அந்த சத்ததில் கண் முழித்த சுஜி வேகமாக ஜீவாவிடம் சென்று ” அக்கா எதையோ பாத்து கத்துறாங்க ஜீவா மாமா …எனக்கு பயமா இருக்கு ” என்றாள் மூச்சு வாங்கிய படியே….
எந்தன்
நினைவிலும்
கனவிலும்
ஆட்கொண்டது
உந்தன் பெயர்
மட்டுமே
நிரந்தரமாக ???…!!!
அவனும் வேகமாக சென்று நந்தினியை காண அவள் “கிருஷ் கிருஷ் ” என்று கத்திக் கொண்டு இருந்தாள்.
உடனே டாக்டரை அழைத்து வந்தான் ஜீவா.
அவளை பரிசோதித்த டாக்டர் நந்தினிக்கு மயக்க மருந்து கொடுத்து படுக்க வைத்தார்கள்.
” நீங்க கொஞ்சம் என்னோட கேபினுக்கு வாங்க ” என்று கூறிவிட்டு செல்ல அவர் பின்னாடியே சென்றான் ஜீவா.
” உள்ள வரலாமா டாக்டர் ” என்க ” உள்ள வாங்க மிஸ்டர் ” என்றார்.
[the_ad id=”6605″]
” டாக்டர் இப்போ எதுக்கு திடீர்னு நந்தினி இப்படி கத்துறா ” என்று பயத்துடனே கேட்க
” அவுங்க மெண்டலி அஃபட் ஆகியிருக்காங்க .அது அவுங்க சின்ன வயசுல தடந்துருக்கலாம் .அத நினச்சி இப்ப வரைக்கும் பயப்பட்டுட்டு இருக்காங்க. அது மட்டும் இல்லாமல் அவுங்க யாரோ கிருஷ்ன்னு சொல்லி கத்திட்டு இருந்தாங்களே..அவுங்கள கொண்டு வந்து காட்டுங்க .. இல்லன்னா எதாவது பீஸ் ஃபுல்லான்னா இடத்துக்கு கூட்டிட்டு போங்க .. அப்பதான் அவுங்க மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் ” என்றார்.
நந்தினி உறங்கிக் கொண்டு இருந்தாள் அமைதியாக.ஜீவாவின் மனதில் அந்த கிருஷ் யாராக இருக்கும் என்ற கேள்வி எழும்பிக் கொண்டே இருந்தது. ஆனால் பதில் மட்டும் கிடைக்க வில்லை.
அவனுக்கு பதில் கொடுக்க வேண்டியவள் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.
உதய் சீக்கிரமே எழுந்து கொண்டு கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வந்து சேர்ந்தான் நந்தினியை காணும் நோக்கத்தோடு…
ஆனால் அவனுக்கு கிடைத்த பதில் இன்று வர வேலைக்கு வரவில்லை என்பதே….
உடனே கோபத்துடன் மொபைலை எடுத்து ஒருவருக்கு கால் பண்ணி பேசிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான்.
அந்த மாலையே நந்தினியை டிஸ்டார்ஜ் செய்ய ,,சுஜி மற்றும் ஜீவா அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
வீட்டில் நந்தினிக்காக கவி மட்டும் சிவசங்கரன் காத்திருந்தார்கள் .
அவள் வந்ததும் ஆர்த்தி எடுத்து வரவேற்றாள் கவி.
சோஃபாவில் நந்தினியை அமர வைத்தான் ஜீவா.
நந்தினியின் பக்கத்தில் அமர்ந்த சிவசங்கரன் வாஞ்சையாக அவளது கூந்தலை தடவி விட்ட படியே ” இப்போ பரவாலையா மா ” என்றார்.
” பரவால மாமா ” என்றாள் மெதுவாக
அப்பா நான் ஒரு முக்கியமான முடிவு எடுத்துருக்கேன். அதுக்கு நீங்க சம்மதிக்கனும் ” என்று பொடி வைத்து பேசினான்.
“என்னன்னு சொல்லு பா..” என்றார் .
ஜீவா திக்கிணறி அவன் பதிலை சொல்ல ,, நந்தினி முதற்க்கொண்டு அவனது பதிலை கேட்டு அதிர்ந்து நிற்க …
அடுத்த நொடி ஜீவா அதிர்ந்து நின்றான்.
~தேடல் தொடரும்….