யாரவன்…????
என் வாழ்வை
மாற்ற ஒரே நொடியில்…
தந்தையின் பாதுகாப்பை
உணர்த்திவிட்டு என்னை
தவிக்க விட்டு சென்றான்…
விழியின் கண்ணீரை
துடைத்தவன்
அதன் பின் வந்த
கண்ணீருக்கு காரணமாக
மாறினான்…
ஒரு நொடி தீண்டலில்
என் உயிரை தீண்டி விட்டு
தனியே விட்டு சென்றுவிட்டான்…
நினைவில் இருந்து நீக்க முயற்சித்து
நீக்க முடியாமல் தவிக்கிறேன்
உறக்கத்திலும்???….!!!
மருத்துவர் ஒருவர் நந்தினிக்கு சிகிச்சை செய்ய ,,வெளியில் இருந்த ஜீவாவிற்கு மனதில் உயிர் போகும் வலி ஏற்பட்டது. அவள் எப்போது தன்னுடன் பேசுவாள் என்று தவித்துக் கொண்டு இருந்தான்.
சுஜி தன் அக்காவை நினைத்து அழுது கொண்டே இருந்தாள்.
இதே போல் இப்படி ஒன்று அவன் சிறு வயதில் அவளுக்கு நடந்தது ஞாபகத்திற்கு வர அவனது அழுகை நின்றபாடில்லை.
அவனது நினைவுகள் எல்லாம் அன்று நடந்ததை நினைத்தது….
(ஃப்ளாஷ் பேக்)
“மாமா இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஒரு காம்பெட்டிஷனுக்காக நானும் ஜீவாவும் இன்னொரு ஸ்கூல்லுக்கு போறோம் ” என்றாள் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நந்தினி.
” சரி டா தங்கம் . ரெண்டு பேரும் பாத்து பொயிட்டு வாங்க ” என்று சொல்லி நெத்தியில் முத்தமிட்டு விட்டு “போ போய் அப்பா அம்மா கிட்ட வேண்டிட்டு போ டா ” என்று நந்தினியை அனுப்பி வைத்தார்.
” அப்பா அப்பா எனக்கு முத்தம் கொடுக்கல .அம்முக்கு மட்டும் தறிங்க ” என்று கேட்டுக்கொண்டே ஓடி வந்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜீவா.
தாய் தந்தையை கும்பிட்டு வந்த நந்தினி ஜீவாவிடம்
” டேய் அப்பு..!! இதெல்லாம் உனக்கு ஓவ்வரா தெரியல நான் பண்றது பாத்து அப்படியே காப்பி பண்ணிட்டு இருக்க ” என்க
” நான் அப்பிடித்தான் பண்ணுவேன் .நீ என்ன வேண்னா சொல்லிக்கோ ” என்று சொல்லிவிட்டு ” அய்யோ அப்பா எனக்கு முத்தம் கொடுங்க பா. அம்முக்கு மட்டும் கொடுத்தீங்க ” என்றான் அவசரமாக .
” மாமா கொடுக்காதீங்க ” என்றாள்.
” அய்யோ அப்பா சீக்கிரமா கொடுங்க பா .எனக்கு ச்சுச்சு வருது. பாத்துரும் போகனும் ..,, சீக்கிரம் கொடுங்க ” என்றான் கட்டுப்படுத்திக்கொண்டே
இருவரும் வயிரை பிடித்துக்கொண்டு சிரிக்க தொடங்கினர்.
[the_ad id=”6605″]
அவர்களது சிரிப்பை கண்டு கங்காவிற்கு வயிறு எரிந்தது.
சூர்யா அம்மாவை நோக்கி வந்து ” அம்மா நான் இன்னைக்கு ஒரு காம்பெட்டிஷன்காக XXX ஸ்கூலுக்கு போறேன் மா.என்னோட ஆர்க்கிட்டேட் நல்லா வரனும்ன்னு வேண்டிக்கோங்க மா ” என்றான்.
” என் மகன் டா நீ. கண்டிப்பா நீ தான் வின் பண்ணுவ ” என்றாள் .
” ரொம்ப தாங்க்ஸ் மா ” என்றான்.
” சரி பா போ போய் சாமி கும்பிட்டுட்டு போ. எல்லாமே நல்லதா நடக்கும் ” என்று கூறி சூர்யாவை அனுப்பி வைத்தாள்.
இதை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்…
“தங்கம் ஜீவா பாவம்ல அவனுக்கு ஒரு முத்தத்தை கொடுத்தரலாம் டா ” என்று சிவசங்கரன் சொல்லும்போதே ஜீவா முகத்தை பாவமாக வைத்துக்கொண்டான்.
ஜீவாவை பார்த்த படியே “சரிங்க மாமா பொலச்சி போகட்டும் ” என்றாள் .
“டேய் ஜீவா நந்தினி கூடவே இருக்கனும் சரியா..???காம்பெட்டிஷன் அட்டன் பண்ணிட்டு நந்தினி கிட்ட வந்துரு . ரெண்டு பேரும் காம்பெட்டிஷன்ல நல்லா பண்ணுங்க ” என்று கூறி ஜீவாவின் நெத்தியில் முத்தமிட்டார்.
இதை பார்த்த சூர்யாவிற்கு தான் ஜீவாவாக இருக்க கூடாதா என நப்பாசை தோன்றியது .
” சரி பா .. நான் ச்சுச்சூ பொய்ட்டு வரேன் ” என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க
” ஜீவா கண்ணா இங்க வா ” என்று கங்கா அழைத்தாள்.
” சொல்லுங்க மா ” என்று பாத்துரும்மை அடக்கிக்கொண்டே
” ஏன் டா..!!! அம்மாவும் இங்க தான இருக்கேன் .அது என்ன அப்பா கிட்ட மட்டும் ஆசிர்வாதம் வாங்கிட்டு போற…??? அம்மா கிட்ட சொல்ல மாட்டியா டா ” என்று அவனிடம் கராராக கேட்க
” அம்மா அம்மு உங்க வந்து ஆதிர்வாதம் (ஆசிர்வாதம்) வாங்கல . அதான் நானும் வரல ” என்றான் வேகமாக
“ஏன் டா அவ வந்து வாங்கின்னா தான் ,,நீ என்கிட்ட வந்து வாங்குவியா…???” என்று கோபமாக கேட்க
” ஆமாம் ” என்று கூறிவிட்டு பாத்ரூமுக்கு வேகமாக ஓடினான்.
கங்காவிற்கு இவனது பேச்சை கேட்டு நந்தினியின் மீது வன்மத்தை வளர்த்தாள்.
இதை எதுவும் அறியாத நந்தினி சந்தோஷமாக கிளப்பிக்கொண்டு இருந்தாள்.
சுஜி கவி நந்தினி மற்றும் ஜீவா கிளம்பி வெளியே வர ,,அவர்களை அழைத்து போக ஸ்கூல் பஸ் வந்தது. அதில் ஏறப்போகும் போது “டேய் ஜீவா நல்லா பண்ணிட்டு வாடா ” என்று கூற
” அம்மா அம்முக்கிட்டயும் இதையே சொல்லுங்க” என்க
[the_ad id=”6605″]
கங்கா தன் மகனை மீறி எதுவும் செய்ய முடியாமல் போக நந்தினியை முறைத்துக் கொண்டே ” நல்ல படியா பண்ணிட்டு வா ” என்று சொல்ல நந்தினி பதிலுக்கு ஒரு புன்னகையை பதிலாக அளித்து விட்டு பேருந்தில் ஏறினால்.
சூர்யா தன் வண்டியை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் பள்ளிக்கு சென்றான்.
ஸ்கூலுக்கு சென்ற அனைவரும் ,,அவர் அவர்களது வகுப்பிற்கு சென்று அட்ன்டன்ஸ் ( attendance) போட்டனர்.
சிறு நேரத்தில் வகுப்பு ஆசிரியர் வந்து காம்பெட்ஷன் செல்பவர்களை அழைக்கவும் அதில் கலந்துகொள்ள போற அனைவரும் சென்றனர்.
பள்ளி பேருந்திலே XXX பள்ளிக்கு சென்றனர்.
அது ஒரு காண்வென்ட் ஸ்கூல் …அதில் படிப்பவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்களாகவே இருந்தனர்.அதிலும் சிலர் எளிமையாக இருந்தனர்.
ஒவ்வொரு போட்டிக்கும் தனித் தனி இடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
“அப்பு என்னோட நடக்க போற காம்பெட்டிஷன் 1st ஃபோல்ர் ல இருக்கு .சோ நான் அங்க போறேன் . நீ கலந்துக்க போற பேச்சு போட்டி அதோ அங்க ஒரு க்கலஸ் ரூம் இருக்கு பார். அங்க தான் நடக்குது ” என்றாள்.
” சரி அம்மு .நீ நல்லா பாடு சரியா ” என்றான்.
“சரி டா அப்பு . நான் நல்லா பாடுறேன்.அதே மாதிரி நீயும் உன்னோட ஸ்பீச்ச நல்லா பிரசண்ட் பண்ணு ஓகே வா ” என்க சரி என்று தலையை ஆட்டினான்.
அதன் பின்னர் ” சரி நான் போறேன் ..,, டைம் ஆய்டுச்சி ” என்று கூறிவிட்டு அவனை கொண்டு போய் அந்த வகுப்பில் விட்டுவிட்டு சென்றாள்.
இதையெல்லாம் பார்த்த சூர்யாவிற்கு பொறாமையாக இருந்தது.
இதை எல்லாத்தையும் ஒரு ஜோடி கண்கள் ஆச்சரியமாக பார்த்து விட்டு சென்றது.
எல்லா போட்டிகளும் ஆரம்பித்தது.நந்தினி தைரியமாக இருந்தாள்.அவளது தைரியத்தை கண்ட மத்த போட்டியாளர்கள் எல்லாம் கண்டு வியந்தனர்.சிலர் over confidence உடம்புக்கு ஆகாது என்று அவள் காது பட பேசினர்.
இதை எதுவும் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள்.
காற்றில் வரும்கீதமே என் கண்ணனைஅறிவாயா
காற்றில் வரும்கீதமே
என் கண்ணனை அறிவாயா
அவன் வாய்குழலில் அழகாக ….
ஆ அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து
காற்றில் வரும்கீதமே என் கண்ணனைஅறிவாயா
பசு அறியும் அந்தசிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்குஆஆ ஆஆ …
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன் தானே
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும்கீதமே என் கண்ணனைஅறிவாயா
ஆதார சுருதி அந்த அன்னை என்றேன்
அதுகேற்ற லயம எந்தன் தந்தை என்பேன்
இந்த வரி பாடும் போது அவளது கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் எட்டி பார்த்தது. அதை வேகமாக துடைத்துக் கொண்டு பாட்டை தொடர்ந்தாள்.
சுதிலயங்கள் தன்னை சுற்றும்
ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசை குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல்இல்லம் எது சொல்லு தோழி
ப ம ரி க ரிக ரி க நி த த நி
ப ம ரி க ரிக ரி க நி த த நி
நி நி ரி கரி க ம த ம த ம த நி சநி நி ச நி நி ச சா சா நிநி சா நி தா நி நி நி தாச நி தா ம தா தா தா நிம மா தா க க ம தா சாநி தா ம க ரி
காற்றில் வரும் கீதமே
என் கண்ணனை அறிவாயா அவன் வாய்குழலில் அழகாக ….
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
காற்றில் வரும்கீதமே
என் கண்ணனை அறிவாயா
என்று பாடலை லயத்தோடு பாடினாள்.இதனை கேட்ட அனைவரும் மெய் மறந்து கேட்டனர்.
நந்தினி பாட தொடங்கியபோது அந்த வழியே கடந்து சென்ற அந்த ஒரு ஜோடி கண்களுக்கு சொந்த காரன். இதை கேட்டு அப்படியே நின்று அந்த பாடலை கேட்டது மட்டும் அல்லாமல் மொபைலிலும் ரெக்கார்டு செய்தது.
அவள் பாடின பின்பு ,,அவளை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் எல்லாம் பாடினர்.
ஜீவா தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பை வைத்து நன்றாக பேசினான்.
[the_ad id=”6605″]
சூர்யா ஓவிய போட்டியில் கலந்து கொண்டிருந்தான்…,, அவன் நண்பர்களுடன் சேர்ந்து.
பின்னர் அனைத்து விதமான போட்டிகளும் முடிவு பெற ,, அனைவரும் ஆடிட்டோரியம் முன்பு கூடினர்.
அந்த அந்த போட்டியில் முதல் மூன்று இடம் பெற்ற நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
சூர்யாவிற்கு மூன்றாவது ப்லேஸும் ,, ஜீவாவும் நந்தினியும் முதல் இடம் பெற்றார்கள்.
நந்தினி சாப்பிடுவதற்காக தனியே மெஸிற்கு செல்ல ,,அவளை பின்தொடர்ந்தது யாரோ வருவதாக அவளுக்கு தோன்ற
பின்னாடி திரும்பி பார்க்காமல் அவள் முன்னே வேகமாக சென்றாள்.
” ஹலோ…!!! ஒரு நிமிஷம் நில்லுங்க ” என்று பின்னாடியில் இருந்து குரல் வர அவளது நடையை வேக படுத்தினாள்.
தீடீரென்று அவளது இடக்கையை பிடித்து பின்புறமாக இழுத்து அணைத்தது.
அதில் பயந்து போய் கத்த தொடங்க ஆரம்பிக்கும்போது அவளது வாயை பொத்தியது ஒரு கரம்.
நந்தினி அந்த கரத்தை கடித்து வைக்க …
“ஆஆஆஆஆஆ வலிக்குது டி கடிக்காத ” என்று ஆண் குரல் வந்தது.
அவளை தன் புறமாக திருப்பியவன் ,,அவள் வாயிலிருந்து மட்டும் கையை எடுக்காமல் இருந்தான்.
” இங்க பாரு..!! என்ன பாரு ” என்று அவன் நந்தினியின் தாடையை பிடித்து அவனை காண வைத்தாள்.
அவனை பார்த்த நந்தினி அப்படியே நிற்க ,,
” இங்க பாரு நிதி ..,,இப்போ நான் கைய எடுப்பேன்னா நீ கத்தாம இருப்பியாமா ” என்றான் குழந்தைக்கு சொல்வது போல்
நந்தினி அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக தலையை ஆட்டினாள். அவனது நிதி என்ற அழைப்பையும் குறித்துக் கொண்டாள் மனதில்…
பொறுமையாக அவன் கையை எடுத்தான். அவள் அமைதியாக அவனை பார்த்து கொண்டே நிற்க ,, அவள் கத்த வில்லை என்று தெரிந்து கொண்ட அவன் பேச்சை தொடங்கினான்.
” ஹே இங்க பாரு ..,, நான் உன்கிட்ட ” என்று திக்கித்திணறி ஏதோ சொல்ல வர நந்தினி அமைதியாகவே நின்றிருந்தாள் அவனது அணைப்பில் .அவளுக்கு அந்த அணைப்பு ஒரு பாதுக்காப்பான உணர்வை ஏற்படுத்தியது.
அவளை அவனிடம் இருந்து விளக்கி விட்டு ..,,அவனே ஒரு வழியாக சொல்ல தொடங்கினான்..
” இங்க பாரு மா..,, நான் சொல்றத பயப்படுமா கேள்ளு ” என்று சொல்லிவிட்டு அவனே தொடங்கினான்.
” என்னோட நேம் கிருஷ் .நீ பரிசு வாங்கிட்டு கீழ போகும்போது தான் பார்த்தேன். உன்னோட டெரஸ் பின்னாடி எல்லாம் பிளட்டா இருக்குமா ” என்று சொல்ல
” என்னது பிளட்டா இருக்கா..??” என்று பின்னே திரும்பி பார்க்க அந்த டாப்ஸில் பாதி இடத்தில் பிளட் இருந்தது.
” அய்யோ பிளட் ” என்று கத்தத் தொடங்க அவளது வாயை மூடியவன்
” இப்போ எதுக்கு டி இப்படி கத்துற ” என்று கேட்க
” அய்யோ பின்னாடி ஃபுல்லா பிளட்டா இருக்கே .. எப்படி என்னோட ட்ரெஸ்ல வந்ததுன்னு எனக்கு தெரியல ” என்று சொல்ல
கிருஷ் அவளை வினோதமாக ஒரு பார்வை பார்க்க…. அவள் பின்னாடி அவளது டாப்ஸையே பார்த்து கொண்டிருக்க ஏதோ புரிந்தவனாய் அவளிடம்
” நீ இங்கயே இரு நான் என்னோட ஃபிரண்ட கூட்டிட்டு வரேன் ” என்று சொல்லி கிளம்ப எத்தனிக்க நந்தினி அவனது கையை பிடித்து நிறுத்தி ” சீக்கிரம் வந்துரு கிருஷ் பயமா இருக்கு ” என்றாள்.
[the_ad id=”6605″]
“சரி வரேன் டி ” என்று சொல்லிவிட்டு அவனது தோழியான சுமித்ராவை அழைத்து வந்தான்.
கிருஷ் அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றுக்கொண்டான். சுமி மட்டும் அவளை அழைத்துக் கொண்டு வாஷ் ரூம் சென்றாள்.
வெளியே வந்த சுமியிடம் அவனது ட்ராக் சூட்டை கொடுத்து ” இத மாத்திட்டு வர சொல்லு ” என்றான்.
சுமியும் அதை நந்தினியிடம் கொடுத்து ” மாத்திட்டு வா ” என்றாள்.
அவளும் மாத்திவிட்டு வர ,,சுமி அவளுக்கு சில அறிவுரைகள் கூறி கிருஷிடம் அழைத்து வந்தாள்.
இதை அனைத்தையும் சூர்யாவின் நண்பன் பார்த்து விட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு சூர்யாவை காண வேகமாக சென்றான்.
கிருஷ் அவளை பார்த்துக்கொண்டே இருக்க நந்தினி ” ரொம்ப நன்றி கிருஷ்” என்றாள் .
” ஹே எனக்கு எதுக்கு டி நன்றி எல்லாம் சொல்ற இது என் கடமை டி ” என்றதில் கடமை டி என்பதை அழுத்தி சொன்னான்.
அவன் டி அழைத்ததில் சுமி குழம்பி போய் நின்றாள். இன்றுவரை தன்னை ஒருமுறை கூட டி என்று அழைத்ததில்லை. ஏன்டா..??? என்று கேள்வி எழுப்பினாள் தனக்கு வரப்போகும் மனைவியை மட்டும் தான் டி போட்டு அழைப்பேன் என்று ஒரு நாள் அவளிடம் கூறியது ஞாபகம் வர யோசனையில் மூழ்கி போனாள்.
கிருஷ் நந்தினியை அழைத்து வந்து பேருந்தில் ஏற்றி விட்டு ஒரு பலத்த பார்வை பார்த்துவிட்டு சென்றான்.
அவன் சென்ற சிறிது நேரத்தில் ஜீவா வந்துவிட பேருந்தும் அவர்களது பள்ளிக்கு சென்றது.
சூர்யாவிடம் சென்றவன் அங்கு நடந்ததில் சிலதை மறைத்து நடந்ததை வேற மாதிரியாக கூறினான்.
இதை கேட்ட சூர்யா அவனை ஓங்கி அடிக்க போக ..,,”நான் சொல்றத தான் நீ நம்பல நான் ஃபோட்டோ எடுத்துட்டு வந்துருக்கிறேன் இதை பாரு ” என்று அவனது மொபைலில் இருந்து எடுத்து ஃபோட்டோவை காட்டினான்.
சூர்யாவிற்கு நித்தமும் அடங்கியது அதை பார்த்த அடுத்த நொடி.
அந்த போட்டோவை அவனது மொபைலில் இருந்து இவனது மொபைலுக்கு மாற்றிக் கொண்டு வேகமாக சூரிய பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.
சூர்யா சென்ற பின் அவனது நண்பனான கார்த்திக் ஏதோ சாதித்து விட்டது போல் அவன் சென்ற பாதையை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தான்….
தேடல் தொடரும்….