?கண் இல்லையென்றாலோ
நிறம் பாா்க்கமுடியாது
நிறம் பாா்க்கும்
உன் கண்ணை
நீ பாா்க்கமுடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணா்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா?
தூக்கத்தில் குழந்தையாக இருக்கும் நந்தினியை கண்டவன் இமைகள் மூட மறுக்க அவளையே கண்டது. அவளின் கருங்கூந்தல் அவளின் நெற்றியில் பட்டு தெறிக்க அவளின் தூக்கம் கலையாதவாறு அவளின் கூந்தலை பின்னே தள்ளியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து விட்டு காதல் நினைவுகளை தேடிச் சென்றான்.
அவனது காதல் நினைவுகள் முழுவதும் அந்த அறையில் இருந்தது. அங்கே இருந்த கப்போர்டை திறந்து அதில் இருந்த சிறு பெட்டியை திறந்தான்.
அந்த பெட்டியில் ஒரு ரூபாய் சாக்லேட் கவர் இருக்க அதை பார்த்தவனின் மனது அவளது முதல் நாள் கல்லூரி வாழ்க்கை ஞாபகம் வந்தது.
நந்தினியை காலேஜ் வாசலில் வந்து விட்டு சென்றான் சூர்யா அவனது கல்லூரிக்கு சென்றுவிட்டான்.
முதல் நாள் கல்லூரி என்பதனால் பயத்துடனே நின்றுக் கொண்டிருந்தாள். அதுவும் இல்லாமல் கீர்த்தி வரும்வரை காத்திருக்க கூறியதால் அமைதியாக நின்றாள்.
அமைதியாக நின்றிருக்க அவளை ஒரு கேங்க் அழைத்தது. அந்த கல்லூரியில் நிறைய ப்ராஞ்ச் உள்ளதால் ஒரு ப்ராஞ்சில் உள்ள மாணவர்கள் மற்ற ப்ராஞ்சில் படிக்கும் சக மாணவர்களோடு பேசக் கூடாது என்பது அந்த கல்லூரியின் ரூல் .
அப்படி இருக்கையில் முதலில் இருப்பது கலைக் கல்லூரி அதன் பின்னர் நர்ஸின் ஸ்கூல் இருந்தது.
அதனால் நர்ஸிங் படிக்கிறவர்கள் மட்டும் ஆர்ட்ஸ் கேம்பசை தாண்டி தான் செல்ல வேண்டி இருந்தது.
அவர்கள் அழைக்கவும் பேந்த பேந்த முழிக்க அவர்கள் கேங்கில் இருந்த பெண்ணை கூப்பிட்டு அவளை அழைத்து வர அனுப்பினர்.
அவளும் அவளை அழைத்துக் கொண்டு வந்தவள் அவர்களுடன் இணைந்துக் கொண்டாள்.
” உன் பேர் என்ன ” என்று அவர்களின் ஒருவன் கேட்க
“ந..நந்.. நந்தினி ” என்று திக்கி திணறி சொல்ல அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த உதய் அப்படியே நின்றுவிட்டான்.
அங்கே நடப்பதை பார்வை இட்ட படி தன்னவளின் செய்கைகளை இரசித்துக் கொண்டிருந்தான்.
” என்ன டிபார்ட்மண்ட் நீ ” என்று கேட்க பயத்தில் எச்சிலை விழுங்கியவள் ” நர்ஸிங் ” என்றாள்.
” டேய் மச்சி நர்ஸு டா ” என்று ஒருவன் சொல்ல மற்றவர்கள் எல்லாம் சிரிக்க தொடங்கினர்.
அதிலிருந்த ஒருவன் ” நர்ஸ் தான ஆகப் போற அப்போ என்னோட பீப்பி கைய பிடிச்சு செக் பண்ணு ” என்று கையை நீட்ட மற்றொருவனோ ” எனக்கு காய்ச்சல் அடிக்கிற மாதிரி இருக்கு எங்க என் நெத்திய தொட்டு பாத்து சொல்லு பாப்போம் ” என்று அவன் அவள் முன்னே வந்து நின்றான்.
பயத்தில் பின்னோக்கி சென்றவள் சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டாள்.தனக்கு யாராவது உதவி செய்வார்களா என்று. ஆனால் யாரும் அவளுக்கு உதவ வரவில்லை .
” இங்க பாருங்க இப்படி எல்லாம் என்கிட்ட பேசாதீங்க அப்புறம் நான் என்னோட பாய் ஃப்ரண்ட கூட்டிட்டு வந்துடுவேன் ” என்று பயத்தில் எதையோ உலறி வைக்க தூரத்தில் நின்று அவளை பார்த்ததனால் அவனுக்கு அங்கே பேசுகிறார்கள் என்று புலப்பட வில்லை. ஆனால் ஏதோ தவறாக தான் பேசி வம்பிழுக்கிறார்கள் என்று அவளின் தவிப்பை வைத்து புரிந்துக் கொள்ள முடிந்தது.
” சரி போ போய் உன்னோட பாய் ஃப்ரண்ட கூட்டிட்டு வா நாங்க இங்கேயே வெயிட் பண்றோம் ” என்றான்.
அவளோ பயத்தில் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு இருந்தாள்.
சுற்றியும் கண்ணை சுழற்ற விட்டவளின் கண்ணுக்கு தென்பட்டது அந்த சிறிய கோவிலும் அதற்கு நின்று சாமி கும்பிட்டு கொண்டு இருந்தவனும் தான்.
” ஒரு நிமிஷம்” என்றவள் நேராக அவனின் அருகில் சென்றாள்.
அவள் தன்னை நோக்கி வருவதை ஓரக் கண்ணால் பார்த்த உதய் கர்ச்சிப் கொண்டு அவனது முகத்தை மூடிக் கொண்டான்.
அவனிடம் வந்தவள் ” எக்ஸ் க்யூஸ் மீ சார் ” என்று மென்மையாக அழைக்க அவளது அழைப்பில் கிரங்கியவன் ” சொல்லுங்க உங்களுக்கு என்ன வேண்டும் ” என்று திரும்ப
” எனக்கு உங்க கிட்ட இருந்து ஒரு ஹெல்ப் வேணும் ” என்றவள் அனைத்தையும் அவனிடம் ஒப்பித்து விட்டாள்.
அவள் சொல்ல சொல்ல அவனுக்கு கோபம் உச்சியை தொட ” நீங்க அவுங்க கிட்ட வந்து நீங்க என்னோட லவ்வர்ன்னு சொல்லுங்க ப்ளிஸ் ” என்று கெஞ்ச
” நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணா எனக்கு என்ன கிடைக்கும் ” வில்லங்கமாக கேட்க அதை அறியாத பேதையவள் தனது கல்லூரி பைக்குகள் கையை விட்டு தேடி ஒரு ஒரு ரூபாய் சாக்லேடை அவனிடம் நீட்டினாள்.
இது என்ன என்பது அவன் பார்க்க அதை புரிந்துக் கொண்ட நந்தினி ” இப்போதைக்கு என் கிட்ட இது மட்டும் தான் இருக்கு சார் ” என்று அவனின் கையில் திணித்து விட்டு உதய் பேச வாய்ப்பளிக்காமல் அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
அவர்களது முன் அவனை நிறுத்தியவள் ” சொன்ன மாதிரி நான் இவுங்கள கூட்டிட்டு வந்துட்டேன் இப்போ என்ன போக விடுங்க ” என்று அவர்களிடம் கெஞ்ச..
உதய் அவனது முக கவசமாக அணிந்த கர்சீப்பை கழட்டி அவர்களை பார்த்து முறைக்க
” மச்சி நம்ம ஃப்ரசிடண்ட் டா ” பதறி போய் கூற ” க்லாஸ்க்கு போகாமா இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ” என்று அதிகாரமாக கேட்க
” சும்மா பேசிக்கிட்டு இருந்தோம் அண்ணா ” என்றவர்கள் அவனின் முறைப்பை கண்டு ” சாரி சிஸ்டர்” என்று அந்த இடத்தை விட்டு தெறித்தார்கள்.
நந்தினி திரும்புவதற்கு முன் அவன் மீண்டும் கர்ச்சிப்பால் அவன் முகத்தை மூடிக் கொண்டான்.
” ரொம்ப நன்றி சார் ” என்றுறைக்க ” இப்படி எல்லாருக்குமே பயந்துகிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது நமக்கு பயம் இருந்தாலும் அத வெளிக்காட்டாம தைரியமா இருக்கனும் சரியா எல்லா நேரமும் நம்மள யாராவது ஒருத்தர் வந்து காப்பாத்துவாங்கன்னு சொல்ல முடியாது பீ கேர் ஃபூல் ” என்று விட்டு சென்றான்.
அவனையே பார்த்த படி நின்றவள் கீர்த்தி வந்து தலையில் கொட்டின பிறகே உலகத்திற்கு மீண்டு வந்தாள்..
இதை எண்ணியவனின் மனதில் சில்லென்று இருந்தது.
அந்த சாக்லேட் கவரை அந்த பெட்டியிலே வைத்தவன் கப்போர்டை மூடி விட்டு வெளியேறினான். அப்போதும் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க மெதுவாக நடந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
குளித்து முடித்து வந்தவன் ப்ளாக் ட்ராக் பேண்ட் ப்ளூ டி சேர்ட் அணிந்தவன் கீழே சென்று சமையலறைக்குள் தன்னை புகுந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் எழுந்தவள் நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். சிறிது நேரத்தில் வெளியே வந்தவள் தன் உடையை சரி செய்து கண்ணாடி முன்பு நின்று தன்னை ஒப்பனை செய்ய தொடங்கினாள்.
காதில் அவளது புடைவைக்கு ஏற்றவாறு ஒரு தோடினை எடுத்து மாட்ட அவளின் காதுவரை சென்ற தோடை உதய் பறித்துக் கொண்டு மாற்றி விட்டான். அடுத்த காதிற்கும் அவனே மாற்றிவிட்டு கழுத்து வலைப் பகுதியில் இதழ் பதித்தான்.
” சார் என்ன பண்றீங்க ” என்று பயத்தில் நெளிய
அவன் எதுவும் பேசாமல் அவனின் வேலை யென குறியாக இருந்தான். அவளது கழுத்து பகுதியில் ஆழ்ந்த முத்தத்தை பதித்தவன் அவளை தன் முன் நிறுத்தி நெற்றி என ஆரம்பித்து அவனது இதழ் வரை யுத்தத்தை தொடங்கியிருந்தான்.
அவள் இதழிடம் வந்தவன் அவளின் இடையை பிடித்து நந்தினியை தன்னுடன் ஒட்டியன் அவள் இதழ் நோக்கி குனிய நந்தினியின் பெண்மை விழித்துக் கொண்டு அவனை தடுத்து நிறுத்த சொல்ல உதயை தன்னிடமிருந்து பிரித்து கீழே தள்ளிவிட்டாள்.
தள்ளிவிட்ட நந்தினி அவனை பார்ப்பதற்கு கண்களில் கோபத்தை நிறப்பி அவனை பார்க்க அங்கே யாரும் இருந்த மாதிரியான அடையாளம் எதுவும் இல்லாமல் போனது.
ட்ரெஸிங் டேபிளில் அமர்ந்தவளுக்கு இது தன் பிரம்மை என பிடிப்பிடவே சில நொடிகள் தேவை பட்டது. அது தெரிந்த நொடி அதிர்ந்து நின்றாள். தனக்கு எப்படி இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் தோன்றலாம் என்று அவள் மூலை அவளிடம் சண்டித்தனம் போட
அவளது மனமோ உன்னால எப்படி அந்த மாதிரி நினைக்க முடிஞ்சது இது நாள் வரை கிருஷ் தான் எல்லாம்னு சொல்லிட்டு இருந்த இப்போ அது எங்க போச்சி. அப்போ நீ அவன உண்மையா காதலிக்கில்லையா என்று மனம் ஒரு பக்கம் அவளை வாட்டி எடுக்க இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் விதமாக அவனது பேர்ஸ்சனல் மொபைல் அடிக்க தொடங்கியது.
அது அடிக்க அடிக்க அவளுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் துளிர்விட தொடங்கி இருந்தது.
அந்த ஓசை அவள் கல்லூரியில் சேர்ந்த புதிதில் ஃப்ரஷர்ஸ் டேவிற்கு பாடிய பாடல் . அந்த பாடலை கிருஷ் தான் ஒரு முறை அதை தனது மொபைல் ரிங்டோனாக வைத்திருப்பதாக எழுதி இருந்தானே என்று அவள் மூலையில் மணி அடிக்க அவளது நெற்றி சுருங்கியது. ஆமாம் அவள் இது நாள் வரை கிருஷை சந்தித்தது இல்லை எனினும் இருவரும் லெட்டர் வைத்து மட்டுமே அவர்களது காதலை வளர்த்து இருந்தனர். கல்லூரி முடிக்கும் வரையில் அவளுக்கென்று தனியாக அழைப்பேசி வாங்கி தர வில்லை. அதுவும் கிருஷ் கூறியது நீ படித்து முடித்த பின்பே நான் உன் முன் தோன்றுவேன் என்பது.
” அப்போ உதய் சார் கிருஷா இத ஏன் என்கிட்ட அவரு சொல்லவே இல்ல . என்னைய அப்பவும் ஏமாத்துனாறு இப்பவும் உதய்ன்னு சொல்லிகிட்டு ஏமாத்துறாறு . என்ன ஏமாத்த அவருக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ ” என்றவளின் இதயம் தாறுமாறாக உடைந்தது போல் இருக்க அவள் கண்களோ அதை கண்ணீராக வெளிப்படுத்தியது. ஆனால் அவள் ஒன்றை மறந்து விட்டாள் அவனது பெயர் உதய் கிருஷ்ணன் என்று..
கண்களை துடைத்தவள் வேகமாக கீழே இறங்கி சென்றாள். வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடியவள் இறுதியாக சமையலறைக்குள் நுழைந்தாள்.
அவன் அங்கு சமைத்துக் கொண்டு இருக்க இதுவரை இருந்த கோபமெல்லாம் எங்கோ போயிருக்க அவனை இரசிக்க தொடங்கினாள். அவன் சமையல் செய்யும் அழகை கண்டு வியந்து நின்றாள்.
தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற எதார்த்தமாக கண்ணை திரும்பி பார்த்தான். இருவரது கண்களும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள இருவருமே உலகம் மறந்து அதில் கலந்தனர்.
தீடிரென்று குக்கர் சௌண்ட் வரவே இருவரது கண்களும் வேறு திசை நோக்கி பயணித்தது.
நந்தினி மனதினுள் கிருஷ் என்றழைக்க உடனே திரும்பி பார்த்த உதய் ” இப்போ என்ன கூப்பிட்டுயா தினு மா ” என்று கேட்க நந்தினி வியந்தே போனால். தான் மனதில் தானே அவன் பொய்யான பெயரை சொல்லி அழைத்தோம் அப்படி இருந்தும் அது அவனுக்கு எப்படி கேட்டது என்று மனதில் புலம்பினாள்.
உதய் அவளின் முன் சொடக்கிட்டு ” உன்ன தான் தினு மா என்ன கூப்பிட்டியா இப்போ ” என்று கேட்க தீடிரென கேட்ட சத்தத்தில் நினைவு பெற்றவள் தன் பக்கத்தில் உதய் நெருங்கி நிற்க்கவும் பயத்தில் பின்னே நகர புடவை தடுக்கி கீழே போனால். ஆனால் அவளின் இடையினை பிடித்து அவளை கீழே விழாமல் தடுத்து நிறுத்தியது….
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே இருக்க தீடிரென்று வெளியே கேட்ட சத்தத்தில் நினைவு பெற்று பார்த்தவர்கள் அதிர்ச்சியுற்று நின்றனர்….
தேடல் தொடரும்…