சுமி மண்டபத்திற்குள் உள்ளே நுழையும்போது மண மேடையில் நந்தினியும் சூர்யாவும் ஜோடியாக இருந்து மோதிரம் மாற்றிக் கொண்டனர்..
இதனை கண்ட சுமிக்கு இதயமே சுக்குநூறாக உடைந்தது போல் ஆனது. தான் உயிருக்கு மேலாக காதலித்த சூர்யாவிற்கு அவள் கண் முன்னே இன்னொரு பொண்ணுடன் அதுவும் தங்கை என்ன கருதும் நந்தினியுடன் திருமணம் நிச்சயிக்க பட்டுள்ளது…
ஜீவா எதர்த்தமாக வெளியே பார்க்க அங்கே சுமி நின்றிருந்ததை கண்டு வேகமாக அவளிடம் வந்து நின்று ” வாங்க மேடம் வாங்க என்றே சொல்ல” …
அதிரிச்சியில் இருந்த சுமி ஜீவா வந்து கூப்பிட்டதன் பிறகே சுயநினைவு பெற்றாள்.
ஹான் என்று சொல்லி வராத சிரிப்பை வர வைத்தவள் உங்க அப்பா தான் சிவசங்கரனா ஜீவா என்றே கேள்வி கேட்க…
ஆமாம் மேடம் அதோ அங்க சூர்யா அண்ணா பக்கத்துல நிக்கிறாரு பாருங்க அவரு தான் எங்க அப்பா சிவசங்கரன் என்று கைக் காட்டி சொன்னவன் அவளது அதிரிச்சியை மனதில் நோட் செய்து கொண்டான்.
ம்ம்ம் சரி என்றவள் முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு அங்கு நடப்பதை பார்க்க தொடங்கினாள்.
ஜீவா சென்று சூர்யா பக்கத்தில் போய் நின்று அவனிடம் சுமி வந்திருப்பதாக கூறி கைக் காட்ட அதை பார்த்த சூர்யா புன்னகையுடன் அவளுக்கு ஹாய் காட்டினான்.
அவளும் அவனுக்கு ஹாய் காட்டி நந்தினியை பார்த்தாள். அவள் தனக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல் இருந்தாள்.
நிச்சயம் நல்ல படியாக முடிய இன்னும் பத்து நாளில் சூர்யாவுக்கும் நந்தினிக்கும் திருமணம் என பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டது..
ரெண்டு பேரும் போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க என்று சிவசங்கரன் சொல்ல…
நந்தினி கவியின் காதில் ஏதோ சொல்லிவிட்டு சுஜியை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றாள்…
கவி வேகமாக சுமியின் அருகில் வந்து ” அக்கா உங்கள நந்து அக்கா அந்த ரூம்க்கு வர சொன்னாங்க ” என்று புன்னகை மாறாமல் கூற…
” நீ யாரு மா உனக்கு நந்தினி என்ன வேணும் ” என்று கேட்க…
” நான் அவுங்களோட தங்கச்சி பேரு கவிபாரதி . சரிங்க அக்கா வாங்க போகலாம் அக்கா கூப்பிட்டாங்க ” என்று கூறி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.
அறைக்கு வந்த சுமி நந்தினியை கண்டு கங்கிராட்ஸ் நந்தினி மா எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு என்னோட தங்கச்சிக்கும் என்னோட பெஸ்ட் பிரண்டுக்கும் இன்னும் பத்து நாள்ல மேரேஜ் என்று கூற நந்தினி பதிலுக்கு வெற்று புன்னகையை உதிர்த்தாள்.
சரி எப்படி உனக்கும் சூர்யாக்கும் நிச்சயம் நடந்துச்சி நீ சூர்யாவுக்கு என்கேஜ்மெண்ட்னு சொல்லி தான ஊருக்கு கிளம்பி போன என்று தன் சந்தேகத்தை கேட்க…
ஆமாம் அக்கா நான் அத்தானோட நிச்சயத்துக்கு தான் வந்தேன் ஆனா நானே பொண்ணா மாறுவேன்னு நானும் தான் நினைக்கில அக்கா என்றே சொல்ல…
என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியல நீ எப்படி பொண்ணா மாருன்ன கொஞ்சம் தெளிவா சொல்லு என்றே சுமி சொல்ல அங்கே கவியும் சுஜியும் சேர்ந்து அவளோட நகைகளை கலட்டிக் கொண்டு இருந்தனர்.
சொல்றேன் அக்கா என்று சொல்ல அதற்குள் ஹரியும் ஜீவா போட்டிக் போட்டுக்கொண்டு எல்லாரும் கொஞ்சம் வறீங்களா வெளியே இது ஒன்னும் நம்ம வீடு இல்ல இது மண்டபம் இல்ல என்று ஜீவா கூற…
நீங்க நாலு பேரும் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு கூட வாங்க நாங்க உங்களுக்காக வெயிட் பண்றோம் என்று ஹரி கதவை தட்டிய படி சொல்ல…
இருவரும் இதுபோல் போட்டிப் போட்டுக் கொண்டு சொல்ல நந்தினி தான் ” இதுங்க சொல்ல தாங்கல அக்கா நான் போய் கதவ திறக்குறேன் . உங்களுக்கு இத பத்தி அப்புறமா சொல்லுறேன் அக்கா ” என்றவள் சென்று கதவை திறந்து இருவரையும் முறைத்து பார்த்தாள்.
ஜீவாவும் ஹரியும் ஒரே போல் முகத்தை பாவமாக குழந்தை போல் வைத்துக் கொண்டு நந்தினியை பார்த்து நிற்க
இருவரின் காதுகளையும் பிடித்து திருகி ” என்னங்கடா உங்க ரெண்டு பேர் சண்டைக்கும் நாங்க தான் இன்னைக்கு ஊறுகாய்யா ” என்று மேலும் திருக…
இருவரும்” அச்சோ அம்மு எல்லாம் இவனால தான் “என்றிட
“இல்ல நந்து மா எல்லாம் இந்த குரங்கால தான் ” என்று ஹரி ஜீவாவை மாட்டி விட…
அடே உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் என்ன சொல்லி அனுப்புனேன் ஆனா நீங்க ரெண்டு பேரும் இங்க வந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்றபடி வந்தார் சிவசங்கரன்…
அது வந்து அங்கில் ( அப்பா) என்று இருவரும் முழிக்க
போங்க டா ரெண்டு பேரும் என்று இருவரையும் தூரத்தி விட்டு வாங்க மா போகலாம் கிளம்ப நேரம் ஆகிடுச்சு என்று சொல்ல..
சரிங்க மாமா என்று சொல்லி நால்வரும் கிளம்பி வெளியே வந்தனர்…
அனைவரும் வீட்டிற்கு சென்றனர். ஜானு குட்டி நந்தினியிடமே இருந்தாள். அதை பார்த்த மற்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக பேச இதையெல்லாம் சமி கவனித்துக் கொண்டு இருந்தாள்…
ஊட்டியில்….
நாம ரொம்ப டைம் வேஸ்ட் பண்றோம்னு நினைக்கிறோம் ஆதி என்று சரவணன் சொல்ல..
எனக்கும் அப்படி தான் தோணுது சரவணன் பீஹார் போலிஸ் கிட்ட தேட சொல்லியே ஒருவாரம் கிட்ட ஆக போகுது .ஆனா இன்னும் அவுங்க நமக்கு கரக்டான ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறாங்க என்க …
உதய் கிட்ட சொல்லி நாமளே அங்க போய் பாக்கிறது தான் பெட்டர்னு தோணுது ஆதி என்று சொல்ல..
அதுவும் கரக்ட்டா தான் இருக்கும் இப்போ அந்த பொண்ணு எங்க இருக்கா எப்படி இருக்கான்னு கூட தெரியல என்றே ஆதி சொல்ல…
இல்ல அந்த பொண்ணுக்கு எதுவும் ஆயிருக்காது . அவ நல்லா தான் இருப்பா என்றான் கர்ஜிக்கும் குரலுடன்…
இவனது செயலை பார்த்து குழம்பிய ஆதி வெளியே சென்றான்.
ஆதி வெளியே சென்ற நேரத்தில் வேகமாக ஒருவள் உள்ளே வந்து சார் எனக்கு என்னோட புருஷன்ன கண்டு பிடிச்சு குடுங்க என்று சொல்ல…
முதல்ல நீ யாரும்மா இப்படி வந்ததும் வராரதும்மா இப்படி வந்து புருஷன்ன கண்டுபிடிச்சு தான்னா எப்படி மா என்று சரவணன் கத்த…
சார் எனக்கு இப்போ தான் கொஞ்சம் மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சி . கொஞ்ச நாள் வரைக்கும் என்கூட தான் இருந்தாரு. ஏதோ ஒரு வேலைன்னு சொல்லி ஊட்டிக்கு வந்தாரு சார் . அதுக்கப்புறம் அவரு எங்க போனாருன்னே தெரியல நீங்க தான் கண்டு பிடிச்சு தரணும் சார் என்றே அழுக…
சரி மா சரி அழுகாத என்ற சரவணன் உங்க ஹஸ்பேண்ட் நேம் அன்ட் டிடைல்ஸ் சொல்லுங்க மா நாங்க உங்க புருஷன்ன கண்டு பிடிச்சு தரோம் என்று சொல்ல…
அவன் பேரு ஆதித்தியன் அப்படி தான தியா மா என்று கேட்ட படி ஆதி உள்ளே நுழைய..
அங்கிருந்த பெண் ஆதியை கண்டு முறைக்க..சரவணனோ குழம்பி போனான்.
இந்த பொண்ண உங்களுக்கு முன்னாடியே தெரியுமா ஆதி என்றே அவனை பார்த்து கேட்க…
தெரியுமாவா இவ்வளவு நேரம் என்ன பத்தி தான் உங்க கிட்ட கம்ளெயின்ட் பண்ணிட்டு இருக்கா சரவணன் என்க..
அப்போ நீங்க என்று ஆதியை பார்க்க ஆமாம் நான் இவளோட புருஷன் என்று சிந்து மேல் கைப் போட..
அவன் கையை உதறி விட்டவள் இவன் பேருல தான் சார் புகார் கொடுக்கனும் என்ன விட்டுட்டு அவனோட ஃப்ர்ஸ்ட் ஒய்ஃப் தான் முக்கியம்னு இங்க வந்துட்டான் . இவன்ன உள்ள போட்டு அடி அடின்னு அடிங்க சார் அட்லீஸ்ட் ஒரு சிக்ஸ் மன்த்ஸ்காகவாது …
அடியே நான் உன் புருஷன் டி . என காக்க வரலனாலும் பரவால மா தாயே ஆனா என்ன அழிச்சுடாதா என்று கும்பிட..
சரி புருஷன்னாச்சேன்னு விடுறேன் பாத்துக்கோ என்றவள் சார் கேஸ் எதுவும் வேணாம் என்று சொல்ல…
யார் ஆதி இவுங்க இப்படி தனியா பேசிட்டு இருக்காங்க பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு சேக்க போறீயா என்ன என்றபடி உதய் வர..
ருத்திரகாலியாய் மாறி உதயை முறைத்துக் கொண்டு நின்றாள் சிந்து..
வாங்க உதய் இவ என்னோட ஒய்ஃப் மிஸஸ் சிந்தியா ஆதித்தியன் என்றான்…
ஓஓஓ சாரி சிஸ்டர் நான் ஏதோ பைத்தியம் னு நினைச்சிட்டேன் அம் ரியலி சாரி என்க…
இட்ஸ் ஓகே ப்ரதர் என்றவள் இப்ப நான் பைத்தியமாவே இருந்துக்கிறேன் ஆனா என்னோட பிரதர் மட்டும் எப்படி நார்மல் பேர்சன்னா இருப்பாங்க சொல்லுங்க என்றவள் சரிங்க அண்ணா நான் கிளம்புறேன் பாய் என்று கூறிவிட்டு சென்றாள்…
இப்போ அவுங்க என்னைய பார்த்து என்ன சொல்லிட்டு போறாங்க என்றவன் சரவணன் எங்க என்ன வர சொல்லி இருந்தீங்க எதுக்கு சார் பீஹார்லர்ந்து எதாவது நீயூஸ் வந்துச்சா என்றே கேட்க
இல்லையென்ன தலை அசைத்தான் ஆதி. இருவருக்கும் அடுத்து என்ன செய்வதென்று ஒன்னும் புரியாமல் விழி பிதுங்கி நின்றனர்…
இங்கே நந்தினி உதயின் கெஸ்ட் ஹௌவுசில் அவளுக்கு தரப்பட்ட அறையில் இருக்க சுமி அவளது அறைக்குள் நுழைந்தாள்…
நந்தினி பக்கத்தில் அமர்ந்த சுமி ” நீ இன்னும் உனக்கும் சூர்யாவுக்கும் எப்படி நிச்சயம் நடந்துச்சுன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே நந்து மா “என்று அவளை பார்த்து கேட்க…
நந்தினியும் சுமி கேட்ட கேள்விக்கு பதில் கூற தொடங்கினாள்…
மாலை ஆகவும் அனைவரும் மண்டபத்திற்கு சூர்யா குடும்பத்தினரும் நிருஷித்தா குடும்பத்தினரும் வருகை தந்து விட்டனர்…
கங்கா சூர்யாவின் திருமணத்தை சிறப்பாக செய்ய எண்ணி நிச்சயத்தையே பெரிய மண்டபத்தில் வைத்திருந்தார்…
இரவு நேரம் ஆகவும் ஐயர் இரு குடும்பத்தாரையும் மண ஜோடிகளையும் அழைத்து வர சொல்ல..
சூர்யா ஆறடி ஆண் அழகனாய் வந்து மேடையில் அமர்ந்தான். அடுத்ததாக பெண்ணை அழைத்து வர சொல்ல…
நிருவின் தோழிகள் உள்ளே சென்று பார்க்க அங்கே அவள் இல்லாமல் போக அவளது தோழிகள் வெளியே வேகமாக ஓடி வந்து ஜெயந்தியிடம் சென்று அம்மா நிரு அவ ரூம்ல இல்ல மா என்று சொல்ல…
நல்லா தேடி பாத்திங்களா அவ அங்க தான் இருப்பா பாத்ரூம் எதாவது போயிருப்பா நல்லா பாருங்க என்று சொல்ல…
இல்ல மா நாங்க அங்கேயும் பாத்துட்டோம் அவ இல்ல என்று சொல்ல…
அதற்குள் கங்கா அங்க வந்து ” என்னாச்சி என் மருமக எங்க ” என்று கேள்வி கேட்க …
ஜெயந்தி என்ன சொல்வது எப்படி சொல்வது என்று தெரியாமல் தலை குனிந்து நிற்க அங்கே நடப்பதை மற்ற அனைவரும் வேடிக்கை பார்த்தனர். வந்தவர்களிடம் ஓர் சலசலப்பு தொடங்கியது.
நந்தினி ஜெயந்தி அருகில் வந்து என்னாச்சி அம்மா நிரு அக்கா எங்க என்றே கேட்க..
நான் இங்க இருக்கேன் என்று வெளியே இருந்து குரல் வர..,,அனைவரும் குரல் வந்த திசையை பார்க்க அங்கே மணக்கோலத்தில் நிருஷித்தா நின்றிருந்தாள்…
இதை கண்ட அனைவருக்கும் அதிர்ச்சியே இதில் நிருவின் தாய் ஜெயந்தி மயக்கம் போட்டே விழுந்து விட்டார்..
நிரு அவள் அன்னையை பிடிக்க வர அதற்குள் நந்தினி அவரை தாங்கி பிடித்து சுஜி சீக்கிரமா தண்ணி எடுத்துட்டு வா போ என்றுவிட்டு கவி அந்த ஃபேன்ன கொஞ்சம் இந்த பக்கமா திருப்பி விடு டி என்று சொல்ல
சரி கா என்று சொல்லி அதை திருப்ப முயல அது கனமாக இருப்பதால் திருப்ப கடினப் பட உடனே ஜீவா அதை திருப்பி விட்டான்..
சுஜி வந்து தண்ணி தர அதை தெளித்து நந்தினி ஜெயந்தியை மயக்கத்தில் இருந்து எழுப்பி விட்டாள்..
நிரு விடம் சென்ற ஜெயந்தி அவளை கண்ணத்தில் அறைந்து விட்டு “ச்சீ நீயெல்லாம் எப்படி டி என் வைத்துல வந்து பொறந்து துலஞ்ச இப்படி என்ன எல்லாத்து முன்னாடியும் வச்சி அசிங்க படுத்திட்டில ” என்று சராமாரியாக அடிக்க…
என்ன என்ன மா பண்ண சொல்ற நான் நிருபன்ன தான் மா காதலிச்சேன் .அவன தவிர்த்து என்னால வேற எதையும் நினைச்சி பாக்க கூட முடியல மா . அதான் நாங்க ரெண்டு பேரும் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டோம் . எங்கள மன்னிச்சிடு மா என்று சொல்லி நிருபனும் நிருஷித்தாவும் காலில் விழுக போக உடனே அவர் விலகி நின்றுக்கொண்டார்…
அய்யோ கடவுளே இப்படி ஊர கூட்டி என்னையும் என் குடும்பத்தையும் ஆத்தாலும் மகளுமா சேர்ந்து மானத்த வாங்கிட்டிங்களே என்று கதற …
வந்தவர்கள் எல்லாரும் ஒரு மாதிரியாக பேச … இதனையெல்லாம் இவ்வளவு நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சூர்யா பேசத் தொடங்கினான்..
ரெண்டு பேரும் இங்க வாங்க என்று மண ஜோடியை அழைத்து ஜெயந்தியின் பக்கத்தில் நிற்க வைத்து
அம்மா நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளுங்க என்று சொல்ல
” சொல்லுங்க தம்பி ” என்று கூறி அவனை பார்க்க..
” இப்ப எனக்கு நிருவுக்கும் நிச்சய நடந்து கொஞ்சம் நாள்ல கல்யாணம் ஆகுதுன்னே வச்சிக்கோங்க .உங்களுக்கு மதிப்பு கொடுத்து நான் கட்டுற தாலிய அவ வாங்கிக்கலாம் ஆனா அவளால நிம்மதியா ஒரு நிமிஷம் கூட வாழ முடியாம போய்டும் மா. அவளுக்கு என்கூட இருக்கும் போதெல்லாம் நெருப்புல்ல இருக்கிற மாதிரி இருக்கும் எனக்கு அவளோட பாஸ்ட் பத்தி தெரிய வந்துச்சின்னா எங்களுக்குள்ள சண்ட தான் வருமே தவிர கண்டிப்பா காதல்ன்ற ஒன்னு வரவே வராது மா இந்த மாதிரி ஒரு நிலம உங்க பொண்ணுக்கு வேணாமே மா “என்று பொறுமையாக சொல்ல அவருக்கு சரி என்றே பட்டது . ஆனாலும் அவரால் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை…
நீங்க சொல்றதெல்லாம் சரி தான் தம்பி ஆனா உடனடியாவே என்னால இவுங்கள சேர்த்துக்க முடியாது என்று சொல்லிட அம்மா என்று கதறி நிரு அவர் காலில் விழுந்து விட்டாள்..
நிருபன் சூர்யாவை பார்த்து நன்றி என்பது போல் சைகை செய்ய சூர்யாவும் அதை பெற்றுக் கொண்டது போல் கண்ணசைத்தான்..
இதனை கண்ட ஜீவா சூர்யாவின் காதில் இரகசியமாக ” இங்க என்ன டா நடக்குது அவுங்க எதுக்கு உனக்கு நன்றி சொல்றாங்க ” என்று கேட்க..
” அதுவா நான் தான டா அவுங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். அதான் அவுங்க எனக்கு நன்றி சொல்றாங்க ” என்றான் சிரித்த முகமாக…
அட பாவி என்று வாயை பொலந்தான் ஜீவா . அவன் வாயை மூடி விட்டு பாத்து டா கொசு போக போது என்று விட்டு அமைதியாக நின்றுக் கொண்டான்…
அய்யோ இப்ப என் பையனோட வாழ்க்க என்ன ஆகுறது என்று கங்கா அழுக…
அதுக்கு நான் ஒரு வழி பண்றேன் கங்கா நீ கவல படாத என்ற சிவசங்கரன் நந்தினியின் அருகில் வந்து இந்த மாமாக்காகவும் இந்த வீட்டு மானத்த காப்பாத்துறதும் உன் கையில தான் மா இருக்கு என்க…
அய்யோ மாமா என்ன சொல்றீங்க நான் என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க மாமா நான் பண்றேன் என்று சொல்ல…
அப்போ நீ சூர்யாவ கல்யாணம் பண்ணிக்கோ மா என்றே இடியை இறக்க..
இதை கேட்ட நந்தினி மட்டும் அல்லாமல் கங்காவுடன் சேர்த்து சூர்யா ஜீவா என அனைவரும் அதிர்ச்சி உற்றனர்.
நந்தினிக்கு அப்போது உதயின் ஞாபகமும் அவன் தந்த முத்தமும் ஞாபகத்திற்கு வர அவள் கைகள் அவன் தந்த இதழ் முத்தத்தின் மீது தொட அப்போது அவளுக்குள் சொல்ல முடியாத உணர்வு ஒன்று ஏற்பட்டது…
என்னங்க பண்றீங்க நீங்க என்று கங்கா எழுந்து வர நீ கொஞ்சம் அமைதியா இரு இவ்வளோ நாள் நான் அமைதியா இருந்தேன் இப்போ நீ இரு என்று அதட்ட..
சிவசங்கரனின் அதட்டலில் பயந்த கங்கா பேச்சற்று நின்றார்….
நந்தினி சொல்லு மா உனக்கு விருப்பம் இல்லேன்னா எதுவும் வேண்டாம் என்க…
ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்தவள் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் மாமா என்றாள்…
இதனை கேட்ட அனைவருக்கும் சந்தோஷமே ஜீவாவை தவிர்த்து …
அப்புறம் என்ன அலங்கரிச்சிட்டு வந்து நிக்க வச்சி தாம்பூலம் மாதிக்கிடதுக்கு அப்புறம் மோதிரம் மாத்திக்கிட்டோம் அக்கா என்று நடந்ததை கூறி முடித்தாள்….
இதனை கேட்ட சுமி கண்ணீர் வர அதை நந்தினிக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு சரி டா மா நீ ரொம்ப டையர்டா இருப்ப நீ தூங்கு நான் போறேன் என்று சொல்லி அந்த இடத்தை விட்டு ஒரு முடிவுடன் சென்றாள் அவளது அறைக்கு….
தேடல் தொடரும்….???
????????????????????
Stay tuned…✌️✌️✌️✌️✌️