நாட்கள் அதன் பாட்டிற்கு வேகமாக ஓட மும்பையில் இருந்து உதயுடன் அனைவரும் ஒரு வழியாக ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்கு வந்த அடுத்த நாளே ஹரி ஹாஸ்டல் சென்றுவிட்டான். நந்தினியும் சுமியும் அந்த ஒருவாரத்தில் இன்னும் நெருக்கமானார்கள். இதையெல்லாம் கண்ட உதய்க்கு ஒரு பக்கம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தாலும் மறுப்பக்கம் கடுப்பாக இருந்தது..
உதய்க்கு ஏதோ அவசரமாக கால் வரவே அதை எடுத்து பேச எஸ்டேட் மேனஜர் தான் அழைத்திருந்தார்.
சொல்லுங்க மேனஜர் எதுக்கு கால் பண்ணீங்க எனி இம்பார்ட்ணட் என்றிட
சா..சார் என்று தயக்கத்துடனும் பதற்றத்துடனும் கூற
அவரது தயக்கத்தையும் பதற்றத்தையும் உணர்ந்த உதய் என்ன ஆச்சி சார் எதுக்கு உங்களுக்கு இவ்வளவு பதற்றம் என்று கேட்க…
சார் நம்ம நடத்தி வந்த வாழ்வோம் வளர்வோம் மையத்துல இருந்து வார்டன் போன் பண்ணாங்க சார் என்க
எதுக்கு கால் பண்ணாங்க அங்க இருக்கிற பொண்ணுங்க குழந்தைகளுக்கு எதாவது பிரச்சனையா இல்ல அங்க வசதி பத்தலையா என்றே கேள்வி எழுப்ப..
சார் அங்க வசதிக்குலாம் எந்த பிரச்சனையும் இல்ல ஆனா அங்க இருக்கிற ஒரு பொண்ண காணோம்னு சொல்லி ஒரு நாள் முன்னாடி கால் பண்ணி சொன்னாங்க சார் நான் உங்களுக்கு அப்பவே கால் பண்ணேன் ஆனா நீங்க எடுக்கலை அதானல நாங்களே பாக்கலாம்னு இருந்தோம்னு ஆனா அந்த பொண்ண பத்தி எந்த தகவலும் வரல சார் என்று சிறு பயத்துடனே கூற
என்ன சார் இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க நேத்து கால் பண்ணி சொல்லியிருக்காங்க ஆனா நீங்க இப்போ தான் எனக்கு இன்ஃபார்ம் பண்றீங்க என்று கோபத்துடன் கர்ஜீக்க..
இவனது கோபக் குரலை கேட்டு ஜான்வி நந்தினியிடம் ஒன்றி போக நந்தினியும் பயந்து தான் போனால் அவனது இந்த செயலில் சுமி தான் இருவரையும் பார்த்து விட்டு உதயிடம் சென்று டேய் எதுவா இருந்தாலும் மெதுவா பேசு நந்தினி பயப்பிடுறா பாரு என்க உதயும் சிறிது தூரம் தள்ளி நின்று பேசத் தொடங்கினான்…
[the_ad id=”6605″]
அப்படி இல்ல சார் நான் உங்களுக்கு கால் பண்ணேன் ஆனா நீங்க தான் எடுக்கல என்க..
என்ன சார் இப்படி பொறுப்பில்லாம பேசுறீங்க அவுங்களுக்கு யாரும் கேக்க இல்லன்னு தான் நீங்க இப்படி அமைதியா விட்டுட்டீங்களா ஒருதடவ கால் பண்ணிட்டு என்று கோபத்தை வார்த்தைகளால் கக்க…
அப்…படி இ…ல்….லை என்று வார்த்தைகள் தந்தியடிக்க..
போதும் நிறுத்துங்க சார் உடனே கிளம்பி அந்த இடத்துக்கு வாங்க என்று கூறி அழைப்பை அணைத்து விட்டு விருட்டென்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்…
கீர்த்தி ஒருவாரம் கழித்து ஹாஸ்பிட்ல்க்கு செல்ல போகும் வழியிலே ஒரு பாய் காயினில் இருந்து அழைத்து கஃபே வர சொன்னாள்.
கஃபே சென்றவள் ராஜிவ்க்காக சிறிது நேரம் காத்திருக்க அவளை வெகு நேரம் காத்திருக்க விடாமல் அவனே வந்து சேர்ந்தான் தலையில் சிறு கட்டுடன்…
இதை கண்டவள் பதறி போக ரிலாக்ஸ் டி எனக்கு எதுவும் இல்ல சின்ன காயம் தான் என்று சமாதானம் செய்தவாறு அவளை நெருங்கி அமர்ந்தான்…
எப்படி மாமா இந்த அடி பட்டுச்சி என்றே அவனது நெத்தியில் இருந்த கட்டை தொட்டு பார்க்க…
ஹா ஹா என்று ராஜிவ் வலியில் முணுங்கல் இட… சொல்லு இது எப்படி நடந்துச்சி என்று மீண்டும் அவன் கண்ணை பார்த்து கேட்க…
ஊட்டிக்கு அப்பாவ பாக்க பொயிருந்தேன் டி அப்போ ஒரு சின்ன ஆக்சிடன்ட் அதுனால என்று சொல்ல இத நான் நம்பனுமா டா நீ மாமாவ பாக்க போறேன்னு என்கிட்ட சொல்லாம நீ போக மாட்டா உண்மைய சொல்லு டா எப்படி இது நடந்துச்சி என்றே கேள்வி கேட்டு பார்க்க
அ..அது வ..வந்து என்று இழுக்க இப்ப நீ உண்மைய சொல்ல போறீயா இல்லையா மாமா என்றிட..
சரி சரி சொல்றேன் என்றவன் அன்னைக்கு நாம ரெண்டு பேரும் மஹாபலிபுரம் போனோம் ஞாபகம் இருக்கா என்றிட…
ஆமாம் போனோம் ஆனா எப்படி வெங்கட் கூட ஹாஸ்பிடல்க்கு வந்தேன்னு தான் தெரியல என்று அவனை பார்க்க…
அவன் தான் என்ன அடிச்சு உன்ன தூக்கிட்டு வந்துட்டான் என்று குண்டை தூக்கி போக்க இதை கேட்ட கீர்த்திக்கு அதிர்ச்சி தாளவில்லை…
என்ன சொல்ற மாமா வெங்கட் சார் அப்படி பட்டவர் இல்லை என்று அவனுக்காக அவள் மாமாவிடம் வாதாடா…
உனக்கு எப்படி தெரியும் டி அவன் அப்படி பண்ணி இருக்க மாட்டான்னு நீ சொல்லுற அந்த நேரத்துல உனக்கு சுயநினைவு இல்லாம மயக்கத்துல இருந்த அதுனால உனக்கு தெரிய ஆனா உனக்கு இந்த காயம் கூடாவா தெரியல என்றே அவளை பார்த்து கேட்க…
கீர்த்தி எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க ராஜிவ்வே பேச தொடங்கினான்…
அன்னைக்கு உனக்கு தண்ணி பாட்டில் வாங்கி வரதுக்காக பொயிருந்தேன் . நான் திரும்பி வந்து பாக்கும் போது நீ அங்க இல்ல அதுனால உன்ன தேடி கொஞ்ச தூரம் ஓடி வரும்போது தான் நான் பாத்தேன் உன்ன அந்த வெங்கட் கார் குள்ள வைக்கும் போது நான் உடனே உன்ன காப்பாத்துறக்காக வந்தேன். ஆனா அவன் என்னோட மண்டையில பலமா அடிச்சிட்டான் அதுனால நான் மயக்க போட்டு விழுந்துட்டேன் அவன் கார்ர எடுத்துட்டு பொய்ட்டான் என்றான்…
இதனை கேட்ட கீர்த்திக்கு தலையே சுற்றுவது போல் இருக்க ஆனாலும் அவள் அப்படி எதுவும் இருக்காது என்றே அடித்துக் கொள்ள ஆனால் அவளது மூலையோ தன்னவன் சொல்வது தான் உண்மை என எடுத்துரைக்க இறுதியில் மூலையே வென்றது…
நீ நம்ப மாட்டேன்னு எனக்கு தெரியும். அதான் உனக்கு சாட்சியோடு நிறுப்பிக்கலாம்னு இருக்கேன். உனக்கு தான் டாக்டர் கார்த்திக் தெரியும்னு நம்புறேன் என்றவன் அவனுக்கு அழைத்து வர சொன்னான்..
கார்த்திக்கும் சிறிது நேரத்திலே அவன் சொன்ன இடத்துக்கு வந்து சேர கீர்த்திக்கு தான் ஒன்னும் புரியாமல் முழித்துக் கொண்டு இருக்க …
என்ன நர்ஸ் கீர்த்தி ரொம்ப ஷாக் ஆகிட்டீங்களா என்ன என்று நக்கலடிக்கும் தோரணையில் கேட்க அவளோ ஆமாம் என்று தலையை ஆட்டினாள்…
இவன் என்னோட மாமா பையன் என்று ராஜிவ் அவனது தோளில் கைப் போட்ட படி கூறினான்…
ஹோ ஹோ அப்ப ரெண்டு பேரும் சேர்ந்து என்ன ஏமாத்திருக்கீங்க என்று கோபப் பட உன்னோட கோவத்த அப்புறம் வச்சிக்கோ மா இப்போ கார்த்திக் சொல்றத கேள்ளு என்றான் திட்டவட்டமாக…
[the_ad id=”6605″]
கார்த்திக்கும் ராஜிவ் கூறியது போலவே கூற கீர்த்தி கண்களுக்கு இப்போது வெங்கட் கெட்டவனாக தெரிந்தான்.
ஆனால் கார்த்திக்கின் மனதில் என்னைய மன்னிச்சிடு வெங்கட் ஒரு நண்பனா இருந்து இப்படி பண்ண கூடாது தான் ஆனா என்ன பண்றது எல்லாமே என் நந்தினிக்காக தான் என்று மானசியமாக மன்னிப்பு வேண்டினான்…
அதன்பின் ராஜிவுடன் கீர்த்தி கிளம்பி செல்ல கீர்த்தியையே பார்த்துக் கொண்டு இருந்தான் கார்த்திக் அவனது மனதிற்குள் ஏனோ கீர்த்தி சொந்தம் போலவே உணர்ந்தான்…
அடுத்த நொடியே அவனது அத்தையிடமிருந்து அழைப்பு வர அதை பார்த்தவன் முகத்தில் தவுசன் வாட்ஸ் பல்ப் எறிந்தது.
அதை எடுத்தவன் சொல்லுங்க அத்தை எப்படி இருக்கீங்க இந்த நேரத்துல கால் பண்ணி இருக்கீங்க எதாவது பிரச்சனையா என்றே வினவிட..
அதெல்லாம் ஒன்னும் இல்லைடா நீ ஊட்டிக்கு போறேன்னு சொன்ன ஆனா எதுக்கு போறேன்னு சொல்வே இல்லை ஊருக்கு திரும்பி வந்ததுக்கப்புறமும் நீ வந்துட்டேன்னு சொல்ல கூட சாருக்கு டைம் இல்லையோ என்று கோபப்பட…
அ..அது..வ..வந்து என்று திக்கி திணறியவன் ஏதோ ஞாபகம் வந்தவனாய் அது வந்து அத்த என்னோட பேஷன்ட் ஒருத்தவுங்க அங்க இருக்காங்க அவுங்களுக்கு சீரியஸ்ன்னு சொல்லி கால் வந்துச்சி அதான் கிளம்பி போனேன் என்றான்….
சரி டா நீ சொல்றத நான் நம்புறேன் . ஆனா பாத்து இரு டா எனக்கு நீ மட்டும் தான் இருக்க என்று உடம்ப பத்திரமா பாத்துக்கோ சரியா என்று வருத்தப்பட்டு கூற அத்த இப்போ எதுக்கு இப்படிலாம் பேசுறீங்க நாங்க என்று சொல்ல வந்தவன் நான் இருக்கேன் அத்தை என்றான்…
சரி டா நான் அப்புறமா பேசுறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்தார் அவரது அத்தை…
மொபைலை கீழே வைத்தவன் என்ன மன்னிச்சிடுங்க அத்த என்னால இப்போதைக்கு நந்தினி பத்தின உண்மைகள்ள உங்க கிட்ட சொல்ல முடியாது . சொன்னா அப்புறம் பிரச்சினை தான் வரும் என்று நினைத்தவன் அந்த இடத்தை விட்டு சென்றான்…
ஒருவாரம் கழித்து சூர்யாவையும் மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு பெண் பார்க்க சென்றுவிட்டாள்..
சூர்யாவும் அமைதியாக கங்கா சொல்வது அனைத்தையும் செய்து கொண்டு இருந்தான்..
பெண் வீட்டிற்கு வந்த பிறகும் சூர்யா முகத்தை தொங்கப் போட்ட படி இருக்க அந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் இப்பவே மாப்பிள்ளை பையனுக்கு வெக்கம் வந்துருச்சு போல என்று நேரம் காலம் தெரியாமல் கிண்டல் அடிக்க எப்படி இதற்கு ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருக்க
கங்கா தான் ஆமா பொண்ண பாக்காம இப்படி பண்ணா அவனும் தான் என்ன பண்ணுவான் பாவம் என் பையன் சீக்கிரம் பொண்ண கண்ணுல காட்டுறது என்று கூறி சிரிக்க….
பெண்ணின் அம்மாவோ இருங்க சம்பந்தி நான் போய் நிருஷித்தாவ கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்…
சிறு நொடிகளிலே தேவதை வந்து அனைவரின் முன்பும் வந்து நின்று அனைவருக்கும் வணக்கத்தை கூறிவிட்டு காப்பி கொடுத்தாள்…
அனைவரும் அதை எடுத்து பருக பெரியவர்கள் மாறி மாறி பேசிக்கொள்ள சிறியவர்கள் அமைதியாகவே இருந்தனர்…
இறுதியில் நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் என்று சூர்யாவும் அதேபோல் நிருஷித்தாவும் சொல்ல இவரது வீட்டினரும் அவர்களுக்கு வழி விட்டனர்.
இருவரும் நிருஷித்தாவின் அறைக்கு சென்று சில நொடிகள் அமைதியாகவே இருக்க முதலில் நிருவே பேச தொடங்கினாள்.. சறிது நேரம் இருவரும் பேசிவிட்டு சிரித்த முகமாக வெளியே வர கங்காவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது.
இருவரும் வந்ததும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் என்றனர் ஒரே போல்…
அப்போதே கங்காவிற்கு நிம்மதியாக இருந்தது..பெரு மூச்சை வெளியே விட சிவசங்கரன் அவர் காதிற்கிட்டே வந்து என்ன அதான் உன் புள்ளைக்கு நீ அன்னைக்கு ஊத்திக்கிட்டது சீமனயா தண்ணியான்னு கூட புரிஞ்சிக்க முடியல இதுல எங்க இந்த கல்யாணத்த நிறுத்த போறான் சொல்லு என்று சிரிக்க இந்த நொடி கங்காவுக்கு உயிரே போனது ..
எப்படி இது இவருக்கு தெரியும் என்று கங்கா யோசிக்க ஜெயந்தி பெண்ணின் அம்மா சரிங்க ரெண்டு பேருக்கும்மே ஆக வேண்டியத சீக்கியமே பாக்கலாம் என்க..
நினைவிற்கு வந்த கங்கா சரிங்க சம்மந்தி மா என்று விட்டு அப்போ நாங்க கிளம்புறோம் சம்மந்தி சீக்கிரமா நல்ல நாள் பாத்துட்டு சொல்றேன் என்று விட்டு கிளம்பி சென்றனர்…
காரில் சென்று கொண்டிருக்கும்போது என்னடி எனக்கு எப்படி தெரிஞ்சதுன்னு யோசிக்கிரியா நீ எதுக்கு கஷ்ட படுற நானே சொல்லுறேன் என்றவர் நீ அன்னைக்கு யாருக்கும் தெரியாம சீமன இருந்த டப்பாவ மாத்திட்டு அத நல்லா கழுவிட்டு அதுல தண்ணிய ஊத்தி வச்சது என்னோட ரெண்டு கண்ணால பாத்தேன் டி பொண்டாட்டி என்றவர் அவளது கண்ணத்தை தட்டிவிட்டு திரும்பி சுஜி கவியிடம் பேசத் தொடங்கினார்…
உதய் வேகமாக வாழ்வோம் வளர்வோம் மையத்துக்கு பறந்தடித்துக் கொண்டு வந்தவன் நேராக வார்டனிடம் சென்றான்..
அவரோ தலையில் கை வைத்த படி அமர்ந்திருக்க அவரை சுற்றி அங்கே இருந்த மற்ற ஆதரவற்ற குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் என இருக்க …
உள்ளே வந்த உதய் எப்படி இது நடந்துச்சு பரமேஸ்வரி மேடம் எந்த பொண்ணு காணம்ம போனது உங்களுக்கு இத என்கிட்ட இன்ஃபார்ம் பண்ணும்னு தோனலைய மேடம் என்று பொறிந்து தள்ள…
சார் உங்க ஆஃபிஸ்ல வேலை பாக்குற ஸ்ருத்திக்கா தான் காணோம் அன்னைக்கு எனக்கு கால் பண்ணி நான் வர லேட்டாகும்னு சொன்னா அதுனால நானும் சாதார்னமா விட்டுட்டேன் அடுத்தநாள் தான் தெரிஞ்சது அந்த பொண்ணு இங்க வரவே இல்லைன்னு உடனே மேனேஜர்க்கு கால் பண்ணி சொல்லிட்டேன் சார் என்றார் நடுக்கத்துடனே…
உதய் உடனே கமிஷ்னர் ஆஃபிஸ்க்கு போன் பண்ணி இந்த விஷயத்தை கூறி வேகமாக அந்த பொண்ணை கண்டு பிடிக்கும்மாறு கூறி அணைத்தான்…
அவனது காதுகளில் ஸ்ருத்திக்கா அண்ணா என்று அழைக்கும் குரலே கேட்டுக் கொண்டு இருந்தது….
தேடல் தொடரும்…???
????????????????????
Stay tuned…✌️✌️✌️✌️