வலியை
கொண்டே
வாழ்வை
அமைந்ததன்
காரணம்
ஏனோ???…???
அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்த நந்தினி ரெஃபிரஷ் ஆகி விட்டு அந்த காலை கதிரவனை இரசிக்க பால்கனிக்கு சென்றாள்.. ஆனால் அவளது எண்ணம் மனது முழுவதும் அவளவனின் எண்ணமே நிறைந்திருந்தது.
அவளது கைகள் தானாக நெற்றியை தொட்டு பார்க்க அந்த நொடி அவளது உடம்பில் மின்சாரம் பாய்வது போல் இருக்க அவளது சிலிர்ப்புற்று அடங்கியது..
நேற்று நடந்தவை எல்லாம் கனவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறவளுக்கு எப்படி தெரிய போகுது அது உண்மையில் நடந்தது என்று. அதை செய்த அவளுடைய கிருஷாக இருக்க கூடிய உதய் கிருஷ்ணன் வாயை திறந்தால் மட்டுமே . அதையும் அவள் நம்புவாளா என்றால் அது விதியின் பிடியில்லே உள்ளது…
அனைவரும் கிளம்பி கீழே வர அங்கே இருந்த ரெஸ்டாரண்ட்டில் காலை உணவை முடித்து விட்டு கார் வைத்து கேட் வே ஆஃப் இந்தியா பார்க்க சென்றனர்.
பெரியவர்களாக இருந்தவர்கள் எல்லாம் குழந்தையாக மாறி அதை இரசிக்க தொடங்கினர்.
ஜான்வி ஹரியுடனே இருக்க சுமியும் நந்தினியின் ஒன்றாக இருக்க உதய் அங்கே தனித்து விட பட்டான்.
நால்வரும் சேர்ந்து விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்..
மாலை போல அனைவரையும் அழைத்துக்கொண்டு உதய் ஜூஹூ பீச் அழைத்து சென்றான்.
ஒவ்வொருவரும் அதில் சென்று விளையாட நந்தினி மட்டும் பயத்தில் மண்ணில் அமர்ந்த படி இரசிக்க தொடங்கினாள் ஜான்வியை வைத்துக் கொண்டு…
இதை கண்ட உதய் அவளிடம் சென்று அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு மண்ணலில் வீட்டு கட்டிய படியே அவளின் முகத்தை நோக்க…
அவளோ அந்த அலைகளை கண் இமைக்க பார்த்துக் கொண்டிருந்தாள்..
[the_ad id=”6605″]
எதுக்கு இப்படி அந்த அலையையே வெறிச்சு பாத்துட்டு இருக்கீங்க மிஸ் நந்தினி என்றிட அவள் பக்கத்தில் இருந்து சத்தம் வரவே திடுக்கிட்டு திரும்பி பார்வையிட அதே நேரத்தில் உதயும் திரும்பிட இருவரும் நூல் அளவு இடைவெளி மட்டுமே இருக்க இருவரது கண்களும் ஒருவரையொருவர் நோக்கியது…
நந்தினிக்கு இந்த கண்களை எங்கோ பார்த்த மாதிரியே தோன்றிட இமைக்க பிடிக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்த நேரம் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்க அந்த பந்து நேராக உதய் கட்டியிருந்த மணல் வீட்டை இடித்து தள்ள வர இதை கண்டு அப்பா என்று கத்தி கண்களை இறுக்கி முடிக் கொள்ள அந்த சத்தத்தில் நினைவுக்கு வந்த உதய் பந்து வருவதை நோக்க நந்தினியும் பயந்து உதயின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்..
சரியாக உதய் அருகே வரவும் அவன் அதை கச்சிதமாக பிடித்துக் கொண்டு இருவரையும் நோக்க இருவரும் ஒரே போல் கண்களை இருக்க முடியிருக்க நந்தினி உதய் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ள ஜான்வி நந்தினி கையை கெட்டியாக பிடித்து திருந்தாள்.
பூம் என்று அவர்கள் பக்கத்தில் வந்து ஹரி கத்த இருவரும் பயந்து கத்தினர் அதில் நந்தினி உதய்யை கட்டிக் கொண்டாள்.
உதய்க்கு சொர்க்கமே தனக்கு கிடைத்தது போல் இருந்தது. அதை இரசிக்க தொடங்கினான்..
சில் நந்தினி சில் எதுக்கு இப்படி பயப்படுற நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன் நீ பயப்பிடுறது உன்ன மட்டும் பலவீனம் ஆகாது உன்ன சுத்திள்ள எங்க எல்லாரையும் தான் பலவீனம் ஆக்கும் இத நீ புரிஞ்சக்கனும் என்றிட நந்தினி அவனையே பார்த்திருந்தாள் என்பதை விட அவன் கண்களை எதையோ தேடிக் கொண்டு இருந்தாள்…
அதற்குள் சுமி வர போதும் டா நீ லேக்ஷர் எடுத்தது பாவம் என்னோட தங்கச்சி அவள விடு என்றிட
அப்போதே இருவரும் உணர்ந்தனர் ஒருவரது அணைப்பில் ஒருவர் இருக்க உடனே இருவரும் விலகி நின்றனர்.
ஹரி ஜான்வியை அழைத்துக்கொண்டு ஜஸ்க்ரீம் வாங்க சென்றிருந்தான்.
நான் ஜானு குட்டி கிட்ட போறேன் என்று சொல்லிவிட்டு வேகமாக அவர்களை விட்டு நடந்து வந்தவள் தன்னைத் தானே அடித்துக் கொண்டு ஜானுவை நோக்கி சென்றாள்..
நந்தினியை பார்த்த ஜானு அம்மா என்றிட ஹரி அவளை திரும்பி பார்த்தான்..
ஐம் சாரி என்றான் ஹரி நந்தினியை பார்த்து அவள் எதற்கு என்பது போல் பார்க்க..
அன்னைக்கு உங்கள இடிச்சதுக்கு என்றான் ஜான்விக்கு ஐஸ்கிரீமை ஊட்டிய படி..
அதுக்கு தான் அன்னைக்கே சாரி சொல்லிட்டிங்களே அப்புறம் இப்போ எதுக்கு சாரி கேக்குறீங்க என்றே அவனை நோக்க இல்ல எனக்கு கேக்கனும்னு தோனுச்சி அதான் கேட்டேன் அன்னைக்கு உதய் அண்ணா வ பாக்க போற அவரத்துல உங்க மேல இடிச்சுட்டேன் அதுக்குள்ள அந்த ஜீவா வந்து எண்ண அடிக்கவும் எனக்கு கோபம் வந்துருச்சி என்றான்…
சரி பரவால விடுங்க அவன் அடிச்சதுக்கு நான் தான் சாரி சொல்லனும் என்றாள்.
இப்படி மாரி மாரி சாரி சொல்லிகிட்டே இருந்தா நல்லா இருக்காது அதுனால நாம ஏன் ஃபிரண்ட்ஸ் ஆக கூடாது என்றே கை நீட்ட அவளும் யோசித்து விட்டு ஃபிரண்ட்ஸ் என்று கை குழுக்கினாள்.
இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த உதய்க்கு கோபமாக வந்தது.. வந்த கோபத்தை உள்ளே வைத்து அடக்க சிரமப்பட்டு கொண்டு இருந்தான் ( அட பாவி இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரா தெரியல ???).
அதன் பின் அனைவரும் ஹோட்டல்க்கு சென்றனர்..
சென்னையில்…
கங்கா தனது அறையில் இருந்து யோசித்துக் கொண்டு இருந்தாள். எப்படி சூர்யாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பது என்று..
அவரது தீவிர யோசனைக்கு பிறகு இல்லாத மூலையில் ஒரு ஐடியா தோன்ற அதை அவன் வந்ததும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அவனுக்காக காத்திருந்தார்..
சிவசங்கரன் ஹாலில் அமர்ந்து டிவியில் நீயுஸ் பார்த்துக் கொண்டிருக்க அவர் முன்பு ஒரு கவரை வைத்தார் கங்கா.
அந்த கவரை பார்த்த அவர் கங்காவை நோக்க இது என்ன எதுக்கு இப்போ என்கிட்ட தர இதுல என்ன இருக்கு என்றவர் அடுத்த நொடியே என்ன விவாகரத்து பத்திரமா எனக்கு அவ்வளவு சீக்கிரம் விடுதலை கிடைக்காதே என்றவர் அந்த கவரை எடுத்து திருப்பி திருப்பி பார்க்க…
யோ உனக்கு இப்படி வேற நினைப்பு இருக்க இது ஒன்னும் விவாகரத்து பத்திரம் உள்ள கவர் இல்ல நம்ம பையன் சூர்யாவுக்கு பார்த்த பொண்ணு ஃபோட்டோ என்றார்…
என்னது நம்ம பையனா அவன் எப்ப டி நமக்கு பையனா இருந்து இருக்கான். உனக்கு மட்டும் தான் பையனா இருந்திருக்கான்.அப்புறம் எதுக்கு இத என்கிட்ட காட்டுற இன்னும் கொஞ்ச நேரத்துலயே உன் பெத்து வச்சிருக்கியே ஒரு வாயில்லாத பூச்சி அவன் வந்திருவான் அவன் கிட்ட காட்டு உடனே கட்டிக்கிறேன்னு மண்டைய மண்டைய ஆட்டுவான் என்று பொறிந்து தள்ள..
இப்போ எதுக்கு சூர்யாவ திட்டிட்டு இருக்கீங்க . அவன் உங்கள என்ன பண்ணான். அவன் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கான். ஏதோ அவன பெத்தவராச்சேன்னு வந்து பொண்ணு ஃபோட்டோ வ காட்டின்னா ஓவ்வரா தான் பேசுறீங்க என்று அவரை திட்டி விட்டு அவளது அறைக்கு அந்த புகை படத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்…
[the_ad id=”6605″]
சிவசங்கரன் கங்கா சென்ற பாதையை பார்த்து ஒர் அர்த்த சிரிப்பை சிந்தித்து விட்டு மீண்டும் டிவியில் மூழ்கினார்.
சிறிது நேர்த்திலே சூர்யா வீட்டிற்கு வர வீடே அமைதியாக இருந்தது. இதே நந்தினியும் ஜீவாவும் இருந்திருந்தால் கலகலப்பாக இருந்திருக்கும். இதையெல்லாம் நினைத்தபடியே வீட்டினுள் நுழைய அவனுக்காக காத்திருந்த கங்கா அறையை விட்டு வந்தார்.
கங்காவை கண்டும் எதுவும் பேசாமல் வேகமாக அறைக்கு சென்று ரெஃபிரஷ் ஆகி விட்டு தந்தையுடன் அமர்ந்து டிவி பார்க்க தொடங்கினான் . அவரும் எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தார்..
கங்கா சூர்யா அருகில் வந்து சூர்யா என்று அழைக்க நிமிர்ந்து பார்த்து என்ன அம்மா வேணும் என்றான்..
எனக்கு உன்ன மணகோலத்துல பாக்கனும்னு ஆச என்றிட சரி மா அப்போ கொஞ்ச நேரம் இருந்தீங்கன்னா பட்டு வேஷ்டி கட்டிட்டு வரேன் அப்போ என்ன மணக்கோலத்தில பாருங்க என்றான் எழுந்து நின்று…
சிவசங்கரனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் அமைதியாகவே இருந்தார் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு…
என்னடா பேசிட்டு இருக்கா நீ எப்போலர்ந்து இந்த அம்மா எதிர்த்து பேச தொடங்கின சொல்லு இதெல்லாம் யார பார்த்து நீ கத்துகிற சொல்லு டா என்று கோபமாக கேட்க..
அம்மா இதையெல்லாம் யாராவது கத்துகிட்டு வருவாங்களா சொல்லுங்க . இவ்வளோ நாள் அமைதியா இருந்தேன் அதுக்கு காரணம் உங்க மேல இருக்கிற பாசமும் மரியாதையும் தான் ஆனா இப்போ எனக்கு வேணாம்னு சொல்ற ஒரு விசியத்த செய்ய சொல்லி கம்பல் பண்றீங்க மா என்றான் பொறுமையாக அதே நேரம் அழுத்தி சொன்னான்.
இப்போ என்ன டா சொல்ல வர உன்ன பெத்த எனக்கு இந்த ஒரு ஆசை கூட இருக்க கூடாதா சொல்லு என்று கேட்டிட
உங்களோட ஆசை நாயம் மா என்ன பெத்து வளர்த்த உங்களுக்கு இத கூடவா நான் செய்ய மாட்டேன் ஆனா அதுல என்னோட விருப்பமும் இருக்கணும்னு தான் மா சொல்றேன் .இத தான் நீங்க புரிஞ்சிக்க மறுக்குறீங்க என்றான் .
உன்னோட விருப்பம் இல்லாம நான் எதுவுமே செய்ய மாட்டேன் டா என்றார் சூர்யாவின் தாடையை பிடித்த படி…
அப்போ ஏன் மா எனக்கு இப்பவே கல்யாணத்த பண்ணி பாக்க ஆச படுறீங்க எனக்கு தான் இப்போ கல்யாணம் வேணாம்னு சொல்றேன்னே மா என்றே கேள்வி கேட்டு நோக்க
டேய் அதெல்லாம் அப்ப அப்ப செய்யனும் டா காலம் கடத்த கூடாது என்ற கங்கா நீ ஏன் டா கல்யாணத்த வேணாம்னு சொல்ற உனக்கு வேற எதாவது பொண்ண பிடிச்சிருக்கா என்றே சந்தேகத்துடன் கேட்க மனதிலோ நந்தினி பெயர சொல்லிராத டா என்றே வேண்டினார்…
அது அந்த கடவுளின் செவிகளில் விழுந்தததோ விழ வில்லையோ தெரியவில்லை.
சூர்யா தன் அன்னையின் கேள்வியில் திடுக்கிற்றவன் அடுத்த நொடியே சமன் செய்து கொண்டு ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டு ஆமாம் என்றான்…
கங்காவிற்கு அதிர்யாக இருந்தாலும் யார் டா அது..??? என்றே கேட்டு அவனை நோக்க
அவனோ எப்படி அவளது பெயரை சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்க கங்காவே அது அந்த சிறுக்கி நந்தினியா டா என்றே கோபமாக கேட்க…
சூர்யா ஒரு நிமிடம் பறந்தாலும் அடுத்த நொடி ஆமாம் என்று தலையை ஆட்ட கங்கா கோபத்தில் அவனது கண்ணத்தை பதம் பார்த்தார்…
சூர்யா கன்னங்களை தாங்கி பிடித்த படி பார்க்க…
என்னடி நினைச்சிட்டு இருக்க இப்போ எதுக்கு என் புள்ளைய கை நீட்டி அடிச்ச என்று கோபமாக சிவசங்கரன் கங்காவை பார்த்து கேட்க…
கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட புள்ளன்னு தான சொன்னீங்க இப்பவும் அவன் இந்த கங்காவோட புள்ளையாவே இருக்கட்டும் என் புள்ளைய அடிக்கிற உரிமை எனக்கு இருக்க என்று கோபமாக சொல்லி சூர்யாவை பார்த்து எவனோ பெத்து போட்டுட்டு போனவள எப்படி டா என்னோட மருமகளா ஆக்குவேன்னு நினச்சு பார்த்த யாருக்கும் தெரியாம நைட்டு டைம்ல அவன் ரூம் பக்கம் போய்ட்டு வரும்போதே நினைச்சேன் .நீ இப்படி எதாவது தான் சொல்லுவன்னு அதே போல சொல்லிட்ட என்ற கங்கா அவள் பார்த்து வைத்திருந்த பெண்ணின் புகை படத்தை அவன் முன்பு தூக்கி எறிந்து இது தான் நான் உனக்கு பாத்த பொண்ணு என்றார் கட்டளையாக
அம்மா நான் நந்தினிய தான் கல்யாணம் பண்ணிக்குவேன் . நான் அவள என்னோட உயிருக்கு மேல விரும்பிறேன் மா என்னால அவள விட்டு தர முடியாது என்றான்..
சரி அப்போ இந்த அம்மாவுக்கு காரியம் போ என்றவர் சமையல் அறைக்கு சென்று சீமனை எடுத்து வந்து அவருக்கு மேலே ஊற்றிக்கொள்ள
அம்மா என்னம்மா பண்றீங்க என்று சூர்யா தடுக்க வர சிவசங்கரன் அமைதியாக அதை பார்த்துக் கொண்டிருந்தார்…
அங்கேயே நில்லு டா ஒரு அடி முன்னே எடுத்து வச்ச அப்புறம் என்ன உயிரோடவே பாக்க மாட்ட பாத்துக்கோ என்றார்..
அம்மா ப்ளிஸ் இப்படி பண்ணாதீங்க என்று சூர்யா கண்ணீர் சிந்திட இப்போ எதுக்கு டா இப்படி அழுகிற நான் தான் சொல்லிட்டேன்ல எனக்கு பதினாறாம் நாள் காரியத்த முடிச்சிட்டு அந்த சிறுக்கிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வா என்றவர் நெருப்பட்டி எடுத்து பத்த வைக்க போக அதை லாவாக தடுத்தவன் கங்காவின் காலில் விழுந்து கண்ணீர் சிந்திக் கொண்டே நான் நீங்க சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன் என்றான்…
இத நான் எப்படி டா நம்புறது இந்த அம்மாவ ஏம்மாத்திட்டீன்னா என்றே மீண்டும் அடுத்த குச்சியை எடுத்து பற்ற வைக்க போக …
அவசர அவசரமாக எழுந்தவன் இல்ல மா நான் நந்தினிய பத்தி எதுவும் பேச மாட்டேன் மா நீங்க சொல்ற பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்குவேன் இது சத்தியம் என்று கங்காவின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தான்….
சரி பா நான் நம்புறேன் என் பையன்ன நம்பாம நான் யார நம்ப போறேன் சொல்லு என்று வழிந்த கண்ணீரை துடைத்து விட்டார்…
அம்மா இனி இந்த மாதிரி பண்ணாதீங்க மா எனக்கு நீங்க தான் முக்கியம் என்றான்…
அது எனக்கு தெரியும் டா இனி இந்த மாதிரி பண்ண மாட்டேன் சரியா என்றவர் போ போய் முகம் கழுவிட்டு வா சாப்பிடலாம் என்று அவனது கையில் அந்த பெண்ணின் புகை படத்தை கொடுத்துவிட்டு அனுப்பினாள்….
இதை எதுவும் அறியாத நந்தினி உதய்யை தவிர்த்து மற்றவர்களிடம் நேரத்தை கழித்தாள்…
உதய் அறையில் நந்தினியை திட்டிய படியே இருக்க நந்தினிக்கு புரை ஏறியது.. தண்ணீர் குடித்தும் நிற்காமல் விக்கல் வர சுமி தான் பாரு டா நந்து மாவ யாரோ ரொம்ப தீவிரமா நினைக்கிறாங்க போல என்று கிண்டலடித்தாள்.
அதன் பின் அனைவரும் உறங்க சென்றனர்.. ஜான்வி அன்று உதயுடன் படுத்துக் கொண்டாள்….
தேடல் தொடரும்…???
????????????????
Stay tuned …..✌️✌️✌️✌️