உதய் மீட்டிங் சென்று விட வெங்கட்க்கு கோபம் அதிகமானது . அதனால் அவன் சுமியின் நம்பருக்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து உதய்காக அழைப்பு விடுத்தான்..
சுமி அறையில் நந்தினியுடன் கதை அளந்து கொண்டிருக்க மொபைலை பார்க்க தவறினால்.
மீண்டும் மீண்டும் அழைப்பு வருவதை கண்ட நந்தினி சுமியிடம் அக்கா உங்களுக்கு கால் வருது பாருங்க என்க அவளோ அப்போது தான் மொபைலை பார்த்தாள்..
கிளப்பிலிருந்து கால் வர அதை எடுத்து சிறிது பேசி அழைப்பை துண்டித்து மொபைலை கீழே வைக்க போகும் சமயம் அண்ணா மிஸ்ட் கால் என்று நோட்டிபிக்கேஷன் வர அதை எடுத்து பார்த்தவளுக்கு கண்களில் நீர் கோர்க்க தொடங்கியது..
அதை ஓபன் செய்து அண்ணாவிற்கு கால் செய்ய கைகள் எல்லாம் நடுங்க நந்தினி தான் பயந்து போய் அவளது கையை இறுக பற்றிக் கொண்டாள்..
அதுவே சுமிக்கு சிறிது தெம்பு தர வெங்கட்க்கு கால் செய்தாள். உடனே அழைப்பை ஏற்ற வெங்கட் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க நந்தினியின் ஊக்குவித்தலில் ஹலோ அண்ணா என்றிட இரண்டு வருடம் கழித்து சுமியின் குரலை கேட்ட வெங்கட்க்கு கண்ணீர் ஊற்றெடுக்க அதை காட்டிக் கொள்ள விரும்பாதவன் அவளிடம் கடுமையாக நான் வெங்கடேஷ் பேசுறேன் உதய்க்கு கால் பண்ணா அவன் ஏன் எடுக்க மாட்டேங்கிறான் வீட்ல தான் இருக்கான்னா இல்ல எங்கையாவது வெளிய பொயிருக்கானா என்றே கேட்க
[the_ad id=”6605″]
இத கேக்க தானா அண்ணா எனக்கு கால் பண்ணீங்க ரெண்டு வருஷம் கழிச்சு என்கிட்ட நீங்க பேசுறீங்க நான் எப்படி இருக்கேன்னு கூட கேக்க தோன்னலையா அண்ணா என்று மனதில் பட்டத்தை கேட்க அவனோ அதை காதில் வாங்கி கொள்ளாது போல் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரல என்றான்..
உதய் சிங்கப்பூர் பொயிருக்கான் ஒரு பிராஜெக்ட் விஷ்யமா என்ற அடுத்த நொடி சரி நான் வைக்கிறேன் என்றவன் மொபைலை அணைத்து விட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டான்…
அதை காதிலிருந்து எடுத்தவள் நந்தினியை அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்..
நந்தினி ” அண்ணா அண்ணா ” என்று திக்கி திணறிய படியே அழுக அவளை தேற்ற வழி தெரியாமல் நந்தினியும் அவளுடன் சேர்ந்து கண்ணீர் வடித்தாள்.
சுமி அக்கா அழுகாதீங்க .இப்படி நீங்க உங்க உடம்பு தான் சரியில்லாம போகும் அழுகாதீங்க அக்கா எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி அவளது கண்ணீரை துடைத்து விட அந்த நேரம் பார்த்து அம்மா என்ற கூவலுடன் ஜான்வி நந்தினி சுமி இருக்கும் அறைக்கு ஓடி வர..
இதை கண்ட சுமி தானாகவே கண்ணீரை துடைத்தவள் ஜான்வியை பிடித்து அடிக்க தொடங்கினாள்..
அக்கா நீங்க என்ன பண்றீங்க ஜானு குட்டிய விடுங்க அக்கா அவ சின்ன பொண்ணு அவள அடிக்காதீங்க என்று சுமி தடுக்க முயல..
நீ சும்மா இரு நந்தினி இதுனால தான் எனக்கு இவ்வளவு கஷ்டம் இது என் வைத்துல உருவாகாம இருந்திருச்சின்னா இன்னைக்கு என்னோட அண்ணா என்கிட்ட பேசாம இருந்திருக்க மாட்டான் என்று மீண்டும் ஜான்வியை அடிக்க ஓங்க அதை தடுத்த நந்தினி இங்க பாருங்க அக்கா ஜானு குட்டி என்னோட பொண்ணு இனி அவ மீது ஒரு அடி பட்டுச்சின்னா கூட நான் சும்மா இருக்க மாட்டேன் என்றவள் அவள் கையை விடுத்து அம்மா அம்மா என்று தேம்பி அழுகும் குழந்தையை தூக்கிக் கொண்டு விருட்டென்ன சென்றாள் நந்தினி..
சுமி அங்கேயே சிலையென அமர்ந்து விட்டாள். அவளுக்காக பேசி பேசி எல்லாரும் எண்ண விட்டுட்டு போறீங்கள எல்லாரும் போங்க யாரும் எனக்கு தேவை இல்லை என்றவள் பக்கத்தில் இருந்த கண்ணாடி ஜாடியை கீழே போட்டாள்…
ஜானுவை அழைத்துக்கொண்டு அறைக்கு வந்தவள் அவளை சமாதானம் படுத்த முயல ஆனால் குழந்தையோ தேம்பி தேம்பி அழத் தொடங்கியது..
அவளை சமாதானம் செய்ய முடியாமல் தவித்தவள் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.. தாயிடம் ஒன்றியள் சிறிது நேரத்திலே அழுகையை நிறுத்தினாள்.. தோலில் வைத்து தட்டி கொடுக்க சிறிது நேரத்திலே ஜான்வி குட்டி உறங்கி போனாள்…
சிங்கப்பூரில் மீட்டிங் முடித்து வெளியே வந்த உதய் அவனுடன் அந்த மீட்டிங்கை அட்டன் செய்ய மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்..
அப்போது எதர்மாக மொபைலை எடுத்து பார்த்தவன் வாட்சப்பில் வெங்கட் மெசேஜ் நோட்டிபிக்கேஷன் பார்த்தவன் இவன் ஒருத்தன் எதாவது அனுப்பிக்கிட்டே இருப்பான் என்று மனதில் நினைத்து பாக்கேட்டில் வைக்க போனவன் அதை எடுத்து ஓபன் பண்ணி பார்க்க கால் மீ என்றிருந்தது…
அங்கிருந்த அனைவரிடமும் எக்ஸ் கூய்ஸ் மீ என்றவன் தனியே வந்து வெங்கட்க்கு கால் செய்தான்…
சில நிமிடத்திலேயே அழைப்பை ஏற்ற வெங்கட் ஏன் டா நாயே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா டா வெளிநாடு போறவன் எனக்கு ஒரு ஃபோன் பண்ணி சொன்னா என்ன டா உனக்கு எத்தன முறை கால் பண்ணேன் தெரியுமா என்று உதய்யை திட்ட மச்சி திட்டாத டா அப்புறம் உனக்கு தான் பீபி ஏறும் பீபி வந்துச்சின்னா ஸூகர் வரும் அப்புறம் கேன்சர் வரும் டா அதுனால கொஞ்சம் பொறுமையா பேசு என்று சீரியசாக சொல்ல
இதை கேட்ட வெங்கட் சிரிக்க அடேய் அறிவு கெட்டவனே எண்ண சாகடிக்கவே முடிவு பண்ணிட்டியா என்று பொய் கோபம் கொண்டு சொல்ல இல்ல மச்சி இப்போ நீ செத்தா கூட உன்ன வந்து பாக்க முடியாம பொய்டும் அதுனால நான் ஊருக்கு வந்துக்கப்புறம் சாகு டா அப்போ என்னால அங்க வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்த முடியும் என்று சொல்ல..
போடா எரும நான் ஃபோன வைக்கிறேன் என்று கோபத்துடன் சொல்ல அடேய் எரும எதுக்கு டா என்ன கால் பண்ண சொன்ன இப்படி திட்றதுக்கு தானா என்க நீ பண்ண இதுல நான் சொல்ல நினச்சதையே மறந்துட்டேன் பாரு என்றவன் நந்தினிய கார்த்திக் ரொம்ப தீவிரமா தேடிட்டு இருக்கான் டா. என்கிட்டயே வந்து நந்தினி எங்க இருக்காங்கன்னு உனக்கு தெரியுமான்னு கேக்கிறான் அவள கண்டுபிடிக்கிறதுள அவன் ரொம்ப தீவிரமா இருக்கான் டா நீ தான் அந்த பொண்ண காப்பாத்துனும் டா என்க இதுவரை உதய் முகத்தில் இருந்த சிரிப்பு காணாமல் போய் கோபத்தில் இறுகி போய் இருந்தது..
சரி டா நான் பாத்துக்கிறேன் என்க வெங்கட் இறுதியாக சுமியிடம் பேசியதை அவனிடம் கூறிவிட்டு வைத்தான்..
உதய் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க தொடங்க சுமியிடம் வெங்கட் பேசினான் என்று கூறியது ஞாபகத்தில் வர உடனே சுமிக்கு அழைக்க அதை அவள் எடுத்தபாடில்லை.
உடனே நந்தினியின் நம்பருக்கு அழைத்து என்ன நடந்தததென்று கேட்க அவளும் அனைத்தையும் கூற சரி நீ போய் கொஞ்சம் சூமிய பார்த்துக்கோ அப்புறம் நீ எங்கேயும் வெளிய போக கூடாது சரியா என்றவன் அவள் பதிலுக்காக காத்திருக்க
நான் எங்க வெளிய போறேன் பெரிய இவன் மாதிரி என்ன வெளிய போக கூடாதுன்னு சொல்றான். ஓஓஓ இப்போ புரியுது சுமி அக்காவுக்காகவா வெளிய போக கூடாதுன்னு சொல்றாங்க போல என்றே நினைத்தவள் சரிங்க சார் என்றாள்…
அவள் கவனியாத ஒன்று அவன் அவளை ஒருமையில் பேசியது தான் . இவள் எதையோ நினைத்து அதை கவனிக்க தவறினால்..
உதய் கூறியது போல் சுமியை காண சென்றாள். அதற்குள் மரகதம் அழைக்க அவரை பார்க்க சென்றாள்..
சொல்லுங்க ஆண்டி எதாவது வேணுமா என்று கேட்டிட ஆமா டா எனக்கு கொஞ்சம் பாத்ரூம் வருதுடா கொண்டு போய் விடுறீயா என்று தயங்கிய படியே கேட்க
இதுக்கு எதுக்கு ஆண்டி தயங்குறீங்க வாங்க போகலாம் என்று வீல் சாரை தள்ளி பாத்ரூம் அழைத்து சென்று வந்தாள்..
ஆண்டி நீங்க ரொம்ப நேரமா உட்கார்ந்துட்டே இருக்கீங்க அதுனால கொஞ்சம் படுத்துக்கோங்க இல்லன்னா இடுப்பு வலி வந்துரும் ஆண்டி என்க..
சரி மா என்று கூறி நந்தினியின் உதவியால் மரகதம் படுத்துக் கொண்டார்..
அதன் பின் அவருக்கு பெட்ஷீட் போர்த்தி விட்டு வெளியே வந்து சுமியை காண சென்றாள்…
நந்தினி சுமி இருக்கும் அறைக்கு சென்றவளின் கண்களுக்கு முதலில் தென்பட்டது கீழே விழுந்து தெரித்திருந்த கண்ணாடி ஜாடி தான் ரூமிற்குள் சென்றவள் சுமியை காண அவளோ கட்டிலின் ஓரத்தில் மண்டியிட்டு அமர்ந்து முகத்தை புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள்.
அதை கண்ட நந்தினி வேகமாக அவளின் பக்கத்தில் சென்று சுமி அக்கா என்று அவளது கையை தொட உடனே எழுந்தவள் அவளை அணைத்துக் கொண்டு நந்து நீயாவது என்ன விட்டுட்டு பொய்டாத டி எல்லாரும் என்ன விட்டுட்டு பொய்டாங்க என்னோட அப்புறம் என்னோட சூ என்று நிறுத்தியவள் எனக்கு உன்ன பாக்கும் போதெல்லாம் எங்க அம்மா அத்த ஞாபகம் தான் வருது என்று கண்ணீர் சிந்தினாள்.
உதய் கப்புறம் நீ தான் மா என்மேல உண்மையான பாசம் வச்சி பேசுற மத்தவுங்க எல்லாரும் என்னோட பணத்துக்காகவும் அப்புறம் அப்புறம் என்று மூச்சுக்கு கடின பட அவளை தன்னிடம் இருந்து பிரித்தவள் அவளை சமாதானம் செய்து தண்ணீர் குடிக்க வைத்து சமாதானம் செய்தாள்..
அதன் பின் அவளின் மனநிலையை மாற்ற நினைத்த நந்தினி சுமியிடம் சுமி அக்கா நான் இங்கு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி ஆனா நான் இன்னும் இங்க ஒரு இடத்த கூட சுத்தி பாக்கல என்று பாவமாக முகத்தை வைத்து சொல்ல…
அவளது முகத்தை பார்த்த சுமிக்கு சிரிப்பு வரவே இதுவரை இருந்த வருத்தம் இன்றி சிரிக்க தொடங்கினாள்..
சரி போய் கிளம்பி வா நானும் கிளம்பி வரேன் இரண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றி பார்க்கலாம் என்றவள் நந்தினியை அனுப்பி வைத்தாள்…
அதன் பின் நந்தினி கிளம்பி வந்து சுமதி அக்காவை அழைத்து அக்கா ஜானு குட்டி ரூம்ல தூங்கிட்டு இருக்கா அக்கா நானும் சுமி அக்காவும் வெளிய பொயிட்டு வந்தறோம் அதுக்குள்ள பாப்பா எந்திரிச்சா நீங்க கொஞ்சம் பாத்துக்கோங்க என்று கூற சரிங்க மா நான் பாத்துக்கிறேன் என்று விட்டு சமையலறைக்குள் புகுத்துக் கொண்டாள்…
சுமியும் கிளம்பி கீழே வர இருவரும் கிளம்பி வெளியே சென்றனர். ஊட்டியில் இருக்கும் ஒவ்வொரு இடமாக சென்று சுற்றி பார்த்தவர்கள் கடைசியில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கும் வேலையில் நந்தினியின் கண்களுக்கு ஒரு பாலடைந்த வீடு தென் பட அதை கண்டவளுக்கு முலையில் ஏதோ நெகட்டிவிட்டு போல் ஏதோ ஓட அதையே விழி விரித்து பார்த்தவள் இந்த வீடு என்று கை நீட்டி சுமியிடம் கேட்க
இது தான் எங்க அத்த வாழ்ந்த வசந்த மாளிகை டா நந்து என்றவள் காரை ஓட்ட திரும்பி அந்த வீட்டையே பார்த்திருந்தாள் நந்தினி..
அந்த பாலடைந்த வீட்டினுள்ளே புகைப்படமாக மாறி இருந்த சுமியின் அத்தையான விந்தையதேவி சிரித்த படி இருந்தார்.
அன்று விடுமுறை எடுத்துக் கொண்ட கீர்த்தி ராஜிவ்வுடன் வெளியே சென்றாள். இருவரும் சேர்ந்து மகாபலிபுரம் சென்று சுற்றி பார்த்தனர்..
மாலை நேரம் ஆகவும் இருவரும் கிளம்ப எத்தனிக்க இங்க வந்து நாம ஒரு செல்ஃபி கூட எடுத்துக்குல டி என்று ராஜிவ் சொல்ல இருவரும் சேர்ந்து நிறைய செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
அதன் பின் இருவரும் ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.. வண்டியில் இருவரும் அமர்ந்து கிளம்பி வர பாதி தூரத்திலே கீர்த்திக்கு ஏதோ தலை சுற்றலாக வர மாமா கொஞ்சம் வண்டிய நிப்பாட்டு டா என்று கூற என்னடி ஆச்சி என்றவன் வண்டியை நிப்பாட்டி என்னடி ஆச்சு என்று கேட்க
என்னென்னு தெரியல டா ஒரே தலை சுத்தல்லா இருக்கு ஏதோ மயக்கம் வர மாதிரி இருக்கு என்றவள் தலையை பிடித்து விழ பார்க்க அவளை தாங்கி பிடித்தவன் பைக்கில் சாய்ந்தபடி நிற்க வைத்தான்..
இங்கேயே இரு டி பக்கத்தில தான் கட இருக்கு நான் போய் தண்ணி வாங்கிட்டு வந்தறேன் என்று சொல்ல இல்ல வேணாம் மாமா நாம வீட்டுக்கு போகலாம் என்று சொல்லி தடுமாற நீ இப்பவே இப்படி தடுமாறுற இதுல எப்படி நீ வீட்டுக்கு போவ என்று சொல்லி இங்கேயே இரு வந்தறேன் என்றவன் அந்த இடத்தை விட்டு சென்றான் கீர்த்தியை யாரும் இல்லா இடத்தில் தனியே விட்டு …
சிறிது நேரத்திலே இருவர் அந்த இடத்திற்கு வர அவள் மயங்கி கீழே விழ சரியாக இருந்தது..
அவர்கள் இருவருக்கும் லட்டு தின்ன ஆசையா என்றது போல் இருக்க அவளை தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு யாரும் அறியா வண்ணம் சென்றனர்…
தேடல் தொடரும்…
?????????????????????
Stay tuned…✌️✌️✌️✌️✌️