உன் குரலில்
எனக்கான காதலை
உணர்ந்தேனடி
கண்மணியே????..!!!
ஊருக்கு சென்ற உதய் அதில் கவனமாக இருந்தான். வெளிநாடு என்பதால் அங்கே சென்றால் உபயோக படுவதற்காக ஒரு சிம் வைத்திருந்தான்..
சிங்கப்பூர் வந்த இறங்கிய சில நிமிடத்திலேயே இந்திய சிம்மை கலட்டி விட்டு அந்த சிம்மை மாட்டினான்.
ரூமிற்கு சென்றவன் ரெஃபிரஷ் ஆகிவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க தொடங்க அவனது இதயராணியின் முகம் அவன் கண் முன் தோன்ற அவனது உதடுகளோ நிதி என்று உச்சரித்தது.
அவனது நினைவுகளோ அவளிடம் தான் வைத்திருந்த காதலை உணர்த்திய நாள்ளிற்கு கொண்டு சென்றது…
சென்னையில் உதய் படித்துக் கொண்டிருந்த கல்லூரிக்குள்ளே அனைத்து விதமான மற்றவை பாடங்களும் இருந்தன.
சுமி அவளது கல்லூரி படிப்பை லண்டனில் தொடங்கினாள்.இப்போது அவள் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். உதய் பிசீஏ எடுத்து இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். வெங்கட் அதே வலாகத்தில் இருந்த மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்து அதில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான்..
அந்த கல்லூரியில் பீஇ நர்ஸிங் டெக்னாலஜி எம்பிபிஎஸ் போன்ற பல துறைகள் இருந்தது.
பிசீஏ இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டரில் இருக்க பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களை ஊக்கு படுத்தும் விதமாக செல்ஃப் டிவலப்மெண்ட் கிளாஸ் வைத்திருந்தனர்.. அதற்கு பல பள்ளிகளில் தொடர்பு கொண்டு அதில் கலந்துக் கொள்ள சொல்லி அறிவுறுதினர். அனைத்து பள்ளிகளிலும் அவர்கள் கேட்ட வர்றிற்கு சம்மதத்தை தெரிவித்தனர்.
அதன் போக்கில் அனைத்து விதமான டிப்பார்ட்மெண்டும் கலந்து கொண்டு தீர்மானிக்க பட்டது.
[the_ad id=”6605″]
அதை ஆர்கனைஸ் பண்ணுவதற்காக ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரசிடன்ட் மற்றும் அதற்கு கீழ் இருக்கும் நபர்கள் இதை செய்தனர்…
உதய் அவர்கள் துரையின் பிரசிடண்டாக இருக்க போய் இதை ஆர்கனைஸ் பண்ணினான்..
அந்த நாளும் வர அனைவரும் அதற்காக ப்ரபர்டாக இருந்தனர்…
நிகழ்ச்சி தொடங்க உதய் வெல்கம் ஸ்பீச் கொடுத்து வந்திருந்த கெஸ்ட்டை வெல்கம் செய்து வைத்து நிகழ்ச்சியை தொடங்கினர்..
வந்த கெஸ்ட் மாணவர்களுக்கு உதவும் படியாக நற்கறுத்துக்களை கூறிக்கொண்டிருக்க மாணவர்கள் சிலர் கவனிக்க பலர் விளையாடி கொண்டு இருந்தனர். அதில் நந்தினியும் அடங்கி இருந்தாள்..
கீர்த்தியின் வர்புறுத்தலுக்கு இணங்க நந்தினி அதில் கலந்துக் கொண்டு இருந்தாள். சிறிது நேரம் கவனித்த அவர்களுக்கு உறக்கம் வரவே ட்ருத் ஆர் டேர் விளையாடினர்.
தோழிகள் அனைவரும் விளையாடி கொண்டு இருக்க அதே நேரம் அங்கே மேடையில் பேசிக்கொண்டிருந்த நபர் அவர்களிடம் இங்கிருந்து ஒருத்தரை கூப்பிட்டு அவர்களுக்கு தெரிஞ்ச எக்ஸ்ட்ரா கரீகுலர் அக்டிவிட்டி பண்ண வைக்கலாம் சோ பீ ரெடி காய்ஸ் ஐல் கால் எனிஒன் ஃப்ர்ன் ஹியர் என்றார்..
அங்கிருந்த அனைவரும் சரிங்க சார் என்று கோர்ஸ் கொடுக்க அதே போல் கூட்டத்தில் இருந்த ஒவ்வொரு நபரையாக கூப்பிட்டு அவர்களுக்கு தெரிந்த செயலை செய்ய சொல்ல அவர்களும் செய்தனர்..
இங்கு விளையாடி கொண்டு இருக்க இந்த முறை நந்தினிக்கு வரவே அவள் டேர் எடுக்க அதே நேரம் அவளது பெயரை அழைத்தனர்..
அவளோ தன் பெயரை கேட்டதும் முழிக்க கீர்த்தியுடன் இருந்த தோழி ஒருவள் அவள் போட்டிருந்த ஹை ஹீல்ஸ் சில்ப்பரை கழட்டி இத போட்டுட்டு நீ நடக்கனும் இதுதான் உனக்கான டேர் என்க மீண்டும் அவளது பெயர் சொல்லி அழைக்க வேகமாக அதை மாட்டியவள் எந்திரிக்க அவள் கால்கள் தடுமாறியது..
ப்ளிஸ் கம் டூ தி ஸ்டேஜ் என்றே கூற அவள் தட்டு தடுமாறி நடந்து அங்கே செல்ல முயன்றாள்..
ஹே அவ பாவம் டி அவளால அத போட்டுட்டு நடக்க முடியாது வேற டேர் கொடு டி என்க அதெல்லாம் முடியாது டி இது தான் அவளுக்கு டேர் என்றாள் மனதிலோ இன்னைக்கு நீ கீழ விழுந்து அசிங்க பட தான் போற டி அன்னைக்கு என்னையா க்லேஸ் கட்டடிச்சதுக்கு போட்டு குடுத்து எண்ண அசிங்க படுத்தினில இப்போ நீ அசிங்க படு என்று எண்ணினாள்..
அவளது தோழி ஆசைப்பட்டது கடவுள் காதில் விழுந்ததோ இல்லையோ தெரிய வில்லை நடக்க முடியாமல் நடந்து வந்த நந்தினி தீடீரென்று கால் தடுக்கி கீழே விழ போக ஒரு வழிய கரம் அவளை தாங்கி பிடித்தது..
தான் கீழே விழ போகிறோம் என்று நினைத்தவள் கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள். கீழே விழ வில்லை என்று தெரிந்த நொடி மெதுவாக கண்ணை திறக்க முயல அதற்குள் அவளை தூக்கி விட அவன் பக்கத்தில் வந்து ஒன்றினால் . விழி திறந்து பார்க்கும் போது ஒரு ஆண் மகனின் கை வலைக்குள் மிக நெருக்கமாக நின்றிந்ததை கண்டவள் அவன் முகத்தை பார்க்க அங்கோ உதய் கோபத்தின் உச்சியில் இருந்தான்..
அவனையே விழி விரிக்க பார்த்தவளை உதய் விலக்கி நிறுத்தி பாத்து போக தெரியாத உனக்கு எதுக்கு இப்படி ஹை ஹீல்ஸ் போட்டு நடந்து கீழ விழுந்து தொலையுற ஃப்ர்ஸ்ட் அத கலட்டி விட்டுட்டு போ என்று திட்டியவன் விருட்டென்ன அந்த இடத்தை விட்டு சென்றான்..
அவளோ தயங்கிய படி கீர்த்தியை காண அவள் வேகமாக அவளது செருப்பை கொண்டு வந்து தர அதை போட்டவள் வேகமாக மேடைக்கு சென்று நின்றாள்.. அனைவரும் அவளை பார்த்து சிரிக்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
நீங்க நந்தினி ரைட் என்று அவர் கேட்க ஆமாம் என்பது போல் தலையசைத்தாள். ஓகே நீங்க உங்களுக்கு தெரிஞ்ச விஷியத்த இங்க பண்ணுங்க என்க அவளோ அனைவரையும் பார்த்து கொண்டிருந்தாள்..
[the_ad id=”6605″]
சிறிது வினாடி கடக்க உங்களுக்கு என்ன தெரியுமோ அத பண்ணுங்க நந்தினி என்று கூற அவள் நான் பாட்டு பாடுறேன் சார் என்றாள்..
சரி பாடுங்க என்க அவளும் பாட தொடங்கினாள்..
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ என்று மெய் மறந்து இமை மூடி பாட இதை ஒலி எழுப்பி மூலம் கேட்ட உதய் நிதி என்று அவனது இதழ்கள் அவனை அறியாமல் உச்சரிக்க கால்களோ அந்த இசையை நோக்கி ஓடியது அந்த குரலின் சொந்தகாரியை காணும் ஆவளில்.
வேகமாக ஓடி வந்தவன் மூச்சிரைத்து அவளை காண அவளோ அந்த நேரம் தான் பாடி முடித்து இமை திறக்க அவள் கண்களிற்கு உதயே முதலாக தெரிந்தாள்..
இருவர் கண்களும் ஓரே நேர்க்கோட்டில் சந்திக்க அடுத்த நொடியே அவளது பார்வையை கீர்த்தியிடம் திருப்பினாள். இதுவரை அவளை கண்டு சிரித்த அனைவரும் இப்போது அவளுக்கு கைத்தட்டினர் . அதை பெற்றுக் கொண்டவள் கீழே சென்று இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்…
சிறிது நேரத்திலே நிகழ்ச்சி முடிவு பெற அனைவருக்கும் ரெஃப்பிரஷ்மண்ட் வழங்க பட்டது. உதயோட கண்கள் அவளை நோக்கியே இருக்க அவளோ கீர்த்தியுடனும் அவளது தோழிகளுடனும் கதை அளந்து கொண்டிருந்தாள்.
நந்தினியின் பாட்டில் மெய்மறந்த சிலர் அவளை நோக்கி வந்து தானாக பேச அவளோ பயந்து போய் நிற்க கீர்த்தி தான் அவர்களிடம் பேசி அனுப்பி வைத்தாள்.
இதையெல்லாம் கண்ட உதய்க்கு பொறாமை எண்ணம் கூடியது .அதே நேரம் அவள் இப்படி பயந்து கொண்டு இருப்பது தவறு என்று எண்ணியவன் அவளுக்கு எப்படியாவது தயிறித்தை வர வளைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான்..
அதன்பின் அனைவரும் சென்றனர்.. அன்று இரவு முழுவதும் உதய் அவனது தூக்கத்தை துளைத்து அவளின் நினைப்பிலே அந்த இரவை கழிக்க நேர்ந்தது.
அதிலே அவன் உணர்ந்த ஒன்று அவளின் மீது அவன் உணராத காதல் . ஆனால் அதை அவனால் ஏற்றுக்கொள்ள தான் முடிய வில்லை. இது காதல் தானா என்ற கேள்வி அவனுள் எழுந்தது. ஆனாலும் அவனால் அவனது நிதியை மறக்க முடியும் என்று நினைவினில் கூட நினைக்க முடியவில்லை. அதை நினைத்தே அவன் உறக்கத்தை துளைத்தவன் அதன்பின்னரே நித்திரா தேவி அழைக்க அவனும் உறங்கி போனான்…
அதன் பின் அவளது நினைப்பை வராமல் தடுக்க அவன் மிகவும் சிரமப்பட்டான் .
சிறிது நேரம் அவளது நினைவுகளில் இருந்து கடந்தவன் அதன்பின் சுமிக்கு அழைத்து தான் வந்து விட்டதாக கூறி அனைத்தவன் அப்படியே நிதியை நினைத்து உறங்கி போனான்.
அடுத்த நாள் விடியல் அனைவருக்கும் நலமாக விடிந்தது.
நந்தினி அன்று சீக்கிரமே எழுந்தவள் உதகமண்டலத்தின் காலை பொழுதினை இரசிக்க வேண்டி ஸ்வெட்டர் போட்டவள் தூங்கி கொண்டிருக்கும் ஜான்விக்கு போர்வையை போர்த்தி விட்டு இரு பக்கமும் தலைகானி வைத்து விட்டு வீட்டின் வெளியே இருந்த பூங்காவில் அமர்ந்துக் கொண்டாள்..
[the_ad id=”6605″]
அந்த நேரம் சரியாக சுமி புத்துணர்வு பெற பால்கனிக்கு வந்தவள் கீழே இருந்த நந்தினியை கண்டவள் மேலிருந்து நந்தினியை அழைக்க
சொல்லுங்க மேடம் என்றாள் சுமியை பார்த்து சுமி முறைப்பதை கண்டு சிரித்தவள் சாரி அக்கா என்றாள் அடுத்த நொடியே சுமியும் சிரிக்க அந்த சிரிப்பில் இவ்வளவு நாள் இல்லாத ஏதோ ஒன்று அவள் முகத்தில் தெரிந்தது…
இந்த குளுருல அங்க என்ன பண்ற என்றே கேட்க நீங்க கீழ வாங்க அக்கா நான் சொல்றேன் என்றாள். இரு வரேன் என்று சைகை செய்தவள் அறைக்குள் வந்து ஸ்வெட்டர் போட்டு கொண்டு கீழே வந்தாள்..
நந்தினி இந்த குளுருல இங்க என்ன பண்ற இந்த நேர்த்துல இங்க இப்படி நின்னா அப்புறம் உனக்கு ஜூரம் வரும் பாத்துக்கோ என்று அக்கறையாக கூற…
அதெல்லாம் ஒன்னும் வராது கா . எனக்கு ரொம்ப நாள்ளா இப்படி இங்க வந்து இந்த இயற்கைய இரசிக்கனும்னு ஆச .ஆனா நான் எந்திருச்சதே இல்ல . இன்னைக்கு தான் ஏதோ சீக்கிரமாவே முழிப்பு வந்திருச்சி அதான் இங்க கொஞ்ச நேரம் இருக்கலாம்னு வந்தேன் என்றாள்.
சரி சரி இந்த குளுருல இத இரசிக்க வந்த ஒருத்தி நீயா தான் இருப்ப தாயே நம்மால லாம் முடியவே முடியாது பா என்றாள்.
அக்கா நீங்க குளுரூம்னு நினைச்சி தான் இங்க வரவே செய்றீங்க ஆனா நான் அப்படி இல்ல கா எனக்கு குளுருலாம் கண்ணுல கூட தெரியல இங்க வந்து இந்த நேரத்துல உக்காரனும்னு ஆச பட்டேன் அவ்ளோ தான் என்றவள் நாம நினைக்கிறதுல தான் அக்கா எல்லாம் இருக்கு நாம நெகட்டிவ்வா நினைச்சா அது கடைசி வரைக்கும் நெகட்டிவா தான் தெரியும் அதுவே நீங்க பாசிட்டிவ்வா நினைச்சி பாருங்க நம்மல சுத்தி எல்லாம் பாசிட்டிவா நடக்கிற மாதிரி இருக்கும் என்றவள் அந்த இயற்கையின் சூழல்லை இரசிக்க தொடங்கினாள்…
[the_ad id=”6605″]
சுமியோ நந்தினி கூறிய விடயத்தை அங்கே இருந்த மர இருக்கையில் அமர்ந்து யோசிக்க தொடங்கினாள். அவள் யோசிப்பதை தெரிந்துக் கொண்ட நந்தினி தான் செய்ய நினைத்த வேலை முடிந்தது என்று எண்ணி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்..
ஆறு மணியளவில் சென்னை வந்து இறங்கிய சூர்யா நேராக வீட்டிற்கு செல்லாமல் பீச்சிற்கு சென்று சிறிது நேரம் அந்த அலைகளையும் மண் வாசனையையும் இரசிக்க தொடங்கினான்.
நந்தினிக்கு பிடித்தமான இடம் என்பதால் அவளது நினைவு வரும் போதெல்லாம் இங்க வந்து சிறிது நேரம் கழித்து விட்டு செல்வான். இங்கு வரது ஏதோ நந்தினியே கூட இருப்பது போல் உணர்வு வருவதால் மட்டுமே….
மணி ஆகுவதை உணர்ந்தவன் மனமே இல்லாமல் அந்த இடத்தை விட்டு வந்து வீட்டிற்கு சென்றான்..
வீட்டிற்கு வந்த சூர்யா கங்கா கண்களில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியோ அறைக்கு சென்றுவிட்டான்..
இதனை கண்ட சிவசங்கரன் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் சுஜியும் கவியும் பள்ளிக்கு கிளம்பி வர அதே நேரத்தில் சூர்யாவும் வெளியே வந்தான்..
அவனை கண்ட கங்கா வா டா சூர்யா எப்போ ஊர்லர்ந்து வந்த என்ன எழுப்பவே இல்லையே என்று கேட்க நீங்க தூங்கிட்டு இருந்ததா அப்பா சொன்னாரு மா அதான் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு அப்பா கிட்ட சொன்னேன் என்றவன் சரி மா எனக்கு நேரம் ஆச்சி நான் கிளம்பிறேன் என்றான். சரி டா பாத்து போ என்றிட அவன் கார் எடுத்து கிளம்பி சென்றான்…
சிவசங்கரன் சூர்யாவையே பார்த்து கொண்டிருக்க போகும் நேரம் அவரை பார்த்து புன்னகைத்து விட்டு சென்றான்..
சுஜி கவி என இருவரும் விஷ்ணுவை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர்…
வெங்கட் உதய்க்கு கால் செய்ய அது ஸ்விட்ச் என்று வர அவனது வாட்சப்பிற்கு மெசேஜ் அனுப்பி வைத்து கால் மீ என்று . அதன் பின் அவனது வேலைக்கு கிளம்ப ஆயத்தமானான்..
உதயோ மொபைலை சைலண்டில் போட்டு விட்டு பிராஜெக்ட் மீட்டிங்கிற்கு தேவையானவற்றை சரி பார்த்துக் கொண்டிருந்தான்….
தேடல் தொடரும்…??