அடுத்த நாள் சூரியன் அதன் உதயத்தை பூமியில் பதிக்க அதனின் வெளிச்சத்தை கண்டு உதய் மெதுவாக இமைகளை திறந்தான்..
அவன் விழித்ததும் முதலில் அவன் இதயத்தை வருடிய தன்னவளின் புகைப்படம் மாட்டி இருக்கும் இடத்தை கண்டான். அவனது இதழில் மெதுவாக புன்னகை மலர்ந்தது ( ஏன்டா ஒருத்தி என்னென்னா புருஷா சொல்லிட்டு இருக்கா நீ என்னென்னனா ஒரு பொண்ணோட ஃபோட்டோ பாத்துட்டு இருக்க ) . அந்த அறை முழுவதும் அவன் இதயத்தை திருடிய பெண்ணின் படமே இருந்தது. அதை ஒவ்வொன்றையும் இரசித்தவன் இறுதியில் அவளுக்கு அவன் தெரியாமல் போட்டு விட்ட தங்க செயின் அதில் அவள் கண்களை இறுக்க மூடியிருக்க அவளுக்கு முன் நின்று அணிவித்த படி இருந்தது. அதை தொட்டு பார்த்தவனின் மனதிலோ இந்த செயின உனக்கு நான் தாலின்னு நினைச்சி தான் போட்டு விட்டேன் டி பொண்டாட்டி .ஆனா அது உனக்கு தான் தெரியாம போச்சி பரவால அது கூடிய சீக்கிரமே உனக்கு தெரிய வரும் டி என்றே எண்ணி அவளுக்கு பறக்கும் முத்தத்தை வழங்கினான்.
அதன் பின்னர் குளியலறைக்குள் சென்று குளித்து முடித்து வந்தவன் டிசெர்ட் டார்க் அணிந்து வெளியே வந்தான்..
அதே சுமி அவளது அறையில் இருந்து அவன் வருவதை உணர்ந்து இருடா புருஷா உனக்கு இருக்கு என்ன அடிச்சிடில அதுவும் உன்னோட சுமிய அந்த சைத்தான்காக அடிச்சிடல என்று கோபத்துடன் அந்த அறையில் இருந்த விலை மதி பில்லா பொருட்களை தூக்கி எறிந்தாள். அது சரியாக அவளது அறை கதவை திறக்க வந்த உதயின் காலில் பட்டது…
அவளின் நிலையை எண்ணி பயம் கொண்டவன் வேகமாக அவளது கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்…
அங்கே சுமித்ரா சரியாக அவளது கையை அறுத்துக் கொள்ள முற்பட அதனை பார்த்த உதய் நொடி பொழுதில் அவள் கையில் வைத்திருந்த கண்ணாடி துண்டை பிடித்து அதை தூக்கி எறிந்தான்…
எதுக்கு மிஸ்டர் புருஷா அதை தூக்கி எறிந்த என்றே கேட்க அறிவிருக்கா சுமி உனக்கு எதுக்கு நீ இப்படி பண்ற என்று கோபமாக கத்த நான் இப்படி தான் பண்ணுவேன் நீ எண்ண அடிச்சிருக்க அதுவும் அந்த சைனியனுக்காக என்றே அவளும் கத்த அதன்பின் அவளின் நிலையை அறிந்து உதய் மெதுவாக பேச முயன்றான்.
இங்கு வந்து உக்காரு என்று சுமியை கட்டிலில் அமர வைத்து அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்..
இங்க பாரு சுமி நடந்தது நடந்து போச்சி அதுக்கு அந்த பச்ச கொழந்த என்ன பாவம் பண்ணுச்சி சொல்லு . நான் உனக்கு பல தடவை சொல்லியிருக்கேன் ஜான்வி என்னோட பொண்ணுன்னு .அவள அப்படி பார்க்கும் போது ஒரு தகப்பனா நான் துடிச்சி பொய்டேன் மா அதான் கோபத்துல அடிச்சுட்டேன் சாரி என்க புருஷா வர வர உனக்கு அது மேல தான் பாசம் அதிகமாயிடுச்சி என்மேல உனக்கு பாசமே இல்ல என்று கூறி முகத்தை திருப்ப யாரு சொன்னது எனக்கு சமி மேல பாசம் இல்லன்னு உனக்கே தெரியும் நான் உன்மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு இத நான் சொல்லி தான் நீ தெரிஞ்சுக்கனுமா சுமி பொய்யாக வேதனை படுவது போல் நடிக்க அதனை அறிந்த சமி அவனை அணைத்துக் கொண்டு எனக்கு தெரியும் புருஷா என்றாள்..
இதனையெல்லாம் எதற்ச்சியாக அந்த அறையை கடக்க முயன்ற நந்தினி பார்க்க நேர்ந்தது. அவளின் மனதில் அப்போது அவளது கள்வனின் எண்ணம் வர அதே நேரம் அவன் மீது கோபமும் வந்தது. அதன் பிறகு மரகத்தத்தை பார்க்க அவரது அறைக்கு சென்றுவிட்டாள்..
கோவையில்…
ஜீவா கல்லூரி சேர்ந்து ஒரு மாத காலமானது .இந்த ஒரு மாத காலத்தில் அவனுக்கு நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை.. ஆனால் எதிர் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவனது முதல் நாள் கல்லூரி அமைந்திருந்தது..
கல்லூரியில் முதல் நாள் என்று சிறு பரபரப்பாகவே கிளப்பிக்கொண்டு இருந்தான் ஜீவா. முதல் நாள் என்பதால் பெற்றோர்களுடன் வர வேண்டும் என்று ரூல் இருப்பதால் ஜீவா நந்தினியை உடன் அழைத்து செல்ல முடிவெடுத்தான்..
அதனால் நந்தினியை கல்லூரிக்கே வர வைத்தான். உதயிடம் கேட்டுக் கொண்டதால் அவனே வந்து விடுவதாக கூறி இருக்க அது ஜீவாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் நந்தினியை பாதுகாப்பை எண்ணி சம்மதித்தான்..
ஊட்டியில் நந்தினி சீக்கிரமே கிளம்பி ரெடியாக இருக்க ஆனால் உதயோ பொறுமையாக கிளம்பினான். நேரம் ஆவதை உணர்ந்த நந்தினி பொறுமையாய் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவள் எதாவது பேசட்டும் என்று முடிவெடுத்து அமைதியாக அவன் இருக்க இருவரும் மௌனமாகவே இருந்தனர்..
சிறிது நேரம் கழித்து நந்தினியே அவனிடம் வந்து சார் அப்பு அங்க எனக்காக காத்திட்டு இருப்பான் சார். உங்களுக்கு இங்க ஏதோ முக்கியமான வேலை இருக்கும் போல நீங்க அத பாருங்க சார். நான் கப் புடிச்சு பொய்கிறேன் என்றே பயத்தில் கூற அவளை முறைத்தவன் கோபமாக நான் காருக்கு போறேன் சீக்கிரம் வந்து சேரு என்று விட்டு சென்றான்..
அவளும் அவன் பின்னாடியே பயந்தபடி சென்றாள்..
கார் வேகமாக சென்றது.. நந்தினியின் பயம் அதிகரித்ததே தவிர குறைய வில்லை. இரண்டு மணி நேரத்திலே உதய் அவளை ஜீவா படிக்கும் கல்லூரியில் இறக்கி விட்டு கார் பார்க்கிங் சென்றான்…
இவர் எதுக்கு கார் பார்க்கிங் பண்ண போறாரு என்று யோசித்து கொண்டே ஜீவாவை தேடி உள்ளே சென்றாள்..
இதே ஞாபகத்தில் உள்ளே வந்தவள் யாரோ ஒருவன் மீது மோதி கீழே விழுந்தாள். இதை தூரத்தில் இருந்து கண்ட ஜீவா பதறியடித்து ஓடி வந்தான்.
அதற்குள் அவனே அவளை எழுப்பி விட்டவன் என்ன மன்னிச்சிடுங்க ஓடி வரும்போது தெரியாம இடிச்சுட்டேன் என்று கூறிக்கொண்டே இருக்கும் போதே ஜீவாவின் அடியில் அந்த பையனின் கண்ணம் பழுத்தது.
நீ யாரு மேன் என்னைய அடிக்க என்று அவனும் கை ஓங்க அதற்குள் கூட்டம் கூடுவதை உணர்ந்த நந்தினி அந்த பையனிடம் மன்னிச்சிடுங்க தம்பி அவன் ஏதோ பாசத்துல உங்க மேல கை வச்சிட்டான் இத இப்படியே விட்டுங்களே என்றே கெஞ்ச அவனும் மனம் மாறி ஜீவாவை முறைத்துக் கொண்டே வேகமாக சென்றான்.
ஏன் அப்பு இப்படி பண்ண இந்த கோபம் உனக்கு ஆகாது இத நீ மாத்திக்கோ என்றவள் வேகமாக நடக்க தொடங்கினாள்..
அது எப்படி அம்மு என்னால சும்மா இருக்க முடியும் அவன் உன்ன தள்ளிவிட்டுருக்கான். அதுக்கு நான் அவனுக்கு தண்டனை தரணும் ல என்க ஆமா இவருக்கு மனசில சிவன்னு நினைப்பு தப்பா தட்டி கேப்பானாமா என்றே முணுமுணுக்க நான் சிவன்னா இல்லாம இருக்கலாம் ஆனா நான் அனுமன் சரியா ராமன் கையில உன்ன கொடுக்கிற வரைக்கும் நான் தான் உன்ன பாக்கனும் என்றான்..
அதன் பிறகு இருவரும் ஆடிட்டோரியம் சென்றனர். அங்கே அவர்களை வரவேற்பதற்காக இன்நாகுறேஷன் நிகழ்வு தொடங்கியது..
அதன் பிறகு அவனை ஹாஸ்டலில் விட்டுவிட்டு பிரியா விடை பெற்றாள் நந்தினி . அங்கே உதய் நிற்க அவள் அமைதியாக அவனது காரில் அமர்ந்துக் கொண்டாள்.
விடுதியில் ஒரு அறைக்கு நால்வர் என இருக்க ஜீவாவின் அறையிலோ மூன்று நபர்கள் இருக்க இன்னும் ஹரிசரன் என்றவன் மட்டும் பாக்கி இருந்தான்..
யாரோ ஒருவர் வந்து சில பெட்டிகளை வைத்துவிட்டு செல்ல சிறிது நேரத்திலே ஹரிசரன் அந்த அறைக்கு வந்தவன் அங்கிருந்தவனை கண்டு முறைத்து பார்க்க தொடங்கினேன். அதே நேரத்தில் ஜீவாவோ மனதில் இது என்னடா இது இன்னைக்கு யாரு மூஞ்சில முழிச்சேன்னே தெரியல எல்லாம் என் நேரம் டா என்று நினைத்து அவன் அவனது வேலையை செய்வேன செய்தான்..
அதன் பின் இருவரும் ஒரே அறையில் இருந்தாலும் இருவரும் எலியும் கீரியூமாக இருந்தனர்..
இன்று சூர்யாவின் பிறந்தநாள் என்று நாழிகை பார்த்து அறிந்து கொண்ட ஜீவா அவனுக்கு அழைப்பு விடுக்க அதுவோ உயிர் பிக்கபடாமலே இருந்தது..
சென்னையில்….
கங்காவும் சூர்யாவும் நந்தினி சென்ற இரண்டு நாளிலேயே அவர்களது வீட்டிற்கு வந்துவிட்டனர்..
அதன் பிறகு அங்கே கங்காவின் ஆட்சி தான் நடந்தது. அவள் சென்ற நாளிலிருந்து அவர் தினமும் தீபாவளி என்பது எதாவது பலகாரம் செய்து சாப்பிட தொடங்கினார்..
ஆனால் இதில் சூர்யா தான் நந்தினியின் ஃபோட்டோ டெளிட் ஆனா வருத்தத்தில் இருந்தான். அவனால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.
இரவு நேரத்தில் யாரும் அறியா வண்ணம் அவளது அறைக்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வருவான்.
ஒருநாள் எதற்ச்சியாக இதை பார்த்த கங்கா மனதிலே இவன் எதுக்கு அந்த ரூம்க்கு போறான்.இது சரியில்லையே சீக்கிரமா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிடனும் .இல்ல அந்த சிறுக்கிய இங்க கூட்டிட்டு வந்துடுவான் அதுவும் அவனோட பொண்டாட்டியா இது ஒருநாளும் நடக்க கூடாது என்றெண்ணி வந்த வேலையை முடித்துவிட்டு உறங்க சென்றுவிட்டார்..
அடுத்த நாளே யாருக்கும் தெரியாமல் பெண் பார்க்க தொடங்கினார். சுஜியும் கவியும் பன்னிரெண்டாம் வகுப்பு என்பதால் இருவரும் படிப்பில் கவனத்தை செலுத்தினர்..
இப்படியே சூர்யாவுக்கு கங்கா பெண் பார்க்க தொடங்கி ஒரு மாத காலம் நிறைவுற்றது. அதில் அவள் வெற்றி அடையும் நாளுக்காக காத்திருக்க அதற்காக ஒரு விடியலாக சூர்யாவின் பிறந்தநாள் அடுத்த நாளாக வந்தது.
இதை எதுவும் அறியாத சூர்யா நாளை காலை கோவை செல்வதற்காக பேக் செய்துவிட்டு இரவு உணவை தவிர்த்து விட்டு உறங்கி போனான் .
அடுத்தநாள் விடிய சூர்யா சீக்கிரமாகவே எழுந்தவனுக்கு புத்துணர்வாகவே இருந்தது. அதை கெடுப்பதற்காகவே கங்கா அவன் அறை கதவை தட்ட அவன் சென்று புன்னகை மாறாமல் திறந்தான்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் பா சூர்யா என்றுவிட்டு இந்த வருஷமாவது உனக்கொரு கல்யாணத்த பணிரன்னும் என்று அவனுக்கு அவரது பிறந்தநாள் பரிசாக புத்தாடை வழங்கினார்..
அதை பெற்றவன் நன்றி தெரிவித்து விட்டு அதை அவனது பையும் திணித்தான்.
அதை பார்த்து யோசனையில் கங்காவின் நெற்றி சுருங்க அதை பார்த்தவன் அம்மா ஒரு மீடிங்காக திருச்சி வரைக்கும் போறேன் ஒரு நாள்ல திரும்பி வந்துடுவேன் என்றான்..
இதை கேட்ட கங்காவிற்கு சிறு ஏமாற்றமே ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி பா பத்திரமா பொய்ட்டு வா என்று கூறிவிட்டு உனக்கு பொண்ணு பாக்கலாம்னு இருக்கேன் பா என்று அவனது காதில் சிறு பொறியை போட அவன் அதை பெரிதாக எண்ணாமல் சரி என்றான்..
இதை கேட்ட கங்காவிற்கு வானில் பறப்பது போல் இருந்தது.. அந்த இடத்தை விட்டு இன்முகத்துடன் சென்றார்..
அதன்பின் அனைவரும் வாழ்த்து தெரிவிக்க அதை பெற்றுக்கொண்டவன் தன் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
கோவை செல்லும் பேருந்தில் ஏறினவனுக்கு நந்தினியின் நினைப்பு மட்டுமே இருந்தது..அந்த நேரத்தில் அச்சோ அம்மா ஏதோ என்கிட்ட கேட்டாங்களே நான் கூட அதுக்கு சரின்னு சொன்னேன்னே என்ன சொன்னாங்கன்னு தெரியலையே என்று யோசிக்க அவனே அதற்காக ஒரு பதிலை உருவாக்கினான் .
அம்மாக்கு இப்பவெல்லாம் கால் வலி வருதுன்னு சொன்னாங்க அதுக்கான மருந்து வாங்கிட்டு வர சொல்லி இருப்பாங்க என்று எண்ணினான்.
அதன் பிறகு அவளது நினைவை வைத்துக் கொண்டு கோவை வந்தடைந்தவன் நேராக ஜீவா படிக்கும் கல்லூரிக்கு சென்று அவனை அழைத்துக்கொண்டு உதகமண்டலம் நோக்கி சென்றான் அவன் நினைக்கும் அவனின் தேவதை என்று. ஆனால் உண்மையாகவே அவனின் தேவதை அங்கே தான் இருக்கிறாள்.