Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai -9

Advertisement

Krithika Pradeep

Member
Member
யது வீட்டுக்கு போகலாம் என்ற உடன் வேதநாயகி அம்மாவிற்கு இன்னும் வருத்தம் அதிகம் ஆகி விட்டது , அவர் முகத்தை பார்த்தே யதுக்கு புரிந்து விட்டது கல்யாணம் நிற்பது அவருக்கு தாங்க முடியவில்லை என்று.

அவனுக்கும் தான் உள்ளே பற்றி எரிகிறது , எவ்வளவு தலை குனிவு இது அவனுக்கு , அவன் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் ஆனால் அவன் தொழில் துறை நண்பர்கள் ,எதிரிகள் , போட்டியாளர்கள் , உறவினர்கள் எல்லோருக்கும் அவன் கல்யாணம் கேலி ஆகி விடும் .

இவ்ளோ நாள் அவன் சேர்த்து வைத்த பேர் புகழ் எல்லாம் பின்னே போய் விடும் , கல்யாணம் நின்றது தான் பெரிய விஷயமாக தெரியும் , இவனுக்கு ஏதோ குறை அதனால் தான் பொண்ணு ஓடி விட்டது என்று பேசுவார்கள் .

ஆனால் அதை எல்லாம் பார்த்து இப்பொழுது வேதனை பட்டால் அவன் அம்மா இன்னமும் கலங்கி விடுவார் , அவருக்கு முடியாமல் போய் ஏதாவது ஆனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது.

அம்மா வாங்க இதெல்லாம் ஒரு விஷயமா , நீங்களே ஒரு நல்ல பொண்ணா பாருங்க அடுத்த முகுர்த்தமே கல்யாணம் வெச்சுக்கலாம் , இப்போ கவலை படாம எழுந்திரிங்க வீட்டுக்கு போகலாம் என்றான்.

அவன் அம்மாவிற்கு காலையில் மாப்பிள்ளை கோலத்தில் அவன் மாடியில் இருந்து இறங்கி வந்தது ஞாபகம் வந்தது. நம்ம கண்ணே பட்ருச்சு போல அதான் இப்படி ஆகி விட்டது என்று நினைத்தார் . பாவம் அவருக்கு தெரியவில்லை கீதா ஒரு காரணத்துக்கு தான் காத்துகொண்டு இருந்தாள் ,அது கிடைத்த உடன் ஓடி போய் விட்டாள் என்று.

அங்கே இருக்கும் எல்லோருக்கும் குடும்ப நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் , யாருக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை .

ரிஷி-யும் வந்து அவன் அம்மாவிடம் , சரி விடுமா பாத்துக்கலாம் , அண்ணா தான் சொல்றாரே, ஒரு நல்ல பொண்ணா பாக்க சொல்லி , அப்புறம் என்ன எழுந்து வா மா என்று அவன் அம்மாவை தூக்க ஆரம்பித்தான் .

இல்லை ரிஷி என்னால தாங்க முடியல , என் மகன் கல்யாணம் இப்படி ஆகும்-னு நினைக்கவே இல்லை , இப்போ பார் ராஜா மாதிரி இருந்தவன் எல்லோர் முன்பும் தலைகுனியும்-படி ஆகிவிட்டது என்று சுற்றி பார்த்தார் .

சுற்றி பார்த்தவுடன் அவர் முகத்தில் ஒரு தெளிவு பிறக்க ஆரம்பித்து விட்டது , அவசரமாக எழுந்திரிக்க போனார் , ரிஷி தான் அதட்ட ஆரம்பித்தான் , எதுக்கு மா இவ்ளோ பாஸ்ட் ஹஹ் எழுந்திரிக்கிறே , வெயிட் பண்ணு என்ன ஆச்சு-னு சொல்லு என்றான் .

அவர் எதையும் காதில் வாங்கவில்லை , நேராக மது-வின் அப்பா அம்மா விடம் சென்றவர் , மது அம்மா கையை பிடித்து கொண்டு , மது-வை என் வீட்டு மருமகள் ஆக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன் , ஆனால் யது கல்யாணம் முடிந்து என் சின்ன பையனுக்கு பேசி வைத்து கொள்ளலாம் என்று இருந்தேன் , ஆனால் இப்போ என்னோட பெரிய மகனுக்காக கேட்கிறேன் , உங்க பெண்ணை ரொம்ப என் பொண்ணு போல பாத்துப்பேன் , என் வீட்டுக்கு என் மருமகளாக அனுப்பறீங்களா என்று கேட்டார் .

மது-வின் பெற்றோர்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை , அவர்கள் முழித்து கொண்டு இருக்கும் பொழுதே.

இங்கே மது யதுவை முறைத்துக்கொண்டு இருந்தாள் , அவர்கள் இருவருக்கும் தான் சுத்தமாக ஆகாதே .

அவள் முறைப்பதை பார்த்தவுடன் யது அவன் அம்மாவிடம் , அம்மா ப்ளஸ்-மா இப்போ வீட்டுக்கு போகலாம் எதுவா இருந்தாலும் யோசிச்சி முடிவு எடுக்கலாம் என்றான் .

அவன் அம்மா அவனை பார்த்து முறைக்க ஆரம்பித்து விட்டார் , என்னடா இது அமைதியா இருந்தா ஒருத்தி வெட்டவா குத்தவா னு பாக்கரா , சரி ஏதாது சொல்லலாம்னா அம்மா முறைக்கறாங்க என்று யோசிக்க ஆரம்பித்தான் .

அவன் அம்மா அவனிடம் , நீ நான் பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டாய் , என்னோட தேர்வு எப்போதுமே மது-தான் , அது இப்போனாலும் சரி எப்போனாலும் சரி என்று அவன் வாயை அடைத்து விட்டார் .

மது-வின் பெற்றோர்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனை-யும் இல்லை மது-வின் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள் , அவர்களுக்கும் யது-வை பற்றி தெரியுமே , அவன் வளர்ச்சியை பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் ஆயிற்றே , அவர்கள் பெண்ணுக்கு தேடினாலும் இப்படி ஒரு சம்பந்தம் கிடைக்காது ஆனால் மது-வின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என்று சொல்லிவிட்டனர் .

மதுவிடம் வேதநாயகி அம்மா போவதற்கு முன்னால் , ரிஷி அவள் கையை பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டான் , மது ஓகே சொல்லு என்று , அவளுக்கு இவ்ளோ பேர் முன்னாள் வேண்டாம் என்று சொன்னால் அது யது-கு இன்னும் தலை குனிவு என்று தெரியும் .அனாலும் பிடிக்காத ஒருத்தனை எப்படி கல்யாணம் செய்வது .

ரிஷி-இடம் நம்ம இப்போ தான் third இயர் போக போறோம் , இன்னும் நாம டூ years படிக்க வேண்டியது இருக்கு , இப்போ போய் marriage பத்தி யோசிக்க முடில டா என்றால் .

ரிஷி தான் எப்படியாவது மது-வை ஓகே சொல்லவைத்து விட வேண்டும் என்று இருந்தானே , நீ படிக்கறதுக்கு இங்கே யாரும் வேண்டாம்-னு சொல்ல மாட்டாங்க , நீ எவ்வளவு படிக்க வேண்டுமோ படி , அதுக்கு நான் guarantee என்றான் .

மது என்னடா இது புரிந்து கொள்ள மாட்டேங்கிறான் என்று , அது இல்ல டா இது ஒத்து வராது என்றாள்.

ரிஷி-கும் தெரியுமே அவன் அண்ணாவை மதுவிற்கு பிடிக்காது அதே போல் அண்ணவிற்கும் என்று , ஆனாலும் அவனுக்கு ஒரு அபிப்ராயம் வெறுப்பு விருப்பமாக மாற ரொம்ப நாள் ஆகாது என்று அதனால் மதுவின் காது-கு அருகில் சென்று , ப்ளஸ் மது அம்மா-னால இந்த வருத்தத்தை தாங்க முடியாது , அவர்களுக்கு ஏதாவது ஆகிடுச்சுனா நானும் அவங்களோட போய்டுவேன் பாத்துக்கோ என்று blackmail பண்ண ஆரம்பித்து விட்டான் .
என்னமோ இவள் கல்யாணம் வேண்டாம் என்று ஓடிப்போனது போல.

அப்படி இப்படி பிளாக்மெயில் பண்ணி கல்யாணத்துக்கு ஓகே வாங்கிவிட்டான் . கடைசி ஆயுதமாக மது , யதுவை ஏதாவது செய்யேன் என்று பார்த்தால் , அவனோ நாம இப்போ வேண்டாம்-னு சொன்னால் அம்மா health-கு எதாவது problem ஆகிடும் அதனால இப்போதைக்கு எதுவும் சொல்ல வேணாம் , மதுவிற்கு கல்யாணம் பிடிக்கவில்லை என்றால் நாமே கொஞ்ச நாள் கழிச்சு அவளுக்கு டிவோர்ஸ் குடுத்துட்டு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செஞ்சு வெச்சிரலாம் என்று யோசித்தான் .

இவன் யோசித்து முடிக்கவும் மதுவை மனையில் உட்கார வைக்கவும் சரியாக இருந்தது ,நல்ல நேரம் முடிவதற்கு முன்னால் மதுவை தன்னுடைய சரிபாதியாக ஏற்று மூன்று முடிச்சு போட்டு விட்டான் .

ஆனால் மது கழுத்தில் தாலி கட்டும் பொழுது மனது அமைதி ஆனது , கீதாவின் மேல் உள்ள கோபம் கூட குறைந்தது போல் தோன்றியது .

மது-விற்கும் அவள் எண்ணத்துக்கு நேர் மாறாக , எங்கெங்கோ சுத்தி அவளின் இடம் சேர்ந்து விட்டது போல் ஒரு தோற்றம்.
 
இந்த யதுவைக் கல்யாணம் பண்ண நீ ஓகே சொல்லியிருக்கக் கூடாது, மதுப் பெண்ணே
சரி போனால் போகட்டும்
உன்னோட ஜிகிரி தோஸ்த்து ரிஷி ரொம்ப கெஞ்சுறான்
வேதாம்மாவையும் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கு
ஆனால் அந்த யதுவை நீ நல்லா வைச்சு செய்யணும், மது டியர்
 
இந்த யதுவைக் கல்யாணம் பண்ண நீ ஓகே சொல்லியிருக்கக் கூடாது, மதுப் பெண்ணே
சரி போனால் போகட்டும்
உன்னோட ஜிகிரி தோஸ்த்து ரிஷி ரொம்ப கெஞ்சுறான்
வேதாம்மாவையும் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கு
ஆனால் அந்த யதுவை நீ நல்லா வைச்சு செய்யணும், மது டியர்
amanga blackmail pani kalyanam seinju vechutanga.. kalyanam ana pinadi yar yare vechu seiya poranganu therilaye:)
 
amanga blackmail pani kalyanam seinju vechutanga.. kalyanam ana pinadi yar yare vechu seiya poranganu therilaye:)
நோஓஓஓஓஓஓஓஓஓஓ
இந்த மண்டைக்கனம் பிடித்த யதுவிடம் என் செல்ல மதுக்குட்டி பணிஞ்சு போகக் கூடாது
 
Tom and Jerry katha ellam veliya than ullukul rendom Laila,Majnu than.parungo pogapoga theriyum.Madu,Yathu thapila. Amma ku vendi friend ku vendi nu sollikalam.neegalu kalaku.
 
Top