Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 8

Advertisement

Krithika Pradeep

Member
Member
கீதாவின் அம்மா வந்து பார்க்கவும் கீதாவை காணோம் .

அவள் எங்கே என்று அவர் தேடவும் , அவள் வாசல் நெருங்கி இருந்தாள் , அவள் அம்மா கீதா எங்கே போற என்று கேட்டு கொண்டே பின்னால் சென்றார் .

அவள் அவசரமாக அவர்கள் கார் நிற்கும் இடம் சென்று , டிரைவர்-இடம் சீக்கிரம் கார் எடுங்கள் அவசரமாக வீட்டுக்கு போய் ஒரு பொருள் எடுத்து கொண்டு வர வேண்டும் என்று சொன்னாள் .

அவரும் அவசரமாக கார் ஸ்டார்ட் செய்து ஏற சொன்னார் , இதை எல்லாம் பார்த்த கீதாவின் அம்மா குழம்பிவிட்டார் . இவள் என்ன நாம கூப்பிடுவது காதில் கேட்காத மாதிரி கார் ஏறி போகிறாள் என்று அவள் போன்-கு அழைத்தார் .

அவள் போனே எடுக்கவில்லை , சரி என்று டிரைவர்-கு அழைத்தார் , கீதா தான் அம்மா திட்டுவதற்கு கூப்பிடுவார்கள் என்று முன்னாலே டிரைவர் மொபைல் வாங்கி வைத்து கொண்டாளே , அதனால் கால் கட் பண்ணி கொண்டே இருந்தாள் .

அவள் அம்மா-விற்கு இங்கே பதட்டம் அதிகமாகி விட்டது , இவள் ஏதோ பிளான் செய்து விட்டாள் என்று தெரிந்து விட்டது , இங்கே என்ன சொல்வது என்று தெரியவில்லை , அதனால் விடாமல் போன் அடித்து கொண்டே இருந்தார்.

டிரைவர் போன்-ல் கீதா-வே எடுத்தாள் , எதுக்குமா இப்போ விடாமல் போன் பண்றீங்க அதான் நானே அங்கே இருந்து கிளம்பிட்டேனே நீங்களும் கிளம்பி வர வேண்டியது தானே என்று கேட்டாள்.
அவள் அம்மா-விற்கு இங்கே BP எகிற ஆரம்பித்து விட்டது , எங்க-டி போற கல்யாணத்த வெச்சுட்டு , போன் பண்ணா என்ன கிளம்பி வா-னு சொல்ற , இப்போ என்ன நடக்குது-னு சொல்லு.
அம்மா புரிஞ்சுக்கோ மா எனக்கு அந்த கல்யாணம் வேணாம் , என்னால எனக்கு பிடிச்ச மாதிரி இருக்க முடியாது , ரொம்ப restriction இருக்கும் , பயமா இருக்குமா , கிளம்பி வா மா .
என்னடி சின்ன பொண்ணு மாதிரி சொல்லிட்டு இருக்கே , இந்த லைப் உனக்கு நினைச்சாலும் கிடைக்காது திரும்பி வா என்று கத்தி கொண்டு இருந்தார்.

முடியாது மா நான் எந்த opportunity-காக காத்திருந்தேனோ அது கிடைத்து விட்டது , இனி திரும்பி வர மாட்டேன் .

கீத் மா புருஞ்சுக்கோ டா அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்வேன் , உனக்கு அந்த opportunity கிடைச்சாலும் நீ பாலிவுட்-ல சக்ஸஸ் ஆகிடுவியா-னு தெரியாது , ஆனால் அதே யது-வ கல்யாணம் பண்ணினா உன்னோட லைப் நல்ல இருக்கும் .

யது இப்போ export-ல கூட ரொம்ப லாபம் பாக்கறார் போல் , அவர் friends எல்லாம் பொறாமையா இப்போ சொல்லிட்டு இருந்தாங்க , கூடிய சீக்கிரம் தமிழ் நாடு-ல நம்பர் 5 பொஸிஷன் குள்ள வந்திருவார் . சொன்னா கேளு நமக்கு இப்படி ஒரு சம்மந்தம் இனி கிடைக்காது , வா கீது .

அம்மா அவன் இந்தியா-ல டாப் 5-ல இருந்தா கூட எனக்கு வேணாம் , என்னால ஒரு marriage லைப் இப்போ யோசிக்க முடியல , எனக்கு freedom வேணும் , i am seriously feeling suffocated , if i think about my marriage .

கீதா நீ உன் லைப் ஸ்பாயில் பண்ணிக்க போறே , dont blabber like a mad , நீ இப்போ திரும்பி வர இல்லைனா , நானும் அப்பாவும் உனக்கு சப்போர்ட் பண்ண மாட்டோம் , future-ல எந்த விஷயத்திலயும் .

அம்மா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க , என்னால திரும்பி வர முடியாது , என்னால முடில மா , என்னால யது கூட அவன் வீட்ல அடைஞ்சு இருக்க முடியாது மா.
என்னோட lifestyle வேற , யது ஓடது வேற , என் dreams வேற , என் dream எல்லாம் முடுஞ்சு அவன கல்யாணம் பண்ணிக்கலாம்-னு இருந்தேன் , ஆனா என் லைப்-ல பாதி கூட நான் என்ஜோய் பண்ணாம , என்னால ஒரு வீட்டுக்குள் அடைஞ்சு இருக்க முடியாது . நீங்க சப்போர்ட் பண்ணலைனாலும் நான் இப்போ திரும்பி வர மாட்டேன் .

கீதா ப்ளீஸ் உன் லைப் நல்லா இருக்கனும்-னு தான் சொல்றேன் .

சாரி மா , பை போன் வைக்கிறேன் , சுவிட்ச் ஆப் பண்ண போறேன் , டிரைவர்-கு இனி கூப்பிட்டாலும் வேஸ்ட் தான் .

கீதா தப்பு மா என்று சொல்ல சொல்ல போன் கட் ஆகி விட்டது , போன் பண்ணினாலும் சுவிட்ச் ஆப் என்று வந்தது , என்ன செய்வது என்று தெரியவில்லை , இப்போ உள்ளே சென்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் .

அவர் உள்ளே போகவும் அங்கே யது மனையில் உட்கார்ந்து ஐயர் சொல்வதை திருப்பி சொல்லி கொண்டு இருந்தான் .

இவர் போகவும் எல்லோரும் கீதா கூட வராததை பார்த்து , இவர் பின்னால் பார்த்தனர் , அங்கே எங்கேயும் கீதா வராததை பார்த்து , வேதநாயகி அம்மா அவசரமாக கீதா அம்மாவிடம் வந்து , எங்கே கீதா டைம் ஆகுது என்று கேட்டார் .

கீதாவின் அம்மா மூடி மறைக்காமல் உண்மையை சொல்லி விட்டார் , அவர் சொன்னதும் அதிர்ச்சி தாங்காமல் வேதநாயகி அம்மா மயக்கம் போட்டு விட்டார் .

அவர் மயங்குவதை பார்த்து எல்லாருக்கும் என்னமோ தவறாகி விட்டது என்று புரிந்து விட்டது , அவர் மயங்காவும் பக்கத்தில் இருந்த ரிஷி அவசரமாக அவர் கீழே விழாமல் பிடித்து கொண்டான்.

யது மனையில் இருந்து எழுந்திருக்கவும் , ஐயர் எழக்கூடாது என்று சொன்னார் , அதை காதில் கூட வாங்கவில்லை , அவசரமாக அவன் அம்மாவிடம் ஓடினான்.

இந்த அவசரத்திலும் மது தான் தண்ணீர் எடுத்து வந்தாள் , அவள் எடுத்து வரவும் யது அதை வாங்கி அவன் அம்மா முகத்தில் தெளித்தான் .

அவர் கண்ணை விழிக்கவும் தான் அவர்கள் எல்லோருக்கும் மூச்சே வந்தது , அவன் எந்த சிக்கல் என்றாலும் தீர்த்து விடுவான் , அதுவே அவன் குடுபத்துக்கு என்றால் அவன் பலவீனமாகி விடுவான் , அதுவும் அவன் அம்மாவிற்கு எதாவது என்றால் அவனால் தாங்கவே முடியாது .

அவன் அம்மா முழிக்கவும் , அம்மா எந்த பிரச்சனை இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் நீங்க டென்ஷன் ஆகாதீங்க என்றான் , அவன் அம்மாவிற்கு அவனை பார்த்ததும் அழுகை ஆரம்பித்து விட்டது .

அம்மா கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று சொல்லி விட்டு , கீதாவின் அம்மாவை கேள்வியாக பார்த்தான் , அவர் கீதா கல்யாணம் வேணாம் என்று போனதை சொல்லவும் அவனுக்கு கோவம் தலைக்கு ஏறியது .

அவள் எந்த opportunity-காக போனாலோ அது அவளுக்கு கிடைக்காது என்று சொல்லி விட்டு , அம்மா இப்ப என ஆச்சு வாங்க வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட்டான்.
 
யதுவை கல்யாணம் பண்ணிக்கிறாயான்னு மதுவிடம் இன்னும் கேட்கலையா?
ஹா ஹா ஹா
கீதா ஓடிட்டாளா?
சூப்பர்
கீதாவின் அம்மா நல்லவளாத்தான் இருக்காங்க
பொண்ணுக்கு நல்லது சொல்லும் அம்மாவின் அறிவுரையைக் கேட்காமல் போகும் கீதா என்ன பாடுபடப் போறாளோ?
பையன் கல்யாணம் நடக்காமல் வீட்டுக்கு போகலாம்ன்னு யது சொன்னால் வேதநாயகி போயிடுவாங்களா என்ன?
 
யதுவை கல்யாணம் பண்ணிக்கிறாயான்னு மதுவிடம் இன்னும் கேட்கலையா?
ஹா ஹா ஹா
கீதா ஓடிட்டாளா?
சூப்பர்
கீதாவின் அம்மா நல்லவளாத்தான் இருக்காங்க
பொண்ணுக்கு நல்லது சொல்லும் அம்மாவின் அறிவுரையைக் கேட்காமல் போகும் கீதா என்ன பாடுபடப் போறாளோ?
பையன் கல்யாணம் நடக்காமல் வீட்டுக்கு போகலாம்ன்னு யது சொன்னால் வேதநாயகி போயிடுவாங்களா என்ன?
amanga Geetha amma ponnu vazhkai nala irukanumnu pakaranga.. yenga purunja thane ..
Hmmm crct than ammanala payan kalayanam nadakama poratha thanga mudiyathu thaan.. pakalam amma jeikarangala ilai payana nu:)
 
Top