Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai -13

Advertisement

Krithika Pradeep

Member
Member
யது அவனுக்கு தெரிந்த producer-இடம் பேசினான் , பேசின உடனே கீதா எந்த வாய்ப்புக்காக போனால் என்று தெரிந்து விட்டது , உடனே அந்த வாய்ப்பு கொடுத்தவர் இடம் பேசினான் , பேசும்பொழுதே சொல்லி விட்டான் , இப்போ ஏதும் சொல்லாதீங்க அவ கிட்ட , ஈவென்ட் நடக்கப்போற அந்த நாள் காலைலே அவ பேர் அதுல இல்லனு சொல்லுங்க அண்ட் அக்ரீமெண்ட் ஏதாது போட்ருந்திங்கனா லாஸ் நான் குடுத்தறேன் பட் அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்க கூடாது என்றான் .

அவரும் இன்னைக்கு தான் அக்ரீமெண்ட் சைன் பண்றதா இருந்துச்சு , நான் அக்ரீமெண்ட் எங்களுக்கு சாதகமா வர மாதிரி change பண்ண சொல்லிடறேன் என்றார் .

இவனும் தேங்க்ஸ் சார் , ஐ வில் remember திஸ் ஹெல்ப் என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.

இப்போது தான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது , எனக்கு அவமானம் வந்தாலும் பரவாயில்லை என்று போனால அவளுக்கு ஏதும் கிடைக்க கூடாது என்று நினைத்தான் . யாதுவிற்கு கோவம் வராத போது அவன் மிகவும் நல்லவன் , கோவம் வந்தால் யார் எவர் என்று பார்க்க மாட்டான் , அவர்கள் செய்ததை விட பல மடங்கு பழி வாங்குவான் .

அவரிடம் பேசி முடித்து விட்டு , இன்னும் ரெண்டு மூன்று கால் செய்து கீதாவிற்கு இனிமேல் எந்த வாய்ப்பும் வராமல் பார்த்து விட்டு தான் வீட்டிற்கு கிளம்பினான் .

எல்லோரும் குல தெய்வ கோவிலுக்கு போக ரெடியாக இருந்தார்கள் . . மது சாரீ கட்டி கொண்டு கஷ்ட பட்டு நடந்து வந்தாள் , எல்லாம் அவள் அம்மா செய்தது , எப்படி தான் சாரீ எடுத்து அதற்குள் blouse தெய்து கொண்டு வந்தார்களோ , நீ இதை தான் கட்ட வேண்டும் என்று சொல்லி படுத்தி எடுத்து விட்டார் .

எல்லோரும் கிளம்பவும் யது வரவும் சரியாக இருந்தது , அவன் வந்து எல்லோருடனும் ஒரு வார்த்தை பேசி விட்டு ,அவன் ரூமிற்கு வந்து கிளம்ப ஆரம்பித்து விட்டான் , மதுவின் அம்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது வேணுமா-னு போய் கேட்டுட்டு வா என்று அனுப்பினார் .

மதுவோ மனதுக்குள் ஏதாவது வேணும்னா சொல்லிட்டு போக வேண்டியது தானே , அவர் பாட்டுக்கு வந்தார் பேசினார் மேல போய்ட்டார் , நானே நடக்க முடியுமே நடக்கிறேன் இதுலே மேல போய் கேட்டுட்டு வரணுமா என்று மனதுக்குள் திட்டி கொண்டே மேலே சென்றாள் .


மது வந்து ரூம் கதவை திறந்து உள்ளே சென்றவள் கண்ணை மூடி கொண்டாள் , யது அப்பொழுது தான் குளிக்கலாம் என்று ஷர்ட் கழட்டி விட்டு towel எடுத்து கொண்டு இருந்தான் .

மது மேலே வருவாள் என்று அவன் எதிர் பார்க்க வில்லை ஆனால் அவள் கண்ணை மூடி கொள்ளவும் அவளை வம்பு இழுக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விட்டது .

என்னாச்சு பேபி எதுக்கு இப்போ கண்ணை மூடிட்டு இருக்கே , இப்போ நீ கண்ண திறக்கலைனா நான் லிப் டு லிப் கிஸ் குடுக்க போறேன் என்று அருகில் வந்தான் .

அவன் கிஸ் என்று சொன்ன உடனே சாஸர் போல கண்ணை விரிக்கவும் , அவன் கிட்டே நெருங்கி வருவது தெரிந்தது . hiyayo அப்போவே கண்ணை முடாம இருந்துருக்கலாமே இப்போ எப்படி தப்பிக்கறது என்று யோசித்தாள் .

அவன் நெருங்கி வரவும் , இல்ல உங்களுக்கு குடிக்க ஏதாவது வேணுமான்னு அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க என்று திக்கி திக்கி சொல்லி முடித்தாள் .

எனக்கு குடிக்க ஏதும் வேணாம் ஆனா சாப்பிட ஸ்வீட் வேணும் என்றான் .

ஓ ஓகே-ங்க நான் போய் கொண்டு வரேன் என்று கிளம்பினாள் .

ஏய் எங்க போறே என்று கையை பிடித்து இழுத்து , நான் சொன்ன ஸ்வீட் இங்கே தான் இருக்கு என்று அவளை இன்னும் நெருங்கவும் .

கோவிலுக்கு போகனுங்க என்றாள் .

அவள் கோவில் என்றதும் தான் கீழே எல்லாரும் இவனுக்காக வெய்ட் பண்ணுவது ஞாபகம் வந்தது . சரி மது நீ கீழே போ எனக்கு ஏதும் வேணாம் , ஆனால் இதே மாதிரி எப்பவும் உன்னால என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்க முடியாது . நைட் இங்க வந்து தானே ஆகணும் அப்போ பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தான் .

அவன் கிளம்பி வந்தவுடன் , எல்லாரும் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து , கடவுளிடம் வேண்டி விட்டு வீடு திரும்ப ஆரம்பித்தனர் .

திரும்பும் வழியில் மது தூங்க ஆரம்பித்து விட்டாள் , அவள் தூங்குவதை பார்த்த யதுவிற்கு சிரிப்பு தான் வந்தது , சரியான தூங்கு மூஞ்சி என்று செல்லமாக திட்டி விட்டு கார் ஓட்டி கொண்டு இருந்தான் .


வீட்டுக்கு வந்தும் அவள் எழும்பாததால் அவள் அம்மா எழுப்ப செல்லவும் , வேண்டாம் ஆண்ட்டி தூங்கட்டும் அவளுக்கும் நேற்றில் இருந்து ரொம்ப அலைச்சல் ,நீங்க நகருங்க நான் பார்த்துக்கறேன் என்று அவளை குழந்தை போல் தூக்கி கொண்டு அவர்கள் அறை நோக்கி சென்றான் .

இதை பார்த்ததும் மதுவின் வபெற்றோர்களுக்கு மனது நிறைந்து விட்டது , மது விளையாட்டு தனமாக எதுவாவது செய்தலும் மாப்பிள்ளை பார்த்து கொள்வார் என்று .

ஆனால் அடுத்த நாளே , அவர்கள் செல்ல மாப்பிள்ளை மனதை அவர்கள் மகளே அவளை அறியாமல் கஷ்ட படுத்துவாள் என்று அப்போது அவர்களுக்கு தெரிய வில்லை .
 
மிகவும் அருமையான பதிவு,
கிருத்திகா பிரதீப் டியர்
 
Last edited:
Nice epi
But often u r vanishing from the site.better u can avoid tht for our sakes. Tht s it rest all well and fine.
 
at last you have come back. its really painful to wait for so long for one episode. please try to avoid this looooooooooooooooong waiting. nice episode.
 
Top