Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pani Thirai - 10

Advertisement

Krithika Pradeep

Member
Member
மதுவிற்கு மூச்சு விட கூட நேரம் இல்லாமல் எல்லாமே அவசரமாக நடந்தது , அனாலும் மனதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது , யதுவிற்கு மது என்றால் பிடிக்காது ஆனால் இன்று அவன் நடந்து கொண்டது வித்யாசமாக இருந்தது .


கல்யாணம் முடிந்த உடன் யது வீட்டுக்கு கூட்டி சென்றார்கள் , எல்லோரும் வலதுகால் எடுத்து வைத்து உள்ளே கூப்பிட அவ்வளவு தயக்கம் மதுவிற்கு , அவள் தயக்கம் புரிந்தது போல யது அவள் கையை பிடித்து கொண்டு வலதுகால் எடுத்து உள்ளே வைத்தான் ,அதே போல மதுவும் செய்த்தாள் .

பால் , பழம் குடுக்கும் பொழுதும் யது வேண்டாம் என்று சொல்வான் என்று நினைத்தாள் , ஆனால் அவனோ எந்த வேறுபாடும் இன்றி இவள் சாப்பிட்டு குடுத்த பால் , பழம் இரண்டையும் முகம் சுளிக்காமல் சாப்பிட்டான் .

மதுவுக்கு டவுட் வந்து விட்டது , இவன் உண்மையாலுமே அந்த பெண்ணை விரும்பினானா இல்லையா , முகத்தில் கொஞ்சம் கூட வருத்தம் இல்லையே , ஓடி போனது இவன் காதலி , ஆனால் இவன் அதை பத்தி யோசிப்பது போல கூட இல்லையே என்று யோசித்து கொண்டு இருந்தாள் .

இவள் யோசிக்கும் போதே யதுவின் அம்மா இரண்டு மூன்று முறை அவள் பெயரை கூப்பிட்டு விட்டார்கள் , மது தான் இந்த உலகத்திலே இல்லையே , யது அவள் காது அருகில் வந்து மது அம்மா உன்னை தான் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லவும் அடித்து பிடித்து எழுந்தாள் , பின்ன இருக்காதா அவன் மீசை முடி காதில் உரசுமாறு பக்கத்தில் வந்து கூப்பிட்டான் , அவளுக்கு உடம்பே சிலிர்த்து விட்டது , இவன் என்ன இப்படி எல்லாம் பண்றான் , இவனுக்கும் நம்மள பிடிக்காதே , என்னமோ லவ் பண்ணி கல்யாணம் பண்ணினது போல இவ்வளவு அருகில் வந்து கூப்பிடறான் என்று அவனை முறைத்து பார்த்து கொண்டே சொல்லுங்க ஆண்ட்டி என்று கிட்சன் பக்கம் சென்றாள் .

அது மது-மா இனி reception ஈவினிங் தான் , கீழ கெஸ்ட் ரூம்ல designer வெயிட் பண்றாங்க , அவங்களுக்கு அளவு குடுதுட்டினா ரெண்டு மணி நேரத்துலே டிரஸ் ரெடி ஆகிடும் , நீயும் அது வரைக்கும் ரெஸ்ட் எடுக்கலாம் .



அம்மா உன்னோட ட்ரெஸ்ஸஸ் எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க , அவங்க வந்த உடனே டிரஸ் மாத்திட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு என்றார்.

மது அமைதியாக இருப்பதை பார்த்து , மது மா யது நல்லவன் தான் டா , கொஞ்சம் முன்கோபி ஆனால் ரொம்ப பாசம் அதிகம் , எனக்கு தெரியும் அவன் மேல உள்ள கோபத்துல தான் நீ இங்கே வராமையே இருந்தே , ஆனா அதே யது இன்னைக்கு உன் கை பிடித்து உள்ளே கூட்டி வந்தான் . இன்னும் கொஞ்ச நாள் போனா உனக்கும் அவனை பற்றி புரியும் டா. இப்போ மனச போட்டு ரொம்ப உழப்பிக்காத , போக போக எல்லாம் சரி ஆகிடும் என்றார் .

ஏனோ அவருடன் பேசிய பிறகு கொஞ்சம் தெளிவு வந்துது போல் தோன்றியது மதுவிற்கு , ஓகே ஆண்ட்டி நான் போய் designer கிட்ட அளவு குடுத்துட்டு வரேன் என்று சென்றாள் .

மது மா ஒரு நிமிஷம் , இனி ஆண்ட்டி சொல்லாதே அத்தை-னு சொல்லு என்றார் , அவளும் சரி அத்தை என்று சென்று விட்டாள் .

அவருக்கு புரிந்தது , சின்ன பொண்ணு அதான் ஏதேதோ நினைத்து வருந்துகிறாள் , போக போக சரி ஆகிவிடுவாள் என்று .

reception-கு எல்லோரும் தயாராகி விட்டார்கள் , மது தான் ரூம்-இல் இருந்து வெளியே வர வேண்டும் , அழகுகலை நிபுணர் மேக்கப் போட்டு கொண்டு இருந்தார் , இங்கே யதுவிற்கு பொறுமை பறந்து கொண்டு இருந்தது .

சரி நாமே போய் கதவை தட்டலாம் என்று ஒரு அடி எடுத்து வைக்கவும் , மது கதவை திறந்து கொண்டு வெளியே வரவும் சரியாக இருந்தது .


வானுலகத்து தேவதை மண்ணில் வந்தது போல அவ்வளவு அழகாக இருந்தாள் , யதுவிற்கு அவன் கண்ணை இங்கே அங்கே அசைக்க முடியவில்லை . என்னடா இவள் இவ்ளோ அழகா இருக்கா என்று நினைத்தான் . அந்த மயில்வண்ண கவுன்-இல் மாமியார் குடுத்த வைர நகை போட்டு கொண்டு ஜொலித்தாள் .

யாரும் எதுவும் சொல்வதற்கு முன்னாடியே யது, மது அருகில் சென்று அவள் கையை பிடித்து கார்-கு அழைத்து சென்றான் , அதை பார்த்த உடனே அவர்களை பெற்றவர்களுக்கு மனது நிறைந்து விட்டது. இனி எல்லாம் யது பார்த்து கொள்வான் என்று தோன்றியது.

reception-கு வந்த எல்லாருமே அவர்கள் ஜோடி பொருத்தத்தை பாராட்டி தான் சொன்னார்கள் , இதிலும் ஒரு சிலர் நீங்க ரொம்ப லக்கி அதனால் தான் அந்த கீதா போய் விட்டாள் , அவள் போனதால் தான் இந்த தேவதை பெண் உங்களுக்கு கிடைத்திருக்கிறாள் என்று கூறவும் , யதுவின் சிரிப்பு ஒரு நிமிடம் கூட வாடவில்லை .

அவன் காலேஜ் நண்பர்கள் தான் கலாய்த்து எடுத்து விட்டார்கள் ,எங்களுக்கு அன்னைக்கே தெரியும் டா , ஆனால் நீ தான் அது இது என்று சொல்லி ஏமாற்றிவிட்டாய் என்று ஓட்டி கொண்டு இருந்தார்கள் , அவனுக்கே இந்த கல்யாணம் இவ்வளவு சந்தோசத்தை கொடுத்திருக்கிறது என்பது ஆச்சர்யம் தான் .

இதையெல்லாம் பார்த்த அர்ஜுன் தான் சொன்னான் , மச்சா really happy for you da , அந்த கீதாவை நீ கல்யாணம் செய்வதை நிறுத்தவும் முடியாமல் , உன்னிடம் எதுவும் சொல்லவும் முடியாமல் இருந்தேன் , ஆனால் இப்பொது மனது த்ரிப்தியாக உள்ளது , ரொம்ப நல்ல பொண்ணு டா மது , நல்லா வெச்சு பார்த்துக்கோ இல்லைனா இந்த அண்ணண் இருக்கிறான் அவளுக்கு மறந்துறாதே என்று நண்பனையே மிரட்டினான் .

ஐயோ பாச மலரை பார்த்து பயந்துட்டேன் என்று யதுவும் அதை இலகுவாக எடுத்து கொண்டான் , அவனுக்கு தான் தெரியுமே அர்ஜுனை பற்றி , நீ கவலையே படாத மச்சான் அவள் எப்போதும் சந்தோசமாக இருப்பாள் அதுக்கு நான் guarantee என்று வாக்கு குடுத்தான் .

reception முடிந்து வந்து , மதுவை குளிக்க சொல்லி மிதமான அலங்காரம் செய்து யது ரூமிற்கு அனுப்பினார்கள் .மதுவிற்கு தான் அவள் ஹார்ட் துடிப்பது அவளுக்கே கேட்டது அந்த அளவுக்கு nervous ஆக இருந்தாள் .
 
Top