Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mana (na) m Purinthom - 11

Advertisement

mibrulz

Active member
Member
அத்தியாயம் 11
அங்கு நிகிலிற்கும் யாமினிக்கும் மத்தியில் புரிதல் ஏற்பட்டது என்றால் இங்கு நகுல் நித்யாவை வறுத்தெடுத்து கொண்டிருந்தான்.
"உன் கிட்ட யாரு யாமினியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னா? நான் தான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல.. அப்புறம் ஏன்டீ அவள அங்க கூட்டிட்டு வந்தே?"
"இத பாரு நகுல். ஒரே கேள்வியை மாத்தி மாத்தி கேட்டாலும் என் பதில் ஒன்னு தான். ஐ ட்ரைட் மை பெஸ்ட். அவள் கேட்க்கவே இல்லை. டாட்ஸ் வை ஐ ப்ரோட் ஹெர் தேர். அன்ட் வை ஆர் யூ ஓவர் ரியாக்டிங்க்?"
" யாரு நான் ஓவர் ரியாக்ட் பண்றேனா? தொலச்சிடுவேன். அறிவே இல்லையாடி உங்களுக்கு? அங்க அந்த பி.பி. பார்த்த விதமே சரியில்ல. எனக்கு வந்த கோபத்திற்கு அந்த ஆள அங்கேயே அடிச்சிருப்பேன். கோப படாம கொஞ்ச சொல்றியா?"
"அதுக்கு தானே வெயிட்டிங்க்.." என்று நித்யா முனுமுனுத்துக்கொண்டாள்.
அவள் முனுமுனுத்தது இவனுக்கு தெளிவாக கேட்டது. அவன் கண்களும் உதடும் விஷமத்தை தத்தெடுத்தது. அவள் எதிர்பாராத நேரத்தில் அவளின் இடையை பற்றி தன் பக்கத்தில் இழுத்தான். அவள் தடுமாறி அவன் மேல் சாய அவன் அவளை இன்னும் அழுத்தமாக பற்றினான்.
"இப்படி கொஞ்சினா போதுமா..?" கரகரத்த குரலில் நகுல் நித்யாவிடம் கேட்டான். பேசி கொண்டிருந்தாலும் அவன் கை அத்துமீற ஆரம்பித்தது. அது நித்யாவை இன்னும் சிவக்க வைக்க அவளை காதலோடு பார்த்திருந்தான் நகுல்.
"உனக்கு.... எ...ன்னை..." நித்யாவால் முடிக்க முடியவில்லை. ஏனெனில் அவளுக்கு நடக்கிறது அத்தனையும் உண்மையா என்ற அச்சம்.
"இப்ப இல்ல.. நான் உன்னை கோலேஜ்ல பார்த்து பழகினதிலிரிந்தே என்க்கு உன்னை ரொம்ப பிடிக்கும் நித்தூ.." என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
அது பல்வேறு உணர்வுகளை இருவருக்குள்ளும் கிளப்பியிருக்க..அதை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்தனர் இருவரும். அவர்களின் அதரங்கள் உரச கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டது.

இங்கு நிகில் யாமினியிடம்,
"இவர்கள் டீ தான் பண்ண போனாங்களா இல்ல தேயிலை பறிக்க டார்ஜிலிங் போனாங்களா..? நான் போய் பார்த்திட்டு வரேன்." என்று சொல்லி எழுந்த அவனை விட மனமில்லாமல் அவன் கரத்தை பற்றினாள் யாமினி.
"ஏய்.. என்னாச்சு..? " அவள் பக்கம் அமர்ந்து கொண்டு அவளை தோளோடு அணைத்து கொண்டான்.
"போகாதே நிகில்.. எனக்கு உன் கிட்ட பேசனும்.."
"சொல்லு யாமி.."
" உனக்கு என்னை எப்போதிலிருந்து பிடிக்கும்..?"
" சரியாக சொல்லனும்னா இன்னியோட அஞ்சு வருஷமாச்சு.. நம்ம ஃபர்ஸ்ட் மீட்டிங்க்.
அண்ஃபொர்கெட்டபில். நீ நடந்து என் பக்கம் வந்தது.. என் மீது இங்க் போட்டது.. உன்னுடைய இந்த லிப்ஸ்க்கு கீழ இருக்கற இந்த மோல் என்னை அப்படியே உன் மேல பித்தாக வச்சிது.. "

இவர்கள் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் இவர்களை ஸீனியர்ஸ் ராக் பண்ணும் போது தான் இவர்கள் முதல் தடவை சந்தித்தனர்.

"அப்ப என் கிட்ட ஏன் சொல்லல நீ?" என்று அவள் கேட்டதற்கு
" அம்மிணி தான சொன்னீங்க நட்புக்கு நடுவில காதல் கீதல் எல்லாம் வேணாம்னு.. உன்ன தொந்தரவு பண்ண கூடாதுனு நினச்சேன்.."
" இப்ப எப்படி...இப்படி..?"என்று அவள் இழுக்க
"நீ அந்த தீரஜ் விஷயத்தில ரொம்ப இன்வோல்வ்ட் ஆனது எனக்கு ஏத்துக்க முடியல.. அப்போ வந்த கோபம்.. பின்ன உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுனு நல்லா புரிஞ்சிது.. அந்த புரிதல் தான் என்னை அப்படி பண்ண வச்சிது.."
யாமினி அவன் மார்பில் சாய்ந்து கொண்டே அவனை அண்ணாந்து பார்த்தாள். இவனும் அவளை பார்க்க.. தங்கள் அதரங்களால் ஒரு காதல் காவியமே தீட்டினார்கள்.

இங்கு நான்கு இதயங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து கொண்டது.

மிக சிரமப்பட்டு நகுலும் நித்யாவும் தங்களை கட்டுப்படுத்தி கொண்டு விலகினர்.

"டீ போடுவோமா..இல்ல... " குறும்பு தோய்ந்த தொனியில் கேட்டான் நகுல்.
"ம்..." தொண்டைக்குள் இரங்கிய குரலில் பதிலளித்தாள் நித்யா.
"நித்தூ.. இனிமேல் உனக்கு மேக்கப்ப்க்கு பணம் செலவாகாது.." நகுல் சொல்ல அது புரியாமல் அவனை பார்த்தாள்.
"அதான் நான் இருக்கேனே.. உன் லிப்ஸுக்கு கலர் கொடுக்க அன்ட் என்ன பார்த்தாலே உன் கன்னம் தானாவே ப்ளஷ் ஆகுது.. ஐ ஆம் லவிங்க் இட்.." சொல்லி கொண்டே டீ போட்டு முடித்தான்.
அவர்கள் டீ எடுத்து கொண்டு வரும் சத்தத்தை கேட்டு நிகிலும் யாமினியும் தன்னை சுதாரித்துக் கொண்டனர்.
"டீ ரெடி.. " நித்யா மேஜையின் மேல் டீ கோப்பைகளை வைத்தாள்.
"பகோடாஸ் ஆர் ரெடி டூ.." கூவிக் கொண்டே வந்தான் நகுல்.
"நான் நினச்சேன் நீங்க தேயிலை பறிக்க டார்ஜிலிங் போயிருந்தீங்கனு..." நிகில் அவங்களை பார்த்து கிண்டலடித்தான்.
"ஹேய்.. நீ யாமிய திட்டுவதை எங்களால பார்க்க முடியாது.. அதனால தான் நீ திட்டி முடிச்ச பிறகே வரலாமுனு நாங்க நினச்சோம்."

"நான் உன்னை படுத்தினேனா யாமி..? " குறும்பு தோய்ந்த குரலில் கேட்டான் நிகில்.
யாமினியின் கன்னம் வெட்கத்தில் சிவந்தது.
நகுல் நினைத்தான் யாமினிக்கு கோபம் வருகிறது என்று. அவன் அவளை சமாளிக்கும் வகையில் நிகிலை அதட்டினான்.

"டேய்.. அவள படுத்தாதேடா.."
"நான் எங்கடா அவள படுத்தினேன்.. சரி அது இருக்கட்டும்.. வை டிட் யூ பீபிள் டேக் ஸோ லோங்க்?"
நித்யாவிற்கு பதட்டம் ஏற்பட்டது. இவன் என்ன சொல்ல போறானோ என்று. நகுலுக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்கள் நால்வரும் ஒருவரிடமிருந்து ஒன்றும் மறைக்க மாட்டார்கள். ஆனால் இந்த உணர்வு அவர்களுக்கு புதிது. அது எப்படி சொல்ல வேண்டும் என்று புரிபடவில்லை. இவர்கள் இதை பற்றி யோசிக்கையில், நகுலுக்கு ஒரு கோல் வந்தது.

"ஹலோ.. நகுல் ஹிர்.."
என்ன பேசினார்களோ அவன் முகம் கோபத்தை உட்கொண்டது.
எல்லோரும் அவனையே பார்க்க அவன் தன் கைமுஷ்டியை பக்கத்தில இருந்த மேஜையில் அடிக்க போக நித்யா வந்து அவன் கையை பிடித்து கொண்டாள்.
அவன் அவள் கையை உதறி விட்டு அந்த அறையில் இருந்து வெளியே போனான்.
 
Top