அன்பு வாசக தோழமைகளே!!
கதைக்கு நீங்கள் கொடுத்து வரும் கருத்துக்களை படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். மிக்க நன்றி நன்றி!! கதையை தொடர்ந்து படித்து உங்கள் விருப்பங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். தனி தனியே பதில் அளிக்க முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் பொன்னனான நேரத்தை எனக்காக செலவிட்ட அத்துனை நல் இதயங்களுக்கும் நன்றி.
இதோ அடுத்த அத்தியாயம்..
அவன் பின்னாலேயே சுமித்ராவும் வந்தார்.
"கோவிந்தா!! அவா அவா பிரச்சினையை அவாளே தான் பேசித் தீர்த்துக்கணும்! இனிமே மீரா கூட கொஞ்சம் பொறுமையா பேசு! நாளைக்கே மீரா சமர்த்தோட ஆம்படையாளானா ஒருத்தருக்கொருத்தர் எந்த முகத்தை வச்சிண்டு பார்த்துப்பேள்? வார்த்தைகளை நிதானமா பார்த்து உபயோகிக்க பாரு!!” என்ற சுமித்ரா கோவிந்தின் பதிலை எதிர்பார்க்காமல் அடுத்த வேலையைப் பார்க்க சென்றார்.
அவர் சென்றதுமே கோவிந்த், 'மீராவைப் பற்றி அம்மாவிடம் சொல்லுவோமா! என்று முதலில் யோசித்தான். பின் வேண்டாம் என்றும் முடிவு செய்தான்.
அவனால் நிறைய நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க முடியாது. வரும் வார இறுதியில் கண்டிப்பாக கிளம்பியாகவேண்டிய சூழ்நிலை..
அதற்குள் சமீராவிடம் பேசி தீர்க்கவேண்டிய விஷயங்கள் அவனுக்கு அதிகமிருந்தன. அதற்கெல்லாம் மீரா வாயை திறக்க வேண்டும்.
சமர்த்திடம் தான் சொல்லும் அவசியம் இருக்காது என்று புரிந்துக்கொண்டான். ஆனால் எப்படி இந்த விஷயத்தை குடும்பத்தினர் ஏற்பர் என்று குழம்பினான்.
சமீராவையோ அல்லது சமர்த்துடன் சேர்ந்த சமீராவையோ குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கத்தான் படுவர் என்று யூகித்தான் கோவிந்த்.
சமர்த் இல்லாத குடும்பத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சமீராவின் வலியையும் புரிந்துக்கொண்டதால், அவளையும் இழக்க மனம் வரவில்லை.
சமீராவின் நிலையை நன்கு அறிந்திருந்தாலும் குடும்பத்தினர் எங்கனம் புரிந்து ஏற்றுக்கொள்வர்? என்ற கேள்வியே திரும்ப திரும்ப அவனுக்குள் எழுந்தது.
அதற்குமேல் அவனுக்கு யோசிக்க தெரியவில்லை என்பதைவிட யோசிக்கமுடியவில்லை என்று சொல்லுவதே நியாயம்.
அவன் காதலுக்கு எதிரி அல்ல ஆனால் குடும்பத்தின் விருப்பம் முக்கியம் என்று நினைப்பவன்.
சமர்த், சமீரா மீதான மயக்கத்தை அவனிடம்(கோவிந்திடம்) கூறும்போது, எதையுமே யோசிக்காமல் சமர்த்தின் காதலுக்கு தூபம் ஏற்றிவிட்டு, இப்பொழுது 'அவள் நம் குடும்பத்திற்கு ஏற்றவள் இல்லை அதனால் அவளை மறந்துவிடு!' என்று சொன்னால் எப்படி சரியாகும்.?
என்ன செய்வது புரியவில்லை!! எப்படி செய்வது தெரியவில்லை!! அதை கண்டறியும் காலமோ, நேரமோ அவனுக்கு இல்லவே இல்லை!! அலுவல் வேலைக்கு சென்றாகவேண்டிய கட்டாயம்!!
"ஐயோ பெருமாளே!!" என்று தலையை பிய்த்துக்கொண்டான் கோவிந்த்.
சமீராவைப் பற்றி குடும்பத்தினரிடம் சொல்லாமல் தள்ளிப்போடலாம் என்று நினைக்கவும் முடியவில்லை. அதற்கு முழு காரணமும் சமீராவே!!
'இன்று கிளம்பிவிடுவேன். நான் இருந்தால் தானே, என்னை நானே அழிச்சுக்குவேன்' என்ற சமீராவின் வார்த்தைகள் அவனை கட்டிப் போட்டிருந்தாலும் அந்த சகாயத்தால் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற பயமே அவனுக்கு மேலோங்கியிருந்தது.
அவள் தன் குடும்பத்துடன் இணைந்தால் மட்டுமே அவளுக்கு பாதுகாப்பு, அதற்காகவாவது கண்டிப்பாக குடும்பத்தில் எல்லோரிடமும் சீக்கிரம் சொல்லவிட வேண்டும் என்ற முடிவெடுத்த கோவிந்த், திரும்பவும் எப்படி சொல்வது என்ற சிந்தனைக்கே சென்றான்.
அந்த கேள்வி மனதில் எழுந்ததுமே மீண்டும் கைகளை தலையில் வைப்பதற்கு கொண்டு சென்றான்.
அப்பொழுது அவனின் இடது கையில் இருந்த அந்த சிறிய பார்சல் கண்ணில் பட்டது. உடனேயே அது சமீராவினுடையது என்றும் நினைவிற்கு வந்தது.
'சமீராவோ மௌனத்தை மட்டுமே துணையாக கொண்டிருக்கிறாள், இதோ இந்த பார்சல் அவளின் மௌனத்தை கலைக்க உதவலாம்!' என்று மனதிற்குள் பேசிய கோவிந்த், அந்த பார்ஸலை திறந்துப் பார்க்க முடிவு செய்தான்.
முதலில் அதைப் பிரிக்க எண்ணியவன், பின் வேண்டாம் என்ற நினைத்து அதை அருகில் இருந்த ஒரு டேபிளின் மீது வைத்துவிட்டு திரும்பி அந்த அறையினுள்ளேயே நடந்தான்.
சிறிது நேரம் நடந்துக் கொடுத்தப் பின் அவனின் மனம், 'திறக்கவா, வேண்டாமா?' என்று ஊஞ்சலாடியதால் நடையை நிறுத்தி அந்த பார்சலையே சில நிமிடங்கள் பார்த்த்தான்.
ஏதோ முடிவு செய்தவனாக அந்த பார்ஸலை கையில் எடுத்துப் பிரித்தான்.
அதில் ஒரு சிறிய பேழையும் அதன் மேல் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பேழையின் தாழ் பூட்டப் பட்டிருந்தது. அதன் சாவி எங்கே என்று தேடினான் கோவிந்த்.
அதன் சாவி கிடைக்காததால் முதலில் கடிதத்தை படித்துப் பார்க்க தொடங்கினான்.
கதைக்கு நீங்கள் கொடுத்து வரும் கருத்துக்களை படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். மிக்க நன்றி நன்றி!! கதையை தொடர்ந்து படித்து உங்கள் விருப்பங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். தனி தனியே பதில் அளிக்க முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். உங்கள் பொன்னனான நேரத்தை எனக்காக செலவிட்ட அத்துனை நல் இதயங்களுக்கும் நன்றி.
இதோ அடுத்த அத்தியாயம்..
அத்தியாயம்: 23
கோவிந்த், தன் தாய் சுமித்ராவுடன் சமர்த்தின் அறையில் இருந்து வெளியேறியதும் அங்கே இருந்த மற்றொரு அறையினுள் நுழைந்தான்.
அவன் பின்னாலேயே சுமித்ராவும் வந்தார்.
"கோவிந்தா!! அவா அவா பிரச்சினையை அவாளே தான் பேசித் தீர்த்துக்கணும்! இனிமே மீரா கூட கொஞ்சம் பொறுமையா பேசு! நாளைக்கே மீரா சமர்த்தோட ஆம்படையாளானா ஒருத்தருக்கொருத்தர் எந்த முகத்தை வச்சிண்டு பார்த்துப்பேள்? வார்த்தைகளை நிதானமா பார்த்து உபயோகிக்க பாரு!!” என்ற சுமித்ரா கோவிந்தின் பதிலை எதிர்பார்க்காமல் அடுத்த வேலையைப் பார்க்க சென்றார்.
அவர் சென்றதுமே கோவிந்த், 'மீராவைப் பற்றி அம்மாவிடம் சொல்லுவோமா! என்று முதலில் யோசித்தான். பின் வேண்டாம் என்றும் முடிவு செய்தான்.
அவனால் நிறைய நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க முடியாது. வரும் வார இறுதியில் கண்டிப்பாக கிளம்பியாகவேண்டிய சூழ்நிலை..
அதற்குள் சமீராவிடம் பேசி தீர்க்கவேண்டிய விஷயங்கள் அவனுக்கு அதிகமிருந்தன. அதற்கெல்லாம் மீரா வாயை திறக்க வேண்டும்.
சமர்த்திடம் தான் சொல்லும் அவசியம் இருக்காது என்று புரிந்துக்கொண்டான். ஆனால் எப்படி இந்த விஷயத்தை குடும்பத்தினர் ஏற்பர் என்று குழம்பினான்.
சமீராவையோ அல்லது சமர்த்துடன் சேர்ந்த சமீராவையோ குடும்பத்தாரால் ஒதுக்கி வைக்கத்தான் படுவர் என்று யூகித்தான் கோவிந்த்.
சமர்த் இல்லாத குடும்பத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. சமீராவின் வலியையும் புரிந்துக்கொண்டதால், அவளையும் இழக்க மனம் வரவில்லை.
சமீராவின் நிலையை நன்கு அறிந்திருந்தாலும் குடும்பத்தினர் எங்கனம் புரிந்து ஏற்றுக்கொள்வர்? என்ற கேள்வியே திரும்ப திரும்ப அவனுக்குள் எழுந்தது.
அதற்குமேல் அவனுக்கு யோசிக்க தெரியவில்லை என்பதைவிட யோசிக்கமுடியவில்லை என்று சொல்லுவதே நியாயம்.
அவன் காதலுக்கு எதிரி அல்ல ஆனால் குடும்பத்தின் விருப்பம் முக்கியம் என்று நினைப்பவன்.
சமர்த், சமீரா மீதான மயக்கத்தை அவனிடம்(கோவிந்திடம்) கூறும்போது, எதையுமே யோசிக்காமல் சமர்த்தின் காதலுக்கு தூபம் ஏற்றிவிட்டு, இப்பொழுது 'அவள் நம் குடும்பத்திற்கு ஏற்றவள் இல்லை அதனால் அவளை மறந்துவிடு!' என்று சொன்னால் எப்படி சரியாகும்.?
என்ன செய்வது புரியவில்லை!! எப்படி செய்வது தெரியவில்லை!! அதை கண்டறியும் காலமோ, நேரமோ அவனுக்கு இல்லவே இல்லை!! அலுவல் வேலைக்கு சென்றாகவேண்டிய கட்டாயம்!!
"ஐயோ பெருமாளே!!" என்று தலையை பிய்த்துக்கொண்டான் கோவிந்த்.
சமீராவைப் பற்றி குடும்பத்தினரிடம் சொல்லாமல் தள்ளிப்போடலாம் என்று நினைக்கவும் முடியவில்லை. அதற்கு முழு காரணமும் சமீராவே!!
'இன்று கிளம்பிவிடுவேன். நான் இருந்தால் தானே, என்னை நானே அழிச்சுக்குவேன்' என்ற சமீராவின் வார்த்தைகள் அவனை கட்டிப் போட்டிருந்தாலும் அந்த சகாயத்தால் ஏதேனும் ஆபத்து நிகழ்ந்து விடுமோ என்ற பயமே அவனுக்கு மேலோங்கியிருந்தது.
அவள் தன் குடும்பத்துடன் இணைந்தால் மட்டுமே அவளுக்கு பாதுகாப்பு, அதற்காகவாவது கண்டிப்பாக குடும்பத்தில் எல்லோரிடமும் சீக்கிரம் சொல்லவிட வேண்டும் என்ற முடிவெடுத்த கோவிந்த், திரும்பவும் எப்படி சொல்வது என்ற சிந்தனைக்கே சென்றான்.
அந்த கேள்வி மனதில் எழுந்ததுமே மீண்டும் கைகளை தலையில் வைப்பதற்கு கொண்டு சென்றான்.
அப்பொழுது அவனின் இடது கையில் இருந்த அந்த சிறிய பார்சல் கண்ணில் பட்டது. உடனேயே அது சமீராவினுடையது என்றும் நினைவிற்கு வந்தது.
'சமீராவோ மௌனத்தை மட்டுமே துணையாக கொண்டிருக்கிறாள், இதோ இந்த பார்சல் அவளின் மௌனத்தை கலைக்க உதவலாம்!' என்று மனதிற்குள் பேசிய கோவிந்த், அந்த பார்ஸலை திறந்துப் பார்க்க முடிவு செய்தான்.
முதலில் அதைப் பிரிக்க எண்ணியவன், பின் வேண்டாம் என்ற நினைத்து அதை அருகில் இருந்த ஒரு டேபிளின் மீது வைத்துவிட்டு திரும்பி அந்த அறையினுள்ளேயே நடந்தான்.
சிறிது நேரம் நடந்துக் கொடுத்தப் பின் அவனின் மனம், 'திறக்கவா, வேண்டாமா?' என்று ஊஞ்சலாடியதால் நடையை நிறுத்தி அந்த பார்சலையே சில நிமிடங்கள் பார்த்த்தான்.
ஏதோ முடிவு செய்தவனாக அந்த பார்ஸலை கையில் எடுத்துப் பிரித்தான்.
அதில் ஒரு சிறிய பேழையும் அதன் மேல் ஒரு கடிதமும் இருந்தது. அந்த பேழையின் தாழ் பூட்டப் பட்டிருந்தது. அதன் சாவி எங்கே என்று தேடினான் கோவிந்த்.
அதன் சாவி கிடைக்காததால் முதலில் கடிதத்தை படித்துப் பார்க்க தொடங்கினான்.