Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

KUK 25- FINAL

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 25

சென்னை மாநகரின் பரபரப்பான காலை நேரத்தில், அந்த ஒரு வீட்டில் மட்டும் நூலகத்தினை காட்டிலும் அமைதி நிரம்பி வழிந்தது.



அந்த வீட்டின் மாடிப்படிகளில் கவனமாய் கால் பதித்தபடி, தன் கையிலிருந்த காபி ட்ரேவை தூக்கிக்கொண்டு சென்றார் ரமாபாட்டி.



அங்கே ஒற்றை நாற்காலியில், கம்பீரமாய், அவள் கட்டியிருந்த காட்டன் புடவையின் மடிப்புகள் மயில் தோகைகளாய் அமைய, அமைதியான முகத்துடனும், அதற்க்கு எதிர்மறையாய் சுட்டெரிக்கும் கூர்விழிகளுடன் அசையாமல் எதிரில் இருப்பவர்களை பார்வையால் துளைத்துக்கொண்டிருந்தாள் மைதிலி.



அவள் முன் இருகைகளையும் கட்டிக்கொண்டு கருவிழி தரைப்பார்க்க, முறையே இடமிருந்து வலமாய் ரிஷி, ராம், கெளதம், சந்தோஷ் என அரைவட்ட வடிவில் குனிந்த தலை நிமிராமல் இணைபிரியா உதடுகளுடன் நின்றிருந்தனர்.



விஸ்வநாதன் மற்றும் குழுவை போலீஸ்லில் ஒப்படைத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. அந்த சம்பவம் நடந்த மறுநாளே ஒரு முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதாக கேசவன் கால் செய்ய, வேறு வழியின்றி தனியே மும்பை கிளம்பினாள் மைதிலி.



மீட்டிங் முடிந்ததும் மூன்று மாதங்களாய் இவள் செய்யாமல் விட்ட வேலைகள் அவள் கண்ணில் பட, கேசவன் முடித்தது போக, மீதி இருந்த வேலைகளை கவனிக்கலானாள்.



“என்னம்மா நடந்துச்சு...?”

வந்ததிலிருந்து அவளே சொல்லுவாள் என எண்ணி கேசவன் பொறுத்திருக்க, இதற்கு மேல் சொல்ல போவது இல்லை என அறிந்ததும் அவரே கேட்டுவிட்டார்.



“சந்தோஷ் எல்லாம் சொல்லிட்டான் தானே அங்கிள்?” என சிரித்துக்கொண்டு அசால்ட்டாய் கேட்டாள் மைதிலி.



“சொல்லிட்டான் தான். இருந்தாலும் நீ ஒண்ணுமே சொல்லலையேன்னு தான்! சரி மாப்புள எப்படி இருக்காரு? தனியா விட்டுட்டு வந்துருக்க?” என அவர் கேட்க, சிரித்த அவள் முகம் மெல்ல சுருங்கியது.



“அவர் என்ன குழந்தையா? கூடவே கூட்டிட்டு சுத்துறதுக்கு?” அவள் குரலில் எரிச்சல் அப்பட்டமாய் தெரிய உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார் கேசவன்.



“நீதானேம்மா சொல்லுவ? அவர் குழந்தை மாதுரின்னு...” என சிரிப்பை அடக்கி அவர் கேட்க, கோப்புகளில் இருந்து முகத்தை விலக்கி, “சரியான பிராடு அங்கிள் அவன்... நம்மளைகூட ஏமாத்திட்டான்... இதுக்கு சந்தோஷ் சப்போர்ட் தெரியுமா?” என ஆதங்கமாய் சொன்னாள் மைதிலி.



“அச்சச்சோ!!! இப்படி ஏமாத்திட்டான் பாரேன்! ஒரு போர்ஜெரி கேஸ் போற்றுலாமா அவன்மேல?” என கேசவன் கேட்க, திடுக்கிட்டு அவர் முகம் பார்த்தவள், அவர் கண்கள் சிரிப்பதை கண்டு துணுக்குற்றாள். எதுவோ புரிவதை போல தோன்ற, “அங்கிள்??? உங்களுக்கும் முன்னாடியே தெரியுமா??” என்றாள் சந்தேகமாய்.



“ஹஹஹஹா.... ராம் குணமான அடுத்த நாளே எனக்கு போன் செஞ்சு பேசிட்டான். இனிமே மைதிலி என் பொறுப்பு. நீங்க நிம்மதியா இருங்கன்னு ராம் சொன்னதும் தான் எனக்கு மனசு அமைதியாச்சு. உன்கிட்ட இது எதுவும் சொல்ல வேணாம்ன்னு சொல்லிட்டான். அதான் எல்லார் மாறியும் நானும் உன்கிட்ட எதையும் சொல்லல.... ஹி இஸ் அ வெரி குட் சோல்... ரொம்ப நல்லவன் மைதிலி... அவனை மன்னிச்சுடு...” என்றார் கேசவன் நிறைவான புன்னகையுடன்.



அவர் சொன்னதைஎல்லாம் கேட்டவளுக்கு ராம் மீது ஆத்திரம் அதிகமானது.. ‘கடைசில நான் மட்டும் தான் முட்டாளா இருந்துருக்கேன்.. எல்லாருக்குமே உண்மை தெரிஞ்சுருக்கு’ என மனம் சொல்ல, சென்னை திரும்பாமல் இருந்த வேலைகள் அனைத்தையும் முடிக்க தொடங்கினாள்.



இடையிடையே ராம் தொலைபேசியில் அழைக்க, அவள் பிடிவாதமாய் அவனிடம் பேசாது இருந்ததில் ராமிற்கே பயம் கிளம்பியது. நேரில் வருவதாக அவன் கேசவனிடம் சொல்ல, ‘வரும் மாதம் முடிவு செய்யப்பட்ட திருமண வரவேற்ப்பு முடியும்வரை மும்பை வர வேண்டாம். அது முறையாய் இருக்காது. பலர் கண்ணும் பலதாய் பேசும்...’ என சொல்லி அவர் மறுத்துவிட தன்னையே நொந்துக்கொண்டான் ராம்.



அங்கு சென்னையிலோ ராம் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பணத்திற்காக தங்களை கடத்தி சித்தரவதை செய்ததாகவும், அங்கிருந்து தப்பித்து சென்று போலிசின் உதவியை தாங்கள் நாடியதாகவும் ராம் சொல்லியிருக்க, ‘நாங்கள் சென்று பார்த்தபோது ஒருவரையொருவர் வினோதமான முறையில் தாக்கிவிட்டு, மயக்கமுற்று கிடந்தனர். சொத்தை பங்கு பிரிப்பதில் நடந்த வாக்குவாதத்தின் காரணமாய் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது..’ என போலீஸ் தரப்பு சொல்லிவிட்டது.



மைதிலி செயின் டாலர்லில் இருந்த ஸ்பை கேமராவில் பதிவாகிருந்த காணொளியை முக்கிய ஆதாரமாய் எடுத்துக்கொண்டும், இதுவரை அவர்கள் செய்த பண மோசடி, பொய்யான பத்திர தயாரிப்பு, மற்றும் ராமிருக்கு கொடுக்கப்பட்ட தவறான மருந்துக்கான ரசீது என அனைத்தையும் கோர்டில் சமர்பிக்க, இரண்டே நாட்களில் வழக்கு முடிவுக்கு வந்தது.



மறுபரிசீலனைக்கு வழியின்றி அந்த கானொளியில் விஸ்வநாதனும் லக்ஷ்மியும் தங்கள் வாய்மொழி வாக்குமூலம் கொடுத்திருக்க, போலீஸ்சிடம் அதை கொடுக்கும் முன்னே, விஸ்வநாதன் ராம் கழுத்தை நெரிக்கும் ஸீனிற்கு பிறகு நடந்தது ஏதும் இல்லாதபடி எச்சரிக்கையாய் கட் செய்துவிட்டே அதை கொடுத்திருந்தான் சந்தோஷ்.



அதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஸ்வநாதன் மற்றும் லக்ஷ்மிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், வரதனுக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மூர்த்திக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையோடு அவரது மருத்துவ உரிமமும் ரத்து செய்யப்பட்டது.



கோர்ட், கேஸ் என எல்லாம் முடிந்து வாழ்கை, இயல்பு நிலைக்கு திரும்பிருக்க, மும்பை சென்ற மைதிலி மட்டும் சென்னை திரும்பியபாடில்லை.



மைதிலி இல்லாத ஒரு வாரத்தில் மிகவும் சோர்ந்து காணப்பட்டான் ராம். உடல் அலைச்சலாலும், மனம் காதலாலும் துடண்டு கிடக்க, அவனை மிகவும் சோதிக்காமல் அன்று காலை புயல் வீட்டு வாசலில் இறங்கியது.



வந்து ஒரு மணி நேரம் ஆகியும் ஒன்றும் பேசாமல் அவர்களை முறைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் மைதிலி. எப்போது வருவாள் என காத்திருந்த ராமிருக்கு, வந்தவுடன் விசாரணை நடத்த தயாராய் அவள் இருப்பதை கண்டு மிகமெலிதாய் நடுங்கியது.



‘சொல்றதை எல்லாம் அவள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே!!’ என நினைத்துக்கொண்டான்.



நின்று நின்று கால் கடுக்க, “டேய்... இருந்தாலும் தங்கச்சி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா...! ஒரு மணி நேரமா நிக்குறோம்... இரக்கமே காட்டலடா...” என கெளதம் ராம் காதில் கிசுகிசுக்க, “அவளே வெறுத்து போயி போய் தொலைங்கன்னு சொல்றவரைக்கும் யாரும் நிமிர்ந்து அவளை பார்த்து தொலைக்காதீங்க.... அதே போஸ்ல நில்லுங்க...” என வார்த்தைகளை கடித்து துப்பியபடி சந்தோஷ் சொல்ல, ராம் எதுவும் பேசாமல் நின்றான்.



பொருத்தது போதும் என எண்ணினாளோ?!

“ரிஷி?” என அவள் உரக்க அழைக்க, தூக்கத்தில் இருந்து எழுபவனை போல திடுக்கிட்டு நிமிர்ந்தான் ரிஷிகேஷ்.



“க்கா??”



“உனக்கு எப்போ தெரியும்?” என அவள் நேரிடையாய் கேட்க, “எ..ன்ன...?” என கேட்க தொடங்கியவன், மைதிலியின் தீப்பார்வையில், “அன்னைக்கே தெரியும் அக்கா!” என்றான் மொட்டையாய்.



“ம்ம்ம்?” என அவள் புரியாமல் புருவம் சுருக்க,



“அதான் அக்கா.... இந்த ஆளு மேல பூந்தொட்டி விழுந்துச்சுள்ள? அதுக்கு அடுத்த நாளு காலைல தான்...” என விளக்கிய ரிஷியை வெறிக்கொண்டு முறைத்தான் கெளதம். ‘அடப்பாவி!!! ஷாப்பிங் மால்ல வரதன்ன பார்க்க போன அன்னைக்குன்னு சொன்னா ஆகாதாடா?’ என மனதுள் ரிஷியை வறுத்தான்.



“எப்படி தெரியும்?” என அவள் கேட்டதும், “காலைல உங்களை பார்க்க வீட்டுக்கு வந்தேன்ல? அப்போதான் ராம் என்னை கூப்பிட்டு பேசுனான் அக்கா... ப்ரோக்கு சரியாச்சுன்னு தெரிஞ்சதுமே ரொம்ப சந்தோசம் எனக்கு. ஆனா அவன் என்கிட்டே சத்தியம் வாங்கிட்டான் இதை யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு!!! அவன் ஒன்னு சொல்லி நான் இதுவரை கேக்காம இருந்ததே இல்லை. அதான் யார்கிட்டயும் நான் தெரிஞ்சமாறி காட்டிகல...” என தன்னிலை விளக்கம் கொடுத்தான் ரிஷி.



ரிஷி பேச பேச குனிந்த தலையை நிமிர்த்தாமல் கண்ணை மட்டும் மைதிலி மீது வைத்தபடி நின்றிருந்த ராம், ரிஷி பேசிமுடித்ததும் அவள் திரும்பி தன்னை முறைப்பதை கண்டு சட்டென குனிந்துகொண்டான்.



“நீ வந்து உட்காரு..” என ரிஷியை சொல்லிவிட்டு, “மிஸ்டர் கெளதம்?” என்றாள்.



கெளதம் அசையாது நிற்பதை கண்டு “மிஸ்டர் கௌதம்ம்ம்?” என இம்முறை அவள் அழுத்தி அழைக்க, “டேய் உன்னதாண்டா...” என வேகமாய் கௌதமின் பின்னந்தலையில் தட்டிவிட்டு மீண்டும் கைகட்டிகொண்டு நின்றுக்கொண்டான் சந்தோஷ்.



“தங்கச்சி? மீ? யூ காலிங் மீ மிஸ்டர் கெளதம்? இந்த அண்ணன்ன போயி சட்டுன்னு யாரோ மாறி பேசிட்டியே?” என தன் வாய் மேல கை வைத்து வருத்தப்பட, “ம்ப்ச்!! ஐ டோன்ட் வான்ட் டு ஹியர் யுவர் ஸ்டுபிட் திங்க்ஸ் எனிமோர். கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க... வென் அண்ட் ஹொவ் டிட் யூ நோ?” என கௌதமின் ஆக்டிங்க்கு புல் ஸ்டாப் வைத்தாள் மைதிலி.



“அது..... நம்ம சென்னை வந்த அடுத்தநாள், நைட் தூக்கம் வராம ரூம் விட்டு வெளியில வந்தேன். அப்போ ராம் ஒரு மூலைல காலை சுருட்டிகிட்டு படுத்துருந்ததை பார்த்து பயந்துபோயி அவன்கிட்ட போனேன். பாதி மயங்கி கிடந்தான்... அவனுக்கு என்னாகிருக்கும்ன்னு எனக்கு கெஸ் பண்ண முடிஞ்சுது.

சித்ராகூட்ல இருந்து நம்ம கிளம்புறப்போ அந்த வைத்தியர் என்கிட்டே சொல்லிருந்தாரு. ராம்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்கு, இப்படியே தொடர்ந்தா இன்னும் கொஞ்சம் நாள்ல பரிபூரணமா குணமாகலாம். ஆனா இப்போ வேற விதமான வைத்தியமுறையை ஆரம்பிச்சா மீண்டும் அவன் பழைய நிலைக்கு போகவும் வாய்ப்பு இருக்குன்னு சொன்னாரு..” என அவன் சொல்ல,



“இதை ஏன் நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லல?” என இடைமறித்தாள் மைதிலி.



“இல்லை மைதிலி...நான் சொல்லிருக்கணும். என்னோட தப்புதான் அது..” என உண்மையாய் வருந்தியவன் பின் தொடர்ந்தான்.



“அவனை மயக்கத்துல இருந்து எழுப்பி, என்னனு கேட்டேன். ரொம்ப நடுங்கி போய் இருந்தான். அவனுக்கு ஒண்ணுமே புரியல.. அவன்கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லி ஓரளவுக்கு சரி பண்றதுக்குள்ள பொழுதே விடிஞ்சுருச்சு...” என்றான் கெளதம்.



“ஏன் என்கிட்டே சொல்லாம மறச்சீங்கன்னு கேட்டேன் ?” என மைதிலி அழுத்தமாய் கேட்கவும், “ராம் தான் சொல்ல கூடாதுன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டான்..” என ரிஷி சொன்னதையே தானும் சொன்னான் கெளதம்.



இம்முறை மீண்டும் அவள் ராமை முறைக்க, அதற்க்கும் எதுவும் சொல்லாமல் நின்றான் ராம்.



சந்தோஷிடம் திரும்பி, “உன்கிட்டயும் சத்தியம் வாங்கிட்டான். அதானே சொல்ல போற?” என மைதிலி கேட்கவும், “ஆமா மைதிலி... ஆனா யார்கிட்டையுமே சொல்லகூடாதுன்னு சொன்னான் ராம். கடைசில பார்த்தா உன்னைத்தவிர எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கு..” என குறைபட்டான் சந்தோஷ்.



“உனக்கு மட்டும் தான் தெரியும்.. உனக்கு மட்டும் தான் தெரியும்ன்னு சொல்லியே ஊரு முழுக்க சொல்லிருக்கான் தங்கச்சி... இவனை சும்மா விடாத...” என அவளை ஏத்திவிட்டான் கெளதம்.



“அவன் செஞ்சது தப்புன்னா, நீங்க எல்லாம் செஞ்சதும் தப்பு தான். தப்புக்கும் மேல நம்பிக்கை துரோகம்... எல்லாருமா சேர்ந்து தானே நடிச்சுருகீங்க? அவனை யாரும் குறை சொல்ல வேணாம்...” என கோவத்தில் கூட தன் ராமை விட்டுகொடுக்காமல் சொன்னாள் மைதிலி.



ராம் எழுந்த சிரிப்பை அடக்கியபடி நிற்க, அவனை கண்டுக்கொள்ளாது, “அந்த போலீஸ்ஸ எப்போ பார்த்து பேசுன நீ?” என சந்தோஷிடம் கேட்டாள் மைதிலி.



“நம்ம எல்லாரும் பீச்ல இருந்து கிளம்பி விஸ்வநாதனை பார்க்க ஹாஸ்பிட்டல் போனப்போ, வழில தான் ராம் அவரை பார்த்துருக்கான். நீங்க ஹாஸ்பிடல் உள்ள போனதும், எல்லாத்தையும் என்கிட்டே சொல்லி, உடனே அவனை பார்த்து நான் ஹெல்ப் கேட்டேன்னு சொல்லுனு சொன்னான். அதான் உங்கள வீட்ல விட்டுட்டு நான் ராம் சொன்னதை செய்ய போய்டேன்...” என சந்தோஷ் சொல்ல, “ஓ!! தலைவலிக்கு டேபிலேட் வாங்கபோனியே? அதுவா?” என்றாள் குற்றம் சாட்டும் பார்வையில்.



பின்பு எல்லோரையும் பார்த்து, “சோ கிட்டத்தட்ட ஒரு மாசமா எல்லாரும் என்னை ஏமாத்திட்டு இருந்துருக்கீங்க??ம்ம்ம் இவ்ளோதானா?? இல்லை இன்னும் ஏதாது நடந்துச்சா??” என்றாள் மைதிலி.



மூவரும் திரு திருவென முழிக்க, வாயை திறந்தான் ராம்.



“மையு.. எல்லாமே நான் சொல்லிதான் செஞ்சாங்க... ப்ளீஸ் அவங்களை மன்னிச்சுடு...” என்றான்.



“உன்னையே நான் மன்னிக்க தயாரா இல்லை. இதுல நீ சொல்லி நான் இவங்களை மன்னிக்கனுமா??” என முகத்திற்கு நேரே கோவமாய் கேட்டாள் மைதிலி.



“மையு.... கூல் பேபி.. உன்கிட்ட கொஞ்சநாள் விளையாடலாம்ன்னு தான் இப்படி பண்ணிட்டேன்... சாரி பேபி... என்ன பனிஷ்மென்ட் வேணாலும் கொடு. செய்யுறேன்...” என அவன் பெருந்தன்மையாய் சொல்ல, “கெட் லாஸ்ட்.. என் கண்ணு முன்னாடியே வராத... அதான் உன் பனிஷ்மென்ட்..” என சொல்லிவிட்டு அவள் எழுந்துக்கொண்டாள்.



“அப்போ பின்னாடியே வரவா?” என கேட்டபடி அவள் புடவையை பிடித்து இழுத்தான் ராம்.



“ம்ப்ச்... தள்ளி போ ராம்...” என அவள் விலக, அவளை விடாமல் துரத்தி சென்று இறுக்கி பிடித்துக்கொண்டான்.



“என்ன பண்ற நீ? தள்ளி போன்னு சொன்னா புரியாதா??” என அவள் கடுப்படிக்க, “ஓ! அப்படி சொன்னியா? என் காதுல தள்ளிட்டு போன்னு விழுந்துச்சு..” என சொல்லிவிட்டு அசட்டு சிரிப்பு சிரித்தான் ராம்.



அவனை வேகமாய் தள்ளிவிட்டு அவள் செல்ல, “ஏய்!!! செல்லகுட்டி... தங்கக்கட்டி, நில்லுடி....

ஓய்!!!! புருஷன் கூப்புடுறேன்ல்ல?? நில்லுடி என் காஷ்மீர் பச்சைமிளகாய்...!!!” வாய் ஓயாமல் பேசியபடி அவள் பின்னே ராம் செல்ல, ராமின் பின்னே மற்ற மூவரும் சென்றனர்.



“என் செல்லக்கிளி? இங்க பாருடி...!” மைதிலி கோவத்தில் வீட்டையே மூச்சிரைக்க சுற்றிவர, ராமும் சளைக்காமல் அவள் பின்னே சுற்றினான்.



“பட்டுக்குட்டி, வெல்லக்கட்டி, மாமா மேல கொஞ்சம் கருணை காட்டும்மா!!! ஹய்யோ இவ்ளோ வேகமா நடக்குறியேடீ பேபி... பரவல்ல.. பின்னாடி பார்த்தா கூட செம்மையா இருக்க!!!!” என விஷமமாய் சிரித்துக்கொண்டு அவன் சொல்ல, வேகமாய் நடந்துக்கொண்டு இருந்தவள், அவன் சொன்னதில் கடுப்பாகி கீழே இருந்த சின்ன பூந்தொட்டியை தூக்கி அவன் மீது வீசினாள்.



அவள் செய்யபோவது முன்பே விளங்க, லாவகமாய் விலகிக்கொண்டான் ராம். குறி தப்பிய அந்த பூந்தொட்டி ‘எதையும் தாங்கும் மனிதருள் மாணிக்கத்தின்’ மீது சரியாய் பட, அலறிக்கொண்டு அங்கேயே விழுந்தான் கெளதம்.



இதற்குமேல் அலைய முடியாது என முடிவு செய்த ராம், ஓடிசென்று அவள் எதிர்பார்காத நேரத்தில் தன் கைகளில் அள்ளிக்கொண்டான்.



“விடு டா... விடூஊஊ....” என அவள் திமிர திமிர அதை பொருட்படுத்தாமல் தூக்கிச்சென்று தங்கள் அறையின் பஞ்சு மெத்தையில் ‘பொத்’தென போட்டுவிட்டு அறைக்கதவை தாழிட்டான் ராம்.



கட்டிலில் விழுந்தவள் எழுந்துக்கொள்ளாது முகத்தை மெத்தையில் அழுத்தியபடி படுத்திருப்பதை கண்டு, அவளை நெருங்கி சென்று தோளில் கை வைத்தான் ராம். வெடுக்கென அவன் கையை தட்டிவிட்டாள் மைதிலி.



அவள் செய்கையில் சிரிப்பு வர, சத்தமாய் சிரித்துக்கொண்டு, அவள் மீதே விழுந்தான் ராம்.



“இப்போ எப்படி என்னைதான்டி போவான்னு நானும் பார்க்குறேன்...” என அழுத்தமாய் அவள்மீது அவன் படுத்துக்கொள்ள, அசைவின்றி இருந்தாள் மைதிலி.
 

சில நிமிடங்கள் அப்படியே கழிய, அவளிடம் இருந்து விசும்பல் ஒலி வர, “ஹே, மையு... பேபிமா... என்ன பாரு...” சொல்லிக்கொண்டு, வலுக்கட்டாயமாய் அவளை தன் பக்கம் திருப்பி முகம் பார்த்தான் ராம்.



அவள் அழுவது தெரிய, “டேய் கண்ணம்மா..!! என்னடா? நீ எவ்ளோ போல்ட்!! இப்படி சின்னபுள்ளையாட்டம் அழலாமா? அய்ய்ய்ய.... என் மையு அழுதா நல்லாவே இல்லையே!!!” என அவள் கண்களை துடைத்து விட்டான் ராம்.



இவ்வளவு நாள் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் பகிர்ந்துக்கொள்ள தோள் கிடைத்ததும், வெடித்து கிளம்பியது. எதற்காக அழுகிறோம்? என்றே தெரியாமல் ராம் மீதே சாய்ந்து முழு மூச்சாய் அழுது தீர்த்தாள் மைதிலி.



அவள் அழுகை பெரிதாகவும், ஒன்றும் சொல்லாமல் அவளை அணைத்தபடி ஆதரவாய் அவளுடன் படுத்திருந்தான் ராம்.



நேரம் செல்ல செல்ல, ஒருகட்டத்தில் அவள் அழுகை குறையவே, அவள் கன்னத்தை கைகளில் தாங்கியபடி, அவள் கண்களை பார்த்து, “என்னம்மா? எதுக்கு இத்தனை அழுகை? ரொம்ப கோவமா என்மேல?” என்றான் ராம்.



“செத்துகிட்டு இருந்தேன் ராம்... ஒவ்வொறு நாளும் உள்ளுக்குள்ளேயே செத்துட்டு இருந்தேன். உனக்கு குணமாகி, பழசெல்லாம் நியாபகம் வந்துட்டா, எங்க என்னை மறந்துடுவியோன்னு செத்துகிட்டு இருந்தேன் ராம்!” என அழுகையினூடே அவள் சொல்ல, துடித்து போனான் ராம்.



விளையாட்டாய் அவன் செய்தது மைதிலியை மிகவும் பாதித்ததை எண்ணி வருந்தினான்.



“நீ எனக்கு வேண்டான்னு சொல்லிடுவியோன்னு தினம் தினம் பயந்து பயந்தே செத்தேன் ராம்...” என சொல்லிக்கொண்டு அவனை சட்டையை கொத்தாய் பிடித்து தன்னுடன் இழுத்துக்கொண்டாள் மைதிலி.



“உன்னை பார்த்த அந்த நொடில இருந்து நான் நானாவே இல்லடா... ஊரே உன்னை பைத்தியம் சொல்லுச்சு. ஆனா உண்மைல நாந்தான் உன்மேல பைத்தியமாகிட்டேன். ‘பார்த்ததும் காதல், பத்தே நாள்ல கல்யாணம்’ இதெல்லாம் மூணு மாசம் முன்னாடி யாராது என்கிட்டே சொல்லிருந்தா கண்டிப்பா நம்பிருக்க மாட்டேன் ராம்...! எல்லாமே நடந்துச்சு. உன்னை பார்த்த அந்த நிமிஷமே நடந்துச்சு..."



"உன்கூட பல வருஷம் வாழ்ந்த மாறி ஒரு உணர்வு. இப்போகூட என்னால நம்பமுடியல, நீ என் வாழ்க்கைல வந்து மூணு மாசம் தான் ஆகுதான்னு...!” என சொல்லிக்கொண்டே போனவளை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தான் ராம்.



ஒரு வேகத்துடன் அவள் முகத்தை முத்தத்தால் நிரப்பினான் ராம். முதலில் சுகமாய் அதை வாங்கிக்கொண்டவள், அவன் வேகம் நொடிக்கு நொடி அதிகரிக்கவே சற்று திணறிப்போனாள். அவளது திணறலை உணர்ந்தவன் போல, தன் வேகத்தை குறைத்து அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தினான் ராம்.



“கோடில ஒருத்தர்க்கு கூட, இப்படி நடக்காது மையு...” என்றான் ராம் ஆச்சர்யமாய்.



மைதிலி புரியாது விழிக்க, “எழுந்துரிக்கவே மனசு இல்லை... இருந்தாலும் இப்போ எழுந்துக்க வேண்டிய அவசியம் இருக்கே பேபி....” என அவள் மீதிருந்து எழுந்து அந்த அறையின் மூலையில் இருந்த மேசை அருகே சென்றான் ராம்.



அதன் டிராயர்ரை திறந்து உள்ளுக்குள் கைவைத்து அவன் அழுத்த, அவர்களுக்கு எதிர்பக்கம் இருந்த சுவர் விலகி ரகசிய பீரோ இருப்பதை காட்டியது.



இன்னமும் தெளியாத அவளை இழுத்துக்கொண்டு அங்கே சென்றான் ராம்.



“ஓபன் பண்ணிப்பாரு...” என அவன் கெத்தாய் சொல்ல, திறந்து பார்த்தவள் திகைத்து போனாள் சந்தோஷத்தில்.



பீரோவின் உள்ப்பக்க கதவு தொடங்கி, ஒரு இடம் விடாமல் அவளது புகைப்படங்களால் அலங்கரித்திருந்தான் ராம். அதன் நடுவே நான்கடி உயரத்தில் வரையப்பட்ட அவள் புகைப்படம் பிரம்பிப்பை கூட்டியது.



“நீயே வரைஞ்சியா ராம்?” அவள் ஓவியத்தை தன் விரல்களால் வருடியபடி கேட்டாள் மைதிலி. அவன் உடனே ‘ஆம்’ என சொல்ல, திரும்பி அவனை சந்தேகப்பார்வை பார்த்தவள், “நிஜமாவா?” என்றாள்.



அவள் பார்வையில் சிக்கிக்கொண்ட ராம், “ஹிஹி! உன் போட்டோவ ஒரு நல்ல ஆர்டிஸ்ட் கிட்ட குடுத்து வரைய சொன்னேன், கீழே ஆர்ட் பை மட்டும் நானே சைன் போட்டுகிட்டேன்” என கண்சிமிட்டி சிரிப்பவனை முறைக்க முடியாது சிரித்தாள் மைதிலி.



சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது புகைப்படங்களை அதிசயமாய் பார்த்துக்கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்துக்கொண்டு, “போடோஸ் எல்லாம் நல்லா எடுத்துருக்கேனா பேபி?” என்றான் அவள் காதில் தன் உதட்டால் கோலம் போட்டபடி.



“எப்படி ராம்?” என்றாள் ஆச்சர்யம் குறையாமல். அவளிடம் அவளை முதன்முதலில் பார்த்த கதையை சொல்ல, “எனக்கு நியாபகமே இல்லையே ராம்?” என வருந்தினாள் மைதிலி.



ராம், “நீ என்னை பார்க்கவே இல்லடா...! நாந்தான் உன்னை பார்த்தேன். நீ என் மேல மோதுனதுல என் ஹார்ட் ஹெவியா டேமேஜ் ஆகிடுச்சு. சோ அதுக்கு மருந்து போட்டுக்கலாம்ன்னு ஒவ்வொறு வீகெண்டும் மும்பை பிளைட்ட பிடிச்சு ஓடி போய்டுவேன்..”



அவள் ‘நிஜமா?’ என்பது போல அவனை பார்க்க, “உனக்கே தெரியாமா உன்ன ஒளிஞ்சு ஒளிஞ்சு சைட் அடிச்சப்போ எடுத்த போடோஸ் தான் இதெல்லாம். நீ சிரிச்சு நான் பார்த்ததே இல்லை... அப்பறம்தான் உன் பாமிலி பத்தி தெரியவந்துச்சு. எனகாச்சும் நான் வளர்ந்து என் சொந்த காலுல நிக்குற வரைக்கும் அப்பான்னு ஒரு உறவு இருந்துச்சு.. உனக்கு அதுகூட இல்லன்னு தெரிஞ்சதும் ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா....” என்றான் அவளை தன்னுடன் இன்னும் இறுக்கமாய் அணைத்தபடி.



“அவ்ளோ அக்கறை இருந்துருந்தா என்னை கல்யாணம் பண்ணிருக்கலாம்ல அப்போவே!” விளையாட்டாய் கேட்க நினைத்தாலும் அவள் குரலில் சிறு வருத்தம் எட்டி பார்த்தது.



“எனக்கு வரபோறவ மூழியமா ஒரு பிரச்சனை வந்து, ரிஷி சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவனுக்கு தெரிஞ்சு, அவனோட மனசு பாதிக்க படவேனானு நினைச்சு தான் நான் கல்யாணமே வேணான்னு முடிவு பண்ணிருந்தேன். இது கொஞ்சம் ரிடிகுலஸ்ஸா இருக்கலாம். பட் எனக்கு அவனை அவ்....ளோ பிடிக்கும்” என ராம் சொன்னதும், “என்ன விடவா?” என புருவம் தூக்கினாள் மைதிலி.



“ஹாஹா.. உன்னை விட இல்லடா.. உன் அளவுக்கு அவனையும் பிடிக்கும். அவனுக்குன்னு இப்போ யாருமே இல்லை...” என சொல்லும்போதே அவனுக்கு வலித்தது.



“ஏன் இல்லை? அதான் அவனுக்கே அவனுக்குன்னு திவ்யா காத்திட்டு இருக்கலே? சீக்கிரமா அவ வீட்ல பேசி டேட் பிக்ஸ் பண்ணிடலாம்” என எளிதாய் சொன்னாள் மைதிலி.



“ஹ்ம்ம்... செஞ்சுடுவோம்... அதுக்கு முன்னாடி நம்ம மேரேஜ் ரிசெப்ஷன் இருக்கு. அதுக்கு திவ்யா பாமிலிய கூப்புடுவோம்.. அங்கேயே எல்லாம் பேசி பிக்ஸ் பண்ணிடுவோம்.. சரியா??”



“டன்..!!! பிபோர் தட், இதெல்லாம் என்னனு சொல்லு...” என அந்த பீரோ முழுக்க இருந்த புடவைகளை காட்டி கேட்டாள் மைதிலி.



“ஹிஹி.. இதுவா?? உன்னை சாரி கட்டி பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை.. நீதான் பேன்ட் சட்டையிலேயே சுத்துவியே... இருந்தாலும் என்னோட ஆசைக்கு வாங்கி வச்சேன்...” என அவன் சொல்ல, முதன்முறை ராம் அவளை புடவை கட்ட சொன்னது நினைவு வந்தது அவளுக்கு.



அவள் இமைக்காமல் அவனையே பார்ப்பதை கண்டு, “அன்னைக்கு ராத்திரி எனக்கு எல்லாம் நியாபகம் வந்து மண்டையே வெடிக்குறமாறி ஆச்சு. பக்கத்துல பார்த்தா நீ!!! எல்லாம் கனவோன்னு கூட நினச்சேன். ஒண்ணுமே புரியாமா யோசிச்சு யோசிச்சு டயர்ட் ஆகி, அந்த ரூம்க்குள்ள மூச்சடைக்குற மாறி ஆகிடவும் தான் வெளில போனேன். அப்புறம் கெளதம் எழுப்புனதுதான் தெரியும்..” என சிரித்தான் ராம்.



“ஏன் என்கிட்டே சரியானதை மறைச்ச?” என முகம் சுருங்க கேட்டாள் மைதிலி.



“பேபி!!!! நீ என்னை அதுநாள் வரை ஒரு குழந்தை மாறி பார்த்துகிட்டன்னு கெளதம் சொன்னான். எனக்கு அதை அனுபவிச்சு பார்க்கணும் போல இருந்துச்சு.. நான் சரியாகிட்டேனு தெரிஞ்சா நீ அப்படி இருக்க மாட்டியோன்னு தான் உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லார்டையும் ப்ராமிஸ் வாங்கிட்டேன்... பட் மையூ... சீரியஸ்லி நீ என்னை ஒரு குழந்தை மாறி தான் பார்த்துகிட்ட! ஐ லவ் டு பீ லைக் தட் வித் யூ பேபி... உன்னை ஏமாத்தனும்ன்னு நினைச்சு பண்ணல.. ட்ரஸ்ட் மீ...” என்றான் ராம் உணர்வு பூர்வமாய்.



அவன் சொன்னதை எல்லாம் கேட்டவள் ஒன்றும் சொல்லாது அவன் நெஞ்சில் புதைந்துக்கொண்டாள்.



அவள் சமாதானம் ஆனதில் மகிழ்ந்தவன், “நீதான் என் பொண்டாட்டிங்கற நினப்புலயே காலத்தை ஓட்டிடலாம்ன்னு பார்த்தா, கடவுளா பார்த்து உனக்கே என்னை கட்டிவச்சுட்டான்...” என சிரித்தமுகமாய் சொன்னான் ராம்.



இருந்த இலகுதன்மை மாற, அவன் நெஞ்சில் கைவைத்து பட்டென அவனை தள்ளி விட்டாள் மைதிலி.



அவள் விலகல் புரியாமல் “ஏய் என்னடி ?” என்றான் ராம்.



“உனக்கு நிறைய பொண்ணுங்ககூட கனெக்ஷன் இருக்காமே!?” என்றாள் மைதிலி இடுப்பில் கைவைத்துக்கொண்டு அவனை முறைத்தபடி.



“ஹய்யோ இதுவேறையா? எவன் சொன்னான்?” என ராம் கேட்க, “கெளதம் ரிஷி எல்லாரும் தான் சொன்னாங்க.. நானும் பேஸ்புக்ல போடோஸ் எல்லாம் பார்த்தேன்..” என்றாள்.



“எவன் எது சொன்னாலும் நம்பிடுவியா? பார்ட்டி போறப்போ, வெளில மீட் பண்றப்போ எடுத்த போடோஸ் எல்லாம் உனக்கு ஆதாராமா? தப்பு பண்றவன் இப்படிதான் ஊரே பார்க்குறமாறி பேஸ்புக்ல போடுவானா? இல்லை இந்த மூணு மாசத்துல எவளாது என்னை தேடி தான் வந்தாளா?” என ராம் கேட்க, அவன் கேட்பது சரியெனப்பட்டாலும், “பின்ன எதுக்கு கெளதம் அப்டி சொல்லணும்?” என்றாள்.



“அவன் ஒரு ஈரவெங்காயம்.. அவன்கிட்ட நான் விளையாட்டா சொன்னதெல்லாம் உண்மைன்னு நம்பி உன்ட வேற சொல்லி தொலச்சுருக்கான்...” என்றான் ராம் குறையாத கடுப்புடன்.



“ரிஷி கூட சொன்னான்?” என்று அவள் இழுக்க, “எனக்கு கேர்ள்பிரண்ட்ஸ் அதிகம் தான் மையு, ஆனா எல்லாருமே எனக்கு நண்பர்கள் மட்டும் தான்! பார்க்குறவங்க என்னை கிண்டல் பண்ணும்போது, எல்லார்கிட்டயும் விளக்கம் குடுக்குறதுக்கு பதிலா, ஒரு சின்ன சிரிப்போட நான் நகர்ந்து போய்டுவேன்! சோ அது என்னை ஒரு பிளேபாய்யா உருவகப்படுத்திருக்குன்னு இப்போதான் தெரியுது! இதுவரைக்கும் எனக்கு ஒரு முன்னாள் காதலோ, ஒரு சின்ன ஈர்ப்போ எதுவுமே யார்கிட்டயும் வந்தது இல்ல! இதை நீ நம்பிதான் ஆகணும்” தீவிரமான தொனியில் சொல்லி முடித்தான் ராம்.



“ஓஓஓ... அப்போ அதெல்லாம் உண்மை இல்லையா?” என மீண்டும் கேட்டு, அவனிடம் உறுதிபடுத்திக்கொண்ட பின், அவனை அணைத்துக்கொள்ள அவனருகே சென்ற மைதிலியை வேகமாய் தடுத்தான் ராம்.



“அங்கேயே நில்லு...”



“ஏன் ராம்?” என அவள் சிணுங்க,



“இன்னும் ஏதாது டவுட் இருக்கா?”



“இல்லை..”



“நிஜமா?”



“ம்ம்ம்...”



“சத்தியமா?”



“சத்தியமா!”



“ப்ராமிஸ்ஸா??”



“ரெண்டும் ஒண்ணுதான் ராம்...”



“கட்டிபிடிச்சுட்டு அப்புறம் தள்ளிவிட மாட்டியே?”



“மாட்ட்ட்டேன்....” மெல்லிய வெட்கத்துடன் அவள் சொல்ல,



“அப்போ சரி... ஓடி வந்து மாமாவ கட்டிக்கோ....” என சொன்னதும், அவள் வேகத்துடன் அவன் நெஞ்சில் மோத இருவரும் ஒருசேர கட்டிலில் விழுந்தனர்.



“ஹஹாஹா!!!!” அவர்களின் சிரிப்பொலி அந்த அறையை தாண்டி வெளியிலும் கேட்க, “ஷ்ஷப்பா.... ஒருவழியா எல்லாம் முடிஞ்சுதுடா சாமி..” என நினைத்து நிம்மதி கொண்டனர் மூன்று பேச்சிலர்களும்.

***

“சார் தயவுசெஞ்சு கொஞ்ச நேரமாது அசையாம இருங்க சார்.... கெஞ்சி கேக்குறேன்...”



‘விட்டால் அழுதுவிடுவேன்’ என்ற தோரணையில் போடோக்ராபெர் சொல்ல, அவனை பார்த்து பாவமாய் இருந்ததோ என்னவோ! அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒழுங்காய் போஸ் கொடுத்தான் ராம்.



சென்னையின் மிக பெரிய திருமண மண்டபத்தில் மிக மிக ஆர்ப்பாட்டமாய் நடந்துக்கொண்டிருந்தது ராம் மற்றும் மைதிலியின் திருமண வரவேற்ப்பு.



தொழிலதிபர் முதல் கடைநிலை ஊழியர் வரை ஒருத்தர் விடாமல் வந்து வாழ்த்த, அந்த இடமே திருவிழா கூட்டம் போல நிரம்பி வழிந்தது.



ஒருபக்கம் அத்தனை ஆரவாரங்களுடன் பாட்டு நடனம் என கலைகட்ட, மறுபக்கம் மூக்குக்கு கால் முளைத்து ஓடும் வகையில் உணவுவகைகள் பட்டையை கிளப்பியது.



இத்தனைக்கும் நடுவில் ராம் மைதிலி வந்திருந்த ஒருவரையும் விடாமல் இழுத்துவைத்து அன்பாய் பேசி, நிழற்படம் எடுத்துக்கொள்ள, இதர வேலைகள் அனைத்தும், ரிஷி, சந்தோஷ் கெளதம் முன்னிருக்க சிறப்பாய் நடந்தது.



பெரியவர்கள் என்ற முறையில் கேசவன் வரவேற்ப்பில் நின்று வரவேற்க, வந்தவர்களை சரியாய் கவனித்து சாப்பிட வைத்தார் ரமா பாட்டி.



“மையு... நெக்ஸ்ட் வீக் மும்பைல ரிசப்சன்... அதுமுடிஞ்சதும் என்னோட நீ வந்துடனும்...” என்றான் ராம் வருபவர்களை கவனித்தபடி.



“எங்க ராம்?” என அவள் ஆவலாய் கேட்க, “சஸ்பென்ஸ்...” என ஹஸ்கி வாய்சில் சொன்னான் ராம்.



“ஹனிமூன் தானே?” என தன் காதருகே நாராசமாய் ஒரு குரல் கேட்க, திரும்பி பார்த்த ராம், அருகில், ‘ஈஈஈ’ என தன் அனைத்து பற்களையும் காட்டிக்கொண்டு நின்றான் கெளதம்.



“நீ எதுக்குடா இங்க வந்த எரும?” என ராம் உறும, “பாமிலி போட்டோ டா.. அங்க பாரு” என்றான் கெளதம்.



அப்போதுதான் தங்களை சுற்றி பார்த்தனர் இருவரும்.

மைதிலி அருகே சந்தோஷ், ரமா பாட்டியுடன் நிற்க, அவள் முன் போடப்பட்ட சாரில் போஸ் கொடுத்தபடி அமர்ந்திருந்தார் கேசவன்.



ராமின் பக்கம் கௌதமும், அவன் அருகில் ரிஷி திவ்யாயுடன் நிற்க, போட்டோகிராபர் குரலில் நேரே பார்த்தான் ராம்.



“சார் எல்லாம் வந்தாச்சா? ரெடியா?? எடுத்துடலாமா???” என புகைப்படகலைஞர் உறுதிகேட்க, சம்மதமாய் தலையசைத்தனர் அனைவரும்.



“சார்... எல்லாரும் கொஞ்சம் நல்லா சிரிங்களேன்...!! இன்னும் நல்லா.... இன்னும் கொஞ்சம்....” என அவர் கேமெராவுடன் அங்கு போராடிக்கொண்டிருந்தார்.



“துப்பாக்கில இருந்து வரும் தோட்டா...

கிளம்புறப்போ சொல்வாங்க டாட்டா...

நான் இல்லாம எடுக்குறீங்களாடா ஃபோட்டா....??” என எங்கோ குரல் கேட்க,



“அய்யய்யோ!!! ஒரு ஆபத்தான மிருகம் நம்மளை நோக்கி வருதுடோய்... எல்லாம் ஓடுங்க....” என கெளதம் சொன்னதும் அங்கு வெடித்து கிளம்பிய சிரிப்பலையில் அந்த மண்டபமே சிரித்தது.



போட்டோக்ராபர் நினைத்தது கிடைத்துவிட, வேகமாய் அந்த நொடியை தன் காமெராவில் கிளுக்கிகொண்டார்.



அவ்விடமே மகிழ்ச்சிக்கு குறைவின்றி நிறைந்து தளும்பியது.

------EPILOGUE இன்று மாலை!!--------
 
Top