அத்தியாயம் 21
காரில் நிறைந்த அமைதியை கலைத்தது சந்தோஷின் குரல்.
“அவன் எதுக்காக நைட் நடந்தத மறைக்குறான் அண்ணா?” என கேட்டான் கௌதமிடம்.
“அவனுக்கே தெரியாம எல்லாம் நடக்குதோ என்னவோ?!” கௌதமை முந்திக்கொண்டு சந்தோஷிற்கு பதில் சொன்னாள் மைதிலி.
“ஹே மைதிலி... உனக்கு எப்படி தெரியும்? நான் இன்னும் உன்கிட்ட சொல்லவே இல்லையே!” என ஆச்சர்யமாய் கேட்டான் கெளதம்.
“உங்க தொல்லை தாங்காம நான் வீட்டை சுத்தி நடந்துட்டு இருந்தபோ விஸ்வநாதன் அவர் ரூம்ல பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு... அதனால தான் அவர முந்திகிட்டு அவர் பிளான்ன அவருக்கே திருப்பி கொடுத்துட்டேன்...€” என சொன்னாள் மைதிலி.
“என்ன நடந்துச்சு?” என வீட்டினுள் நடந்தது தெரியாமல் சந்தோஷ் கேட்க, “உனக்கு இந்த வெட்டிபையன் விளக்கமா சொல்லுவான். இப்போ அந்த ஹோட்டல் கிட்ட வண்டிய நிறுத்து. செம்மையா பசிக்குது...” என்றான் ராம்.
“ஆமா ஆமா... சார் அப்படியே சுப்ரீம் கோர்ட்ல ஜட்ஜா இருக்காரு... நான் வெட்டியா இருக்கேனு குத்தம் சொல்றாரு... போடா தெர்மாமீட்டரு” என கௌதம் திட்ட தொடங்கினான்.
“என்னது தெர்மாமீட்டரா?? ஹஹா ” என சிரித்து கொண்டு கேட்டான் சந்தோஷ்.
“வேற என்னடா பண்றது? எவனுமே என்னை டாக்டர்ன்னு நம்பமாட்றானுங்க... இப்படி ஏதாது சொல்லிதான் நம்ப வைக்கணும்...” என அலுத்துக்கொண்டான் கெளதம்.
“இப்போ எல்லாருமே நம்பிடாங்க பாரு” என நக்கலாய் சொன்னான் ராம்.
“சந்தோஷ் நீ கார்ர ஓரமா நிறுத்து... நான் இறங்கிக்குறேன்... இது ரெண்டையும் எங்கயாது கொண்டு போய் விட்டுடு... அடிச்சுகிட்டே இருக்கட்டும் ...” என குரல் உயர்த்திய மைதிலிக்கு பதிலாய் இருவரும் எதிரெதிர் புறமாய் முகத்தை திருப்பி கொண்டு அமைதியாய் வந்தனர்.
அருகில் இருந்த உணவகம் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு கடற்கரை சென்றடையும் வரை பெரிதாய் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் வந்தனர். ஒரு நிழலான இடத்தில் சென்று அமர்ந்துகொண்டபின் தனது மொபைலில் கேசவன் அங்கிளை தொடர்புகொண்டாள் மைதிலி.
“அங்கிள்... நீங்க கேட்ட பைல் கரெக்ஷன் பார்த்து அனுப்பிட்டேன். நம்ம லாயெர் கிட்ட எனக்கு கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு... அவர் நம்பர் எனக்கு அனுப்பிவைங்க... என்னன்னு நான் அப்றமா சொல்றேனே அங்கிள்? ஒரு பிரச்சன்னையும் இல்லை இங்க... இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே முடிஞ்சுடும்.. நான் சீக்கிரமா அங்க வந்துடுவேன்.. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க....” மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் மைதிலி.
“என்னதான் பிளான்ல இருக்க மைதிலி? ஒண்ணுமே புரியல...” என கேட்டான் கெளதம்.
“சொத்து என் பேருல வேணுன்னு கேட்ருக்கேன்.. அதனால அவரு சும்மா இருக்க மாட்டாரு... ஏதாது பண்ணறதுக்கு ட்ரை பண்ணுவாரு... அப்போ ரெட்ஹன்டெடா பிடிப்போம்....” என கடல் அலைகளை பார்த்தபடி சொல்லிகொண்டிருந்தாள் மைதிலி.
“உன் வாய்தான் இப்படி சொல்லுது... ஆனா மனசுக்குள்ள வேற என்னவோ இருக்கு.... எங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்குறியா மைதிலி?” என குறுக்கிட்டான் சந்தோஷ்.
“மையு.... உன் மடியில படுத்துக்கவா?? தூக்கமா வருது...” என உண்டமயகத்தில் கண்ணை கசக்கிக்கொண்டு சொன்னான் ராம்.
“ஏய்... எரும... இங்க என்ன நடந்துட்டு இருக்கு...? நீ கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லாம இருக்க??? உன்னாலதான்டா இவ்வளவும்.....!! நீயெல்லாம் ஒரு ஹீரோ....”
அடுத்து விஸ்வநாதன் என்ன செய்ய காத்திருக்கிறார் என தெரியாத கோவத்தில் ராமிடம் எகிறினான் கெளதம்.
“உஸ்ஸ்... அண்ணா... நீங்க ரெண்டு பேரும் பேசிக்காம இருக்குறது தான், நீங்க எனக்கு பண்னுற மிகப்பெரிய நல்லது....” என மைதிலி சொன்னதும் அவ்விடம் அமைதியானது..
“ரிஷியை நம்பலாமன்னு தெரியல மைதிலி...” என ஆரம்பித்தான் சந்தோஷ்.
“எதையும் யோசிக்காத சந்தோஷ்... நடக்குறது நடக்கட்டும்.... ராம் எனக்கு முழுசா கிடைச்சா மட்டும் போதும்... ”
மடியில் உறங்கும் தன் முதல் குழந்தையை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் மைதிலி.
அந்நேரம் அவளது அலைபேசி அலறியது. “யாரு மைதிலி?” என கேட்ட கௌதமிற்கு, “ரிஷி!!!” என சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றாள்.
அவர்கள் கடற்கரை கிளம்பி சென்ற சிறிது நேரத்தில்,
“என்னங்க சொல்றீங்க?” என விஸ்வநாதனை உலுக்கினார் லக்ஷ்மி.
“தப்பு பண்ணிட்டேன்... மைதிலி சொத்தையும் சேர்த்து நம்ம வாங்கிடலாம்ன்னு திட்டம் போட்டேன்... அதை செயல் படுத்துறதுக்கு முன்னாடியே இவ்ளோ பெரிய தடங்கல் வந்துடுச்சு... அந்த பொண்ணை நான் குறைச்சு நினச்சுட்டேன்... ரெண்டு பேரையும் இனிமே விட்டு வைக்க கூடாது....” என திண்ணமாக சொன்னார் விஸ்வநாதன்.
“இதைதான் அவங்க வீட்டுக்குள்ள புகுந்த அன்னைக்கே தலைபாடா அடிச்சுகிட்டேன். பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு, இப்போதான் புத்தி வருதோ... சாயங்காலம் அந்த கழிசடை எல்லாம் வீட்டுக்குள்ளையே வரகூடாது. அவ்ளோதான் சொல்லுவேன்...” என கத்தி தீர்த்தார் லக்ஷ்மி.
“ஏற்கனவே போட்ட திட்டம் தான். நம்ம பேருல சந்தேகம் வரகூடாது. அந்தமாறி பண்ணனும். அதுக்கு.....” என விஸ்வநாதன் சொல்லிகொண்டிருக்கும்போதே இடைபுகுந்த லக்ஷ்மி, “வழக்கம் போல பொறுத்து பண்ணனும்னு ஏதாது சொன்னீங்க? நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்.. பார்த்துகோங்க...” என மீண்டும் கத்தினார்.
“சர்ர்ரிடி... எனக்கு மட்டும் கோவம் இல்லையா? இப்படி கத்துறதுல என்ன பிரயோஜனம் இருக்கு... எதை எப்போ செய்யணும்ன்னு எனக்கு தெரியும்..” அதற்க்கு லக்ஷ்மி முறைப்பதை கண்டு, “சரி இப்போ என்ன செய்யணும்னு சொல்லுற? அதுங்க ரெண்டும் வீடுக்குள்ள வரகூடாது.. அவ்ளோதானே? இப்போவே நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி முடிக்க சொல்றேன். சாயங்காலம் அதுங்க நம்ம வீட்டுக்கு வரும். பிணமா! சரிதானே?!” என்றார்.
“ரெண்டு மட்டும் இல்லை... மூணும்! அது ரெண்டு கூடவும் ஒன்னு தொத்திகிட்டு வந்துருக்கே...! டாக்டர்ன்னு சொல்லிக்கிட்டு. அவளோட அண்ணன்! அதையும் சேர்த்து போட்டு தள்ளுங்க”
“சரிம்மா... எல்லாத்தையும் சொல்லிடுறேன்....” செட்டிநாடு மெஸ்ஸில் ஆர்டர் எடுக்கும் சர்வர் போல அனைத்தையும் கேட்டுவிட்டு தன் மொபைலை கையில் எடுத்தார் விஸ்வநாதன்.
தன்னை சுற்றி நடக்கும் பேச்சுவார்த்தையை ஒருவித பயத்துடன் பார்த்துகொண்டு அமர்ந்திருந்த ரிஷிக்கு, விஸ்வநாதன் மொபைலை கையில் எடுக்கவும் தான் நிலைமையின் வீரியம் உறைத்தது.
விரைந்து அருகில் சென்றவன், அவர் கையில் இருந்த மொபைலை பிடுங்கி தூர எறிந்தான். அவன் செயலை எதிர்பார்க்காத லக்ஷ்மி, “உனக்கும் பைத்தியம் பிடிச்சு போச்சா? எதுக்குடா போன்ன தூக்கிப்போட்ட?” என்றார்.
“எனக்கு பைத்தியம் இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் தான் பைத்தியம் பிடிச்சுருக்கு. பணப்பைத்தியம் பிடிச்சுருக்கு. மனுஷ உயிரைவிட இந்த காசும் கட்டடமும் தானே உங்களுக்கு முக்கியமா போச்சு” என நேரிடையாக கேட்டான் ரிஷி.
“ஏய் என்னடா நல்லவன் மாறி நடிச்சு பார்க்குறியா? இம்புட்டு நாளும் எங்க கூட்டுல தான் இருந்த? இப்போ என்னவோ புதுசா பேசுற?” என பதிலுக்கு கேட்டார் லக்ஷ்மி.
“ஆமா.. இவ்ளோ நாளும் நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு சும்மாதான் இருந்தேன். இன்னும் சொல்லனும்ன்னா உங்ககூட சேர்ந்து இந்த சொத்து எல்லாம் நம்ம கைக்கு வரதுக்கு பிளான் பண்றமாறி நடிச்சேன்...”
“என்னது? நடிச்சியா? என்னடா விளையாடுறியா? தோளுக்கு ஒசந்த பையனா இருக்கியேன்னு தான் சும்மா இருக்கேன். இல்லனா இந்த பேச்சுக்கு என்ன பண்ணிருபேன்னே தெரியாது...” என விரல் நீட்டி அவனை எச்சரித்தவர் நேரே வீட்டிலுள்ள லேண்ட்லைன் ரிசீவரை கையில் எடுத்துகொண்டு “ஏங்க? மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? கந்தன், ராகவன் யாரது நம்பர் இருக்கா?” என கேட்டவர் முன் இருந்த தொலைபேசி சுக்குநூறாய் உடைந்தது ரிஷி அதை தூக்கி அடித்ததும்.
அவன் திடீர் தாக்குதலில் பயந்து சற்று நகர்ந்தவர், “என்னடா ஆச்சு உனக்கு? நல்லாதானே இருக்க?” என்றார் பதற்றமாய்.
“ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு எல்லாம்? எதுக்காக இப்படி பணம் பணம்னு அலையுறீங்க?” என்றான் ரிஷி.
நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்த விஸ்வநாதன், ரிஷியின் இந்த கேள்விக்கு வாய் திறந்தார்.
“உனக்காக தானேடா... எல்லாம் உனக்காக தானே!! காலம் போன கடைசில இதையெல்லாம் நாங்க அனுபவிக்கவா இவ்வளவும் பண்றோம்? நீ காலத்துக்கும் சந்தோசமா இருக்கணும்னு தானே இதெல்லாம்?”
“நான் நல்லா இருக்கணும்ன்னு நினைச்சுருந்தா, எனக்கு நீங்க கொடுக்கனும்னு ஆசைபடுறத உங்க உழைப்புல சேர்த்து வச்சுருக்கணும். ராம்க்கு அவங்க அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை எப்படி நீங்க எனக்காக குடுக்க முடியும்?” என வினவினான் ரிஷி. அவன் கேள்வியில் வாயடைத்து நின்றார் விஸ்வநாதன்.
“என்னடா ரொம்ப தான் சட்டம் பேசுற நீ? நாங்க குடுத்த வாழ்க்கைல தான் நீ இவ்ளோ உசரம் வளர்ந்துருக்க. அதை மறந்துட்டு எங்ககிட்டயே வாயாடாத! எவளையாது கூட்டிட்டு போயி வழக்கம் போல ஊரசுத்து. அதைவிட்டுட்டு பெரியவங்க விஷயத்துல தலையிடாதா... புரிஞ்சுதா?” என்றார் லக்ஷ்மி கறாராய்.
“நான் இவ்ளோ சொல்லியும் உங்களுக்கு புரியவே இல்லல? பணத்துக்காக ஒருத்தரை கொன்னீங்க... இன்னொருதன்ன பாதி பைத்தியமாக்கிடீங்க....! அவனுக்கு இப்போதான் ஒரு வாழ்கை அமைஞ்சுருக்கு... உங்க பணத்தாசையில அதையும் கெடுத்துடாதீங்க அப்பா....” என கெஞ்சினான் ரிஷி.
“அவனுக்கு எல்லாதையும் கொடுத்துட்டு நம்ம ரோட்டுக்கு தான்டா போகணும்... அறிவுகெட்ட தனமா பேசாதா....!!” எகிறினார் லட்சுமி.
“இல்லை அம்மா... ராம் நம்மளை அப்படீல்லாம் விட்டுடமாட்டான். செஞ்ச தப்புக்கு எல்லாம் நம்ம அவன்கிட்ட மன்னிப்பு கேட்டுடுவோம். அவன் ரொம்ப நல்லவன்ம்மா. நம்மளை கண்டிப்பா மன்னிச்சு ஏத்துக்குவான்...”
“அவன்கிட்ட கையகட்டி நிற்க சொல்றியா? அப்படி ஒரு வாழ்கையே எங்களுக்கு தேவையில்லை... அவன் தயவுல நாங்க வாழணும்னு முடிவு பண்ணிருந்தா, அவனோட அப்பாவயே நாங்க கொன்னுருக்கமாட்டோமே!!! எங்களுக்கு தேவை ராஜ வாழ்கை... ராஜாக்கு சேவகம் பண்ணுற வாழ்கை இல்லை... உனக்கு புரியுதா நான் சொல்றது? மரியாதையா வழிய விடு...” என சொன்ன லக்ஷ்மி, தன் மகன் பேசுவதையே பார்த்தபடி நின்ற விஸ்வநாதனின் கரம் பற்றி இழுத்து வாசலுக்கு சென்றார்.
“உங்களுக்கு அவன் குடியிருக்க பேட்டை தெரியும்தானே... நம்ம நேருலையே பார்த்து பேசிட்டு வந்துடுவோம்...” என சொன்னபடி நகர்ந்தார்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க!”
அரைநொடி தாமதித்து பின் திரும்பி பார்க்காமல் மீண்டும் நடந்தனர் இருவரும். லட்சுமி இழுத்த இழுப்பிற்க்கு நடந்தார் விஸ்வநாதன்.
“யார்காக பணம் பணம்ன்னு இப்படி அலையுறீங்களோ!? யார்காக மத்தவங்க உயிரை கூட எடுக்க துணியுறீங்களோ!? அவன்!!!!! உங்க பையன்!!! நீங்க திரும்பி வரும்போது உயிரோட இருக்கமாட்டான்....” என உரக்க கத்தினான் ரிஷிகேஷ்.
“சும்மா பூச்சாண்டி காட்டிட்டு இருக்காத...! எங்களுக்கு நிறைய வேலை இருக்கு... வேலைக்காரங்க எல்லாம் அவுட்அவுஸ்ல இருக்காங்க... உனக்கு பசிச்சா கிச்சென்ல பிரியாணி இருக்கு.. போட்டு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு... அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்... சரியா?” என அவன் கன்னம் வழித்துவிட்டு மீண்டும் வாசல் நோக்கி சென்றார் இதற்குமுன் எதுவுமே நடவாததுபோல்.
“நில்லுங்க அம்மா....” என கத்திய ரிஷி நேரே கிச்சனுக்கு சென்றான்.
“இப்படி போறப்போவே அபசகுனமா நில்லு நில்லுன்னு சொல்லிட்டு இருக்கியே... போற காரியம் உருப்படுமாடா?” என அவனிடம் கடிந்து கொண்டவர், திரும்பி தன் கணவனிடம், “என்னதான் ஆச்சு உங்களுக்கு? என்னவோ மந்திரிச்சு விட்டமாறியே நிக்குறீங்க?” என்றார்.
அதற்குள் ரிஷி கண்முன் தோன்ற, “என்னடா வேணும் இப்போ?” என்றார் லட்சுமி எரிச்சலாய்.
“நான் சொன்னதை செய்வேன் அம்மா. இப்போ நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போனா, என் கையில இருக்க கத்தியால என்னை நானே அறுத்துப்பேன்...” என கத்தியை தூக்கி காட்டினான் ரிஷி.
சில நொடிகள் அங்கே மௌனம் நிலைத்தது.
“போற வழில நம்ம வீட்டுக்கு ஆம்புலன்ஸ்ஸ வர சொல்லிடுறேன்... இப்போ நாங்க போகணும்....!!” என தீர்க்கமாய் சொல்லிவிட்டு நகர்ந்தார் லக்ஷ்மி.
“அம்மா!!!!” கண்களில் நீர் சிதற, செல்லும் அவரை இயலாமையுடன் பார்த்தான் ரிஷி.
வழியும் கண்ணீரோடு தன் கண்களை இருக்க மூடி மூச்செடுத்தவன், கையில் இருந்த கத்தியை தூக்கி தன் மறுக்கையின் மீது வைத்து, “அம்ம்ம்ம்ம்மா.............” என்ற அலறலுடன் கிழித்துக்கொண்டான். ஆழமாய் இறங்காவிட்டாலும் மேல்தோலை தாண்டி சற்று இறங்கி இருந்தது. வழியும் ரத்தத்தோடு மடிந்து அமர்ந்தவனை கண்டு, தலையில் அடித்தபடி ஓடிவந்தார் லக்ஷ்மி.
“ச்சை... கிளம்புற நேரத்துல நீ வேற எதுக்குடா ஏழறைய கூட்டுற?” என்ற திட்டோடு அவனருகில் வந்தவரை விநோதமாய் பார்த்தான் ரிஷி.
“அப்போ என்னைவிட, என் உயிரை விட உங்களுக்கு இந்த காசு பணம் தான் முக்கியமா போச்சுல்ல? ஏம்மா? என்னை உங்களுக்கு பிடிக்காதா? நான் வேணாமா அம்மா?” என மனதும் உடலும் வழியில் துடிக்க கேட்டான் ரிஷி.
“சும்மா உளரிட்டு இருக்காதடா. பணம் வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம். அது இல்லனா ரோட்ல போற நாய் கூட நம்மளை மதிக்காது. இதெல்லாம் இப்போ நான் சொன்னா கசப்பா தான் இருக்கும்... போக போக நீயே தெரிஞ்சுக்குவ... உன்னை எதுக்கு வளர்த்து ஆளாக்குனோம்னு எங்களை வருத்தப்பட வச்சுடாத.....” என சொன்னபடி அவன் கையில் துணியை கட்டிவிட்டு தன் கணவரிடம் சென்றார் லக்ஷ்மி.
சோபாவில் அமர்ந்திருந்தவரிடம் “எழுந்துறீங்க.... நேரமாச்சு போலாம்...” என்றார்.
விஸ்வநாதன் எழுந்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டு, “நீங்க வேற உங்க பங்குக்கு என்னை படுத்தாதீங்க... வந்து தொலைங்க. இடம் தெரிஞ்சா நானே கூட போயிருப்பேன்.” என எரிந்து விழுந்தார்.
அப்போதும் அவர் எழுந்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டு எரிச்சல்மேலிட, அவரிடம் சென்று “இப்போ உங்களுக்கு என்ன கேடு வந்துச்சு?” என கேட்டபடி அவரை உலுக்க, சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தார் சோபாவில்.
“என்னங்கககககக.......”
“அப்பாஆஆஆஆ”
இருவர் குரலும் ஒருசேர ஒலித்தது.
கடற்கரையில்...
கெளதம், “போன்ல யாரு மைதிலி?”
“ரிஷி”
“என்னவாம்??”
“விஷ்வனாதன் ஹாஸ்பிடல்ல இருக்காரு. நாம போகணும்...” என்றாள் எந்த உணர்ச்சியுமின்றி.
“அந்த மூர்த்தி ஹாஸ்பிடல்லையா?” என்றான் சந்தோஷ்.
“ம்ம்ம்...”
“நம்ம ஏன் போணும் அங்க?” என்ற கௌதமிற்கு,
“அவருக்கு ஹார்ட் அட்டாக்காம்” அவள் குரலில் நக்கலும், இதழ்கடையில் ஏளன புன்னகையும் இருந்தது.. இதை நான் எதிர்பார்த்தேன் என்பதைப்போல.
காரில் நிறைந்த அமைதியை கலைத்தது சந்தோஷின் குரல்.
“அவன் எதுக்காக நைட் நடந்தத மறைக்குறான் அண்ணா?” என கேட்டான் கௌதமிடம்.
“அவனுக்கே தெரியாம எல்லாம் நடக்குதோ என்னவோ?!” கௌதமை முந்திக்கொண்டு சந்தோஷிற்கு பதில் சொன்னாள் மைதிலி.
“ஹே மைதிலி... உனக்கு எப்படி தெரியும்? நான் இன்னும் உன்கிட்ட சொல்லவே இல்லையே!” என ஆச்சர்யமாய் கேட்டான் கெளதம்.
“உங்க தொல்லை தாங்காம நான் வீட்டை சுத்தி நடந்துட்டு இருந்தபோ விஸ்வநாதன் அவர் ரூம்ல பேசிட்டு இருந்தது என் காதுல விழுந்துச்சு... அதனால தான் அவர முந்திகிட்டு அவர் பிளான்ன அவருக்கே திருப்பி கொடுத்துட்டேன்...€” என சொன்னாள் மைதிலி.
“என்ன நடந்துச்சு?” என வீட்டினுள் நடந்தது தெரியாமல் சந்தோஷ் கேட்க, “உனக்கு இந்த வெட்டிபையன் விளக்கமா சொல்லுவான். இப்போ அந்த ஹோட்டல் கிட்ட வண்டிய நிறுத்து. செம்மையா பசிக்குது...” என்றான் ராம்.
“ஆமா ஆமா... சார் அப்படியே சுப்ரீம் கோர்ட்ல ஜட்ஜா இருக்காரு... நான் வெட்டியா இருக்கேனு குத்தம் சொல்றாரு... போடா தெர்மாமீட்டரு” என கௌதம் திட்ட தொடங்கினான்.
“என்னது தெர்மாமீட்டரா?? ஹஹா ” என சிரித்து கொண்டு கேட்டான் சந்தோஷ்.
“வேற என்னடா பண்றது? எவனுமே என்னை டாக்டர்ன்னு நம்பமாட்றானுங்க... இப்படி ஏதாது சொல்லிதான் நம்ப வைக்கணும்...” என அலுத்துக்கொண்டான் கெளதம்.
“இப்போ எல்லாருமே நம்பிடாங்க பாரு” என நக்கலாய் சொன்னான் ராம்.
“சந்தோஷ் நீ கார்ர ஓரமா நிறுத்து... நான் இறங்கிக்குறேன்... இது ரெண்டையும் எங்கயாது கொண்டு போய் விட்டுடு... அடிச்சுகிட்டே இருக்கட்டும் ...” என குரல் உயர்த்திய மைதிலிக்கு பதிலாய் இருவரும் எதிரெதிர் புறமாய் முகத்தை திருப்பி கொண்டு அமைதியாய் வந்தனர்.
அருகில் இருந்த உணவகம் சென்று காலை உணவை முடித்துக்கொண்டு கடற்கரை சென்றடையும் வரை பெரிதாய் ஒன்றும் பேசிக்கொள்ளாமல் வந்தனர். ஒரு நிழலான இடத்தில் சென்று அமர்ந்துகொண்டபின் தனது மொபைலில் கேசவன் அங்கிளை தொடர்புகொண்டாள் மைதிலி.
“அங்கிள்... நீங்க கேட்ட பைல் கரெக்ஷன் பார்த்து அனுப்பிட்டேன். நம்ம லாயெர் கிட்ட எனக்கு கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு... அவர் நம்பர் எனக்கு அனுப்பிவைங்க... என்னன்னு நான் அப்றமா சொல்றேனே அங்கிள்? ஒரு பிரச்சன்னையும் இல்லை இங்க... இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே முடிஞ்சுடும்.. நான் சீக்கிரமா அங்க வந்துடுவேன்.. அதுவரைக்கும் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க....” மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் மைதிலி.
“என்னதான் பிளான்ல இருக்க மைதிலி? ஒண்ணுமே புரியல...” என கேட்டான் கெளதம்.
“சொத்து என் பேருல வேணுன்னு கேட்ருக்கேன்.. அதனால அவரு சும்மா இருக்க மாட்டாரு... ஏதாது பண்ணறதுக்கு ட்ரை பண்ணுவாரு... அப்போ ரெட்ஹன்டெடா பிடிப்போம்....” என கடல் அலைகளை பார்த்தபடி சொல்லிகொண்டிருந்தாள் மைதிலி.
“உன் வாய்தான் இப்படி சொல்லுது... ஆனா மனசுக்குள்ள வேற என்னவோ இருக்கு.... எங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்குறியா மைதிலி?” என குறுக்கிட்டான் சந்தோஷ்.
“மையு.... உன் மடியில படுத்துக்கவா?? தூக்கமா வருது...” என உண்டமயகத்தில் கண்ணை கசக்கிக்கொண்டு சொன்னான் ராம்.
“ஏய்... எரும... இங்க என்ன நடந்துட்டு இருக்கு...? நீ கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லாம இருக்க??? உன்னாலதான்டா இவ்வளவும்.....!! நீயெல்லாம் ஒரு ஹீரோ....”
அடுத்து விஸ்வநாதன் என்ன செய்ய காத்திருக்கிறார் என தெரியாத கோவத்தில் ராமிடம் எகிறினான் கெளதம்.
“உஸ்ஸ்... அண்ணா... நீங்க ரெண்டு பேரும் பேசிக்காம இருக்குறது தான், நீங்க எனக்கு பண்னுற மிகப்பெரிய நல்லது....” என மைதிலி சொன்னதும் அவ்விடம் அமைதியானது..
“ரிஷியை நம்பலாமன்னு தெரியல மைதிலி...” என ஆரம்பித்தான் சந்தோஷ்.
“எதையும் யோசிக்காத சந்தோஷ்... நடக்குறது நடக்கட்டும்.... ராம் எனக்கு முழுசா கிடைச்சா மட்டும் போதும்... ”
மடியில் உறங்கும் தன் முதல் குழந்தையை ரசித்தபடி அமர்ந்திருந்தாள் மைதிலி.
அந்நேரம் அவளது அலைபேசி அலறியது. “யாரு மைதிலி?” என கேட்ட கௌதமிற்கு, “ரிஷி!!!” என சொல்லிவிட்டு அழைப்பை ஏற்றாள்.
அவர்கள் கடற்கரை கிளம்பி சென்ற சிறிது நேரத்தில்,
“என்னங்க சொல்றீங்க?” என விஸ்வநாதனை உலுக்கினார் லக்ஷ்மி.
“தப்பு பண்ணிட்டேன்... மைதிலி சொத்தையும் சேர்த்து நம்ம வாங்கிடலாம்ன்னு திட்டம் போட்டேன்... அதை செயல் படுத்துறதுக்கு முன்னாடியே இவ்ளோ பெரிய தடங்கல் வந்துடுச்சு... அந்த பொண்ணை நான் குறைச்சு நினச்சுட்டேன்... ரெண்டு பேரையும் இனிமே விட்டு வைக்க கூடாது....” என திண்ணமாக சொன்னார் விஸ்வநாதன்.
“இதைதான் அவங்க வீட்டுக்குள்ள புகுந்த அன்னைக்கே தலைபாடா அடிச்சுகிட்டேன். பேசவிட்டு வேடிக்கை பார்த்துட்டு, இப்போதான் புத்தி வருதோ... சாயங்காலம் அந்த கழிசடை எல்லாம் வீட்டுக்குள்ளையே வரகூடாது. அவ்ளோதான் சொல்லுவேன்...” என கத்தி தீர்த்தார் லக்ஷ்மி.
“ஏற்கனவே போட்ட திட்டம் தான். நம்ம பேருல சந்தேகம் வரகூடாது. அந்தமாறி பண்ணனும். அதுக்கு.....” என விஸ்வநாதன் சொல்லிகொண்டிருக்கும்போதே இடைபுகுந்த லக்ஷ்மி, “வழக்கம் போல பொறுத்து பண்ணனும்னு ஏதாது சொன்னீங்க? நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்.. பார்த்துகோங்க...” என மீண்டும் கத்தினார்.
“சர்ர்ரிடி... எனக்கு மட்டும் கோவம் இல்லையா? இப்படி கத்துறதுல என்ன பிரயோஜனம் இருக்கு... எதை எப்போ செய்யணும்ன்னு எனக்கு தெரியும்..” அதற்க்கு லக்ஷ்மி முறைப்பதை கண்டு, “சரி இப்போ என்ன செய்யணும்னு சொல்லுற? அதுங்க ரெண்டும் வீடுக்குள்ள வரகூடாது.. அவ்ளோதானே? இப்போவே நம்ம ஆளுங்ககிட்ட சொல்லி முடிக்க சொல்றேன். சாயங்காலம் அதுங்க நம்ம வீட்டுக்கு வரும். பிணமா! சரிதானே?!” என்றார்.
“ரெண்டு மட்டும் இல்லை... மூணும்! அது ரெண்டு கூடவும் ஒன்னு தொத்திகிட்டு வந்துருக்கே...! டாக்டர்ன்னு சொல்லிக்கிட்டு. அவளோட அண்ணன்! அதையும் சேர்த்து போட்டு தள்ளுங்க”
“சரிம்மா... எல்லாத்தையும் சொல்லிடுறேன்....” செட்டிநாடு மெஸ்ஸில் ஆர்டர் எடுக்கும் சர்வர் போல அனைத்தையும் கேட்டுவிட்டு தன் மொபைலை கையில் எடுத்தார் விஸ்வநாதன்.
தன்னை சுற்றி நடக்கும் பேச்சுவார்த்தையை ஒருவித பயத்துடன் பார்த்துகொண்டு அமர்ந்திருந்த ரிஷிக்கு, விஸ்வநாதன் மொபைலை கையில் எடுக்கவும் தான் நிலைமையின் வீரியம் உறைத்தது.
விரைந்து அருகில் சென்றவன், அவர் கையில் இருந்த மொபைலை பிடுங்கி தூர எறிந்தான். அவன் செயலை எதிர்பார்க்காத லக்ஷ்மி, “உனக்கும் பைத்தியம் பிடிச்சு போச்சா? எதுக்குடா போன்ன தூக்கிப்போட்ட?” என்றார்.
“எனக்கு பைத்தியம் இல்லை. உங்க ரெண்டு பேருக்கும் தான் பைத்தியம் பிடிச்சுருக்கு. பணப்பைத்தியம் பிடிச்சுருக்கு. மனுஷ உயிரைவிட இந்த காசும் கட்டடமும் தானே உங்களுக்கு முக்கியமா போச்சு” என நேரிடையாக கேட்டான் ரிஷி.
“ஏய் என்னடா நல்லவன் மாறி நடிச்சு பார்க்குறியா? இம்புட்டு நாளும் எங்க கூட்டுல தான் இருந்த? இப்போ என்னவோ புதுசா பேசுற?” என பதிலுக்கு கேட்டார் லக்ஷ்மி.
“ஆமா.. இவ்ளோ நாளும் நீங்க பண்றதெல்லாம் பார்த்துட்டு சும்மாதான் இருந்தேன். இன்னும் சொல்லனும்ன்னா உங்ககூட சேர்ந்து இந்த சொத்து எல்லாம் நம்ம கைக்கு வரதுக்கு பிளான் பண்றமாறி நடிச்சேன்...”
“என்னது? நடிச்சியா? என்னடா விளையாடுறியா? தோளுக்கு ஒசந்த பையனா இருக்கியேன்னு தான் சும்மா இருக்கேன். இல்லனா இந்த பேச்சுக்கு என்ன பண்ணிருபேன்னே தெரியாது...” என விரல் நீட்டி அவனை எச்சரித்தவர் நேரே வீட்டிலுள்ள லேண்ட்லைன் ரிசீவரை கையில் எடுத்துகொண்டு “ஏங்க? மசமசன்னு நின்னுட்டு இருக்கீங்க? கந்தன், ராகவன் யாரது நம்பர் இருக்கா?” என கேட்டவர் முன் இருந்த தொலைபேசி சுக்குநூறாய் உடைந்தது ரிஷி அதை தூக்கி அடித்ததும்.
அவன் திடீர் தாக்குதலில் பயந்து சற்று நகர்ந்தவர், “என்னடா ஆச்சு உனக்கு? நல்லாதானே இருக்க?” என்றார் பதற்றமாய்.
“ஒரு தடவ சொன்னா புரியாதா உங்களுக்கு எல்லாம்? எதுக்காக இப்படி பணம் பணம்னு அலையுறீங்க?” என்றான் ரிஷி.
நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்த விஸ்வநாதன், ரிஷியின் இந்த கேள்விக்கு வாய் திறந்தார்.
“உனக்காக தானேடா... எல்லாம் உனக்காக தானே!! காலம் போன கடைசில இதையெல்லாம் நாங்க அனுபவிக்கவா இவ்வளவும் பண்றோம்? நீ காலத்துக்கும் சந்தோசமா இருக்கணும்னு தானே இதெல்லாம்?”
“நான் நல்லா இருக்கணும்ன்னு நினைச்சுருந்தா, எனக்கு நீங்க கொடுக்கனும்னு ஆசைபடுறத உங்க உழைப்புல சேர்த்து வச்சுருக்கணும். ராம்க்கு அவங்க அப்பா கஷ்டப்பட்டு சேர்த்த சொத்தை எப்படி நீங்க எனக்காக குடுக்க முடியும்?” என வினவினான் ரிஷி. அவன் கேள்வியில் வாயடைத்து நின்றார் விஸ்வநாதன்.
“என்னடா ரொம்ப தான் சட்டம் பேசுற நீ? நாங்க குடுத்த வாழ்க்கைல தான் நீ இவ்ளோ உசரம் வளர்ந்துருக்க. அதை மறந்துட்டு எங்ககிட்டயே வாயாடாத! எவளையாது கூட்டிட்டு போயி வழக்கம் போல ஊரசுத்து. அதைவிட்டுட்டு பெரியவங்க விஷயத்துல தலையிடாதா... புரிஞ்சுதா?” என்றார் லக்ஷ்மி கறாராய்.
“நான் இவ்ளோ சொல்லியும் உங்களுக்கு புரியவே இல்லல? பணத்துக்காக ஒருத்தரை கொன்னீங்க... இன்னொருதன்ன பாதி பைத்தியமாக்கிடீங்க....! அவனுக்கு இப்போதான் ஒரு வாழ்கை அமைஞ்சுருக்கு... உங்க பணத்தாசையில அதையும் கெடுத்துடாதீங்க அப்பா....” என கெஞ்சினான் ரிஷி.
“அவனுக்கு எல்லாதையும் கொடுத்துட்டு நம்ம ரோட்டுக்கு தான்டா போகணும்... அறிவுகெட்ட தனமா பேசாதா....!!” எகிறினார் லட்சுமி.
“இல்லை அம்மா... ராம் நம்மளை அப்படீல்லாம் விட்டுடமாட்டான். செஞ்ச தப்புக்கு எல்லாம் நம்ம அவன்கிட்ட மன்னிப்பு கேட்டுடுவோம். அவன் ரொம்ப நல்லவன்ம்மா. நம்மளை கண்டிப்பா மன்னிச்சு ஏத்துக்குவான்...”
“அவன்கிட்ட கையகட்டி நிற்க சொல்றியா? அப்படி ஒரு வாழ்கையே எங்களுக்கு தேவையில்லை... அவன் தயவுல நாங்க வாழணும்னு முடிவு பண்ணிருந்தா, அவனோட அப்பாவயே நாங்க கொன்னுருக்கமாட்டோமே!!! எங்களுக்கு தேவை ராஜ வாழ்கை... ராஜாக்கு சேவகம் பண்ணுற வாழ்கை இல்லை... உனக்கு புரியுதா நான் சொல்றது? மரியாதையா வழிய விடு...” என சொன்ன லக்ஷ்மி, தன் மகன் பேசுவதையே பார்த்தபடி நின்ற விஸ்வநாதனின் கரம் பற்றி இழுத்து வாசலுக்கு சென்றார்.
“உங்களுக்கு அவன் குடியிருக்க பேட்டை தெரியும்தானே... நம்ம நேருலையே பார்த்து பேசிட்டு வந்துடுவோம்...” என சொன்னபடி நகர்ந்தார்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க!”
அரைநொடி தாமதித்து பின் திரும்பி பார்க்காமல் மீண்டும் நடந்தனர் இருவரும். லட்சுமி இழுத்த இழுப்பிற்க்கு நடந்தார் விஸ்வநாதன்.
“யார்காக பணம் பணம்ன்னு இப்படி அலையுறீங்களோ!? யார்காக மத்தவங்க உயிரை கூட எடுக்க துணியுறீங்களோ!? அவன்!!!!! உங்க பையன்!!! நீங்க திரும்பி வரும்போது உயிரோட இருக்கமாட்டான்....” என உரக்க கத்தினான் ரிஷிகேஷ்.
“சும்மா பூச்சாண்டி காட்டிட்டு இருக்காத...! எங்களுக்கு நிறைய வேலை இருக்கு... வேலைக்காரங்க எல்லாம் அவுட்அவுஸ்ல இருக்காங்க... உனக்கு பசிச்சா கிச்சென்ல பிரியாணி இருக்கு.. போட்டு சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு... அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்... சரியா?” என அவன் கன்னம் வழித்துவிட்டு மீண்டும் வாசல் நோக்கி சென்றார் இதற்குமுன் எதுவுமே நடவாததுபோல்.
“நில்லுங்க அம்மா....” என கத்திய ரிஷி நேரே கிச்சனுக்கு சென்றான்.
“இப்படி போறப்போவே அபசகுனமா நில்லு நில்லுன்னு சொல்லிட்டு இருக்கியே... போற காரியம் உருப்படுமாடா?” என அவனிடம் கடிந்து கொண்டவர், திரும்பி தன் கணவனிடம், “என்னதான் ஆச்சு உங்களுக்கு? என்னவோ மந்திரிச்சு விட்டமாறியே நிக்குறீங்க?” என்றார்.
அதற்குள் ரிஷி கண்முன் தோன்ற, “என்னடா வேணும் இப்போ?” என்றார் லட்சுமி எரிச்சலாய்.
“நான் சொன்னதை செய்வேன் அம்மா. இப்போ நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போனா, என் கையில இருக்க கத்தியால என்னை நானே அறுத்துப்பேன்...” என கத்தியை தூக்கி காட்டினான் ரிஷி.
சில நொடிகள் அங்கே மௌனம் நிலைத்தது.
“போற வழில நம்ம வீட்டுக்கு ஆம்புலன்ஸ்ஸ வர சொல்லிடுறேன்... இப்போ நாங்க போகணும்....!!” என தீர்க்கமாய் சொல்லிவிட்டு நகர்ந்தார் லக்ஷ்மி.
“அம்மா!!!!” கண்களில் நீர் சிதற, செல்லும் அவரை இயலாமையுடன் பார்த்தான் ரிஷி.
வழியும் கண்ணீரோடு தன் கண்களை இருக்க மூடி மூச்செடுத்தவன், கையில் இருந்த கத்தியை தூக்கி தன் மறுக்கையின் மீது வைத்து, “அம்ம்ம்ம்ம்மா.............” என்ற அலறலுடன் கிழித்துக்கொண்டான். ஆழமாய் இறங்காவிட்டாலும் மேல்தோலை தாண்டி சற்று இறங்கி இருந்தது. வழியும் ரத்தத்தோடு மடிந்து அமர்ந்தவனை கண்டு, தலையில் அடித்தபடி ஓடிவந்தார் லக்ஷ்மி.
“ச்சை... கிளம்புற நேரத்துல நீ வேற எதுக்குடா ஏழறைய கூட்டுற?” என்ற திட்டோடு அவனருகில் வந்தவரை விநோதமாய் பார்த்தான் ரிஷி.
“அப்போ என்னைவிட, என் உயிரை விட உங்களுக்கு இந்த காசு பணம் தான் முக்கியமா போச்சுல்ல? ஏம்மா? என்னை உங்களுக்கு பிடிக்காதா? நான் வேணாமா அம்மா?” என மனதும் உடலும் வழியில் துடிக்க கேட்டான் ரிஷி.
“சும்மா உளரிட்டு இருக்காதடா. பணம் வாழ்க்கைக்கு ரொம்ப அவசியம். அது இல்லனா ரோட்ல போற நாய் கூட நம்மளை மதிக்காது. இதெல்லாம் இப்போ நான் சொன்னா கசப்பா தான் இருக்கும்... போக போக நீயே தெரிஞ்சுக்குவ... உன்னை எதுக்கு வளர்த்து ஆளாக்குனோம்னு எங்களை வருத்தப்பட வச்சுடாத.....” என சொன்னபடி அவன் கையில் துணியை கட்டிவிட்டு தன் கணவரிடம் சென்றார் லக்ஷ்மி.
சோபாவில் அமர்ந்திருந்தவரிடம் “எழுந்துறீங்க.... நேரமாச்சு போலாம்...” என்றார்.
விஸ்வநாதன் எழுந்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டு, “நீங்க வேற உங்க பங்குக்கு என்னை படுத்தாதீங்க... வந்து தொலைங்க. இடம் தெரிஞ்சா நானே கூட போயிருப்பேன்.” என எரிந்து விழுந்தார்.
அப்போதும் அவர் எழுந்துக்கொள்ளாமல் இருப்பதை கண்டு எரிச்சல்மேலிட, அவரிடம் சென்று “இப்போ உங்களுக்கு என்ன கேடு வந்துச்சு?” என கேட்டபடி அவரை உலுக்க, சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தார் சோபாவில்.
“என்னங்கககககக.......”
“அப்பாஆஆஆஆ”
இருவர் குரலும் ஒருசேர ஒலித்தது.
கடற்கரையில்...
கெளதம், “போன்ல யாரு மைதிலி?”
“ரிஷி”
“என்னவாம்??”
“விஷ்வனாதன் ஹாஸ்பிடல்ல இருக்காரு. நாம போகணும்...” என்றாள் எந்த உணர்ச்சியுமின்றி.
“அந்த மூர்த்தி ஹாஸ்பிடல்லையா?” என்றான் சந்தோஷ்.
“ம்ம்ம்...”
“நம்ம ஏன் போணும் அங்க?” என்ற கௌதமிற்கு,
“அவருக்கு ஹார்ட் அட்டாக்காம்” அவள் குரலில் நக்கலும், இதழ்கடையில் ஏளன புன்னகையும் இருந்தது.. இதை நான் எதிர்பார்த்தேன் என்பதைப்போல.