"ச்சீய்ய்"--------------01
ஏறா மேகமெலாம்-
மலை முகட்டில்
முட்டித் தவிப்பது
போலெந்தன்-
தீரா மோகமெலாம்-நின்றன்
முலை முகட்டில்
முட்டித் தவிக்கையில்-
காம்போடு சேர்த்து
காதலையும்
தருவாயா?
--------
02
நின்னொ
டுறவாடிய பொழுதுகள்-வெறுங்
காமங்கலந்து
நிலம் மேலெழுந்த
கானல் நீரல்ல-
காணாது போவதற்கு-அவை
காதல் கலந்து-
நிலம் மேல்விழுந்த
மழைத்துளி!!
-----
03
மஞ்சப்பஞ்சம்
இருப்பதால்- நானென்
மடி கொடுக்கிறேன்-நீயோ
தஞ்சப்பஞ்சம்
காட்டி-
தத்தளிக்க வைக்கிறாய்!!
-----
04
பரிசுத்த
கற்பென்பது-
ஒருவழிப்பாதை.
எனக்கது-நின்
கருவழிப்பாதை!!
---------------
மேற்கண்டதற்காக, "ச்சீய்ய் படவா, என்னடா இது...?" என்றென்னை திட்டி தீர்க்கப்போகும் அநேகருக்குமென் மன்னிப்புகள் சேர்க!!. We are all அடல்ட்ஸ் என்பது ஒருபுறம் இருக்கட்டும். "xes sutarappa" (ரிவர்ஸில் படிக்கவும்) என்பதனை மூளைக்குள் மட்டுமே நம் முன்னோர் வைத்திருந்த காரணத்தால், காமம் பற்றிய விஷயங்களை வள்ளுவனும் கம்பனும் அளவளாவி எழுத முடிந்தது. இன்றோ அது வல்கேரிட்டிக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் தத்தளித்து கொண்டிருக்கிறது. காமத்தின் ஒரே புனிதத்தன்மை யாதெனில், நீங்கள் ஆணோ பெண்ணோ எதுவாயினும், காமம் பற்றிய விஷயங்களை படிக்கையில் யாருங்கள் கழுத்துக்கு மேலான சிந்தனைக்கு (கவனிக்க.. "மேலான") வருகிறாரோ, அவரை மட்டுமே நீங்கள் "காதலோடு கலப்பீர்கள்" என்கிறது காமசூத்திரம்...
மற்றதெல்லாம்... வெறும் "Pleasure" மட்டுமே!!!
-----------------
#Charithraas
ஏறா மேகமெலாம்-
மலை முகட்டில்
முட்டித் தவிப்பது
போலெந்தன்-
தீரா மோகமெலாம்-நின்றன்
முலை முகட்டில்
முட்டித் தவிக்கையில்-
காம்போடு சேர்த்து
காதலையும்
தருவாயா?
--------
02
நின்னொ
டுறவாடிய பொழுதுகள்-வெறுங்
காமங்கலந்து
நிலம் மேலெழுந்த
கானல் நீரல்ல-
காணாது போவதற்கு-அவை
காதல் கலந்து-
நிலம் மேல்விழுந்த
மழைத்துளி!!
-----
03
மஞ்சப்பஞ்சம்
இருப்பதால்- நானென்
மடி கொடுக்கிறேன்-நீயோ
தஞ்சப்பஞ்சம்
காட்டி-
தத்தளிக்க வைக்கிறாய்!!
-----
04
பரிசுத்த
கற்பென்பது-
ஒருவழிப்பாதை.
எனக்கது-நின்
கருவழிப்பாதை!!
---------------
மேற்கண்டதற்காக, "ச்சீய்ய் படவா, என்னடா இது...?" என்றென்னை திட்டி தீர்க்கப்போகும் அநேகருக்குமென் மன்னிப்புகள் சேர்க!!. We are all அடல்ட்ஸ் என்பது ஒருபுறம் இருக்கட்டும். "xes sutarappa" (ரிவர்ஸில் படிக்கவும்) என்பதனை மூளைக்குள் மட்டுமே நம் முன்னோர் வைத்திருந்த காரணத்தால், காமம் பற்றிய விஷயங்களை வள்ளுவனும் கம்பனும் அளவளாவி எழுத முடிந்தது. இன்றோ அது வல்கேரிட்டிக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாய் தத்தளித்து கொண்டிருக்கிறது. காமத்தின் ஒரே புனிதத்தன்மை யாதெனில், நீங்கள் ஆணோ பெண்ணோ எதுவாயினும், காமம் பற்றிய விஷயங்களை படிக்கையில் யாருங்கள் கழுத்துக்கு மேலான சிந்தனைக்கு (கவனிக்க.. "மேலான") வருகிறாரோ, அவரை மட்டுமே நீங்கள் "காதலோடு கலப்பீர்கள்" என்கிறது காமசூத்திரம்...
மற்றதெல்லாம்... வெறும் "Pleasure" மட்டுமே!!!
-----------------
#Charithraas