காதல் 18:
பதினொரு மணிவாக்கில் தன் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து உளுந்து உடைத்துக் கொண்டிருந்தார் மதுரவல்லி. அவரைப் பார்க்க அவரது மகன்கள் ரவிச்சந்திரனும் சிவச்சந்திரனும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
தாய் வேலை செய்வதைக் கண்ட ரவி,
“என்னம்மா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்ற… மத்த பொம்பளைங்களாம் எங்க…?” எனத் தாயின் மீதுள்ள அக்கறையில் கத்த,
“டேய்.. ரவி.. சும்மா இருக்கேன்னு நான் தான் இதை எடுத்துட்டு வந்தேன்.. சரி நீங்க இரண்டு பேரும் என்னடா இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்திருக்கீங்க…?” என விசாரிக்க
“சிவா சொல்லு..” எனயஜ் தம்பியை ரவிச்சந்திரன் ஊக்க,
“அது அம்மா…. சின்ன மாப்பிள்ளை போன் செஞ்சிருந்தார்மா..”
“அப்படியா.. மது எப்படி இருக்காளாம்டா… நல்ல இருக்காளா..?”
“மது நல்லா இருக்காம்மா.. மாப்பிள்ளை ஒரு விசயம் சொன்னாரு.. அதைப் பத்திப் பேசத்தான் நானும் அண்ணனும் வந்தோம்…”
“சொல்லுங்கடா… ”
“அம்மா… மதுவோட நாத்தனார் அதான் கீர்த்திகா அந்த பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.. மாப்பிள்ளைத் தம்பிக்கு அவர் தங்கச்சிக்கு நம்ம சரணைப் பார்க்க விருப்பம்… அதான் பேசிட்டுச் சொல்லுங்கன்னு சொன்னாரு… அண்ணன் கிட்ட பேசினார்… நாங்க
வீட்டில பேசிட்டு சொல்றோம்னு சொன்னோம்மா..” என சிவா சொல்ல
மதுரவல்லி மகன்களைப் பார்த்து, “நீங்க என்னடா நினைக்கிறிங்க…?” எனக் கேட்க
ரவி, “அம்மா… சரணுக்கு இப்பக் கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு செய்யலாம்னு தான் நினைச்சிட்டு இருக்கேன் ….” எனச் சொல்ல
“இதனால மாப்பிள்ளை எதாவது தப்பா எடுத்துக்குவாரோன்னு வேற பயமா இருக்கு..” எனக் கவலையோடு சொல்ல
“அதனால என்னடா…?... நம்ம பிள்ளைக்கு எப்ப விருப்பமோ அப்ப தான் செய்ய முடியும்..? நான் கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்றேன் டா.. பொம்பளை புள்ளை விஷயம் சட்டுப் புட்டுனு முடிவு சொல்ல கூடாது.. அவங்க பொண்ணை வேண்டாம்னு சொன்னா என்ன குறைன்னு நினைக்கத் தோணும்… நமக்கா இருந்தாலும் அப்படித்தான்… நீ முதல்ல ஜாதகம் கேளு…” என மதுரவல்லி கூற
“ஏம்மா… அண்ணனுக்கும் சரி எனக்கும் சரி இப்ப சரணுக்குக் கல்யாணம் செய்ய இஷ்டம் இல்லை… அவனே இப்ப தான் புத்தி வந்து ஆபிஸ்க்கு வந்திருக்கான்…. அதனால் எதுக்கும்மா ஜாதகம் எல்லா வாங்கிட்டு…?” என சிவா சொல்ல
“இல்லடா சின்னவனே…. ஜாதகம் நல்லா இருந்தா பார்ப்போம்… அதற்கு அப்புறம் மேற்கொண்டு பேசலாம்… இப்ப இந்தப் பேச்சை விடுங்க..” என்றதோடு அவ்விஷயத்தை முடித்துக் கொண்டார்.
சென்னை..
மருத்துவமனைக்குச் சென்று வந்த அன்று இரவு மதுரவசனி ராஜாவிடம்,
“ என்ன செஞ்சிங்க… சரண் விசயமா வீட்ல பேசுனிங்களா..?” எனக் கேட்க
“பேசியிருக்கேன்…. உங்க பெரியப்பா கீது ஜாதகம் கேட்டார்.. நானும் மெயில் பண்ணிருக்கேன்…. பார்ப்போம்…” என்றான்.
“அப்படி ஒத்துக்கலன்னா…?” என சந்தேகமாய் மது இழுக்க
“ஒத்துக்க வைப்பேன்.. அப்படியும் முடியலன்னா.. தூக்கிட வேண்டியதுதான்…” என்றான் அவளை ஆழமாய்ப் பார்த்தவாறே.
“தூக்குவிங்க… உங்களுக்கு என்ன வேலை…?”
“பின்ன என் தங்கச்சி ஆசையை நிறைவேத்தறத விட என்ன வேலை எனக்கு…?” என்றவனிடம்
“அதான் ஊருக்குத் தெரியுமே… ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. மறந்துட்டேன்… ஹம்சா தெரியுமா…?”
“ஹ்ம்ம்.. உன் ப்ரண்ட் தானே.. உன் கூட நம்ம ஆபிஸ்ல வேலைப் பார்த்த பொண்ணு…..”
“ஹ்ம்ம்.. ஆமா அவளை உங்க தம்பி லவ் பண்றார்..” எனச் சொல்லவும்
“வாட்…??” என அவன் அதிர்ச்சியோடு கேட்க
“ஆமா… அவருக்கு ஆபிஸ்ல நாங்க வொர்க் பண்ணப்போவே அவளை பிடிக்கும்.. அவ கிட்டையும் சொல்லிட்டார்.. ஆனா அவ ஒத்துக்கல… இப்ப அவளுக்கு வரன் பார்க்கிறாங்க… நான் அவ கூட இரண்டு நாள் முன்னாடி ஃபோன் செஞ்சிப் பேசினப்போ உங்க தம்பி எங்கிட்ட வந்து ஹம்சாவுக்கு கல்யாணம் பார்க்கிறாங்களான்னு கேட்டார்.. நானும் ஆமா சொன்னேன்.. பாவம் அவர் முகமே சரியில்லை…” எனச் சொல்லவும்
“ஓஹ்… இவன் ஆபிஸ்லயே ரூட் விட்டிருக்கானா..?” எனக் கிண்டல் போல் சொல்லவும்
“நீங்க மட்டும் என்னவாம்…?”
“ஹே..!! நான் ஒன்னும் உன் அழகுல மயங்கல… அப்படி மயங்கிறதா இருந்தா ஆபிஸ்ல உன்னை எதுவுமே சொல்லியிருக்க மாட்டேனே.. ஹாஸ்பிட்டல தான் நான் கவுந்துட்டேன்… அதுக்குக் காரணம் இந்த கண்ணு… அதுல தெரிஞ்ச அன்பும் எனக்கான அக்கறையும்…” என அவள் கண்களை வருடிச் சொல்ல,
“அப்போ நான் அழகா இல்லன்னாலும் நீங்க காதலிச்சி இருப்பீங்க…?” எனக் கேள்வி கேட்க
“அன்பான கண்ணுக்கு எல்லாமே அழகு தான் மது… அழகுன்றது ஹோட்டல் சாப்பாடு மாதிரி.. கவர்ச்சியா இருக்கும்.. டேஸ்டா இருக்கும்… ஆனா தினமும் சாப்பிட முடியுமா… ஒரு கட்டத்தில் அலுத்திடும்.. ஆனா அன்பு அம்மா சாப்பாடு மாதிரி… ஆரம்பத்துல புரியாது…. ஆனா ஆயுசுக்கும் அது தான் நிலைச்சு நிற்கும்…” என வசனம் பேச
“ஆஹான்… ரொம்ப நல்லா பேசுறிங்க… சரி..இ ப்ப என்ன என் ப்ரண்ட் ஹம்சாவையும் தூக்க ப்ளானா…? ஏன்னா அவ கண்டிப்பா அவங்க அம்மாவை மீற மாட்டா… அப்படியே நீங்க கட்டாயப்படுத்தி எதாவது செஞ்சாலும் அவங்க லைஃப் நல்லா இருக்காது… அதனால் பார்த்து செய்யுங்க.. உங்க தம்பி தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதாவது அதிகப்ரசங்கித்தனம் செய்யாதிங்க…என்ன..?” என அவள் மிரட்டலாக சொல்ல
“சரி…. சரிடி பொண்டாட்டி.. நீ முதல்ல இப்படி டென்ஷனாகிறதை விடு… தூங்கு..” என்றபடி அவள் காலைப் பிடித்து அமுக்கி விட
“அய்யோ. விடுங்க.. எனக்கு ஏற்கனவே வலிக்குது…” என அவள் கத்த
“மூச்… வலிக்குதுன்னு தான் டி அமுக்கிறேன்…. நீ படு…” என அவன் அதட்ட
“ப்பா… புள்ள மேல என்ன பாசம்..?” என அவள் வம்பிழுக்க
“புள்ள மேல உள்ள பாசம் இல்ல… என் புள்ளயோட காலா இது.. உன்னோடது தானே.. நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்ட…. சும்மா பேசாம படு… அம்மா கிட்ட வலிக்குதுனு சொல்லி வெந்நீர்ல வைச்சும் குறையல தானே.. நான் பிடிச்சு விடுறேன்… தூங்கு நீ..”
“சாரி…” என அவள் முணுமுணுக்க
“நல்லா பேசிட்டு எந்த வெங்காயத்துக்கு சாரி சொல்ற.. படுடி.. இம்சை” எனத் திட்ட அவளுக்குமே மசக்கையில் உடல்சோர்வைத் தாங்க இயலாது கண்ணயர்ந்தாள்.
இன்னமும் என் அன்பை இவள் அடிமைத்தனமாய் நினைக்கிறாளோ என ராஜாவுக்குத் தான் யோசனையாக இருந்தது.
**************************************************************
கீர்த்தியை சரணுக்குப் பார்க்க மதுரவல்லி சம்மதம் தெரிவித்து விட்டார். உயிருடன் இருக்கும்போதே தன் பேரப்பிள்ளைகள் கல்யாணம் செய்வதைப் பார்க்கவே விருப்பம் என்றவர் ஜாதகமும் பொருந்தி வர, நிச்சயம் செய்ய சம்மதித்தார். அதனால் மகன்களும் தாய் சொல்லத் தட்டாமல் தலையாட்டினர். அடுத்த நாள் மாலையில் ரவிச்சந்திரன் ராஜ் நந்தனுக்குப் போன் செய்தார்.
“மாப்பிள்ளை… இரண்டு பேர் ஜாதகமும் நல்லா இருக்குன்னு எங்க ஜோசியர் சொல்லிட்டார்…. ஆனா இன்னும் ஒரு வருஷமாவது போகட்டும்.. சரணுக்கும் கொஞ்சம் பொறுப்பு வரட்டும்.. இப்ப தான் அவனே கொஞ்ச நாளா ஆபிஸ் வரான்.. அதனால் வேணும்னா நிச்சயத்தை செஞ்சுட்டு ஒரு வருஷம் போனதும் கல்யாணம் செய்யலாம்.. என்ன சொல்றிங்க மாப்பிள்ளை..?” எனக் கேட்க
அவர்கள் இந்தளவு பேசுவதே பெரிது என்றும் அவர் கூற்றில் இருந்த நியாயமும் புரிய “சரிங்க மாமா.. நீங்க சொல்ற யோசனை நல்லா தான் இருக்கு… நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்.. மாமா அப்படியே மது ப்ரண்ட் ஹம்சா ஜாதகம் வாங்கி அனுப்புறீங்களா.. தீபனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்காம்.. மதுவும் நல்ல பொண்ணு தான் சொல்றா.. அதான்..?” எனக் கேட்க
“அதுக்கென்ன தம்பி… ஹம்சா நம்ம பொண்ணு.என் பங்காளி கந்தசாமி பொண்ணு தான்.. ரொம்ப அமைதியான பொண்ணு… இப்ப அந்த புள்ளைக்கும் வரன் தான் பார்க்கிறாவோ… நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்…” என்று போனை வைத்தார்.
மாமனாரிடம் பேசி முடித்தவன் நேரே தந்தையைத் தனியாகச் சென்று அவர் அறையில் சந்தித்தான்.
அவன் எல்லா விஷயத்தையும் அவரிடம் சொல்ல,
“ஏன் டா… இந்த பொண்ணுக்கு ஏன் இந்த வேலை.. சம்பந்தி வீட்ல என்னை நினைப்பாங்க…” எனக் கத்த
“அப்பா… எதுக்கு இப்படி கோவப்படுறீங்க… நான் ஆசைப்பட்டேன்னு தானே மதுவைப் பொண்ணுக் கேட்டுப் போனிங்க.. அதுவும் நான் உங்கக் கூட நல்ல ரிலேஷன்ஷிப்ல இல்லாதப்பவே… நான் பையன்… அவ பொண்ணுங்கறதால அவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிற உரிமையைப் பறிக்கக் கூடாதுப்பா.. அவ எங்கிட்ட வந்து தானே சொன்னா.. அவ விருப்பத்தை சொல்ல அவளுக்கு உரிமை இருக்குப்பா.. நம்ம கருத்தை அடுத்தவங்க மேல திணிக்கறது ரொம்ப தப்பு.. அவ ஒருத்தனைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா நாம விசாரிச்சு நல்லவனா இருந்தா கட்டி வைக்கனும்.. அதான் நம்ம கடமை…” என அழுத்தமாகப் பேச
பதினொரு மணிவாக்கில் தன் வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து உளுந்து உடைத்துக் கொண்டிருந்தார் மதுரவல்லி. அவரைப் பார்க்க அவரது மகன்கள் ரவிச்சந்திரனும் சிவச்சந்திரனும் வீட்டிற்கு வந்திருந்தனர்.
தாய் வேலை செய்வதைக் கண்ட ரவி,
“என்னம்மா நீ எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்ற… மத்த பொம்பளைங்களாம் எங்க…?” எனத் தாயின் மீதுள்ள அக்கறையில் கத்த,
“டேய்.. ரவி.. சும்மா இருக்கேன்னு நான் தான் இதை எடுத்துட்டு வந்தேன்.. சரி நீங்க இரண்டு பேரும் என்னடா இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்திருக்கீங்க…?” என விசாரிக்க
“சிவா சொல்லு..” எனயஜ் தம்பியை ரவிச்சந்திரன் ஊக்க,
“அது அம்மா…. சின்ன மாப்பிள்ளை போன் செஞ்சிருந்தார்மா..”
“அப்படியா.. மது எப்படி இருக்காளாம்டா… நல்ல இருக்காளா..?”
“மது நல்லா இருக்காம்மா.. மாப்பிள்ளை ஒரு விசயம் சொன்னாரு.. அதைப் பத்திப் பேசத்தான் நானும் அண்ணனும் வந்தோம்…”
“சொல்லுங்கடா… ”
“அம்மா… மதுவோட நாத்தனார் அதான் கீர்த்திகா அந்த பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.. மாப்பிள்ளைத் தம்பிக்கு அவர் தங்கச்சிக்கு நம்ம சரணைப் பார்க்க விருப்பம்… அதான் பேசிட்டுச் சொல்லுங்கன்னு சொன்னாரு… அண்ணன் கிட்ட பேசினார்… நாங்க
வீட்டில பேசிட்டு சொல்றோம்னு சொன்னோம்மா..” என சிவா சொல்ல
மதுரவல்லி மகன்களைப் பார்த்து, “நீங்க என்னடா நினைக்கிறிங்க…?” எனக் கேட்க
ரவி, “அம்மா… சரணுக்கு இப்பக் கல்யாணத்துக்கு என்ன அவசரம்..? இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு செய்யலாம்னு தான் நினைச்சிட்டு இருக்கேன் ….” எனச் சொல்ல
“இதனால மாப்பிள்ளை எதாவது தப்பா எடுத்துக்குவாரோன்னு வேற பயமா இருக்கு..” எனக் கவலையோடு சொல்ல
“அதனால என்னடா…?... நம்ம பிள்ளைக்கு எப்ப விருப்பமோ அப்ப தான் செய்ய முடியும்..? நான் கொஞ்சம் யோசனை செஞ்சு சொல்றேன் டா.. பொம்பளை புள்ளை விஷயம் சட்டுப் புட்டுனு முடிவு சொல்ல கூடாது.. அவங்க பொண்ணை வேண்டாம்னு சொன்னா என்ன குறைன்னு நினைக்கத் தோணும்… நமக்கா இருந்தாலும் அப்படித்தான்… நீ முதல்ல ஜாதகம் கேளு…” என மதுரவல்லி கூற
“ஏம்மா… அண்ணனுக்கும் சரி எனக்கும் சரி இப்ப சரணுக்குக் கல்யாணம் செய்ய இஷ்டம் இல்லை… அவனே இப்ப தான் புத்தி வந்து ஆபிஸ்க்கு வந்திருக்கான்…. அதனால் எதுக்கும்மா ஜாதகம் எல்லா வாங்கிட்டு…?” என சிவா சொல்ல
“இல்லடா சின்னவனே…. ஜாதகம் நல்லா இருந்தா பார்ப்போம்… அதற்கு அப்புறம் மேற்கொண்டு பேசலாம்… இப்ப இந்தப் பேச்சை விடுங்க..” என்றதோடு அவ்விஷயத்தை முடித்துக் கொண்டார்.
சென்னை..
மருத்துவமனைக்குச் சென்று வந்த அன்று இரவு மதுரவசனி ராஜாவிடம்,
“ என்ன செஞ்சிங்க… சரண் விசயமா வீட்ல பேசுனிங்களா..?” எனக் கேட்க
“பேசியிருக்கேன்…. உங்க பெரியப்பா கீது ஜாதகம் கேட்டார்.. நானும் மெயில் பண்ணிருக்கேன்…. பார்ப்போம்…” என்றான்.
“அப்படி ஒத்துக்கலன்னா…?” என சந்தேகமாய் மது இழுக்க
“ஒத்துக்க வைப்பேன்.. அப்படியும் முடியலன்னா.. தூக்கிட வேண்டியதுதான்…” என்றான் அவளை ஆழமாய்ப் பார்த்தவாறே.
“தூக்குவிங்க… உங்களுக்கு என்ன வேலை…?”
“பின்ன என் தங்கச்சி ஆசையை நிறைவேத்தறத விட என்ன வேலை எனக்கு…?” என்றவனிடம்
“அதான் ஊருக்குத் தெரியுமே… ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. மறந்துட்டேன்… ஹம்சா தெரியுமா…?”
“ஹ்ம்ம்.. உன் ப்ரண்ட் தானே.. உன் கூட நம்ம ஆபிஸ்ல வேலைப் பார்த்த பொண்ணு…..”
“ஹ்ம்ம்.. ஆமா அவளை உங்க தம்பி லவ் பண்றார்..” எனச் சொல்லவும்
“வாட்…??” என அவன் அதிர்ச்சியோடு கேட்க
“ஆமா… அவருக்கு ஆபிஸ்ல நாங்க வொர்க் பண்ணப்போவே அவளை பிடிக்கும்.. அவ கிட்டையும் சொல்லிட்டார்.. ஆனா அவ ஒத்துக்கல… இப்ப அவளுக்கு வரன் பார்க்கிறாங்க… நான் அவ கூட இரண்டு நாள் முன்னாடி ஃபோன் செஞ்சிப் பேசினப்போ உங்க தம்பி எங்கிட்ட வந்து ஹம்சாவுக்கு கல்யாணம் பார்க்கிறாங்களான்னு கேட்டார்.. நானும் ஆமா சொன்னேன்.. பாவம் அவர் முகமே சரியில்லை…” எனச் சொல்லவும்
“ஓஹ்… இவன் ஆபிஸ்லயே ரூட் விட்டிருக்கானா..?” எனக் கிண்டல் போல் சொல்லவும்
“நீங்க மட்டும் என்னவாம்…?”
“ஹே..!! நான் ஒன்னும் உன் அழகுல மயங்கல… அப்படி மயங்கிறதா இருந்தா ஆபிஸ்ல உன்னை எதுவுமே சொல்லியிருக்க மாட்டேனே.. ஹாஸ்பிட்டல தான் நான் கவுந்துட்டேன்… அதுக்குக் காரணம் இந்த கண்ணு… அதுல தெரிஞ்ச அன்பும் எனக்கான அக்கறையும்…” என அவள் கண்களை வருடிச் சொல்ல,
“அப்போ நான் அழகா இல்லன்னாலும் நீங்க காதலிச்சி இருப்பீங்க…?” எனக் கேள்வி கேட்க
“அன்பான கண்ணுக்கு எல்லாமே அழகு தான் மது… அழகுன்றது ஹோட்டல் சாப்பாடு மாதிரி.. கவர்ச்சியா இருக்கும்.. டேஸ்டா இருக்கும்… ஆனா தினமும் சாப்பிட முடியுமா… ஒரு கட்டத்தில் அலுத்திடும்.. ஆனா அன்பு அம்மா சாப்பாடு மாதிரி… ஆரம்பத்துல புரியாது…. ஆனா ஆயுசுக்கும் அது தான் நிலைச்சு நிற்கும்…” என வசனம் பேச
“ஆஹான்… ரொம்ப நல்லா பேசுறிங்க… சரி..இ ப்ப என்ன என் ப்ரண்ட் ஹம்சாவையும் தூக்க ப்ளானா…? ஏன்னா அவ கண்டிப்பா அவங்க அம்மாவை மீற மாட்டா… அப்படியே நீங்க கட்டாயப்படுத்தி எதாவது செஞ்சாலும் அவங்க லைஃப் நல்லா இருக்காது… அதனால் பார்த்து செய்யுங்க.. உங்க தம்பி தங்கச்சி மேல இருக்க பாசத்துல எதாவது அதிகப்ரசங்கித்தனம் செய்யாதிங்க…என்ன..?” என அவள் மிரட்டலாக சொல்ல
“சரி…. சரிடி பொண்டாட்டி.. நீ முதல்ல இப்படி டென்ஷனாகிறதை விடு… தூங்கு..” என்றபடி அவள் காலைப் பிடித்து அமுக்கி விட
“அய்யோ. விடுங்க.. எனக்கு ஏற்கனவே வலிக்குது…” என அவள் கத்த
“மூச்… வலிக்குதுன்னு தான் டி அமுக்கிறேன்…. நீ படு…” என அவன் அதட்ட
“ப்பா… புள்ள மேல என்ன பாசம்..?” என அவள் வம்பிழுக்க
“புள்ள மேல உள்ள பாசம் இல்ல… என் புள்ளயோட காலா இது.. உன்னோடது தானே.. நீ என்னைப் புரிஞ்சிக்கவே மாட்ட…. சும்மா பேசாம படு… அம்மா கிட்ட வலிக்குதுனு சொல்லி வெந்நீர்ல வைச்சும் குறையல தானே.. நான் பிடிச்சு விடுறேன்… தூங்கு நீ..”
“சாரி…” என அவள் முணுமுணுக்க
“நல்லா பேசிட்டு எந்த வெங்காயத்துக்கு சாரி சொல்ற.. படுடி.. இம்சை” எனத் திட்ட அவளுக்குமே மசக்கையில் உடல்சோர்வைத் தாங்க இயலாது கண்ணயர்ந்தாள்.
இன்னமும் என் அன்பை இவள் அடிமைத்தனமாய் நினைக்கிறாளோ என ராஜாவுக்குத் தான் யோசனையாக இருந்தது.
**************************************************************
கீர்த்தியை சரணுக்குப் பார்க்க மதுரவல்லி சம்மதம் தெரிவித்து விட்டார். உயிருடன் இருக்கும்போதே தன் பேரப்பிள்ளைகள் கல்யாணம் செய்வதைப் பார்க்கவே விருப்பம் என்றவர் ஜாதகமும் பொருந்தி வர, நிச்சயம் செய்ய சம்மதித்தார். அதனால் மகன்களும் தாய் சொல்லத் தட்டாமல் தலையாட்டினர். அடுத்த நாள் மாலையில் ரவிச்சந்திரன் ராஜ் நந்தனுக்குப் போன் செய்தார்.
“மாப்பிள்ளை… இரண்டு பேர் ஜாதகமும் நல்லா இருக்குன்னு எங்க ஜோசியர் சொல்லிட்டார்…. ஆனா இன்னும் ஒரு வருஷமாவது போகட்டும்.. சரணுக்கும் கொஞ்சம் பொறுப்பு வரட்டும்.. இப்ப தான் அவனே கொஞ்ச நாளா ஆபிஸ் வரான்.. அதனால் வேணும்னா நிச்சயத்தை செஞ்சுட்டு ஒரு வருஷம் போனதும் கல்யாணம் செய்யலாம்.. என்ன சொல்றிங்க மாப்பிள்ளை..?” எனக் கேட்க
அவர்கள் இந்தளவு பேசுவதே பெரிது என்றும் அவர் கூற்றில் இருந்த நியாயமும் புரிய “சரிங்க மாமா.. நீங்க சொல்ற யோசனை நல்லா தான் இருக்கு… நான் வீட்ல பேசிட்டு சொல்றேன்.. மாமா அப்படியே மது ப்ரண்ட் ஹம்சா ஜாதகம் வாங்கி அனுப்புறீங்களா.. தீபனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்காம்.. மதுவும் நல்ல பொண்ணு தான் சொல்றா.. அதான்..?” எனக் கேட்க
“அதுக்கென்ன தம்பி… ஹம்சா நம்ம பொண்ணு.என் பங்காளி கந்தசாமி பொண்ணு தான்.. ரொம்ப அமைதியான பொண்ணு… இப்ப அந்த புள்ளைக்கும் வரன் தான் பார்க்கிறாவோ… நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்…” என்று போனை வைத்தார்.
மாமனாரிடம் பேசி முடித்தவன் நேரே தந்தையைத் தனியாகச் சென்று அவர் அறையில் சந்தித்தான்.
அவன் எல்லா விஷயத்தையும் அவரிடம் சொல்ல,
“ஏன் டா… இந்த பொண்ணுக்கு ஏன் இந்த வேலை.. சம்பந்தி வீட்ல என்னை நினைப்பாங்க…” எனக் கத்த
“அப்பா… எதுக்கு இப்படி கோவப்படுறீங்க… நான் ஆசைப்பட்டேன்னு தானே மதுவைப் பொண்ணுக் கேட்டுப் போனிங்க.. அதுவும் நான் உங்கக் கூட நல்ல ரிலேஷன்ஷிப்ல இல்லாதப்பவே… நான் பையன்… அவ பொண்ணுங்கறதால அவ வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிற உரிமையைப் பறிக்கக் கூடாதுப்பா.. அவ எங்கிட்ட வந்து தானே சொன்னா.. அவ விருப்பத்தை சொல்ல அவளுக்கு உரிமை இருக்குப்பா.. நம்ம கருத்தை அடுத்தவங்க மேல திணிக்கறது ரொம்ப தப்பு.. அவ ஒருத்தனைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா நாம விசாரிச்சு நல்லவனா இருந்தா கட்டி வைக்கனும்.. அதான் நம்ம கடமை…” என அழுத்தமாகப் பேச