Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரம்யா ராஜன்'s நீயின்றி வாழ்வேனா.......

Advertisement

Joher

Well-known member
Member
ரம்யா ராஜன்'s நீயின்றி வாழ்வேனா......


ராஜ்மோகன் சந்தானம் தொழில் முறை எதிரிகள் அரசியலிலும் கூட...... வேறு வேறு இனம்..... பிள்ளைகள் ரிஷி & வெற்றி அதைவிட அதிகமா மோதிக்கொள்வார்கள்......
ஊருல ஏலம் எடுப்பதில் போட்டியில் ரிஷியை அடிக்க வெற்றி தன் அடியாட்களிடம் பேசுவதை கேட்கும் வெற்றி தங்கை சாதனா ரிஷியிடம் சொல்ல அவளை ஆயுதமா வைத்து தப்பிக்கிறான் ரிஷி.......
வெற்றியிடம் தப்பித்து பத்திரிகாரனிடம் சிக்கி அடுத்த நாள் பத்திரிகையில் எதிரி வீட்டு பிள்ளைகளின் காதல் னு போட்டு ரிஷி சாதனா போட்டோ வந்துவிடுகிறது.......
பார்த்த வெற்றி பத்திரிகைகாரனை புரட்டியெடுக்க படையோடு கிளம்ப அங்கேயே ரிஷி அதே வேலையை செய்கிறான்...... கடுப்பாகும் வெற்றி ரிஷியோடு மோத அப்பாக்கள் வந்து பிள்ளைகளை பிரிக்கிறார்கள்........
மோதலோடு போகும் பையன்களை இணைக்க கட்சி மூலம் செக் வருது..... அரசியல் லாப கூட்டணிக்காக பத்திரிகை செய்தியை உண்மையாக்க இரண்டு கட்சிகளும் ராம் மோகன் சந்தானத்திடம் சம்பந்தியாகிவிடுமாறு பேச ரிஷி அம்மா உடனே ஓகே சொல்லிவிடுகிறார்கள்....... ரிஷியின் காதலி நடிகை நேஹாவிடம் இருந்து பையனை மீட்க சாதனாவோடான கல்யாணம் கேடயமாகுது.......
ஆனால் ரிஷி காதல் பற்றி தெரிந்த வெற்றி கல்யாணம் விஷயம் தெரிந்ததும் தாம் தூமென்று குதிக்க சந்தானம் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்தால் ரிஷியால் எதுவும் பண்ணமுடியாதென்று யோசனை கூற இரு திருமணமும் முடிவாகி அதை பத்திரிகையில் பார்த்து தெரிந்துகொள்கிறன் ரிஷி......
கோபமா வீட்டில் கேட்கும் போது எல்லா முடிவாகிவிட நேஹாவை தேடி போகிறான்..... நேஹாவின் லட்சியம் தெரிந்து சுவற்றில் அடித்த பந்தாக வந்து சாதனவையும் அவள் அண்ணன் வெற்றியையும் பழிவாங்கலாம் னு நினைத்து கல்யாணத்திற்கு சம்மதம் சொல்கிறான்.....
ரிஷி சாதனா வெற்றி ப்ரீத்தா கல்யாணத்தில் யாரு யாரை பழிவாங்கினாங்க..... ரிஷி சாதனா சண்டை முடிவுக்கு வந்ததா??? நேஹா ரிஷி காதல் என்னாச்சு...... இதெல்லாம் கதையில்.....
கதை நல்லா இருக்கு.......
 
Top