Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரஞ்சிதாவின் ராம் வெட்ஸ் சீதா -4

Advertisement

Ranjitha

Member
Member
ராம் வெட்ஸ் சீதா -4

ராமும் சீதாவும் மயக்கநிலையில் இருப்பதை கூட தெரியாமல் அவர்கள் வேணுமென்றே கண்ணை மூடி தூங்குவது போல் நடிக்கிறார்கள் என்ன ராதாவும்,முருகேசுயும் தப்பு கணக்கு போட்டு கொண்டு "அடேய்ய்ஈஈஈ ராமு,எழுந்து தொலைய்யேன் டா, இந்த கருமத்தைலாம் பாக்கணும் ன்னு என் தலையெழுத்து, எல்லாம் அந்த பாம்பை சொல்லணும், உங்க ரெண்டு பேரையும் கட்டிபுடிக்க வச்சிட்டு அது நேக்கா எஸ்கேப் ஆகிடுச்சு,"என்ற முருகேசுவை தொடர்ந்து ஆரம்பித்தாள் ராதா.

"அடியேய் சீதா,அந்த வெள்ளை கொரங்கு அங்குட்டு தள்ளி விட்டு எழுந்துரு டி,என்ன இது ரெண்டு வாயும் ஒண்ணா சேர்ந்து இருக்கு,இதுக்கு பேர் தான் உதடு முத்தமோ,டிவிலலாம் வருமே அதுவா இது ச்சே கருமம் அவன் எச்சியை ஏன் டி நீ வாங்கிட்டு கம்முனு தூங்குற "என்றவள் மேலும் முருகேசனிடம் திரும்பி,

"ஏலேய் மாங்கா திருட்டு கருக்கொரங்கு, உன் மண்டைய உடைக்கலாம் ன்னு வந்தா,இப்படி ஆகிடுச்சு,சரி உன்னைய நான் மன்னிச்சி விடறேன்,நீ அந்த வெள்ளை கொரங்க அப்படி புடிச்சி இழு,நான் என் சீதாவை இங்குட்டு புடிச்சி இழுக்குறேன் "என்றவளை பார்த்த முருகேசனுக்கோ கோவம் தலைக்கேறியது..

"இந்தா என்னைய வேணா கொரங்கு ன்னு சொல்லு,ஆனா என் நண்பனை கொரங்குன்னு சொன்ன,பேச வாய் இருக்காது சொல்லிட்டேன், மூஞ்ச பாரு நல்லா அடுப்பு கரிகலருல உன்னைய பார்த்தாலே எனக்கு குமட்டிகிட்டு வருது என்றவன் ராதாவை பிடித்து கீழே தள்ளி விட்டு, ராமகிருஷ்ணனிடம் வந்து அவனின் கையை பிடித்து இழுக்கும் போது தான் தெரிந்தது,அவன் நண்பன் நினைவு இல்லாமல் மயக்கத்தில் இருக்கிறானென்று.

உடனே ஓடிப்போய் அங்கு வாய்க்காலில் ஓடும் நீரை கையில் எடுத்துக்கொண்டு வந்து நண்பனின் முகத்தில் தெளித்தான் முருகேசு.

சில்லென்று தண்ணீர் பட்டதும் விழிகளை பொறுமையாக திறந்த ராமின் பார்வை மயக்கத்தில் இருந்த சீதாவின் மீது பட்டது.

உடனே முருகேசு "அப்பாடா, நம்ம ராமுக்கு ஏதுமே இல்லை, டேய் ராமு எழுந்து வா டா நம்ம வூட்டுக்கு போவோம் என்று அவனின் கரங்களை பிடித்து தூக்கிவிட்டவன் அங்கு இருந்த ராதாவை பார்த்து, "உன் பிரண்ட் மயக்கத்துல இருக்கு,போ போயி அங்க வாய்க்கால்ல தண்ணீர் ஓடுது அதை எடுத்துட்டு வந்து முகத்துல தெளிச்சி,அவளை கூப்பிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் சேரற வழியை பாரு "என்றவன் ராமின் தோளில் கையை போட்டுகொண்டு அவர்கள் சைக்கிள் இருக்குமிடத்துக்கு வந்தவன் அதை எடுத்து கொண்டு ராதாவை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு சென்றான் முருகேசு..

அவர்கள் சென்ற பிறகு முருகேசு சொன்னதை போல் வாய்க்காலில் இருந்த நீரைக் கொண்டு சீதாவின் சிவந்து இருந்த முகத்தில் தெளித்தவள்,அவளின் கன்னத்தை தட்டி எழுப்பினாள் ராதா.

அவளின் தோழி சீதாவோ விழிகள் திறந்ததும் அங்கு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ராதாவிடம் திரும்பி "ராதா அந்த பாம்பு எங்கே இருக்கு, ஓடி போயிடுச்சா, ஆமா அந்த பெரிய பள்ளிக்கூடத்து பசங்க மண்டையை ஒடைச்சியா,ரத்தம் அதிகமா வந்துச்சா "என்று கூறியவளை பார்த்து திகைத்தது என்னவோ ராதா தான்.

"ஏய் சீதா,என்னாச்சு உனக்கு, ஏன் இப்படி ஏதோ ஏதோ பேசற,அந்த பாம்பு ஓடி போயிடுச்சி, அவனுங்க மண்டையை உடைக்கறதுக்கு முன்னாடியே நீ தான் பாம்பு பாம்பு ன்னு கத்தி,அவனுங்களை இங்க வரவச்சி,அதுல அந்த ராமகிருஷ்ணன் வேற உன்னைய கட்டிபுடிச்சி உன் வாய்க்குள்ள அவன் வாய வச்சிக்கிட்டே மயக்கம் போட்டுட்டான்,
அவன் தான் உன் வாயில அவன் வாய வைக்கிறான் ன்னு தெரிஞ்சதும் நீ ஏன் அவனை தள்ளி விடாம அவனை கட்டி பிடிச்சிகிட்டே முத்தம் கொடுத்துட்டு அவன் கூடவே மயக்கமாயிட்ட, "என்ற தோழியை பார்த்து விக்கித்து நின்றாள் சீதா.

"அது அது வந்து என்னமோ தெரில ராதா,அவனை பார்த்ததும் எனக்கு ஏதோ சைட் அடிக்கணும் போல இருந்துச்சு, அவன் அழகா வேற இருக்கான்,எனக்கு அவனை பிடிச்சிருக்கு, "என்றவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்த ராதாவின் கையை பிடித்து இழுத்து கொண்டு மறைத்து வைத்திருந்த சைக்கிளை வெளியே கொண்டு வரும் வரை அவளையே பார்த்து கொண்டிருந்த ராதா மனதுக்குள்ளே " இவளுக்கு என்னாச்சு,வூட்டுக்கு போனதும் பெரியம்மா கிட்ட சொல்லி இவள பூசாரிக்கிட்ட கூட்டுகிட்டு போயி வேப்பிலை அடிச்சி விபூதி போட சொல்லணும் முதல்ல என்று வீடு வரும் வரை மௌனமாகவே சைக்கிள் ஓட்டி வந்தார்கள்..

முதலில் சீதாவின் வீடு தான்,அதற்கு அடுத்த தெருவில் தான் ராதாவின் வீடு.

சீதா வீடு வந்ததும் சைக்கிளை வீட்டின் மாட்டு கொட்டகை கிட்ட இருந்த வண்டி நிறுத்துமிடத்தில் தனது சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினாள் சீதா..

அவளோடு ராதாவும் அவளின் சைக்கிளை நிறுத்துவதை பார்த்தவள்,"என்ன இவ இங்க வந்து சைக்கிள் நிறுத்துறா என்ற கேள்வியாக ராதாவை பார்க்க அவளோ "ஈஈஈஈ அது வந்து சீதா பெரியம்மா எனக்கு இன்னக்கி முறுக்கு, வாழைப்பழம் அல்வா, பால்கோவா லாம் செய்ஞ்சி இருப்பாங்க போல,வாசனை ரொம்ப தூக்கலா இருக்கு," என்ற ராதாவை முறைத்து பார்த்த சீதா

அவளிடம் " நான் உங்க வூட்டுக்கு கொண்டாறேன் நீ இப்போ கிளம்பு, சின்னம்மா உன்னைய தேடிட்டு இருப்பாங்க, "என்று கூறிய தோழிக்கு "க்கும் இல்லனா மட்டும் தேடாத வா இருக்கும் என் ஆத்தா, இன்னேரம் ஒரு கையில வாளி தண்ணியும் கோலமாவு டப்பாயும், இன்னொரு கையில விளக்கமாறு வச்சிக்கிட்டு என்னைய எதிர்பார்த்துட்டு என்ன கிடக்கும்,அதுல இருந்து தப்பிக்க தான் இங்க வந்தேன்,நீ என்னனா என்னையே தொறத்துற, இருக்கட்டும் "என்றவள் அவளின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே வந்த ராதா மேலும் தொடர்ந்தாள் சீதாவிடம்.

"அடியேய் சீதா அங்க மாந்தோப்புல நடந்ததை ஆத்தா கிட்ட சொல்லிப்புடாத டி,அப்புறம் மறக்காம என் வீட்டுக்கு திண்ணுறதை கொண்டாரனும்" என்று கூறிவிட்டு "அய்யா ஜாலி இன்னக்கி நிறைய சாப்பிட்டு தூங்கவேண்டியது தான் என சந்தோசமாக சென்றவளுக்கு தெரியவில்லை,

அவளை பெத்த ஆத்தாவோ கையில் அவளுக்கான வரனோடு காத்திருக்கிறாரென்று...
 
Top