Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 9

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 9

"யமுனா இருக்கியா மா" என்று கேட்ட மாமாவிடம் தன் சுய நினைவிற்கு வந்த யமுனாவின் கண்களில் கண்ணீர் மூண்டது. "ஏன் மாமா உங்களுக்கு ஹாட் அட்டாக் வந்திருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணிருக்காங்க என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல நீங்க" என்று கதறி அழ ஆரம்பித்தாள்.

"யமுனாமா உனக்கு தெரிய கூடாதுன்னு நினைச்சேன்மா நீ ரொம்ப துடிச்சிருவ மாமா நல்லா ஆயிடுவேன்மா கவலைப்படாத. இங்க நிறைய பிரச்சனை இருக்குமா திவாகர் கூட படிச்ச பொண்ணு அவன காதலிச்சு ருக்கு ரொம்ப பெரிய பணக்கார குடும்பம் திவாகர் மும்பைல வேலைப் பார்த்த சமயம் அவங்க வீட்டோட வந்து அம்மா அப்பா இரண்டாவது அண்ணன் மாப்பிள்ளை கேட்டு வந்தாங்க உன் அத்தை அந்த பணத்தாசை புடிச்சவ எங்க கிட்ட லாம் ஆலோசனை கேட்காம திவாகர்கே தெரியாம சம்மதம் சொல்லிட்டா நிச்சயம் தேதியும் முடிவு பண்ணிட்டா மாமாவால முன்னாடி மாதிரி தட்டி கேட்க முடியலமா வயசாகிடிச்சு உடல் பலம் இல்லமா. அத்தோட எங்க பையன டெல்லில படிக்க வைக்க வீட்ட அடமானம் வெச்சோம் 50 லட்சம் ஆச்சுன்னு நீலக் கண்ணீர் வடிச்சிருக்கா உடனே அவங்க அப்பா லண்டனில் இருக்கும் மூத்த மகனிற்கு கால் செய்து அந்த விஷயத்தைச் சொன்னார். அவர் என்ன சொன்னார் என்று தெரியலமா இவர் கால் கட் செய்துவிட்டு 50 லட்சம் காசோலை கொடுத்து அதை மீட்க சொன்னார். அதை வாங்கி வீட்டை மீட்டு விட்டாள் அப்போது தான் திவாகர் ஊரில் இருந்து வந்தான் திருமண விஷயம் கேட்டவுடன் வீட்டை இரண்டாக்கி விட்டான் உன் அத்தை 50 லட்சம் வாங்கியதும் தெரிந்தது கண்டபடி கத்தினான்மா. நிச்சயத்திற்காக இந்தியா வந்த பிரியாவின் மூத்த அண்ணனிற்கு இவனுக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்பது தெரிந்தது அப்போது வீட்டிற்க்கு வந்து திவாகரை நேரடியாக கேட்டார் அவன் நான் யமுனாவை தான் காதலிக்கிறேன் வேறு யாரையும் மணக்க மாட்டேன் என்றான். அப்போது மேஜை முன் இரு பத்திரங்களை வீசினார் அது நாம் அடகு வைத்த வீட்டின் பத்திரம் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி ஆனது. "நீ இந்த மாதிரி பண்ணுவனு எனக்கு தோனுச்சு நீங்க யார் கிட்ட வீட்ட அடமானம் வெச்சிருந்தீங்களோ அவருக்கு பணம் கொடுத்தேன் ஒர்ஜினல் பத்திரம் என்கிட்ட டூப்ளிகேட் உங்ககிட்ட. லுக் திவாகர் பிரியா உன்ன விரும்பறா அவள மாதிரி அமைதியான நல்ல பொண்ணு உனக்கு கிடைக்க மாட்டா அவ ஆசைப்பட்டு என்கிட்ட இதுவரைக்கும் எதுவும் கேட்டது இல்ல அவள் என்கிட்ட ஆசைப்பட்டு சொன்ன விஷயம் உன்ன கல்யாணம் பண்ணணும் அதனால நிச்சயதார்த்தம் சொன்ன தேதில நடக்கனும் இந்த கல்யாணம் நடந்த அப்பறம் இந்த பத்திரம் உங்க கைக்கு வரும்" என்று கூறி முடிக்கும் போது" என் யமுனா தேவதை நான் அவள தான் கல்யாணம் பண்ணிப்ப இந்த பத்திரம் வீடு நீங்களே வெச்சிக்கோங்க எனக்கு என் படிப்பு அப்பறம் மாதா மாதம் கை நிறைய சம்பாதிக்கிறேன் அது போதும்" என்றான்.இதைக்கேட்டு வேகமாக சிரித்த சத்யதேவ் " நீ படிச்ச யூனிவர்சிட்டியே என்னோடது தான் ஜெகே க்ருபோட எம்டி நான் தான் என்னோட அப்பா ஜெயக்குமார் பெயர சுருக்கி வச்சிருக்கோம் என் தங்கை எம்டி யோட தங்கச்சினு யாருக்கும் தெரியாது பவர் ஆஃப் அட்டார்னி என் நண்பன் அசோக் கிட்ட இருந்தது நால அவன் தான் நான் லண்டன்ல இருக்கேன்னு பார்த்துக்கிட்டான் அப்படியும் காலேஜ் ஆட்டிகில்ல தி யங் பிசினஸ் கிங் னு என் போட்டோ இருக்கும் நீ கவனிக்கல போல" என்று வெற்றிப்புன்னகை செய்தான் " நான் நினைச்சா நீ காம்பஸ்ல பிலேஸ் ஆன கம்பெனியில தான வொர்க் பண்ற உன்ன அங்க இருந்து தூக்கி நடு ரோட்டுல நிறுத்த முடியும் வேற எங்கயும் வேலை கிடைக்காத அளவுக்கு பண்ணவும் முடியும் அந்த நிலைமைக்கு வரவிடமாட்டனு நம்புற" என்று கிளம்பினார்மா "தம்பி மன்னிச்சிருங்க கண்டிப்பா பிரியா தான் எங்க வீட்டு மருமகள்" என்று உறுதியளித்தாள் உன் அத்தை." "இதெல்லாம் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டதுமா அப்போது அந்த தம்பி உடனே ஆம்புலன்ஸிற்கு கால் செய்து அவருடைய ஹாஸ்பிட்டலில் சேர்த்தார் எனக்கு ஆப்பரேஷன் பண்ணாங்க அங்கு எல்லா வசதிகளும் இருந்ததுமா பிரியா வந்து என்ன நல்லா பாத்துக்கிட்டாமா பொண்ணு மாதிரி அவளவிட எனக்கு நல்ல மருமகள் கிடைக்காதுமா நான் இப்போ கூட செக் அப் போறேன் எல்லாத்துக்கும் பிரியா எங்க கூட வருவா விஜி பணத்தாசை பிடிச்சவ தான்மா ஆனா பிரியா ரொம்ப நல்ல பொண்ணு இப்போ நீ உதவி பண்ணா தான்மா திவாகர் பிரியா கல்யாணம் நடக்கும் திவாகர் உன் மேல பைத்தியமா இருக்கான் உன்ன கெஞ்சி கேட்கிறேன்மா திவாகர் எப்படியாவது பிரயாவ கல்யாணம் பண்ணனும் இல்லனா அந்த தம்பி திவாகர் வேலைய சொன்ன மாதிரி தூக்கிடும் நாங்க நடு ரோட்டுல நிக்கனும் பிரியா மாதிரி நல்ல குணமுள்ள பொண்ணு திவாகர் மிஸ் பண்ண கூடாதுமா. நீ தான் அதுக்கு எப்படியாவது இந்த கல்யாணத்தை நடத்தனும் அது உன்னால மட்டும் தான்மா முடியும்" என்று அழுதார்." பிரியா ஒரு தடவ உன் போட்டோ கேட்டாமா நானும் கொடுத்த இப்போ உன் போட்டோ அவ கைல தான் இருக்கு உன்ன பார்த்து ரொம்ப அழகா இருக்கனு சொன்னாமா ஆனா அவ குணம் ரொம்ப சுத்தம்மா" என்றார்.

மாமா நீங்க இந்த ஆள பெருமையா பேசுறீங்க ஆனா இவன் இங்கே என்ன மிரட்டி பேரம் பேசிட்டு இருக்கான் என்று மனதில் நினைத்தவள் தன் மாமாவிடம்" நான் பாத்துக்குறேன் மாமா நீங்க கவலைப்படாதீங்க" என்று காலை வைத்தாள். தன் முன்னே கம்பீரமாக கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த சத்யதேவைப் பார்க்க பயமாகவும் எரிச்சலாகவும் இருந்தது.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அடப்பாவி சத்யதேவ்
திவாகர் படிச்ச காலேஜ்ஜூம் இவனுதுதானா?
பிரியாவை மாமாவுக்கும் பிடித்து விட்டது
திவாகர் பிரியா கல்யாணம் நடக்கணுமுன்னு சேகர் மாமாவே சொல்லுறாரு
அப்போ பையன் வாழ்க்கையைப் பார்க்கும் இவரும் சுயநலவாதிதானோ?
 
Top