Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 13

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 13

யமுனாவின் கழுத்தில் அந்த கனமான மங்கள நாண் சத்யதேவின் கையால் ஏறியது யமுனாவின் கண்களில் கண்ணீர் துளி ஆறாய் வந்தது. திவ்யா தங்கை முறை ஆக முடியாது என்பதால் சத்யதேவே மூன்று முடிச்சையும் போட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். பின் அவளின் கையைப் பிடித்து மூன்று முறை அக்னி குண்டத்தை சுற்றி வந்தான்.

அடுத்து சாமி கும்பிட அழைத்துச் சென்றான் அனைவரும் கடவுளைக் கும்பிட யமுனா மட்டும் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக இருந்தாள். "உங்க கிட்ட கேட்டேனே முருகா காப்பாத்த சொல்லி இப்படி என்ன கை விட்டுட்டீங்களே" என்று வடபழனி முருகரை வெறித்துப் பார்த்தாள்.

பின் தேவ் யமுனாவை அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு சென்றான். திவ்யா குணாவும் அவர்களோடு சென்றனர். காரில் தேவ் வண்டியை ஓட்ட குணாவும் திவ்யாவும் பின்னாடி அமர சென்றனர் அப்போது வேகமாக யமுனா பின்னே போய் அமர்ந்தாள் தேவின் பக்கத்தில் உட்கார விருப்பம் இல்லாமல். இதைக் கண்ட குணா மற்றும் திவ்யா திகைத்தனர். ஆனால் தேவ் அதை மதிக்கவே இல்லை. "குணா நீ முன்னாடி வா" என்று வண்டியை எடுத்தான். தாலி தன் கழுத்தில் ஏறியதிலிருந்தே யமுனா யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவளைப் பொறுத்த வரைக்கும் அந்த மூவருமே அவளுக்கு வேண்டாதவர்கள் தான்.

ரிஜிஸ்டர் ஆபிஸ் சென்றதுமே அங்கு வேலை வேகமாக நடந்தது. யமுனாவின் ஃப்புருப்ஸ் கேட்கும் போது திவ்யா அவள் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாள் "என்னோட ப்ளவுஸ் அளவு என்னோட ஃப்புருப்ஸ் எல்லாத்தையுமே திருடிருக்கா இவள் ச்ச தன்னோட சுயநலத்திற்காக எந்த எக்ஸ்டென்ட் வேணா போவா போல" என்று மனதில் அனலாய் கொதித்தாள்.

ஃபோட்டோ எடுக்க அழைத்தனர் அப்போது திவ்யா யமுனாவை அழைத்தாள் "ஏய் திருடி நீ என்கிட்ட பேசாத எனக்கு அப்படியே நெருப்பு மேல நிக்குற மாதிரி இருக்கு நீ எப்படி என்னொட ஃப்புருப்ஸ் என் பெர்மிஷன் எல்லாம திருடலாம்" என்று கொதித்தாள்." அவளை இப்படி பண்ண சொன்னது நான் தான் இப்பொ உனக்கு அதனால என்ன பிரச்சனை" என்று அதட்டினான் தேவ். "இருக்குற கடுப்புல இவன் கிட்ட கத்துனோம்னா இவன் நம்மள சும்மா விட மாட்டான்" என்று அமைதியாக ஃபோட்டோ எடுக்க சென்றாள் யமுனா.

" சப்பா இப்பயே கண்ண கட்டுதே இன்னும் ஒரு ஒரு உண்மை தெரிஞ்சா நம்ம சோலி முடிஞ்சிறும்னு நினைக்கிறேன்" என்று நினைத்தாள் திவ்யா. அப்போது தேவ் குணா யாரிடமோ அங்கு பேசிக்கொண்டு இருந்தார்கள்." ஏம்மா இந்தா உன் கணவரோட ஆதார் கார்ட் வாங்கிக்கோ" என்று அங்கு பணி புரியும் ஒரு பெண் யமுனாவை அழைத்து தேவ் வின் ஆதார் கார்டைக் கொடுத்தார். எதேர்ச்சையாக அந்த கார்டைப் பார்த்தவள் அவனுடைய பிறந்த தேதி வருடம் பார்த்தவள் வயதை கணக்குப் பண்ணி அதிர்ந்தாள் "என்னது இந்த ஆளுக்கு வயசு இருபத்தி ஒன்பதா கடவுளே என்னை விட ஏழு வயது பெரியவரா" என்று அதிர்ச்சியில் அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"ஒரு வேளை நாம் தவறாக பார்த்து விட்டோமா" என்று மறுபடியும் பார்த்தாள். அவனுக்கு இருபத்தி ஒன்பது வயசு தான் என்பதை உறுதிப்படுத்தியவள் வந்த கோபத்தில் ஆதார் கார்டை தூக்கி எறிந்தாள் அது நேராக தேவ் வின் காலடியில் விழுந்தது. அவனிடம் சண்டை போட வேண்டும் என்று மனது தூண்டியது அவளால் ஏழு வயது பெரியவனை ஏத்துக் கொள்ள முடியவில்லை அதனால் வேண்டும் என்றே அவன் காலடி முன் எறிந்தாள். அதைப் பார்த்த தேவ் அவளை முறைத்தான் இம்முறை இவளும் முறைத்தாள். "என்னை விட ஏழு வயது பெரியவர் நீங்க என்னை எப்படி கல்யாணம் பண்ணலாம் எனக்கு வயசு இருபத்தி இரண்டு உங்களுக்கு ஆல்மோஸ்ட் முப்பது" என்று கத்தினாள்.

அவனுக்கு எழுந்த கோபத்தில் அவளின் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு சென்றான். அவனின் இந்த செயல் அதிர்ச்சி அளித்தாலும் யமுனா சண்டை போட வேண்டும் என்ற நோக்கத்துடனே இருந்தாள் அவளால் ஏழு வயது பெரியவனாக இருக்கும் ஒருவனை கணவனாக நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவளை ஒரு இடத்தில் விடுவிட்டவன் "உனக்கு மானர்ஸ்னா என்னனு தெரியுமா பொது இடத்தில இப்படி முட்டாள் மாதிரி பிஹேவ் பண்ற அப்போ திவ்யாவை கத்துன அங்கேயே எனக்கு பொறுமை போச்சு இப்போ என்னோட ஆதார் கார்ட்ட தூக்கி எறிஞ்சிருக்க திஸ் ஸ் டி லிமிட்" என்று ஒற்றை விரலை அவள் முன் நீட்டி மிரட்டினான். "உங்க வயசு இருபத்தி ஒன்பது" என்று சொல்லி முடித்திக்கொண்டிருக்கும் போதே" என் வயது இருபத்தி ஒன்பதோ இல்லை முப்பத்தி ஒன்பதோ எதுவா இருந்தாலும் உன் விதி இது தான் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத நீ தூக்கி எறிந்த ஆதார் கார்ட்ட நீயே எடுத்து என்கிட்ட அப்படி பண்ணது க்கு மன்னிப்பு கேட்டு குடு" என்று கர்ஜித்தான்.

திவ்யா வும் குணாவும் பொம்மை மாதிரி நின்றனர். நம்மை சுற்றி வில்லன்களாக இருக்கும் போது தன்னால் இதற்கு மேல் என்ன போராட முடியும் என்று உள்ளே வந்து அதை எடுத்து அவனிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டாள். கையெழுத்து முடிந்தவுடன் " இன்னிக்கு ஈவ்னிங் சிக்ஸ்க்கு டெல்லிக்கு ஃபிளைட் திவ்யா யமுனா திங்க்ஸ் வெகேட் பண்ண ஹெல்ப் பண்ணிடு" என்று சொன்னான். "தேவ் அத்தான் யமுனா என்கிட்ட பேச மாட்டா அவளுக்கு என் மேல கோபம் இருக்கு அதனால" என்று திவ்யா சொல்லிமுடிப்பதற்குள் "நீ தான் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும் மூன்று மணிக்கு ஏர்ப்போர்ட்ல இருக்கனும் ஒன் தேர்ட்டிக்கு நான் அவளை பிக் அப் பண்ண வருவேன் அவள் அப்போ கீழே இருக்கனும்" என்று அழுத்தமாக யமுனாவைப் பார்த்து திவ்யாவிடம் சொன்னான்.

பின் இருவரை ஒரு கேப் புக் பண்ணி அனுப்பி வைத்தவன் குணாவை அழைத்து தன்னுடைய ஆபிஸிற்குச் சென்றான். அங்கு சென்னை ஆபிஸ் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு தான் தங்கி இருக்கும் பார்க் ஹையாத்திற்குக் கிளம்பினான்.

வழியில் செல்லும் போது யமுனாவிற்கும் திவ்யா விற்கும் பேச்சுவார்த்தை இல்லை. ஹாஸ்டல் இன்சார்ஜ் யிடம் விஷயத்தை சொல்லி அவளுடைய திங்க்ஸை எடுத்து வைத்தாள். யமுனா விற்கு ஏனோ மூளையே வேலை செய்ய மறுத்தது திவ்யாவிடம் கத்த தோணவில்லை ஏனெனில் அவள் திவ்யாவை அடியோடு வெறுத்து விட்டாள். திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி முடித்து விட்டு மறுபடியும் குளித்தவள் ஒரு சல்வாரைப் போட்டு கட்டிலில் அசையாமல் உட்கார்ந்திருந்தாள் திவ்யாவுக்கு யமுனாவை இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்ட தாமும் ஒரு காரணம் அத்தோடு தம்மால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று தன் நிலையை நினைத்து அழுதாள்.

மணி ஒன்று ஆன போது திவ்யா ஹாஸ்டலில் ரெடி ஆன சாப்பாட்டை யமுனா பக்கத்தில் வைத்தாள் இரண்டு பேரும் காலையில் இருந்து எதும் சாப்பிடவில்லை. திவ்யா பால் ஆவது குடித்தாள் ஆனால் யமுனா விரதம் இருப்பது போல தண்ணிர் கூட குடிக்காமல் இருந்தாள்.

அந்த சாப்பாடு அனாதையாக இருந்தது யமுனா அதை தொட வில்லை மணி ஒன்று இருபத்தி ஐந்து ஆன போது கால்கள் இரண்டும் தானாக தன் லக்கேஜை எடுத்துக் கொண்டு கீழே சென்றது. அவனிடம் போராடும் வலு அவளுக்கு இப்போது இல்லை சாப்பிடாத வயிறும் வாழ்க்கையின் வெறுப்பும் மனதை உழுக்கின இப்போது தாமாக செல்லவில்லை என்றால் அவன் ஹாஸ்டல் என்று கூட பார்க்காமல் உள்ளே வந்து கத்துவான்.அதற்கு பயந்தே கீழே சென்றுவிட்டாள் அவள் பின் இன்னொரு லக்கேஜ் எடுத்துக்கொண்டு திவ்யாவும் சென்றாள்.

ஐந்து நிமிடத்தில் தேவ் டிரைவரோட காரில் வந்தான் பின்னாடி டிக்கியை திறந்து விட்டான் யமுனா வும் திவ்யா வும் லக்கேஜுகளை வைத்தனர். பேக்குகளை கூட தூக்க மாட்டானா எனக்கு சாப்பிடாம மயக்கம் வர மாதிரி இருக்கே என்று நினைத்தவள் இவன் தான் ஈவு இரக்கம் இல்லாதவன் ஆச்சே அதான் ஹெல்ப் கூட பண்ணாம இருக்கான் கல்நெஞ்சக்காரன் என்று நினைத்தவள் வேறு வழியின்றி பின்னாடி அமர்ந்த தேவ் வின் பக்கத்தில் அமர்ந்தாள். "ஒகே திவ்யா கிளம்புறோம் உங்களுக்கும் குணாக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்கும்" என்றான். "ம்ம் சேரி அத்தான். யமுனா காலையில இருந்து சாப்பிடலை அத்தான்" என்றாள் சோர்வாக. யமுனாவை அழுத்தமாகப் பார்த்தான் அவளிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் முன்னால் சாலையை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்." நான் பார்த்துக்குறேன் திவ்யா" என்று காரை எடுக்க சொல்லி கிளம்பினான்.
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

அடக் கருமமே
கல்யாணம் நடந்தே நடந்து விட்டதா?

கழுத்தில் கத்தி வைச்சு மிரட்டும் சத்யதேவ் கேனப்பயல் மேனர்ஸ் பத்தியெல்லாம் பேசுறான்
அந்த ஆதார் கார்டை அவன் மூஞ்சியிலேயே வீசியிருக்கணும்

அவளிடம் பேசாமலிருந்து திவ்யாவுக்கு யமுனா நல்ல பனிஷ்மென்ட் கொடுத்தாள்

இதே மாதிரி அந்த சத்யதேவ்வையும் வைச்சு செய்யு, யமுனா
இவனை மாதிரி பொறுக்கிக்கெல்லாம் பயப்படாதே
 
Top