மறுநாள் மாலையில் டான்ஸ் புரோக்ராம் ! இது நாள் வரையில் எத்தனையோ ரசிகர்கள் வந்த நடனத்தை ரசித்திருக்கிறார்கள்.
கனி ஸ்ரீக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவன் மனதை குற்றால அருவியாய் சந்தோஷமாக பிரகாசமாக இருந்து.
ஏனென்றால்.... அவளது இதயத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்ட அகத்தியன்... அவளது நடனத்தை ரசிக்கப் போகிறான்.
அவனை நேருக்கு நேர் மீண்டும் சந்திக்க போகிறோம்.
அவனுக்காகவே நாட்டியம் ஆட போகிறோம் என்று நினைக்கும்போதே அடிக்கடி மோனாலிசாவைப் போல் புன்னகைத்துக் கொண்டாள்.
பசி எடுத்தது . ஆனால் சாப்பிட பிடிக்கவில்லை.
கண்கள் மூடினால் தூக்கம் வரமாட்டேன் என்று அடம் பிடித்து.
உறங்கினாலும் விழித்தாலும் சதா அகத்தியனின் முகம் தான் கண்முன் தெரிந்தது.
காதல் பொங்க பிரேமையுடன் அவன் பேசிய வார்த்தைகள்.... மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் எதிரொலித்தது.
இவரது முகத்தில் தனி ஜாஜ்வல்யம் பிரகாசித்தது துர்கா கவனிக்க தவறவில்லை.
இளைய ஜமீன்தார் அகத்தியன் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து.... மகளின் அழகு முகத்தில் விளக்கு போட்டார் போல் வெளிச்சம் பரவியிருந்த பார்த்ததும்.... அவளுக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.
இளைய ஜமீன்தார் கெட்டிக்காரன் தான்... ! நான் எடுத்து சொன்னாலும். அவள் காது கொடுத்து கேட்கவில்லை.
இன்று நேரில் அவரை சந்தித்து விருந்து ஸ்ரீ ஒரு மார்க்கமா இருக்கிறாள்?
அகத்தியன் இவளை எப்படி வைத்து விட்டார். இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு விழித்துக் கொள்ளவே கூடாது.
நான் நினைத்தபடி எல்லாம் நடந்து விட வேண்டுமே ! அதற்கு என்ன வழி?
மூளையை கசக்கிக்கொண்டே யோசித்தால் துர்கா.
அடிக்கடி மகளின் அறைக்குச் சென்று தொந்தரவு செய்யாமல் சற்று விலகியே இருந்தாள்.
மறுநாள் மாலை பொழுதும் வந்தது.
பரதநாட்டிய உடை அணிந்துகொண்டு வெளிப்பட்டாள் கனி ஸ்ரீ.
அடர் நீல வண்ணத்தில் அமைந்த பரதநாட்டிய உடை அவளது அழகும் மேனிக்கு சிக்கென்று பொருந்தியிருந்தது.
அவளது அழகை பன்மடங்காக்கி காட்டியது.
துர்கா மகளின் கன்னத்தைத் தொட்டு வருடி விரல்கள் தனது நெற்றியில் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.
ஐயோ...! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ? இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க ஸ்ரீ..சூடா கொஞ்சம் மசாலா டீ சாப்பிடறியா?
"உம் ... சீக்கிரம் கொண்டுவாம்மா"
அமைதியாய் டீயை வாங்கிப் பருகி விட்டு..... காரில் ஏறிக் கொண்டாள்.
துர்கா காரில் ஏறியதும் கார் பூம்பொழில் நோக்கி சென்றது.
பின்னால் மற்றொரு காரில் கனிவின தட்டுவனார் முதலான நடனம் கச்சேரி குழுவினர் பின்தொடர்ந்து வந்தனர்.
அரண்மனை முகப்பு காட்டியதும் முன் காம்பவுண்டு சுவர் வளாகமும் அரங்கம் முழுவதும் சீரியல் பல்புகள் கட்டப்பட்டு ஜெகஜோதியாய் ஜொலித்தது.
தோரணங்கள் கட்டப்பட்டு வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தீ தொழிற்சாலையில் பணி புரிபவர்களும் சுற்று வட்டாரங்கள் இருப்பவர்களும் ஜமீன்தார்களும் என்று ஏராளமான கூட்டம் அங்கு திரண்டு இருந்தது.
அவர்கள் ஏற்றுக் கொண்டு வந்த கார்கள் வேன்கள் பஸ்களும் வரிசையாக வெளியே அணிவகுத்து இருந்தது.
கனி ஸ்ரீ காரிலிருந்து இறங்கியதும் அதற்காக காத்திருந்து போல்... அகத்தியரைக் இருகரம் கூப்பி வரவேற்றான்.
வெல்கம் கனி ஸ்ரீ...! உனது வரவு நல்வரவாகட்டும்... வா...! நம்ம பங்களாவில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போ.
உன்னோட டான்ஸ் குரூப் கரங்கள் தங்களுடைய இசைக் கருவிகளோடு உட்கார்ந்து செட்டில் ஆகட்டும்.
கனிஸ்ரீ தயங்கினாள்.
அஞ்சு நிமிஷம் தான்.... நீ உள்ள வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்....
தம்பி இவ்ளோ பிரியமா கூப்பிடறாரு இல்ல? இளைய ஜமீன்தார் வார்த்தைக்கு மதிப்பு தர வேண்டாமா ? அவருடைய ஆசையை ஏன் கெடுக்கணும்? வா ஸ்ரீ.
இதுதான் சாக்கு என்று துர்கா ஒத்து ஊதினாள்.
பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அது நன்றாக இருக்காது என்று தோன்றிய சரி என்பதுபோல் அவளைப் பார்த்து புன்னகையுடன் தலை ஆட்டினாள்.
தேங்க்ஸ் கனி ஸ்ரீ....! வா...!
அம்மாடி ஸ்ரீ...! தம்பி கூட நீ போ... நான் வழக்கம் போல தட்டுவனார் பக்கத்துல உட்கார்ந்து இருக்கேன்.....
நாசூக்காய் நழுவிக் கொண்டாள் துர்கா.
ஐயோ... !எ.... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கனி ஸ்ரீ....
நேத்து நைட் முழுக்க நான் தூங்கவே இல்லை தெரியுமா?
என்னை நீ ரொம்பவே டிஸ்டர்ப் பண்றே...!
அவளுக்கு மட்டும் கேட்கும்படி... தழைத்த குரலில் பேசினான்.
என்ன? ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறே?
எ.... எல்லாரும் நம்மள பாக்குறாங்களா தான் சங்கோஜமாக இருக்கு.
பார்த்தா.... பார்த்திட்டு போகட்டும். நமக்கென்ன?
அரண்மனையின் முன்புறத் தோட்டம் அவ்வளவு பிரமாண்டமாய் அழகாய் விழிகளை கவர்ந்தது.
பங்களாவின் ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஏதேனும் நினைப்பார்கள் என்று உள்ளுக்குள்ளே அவளுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது.
அரண்மனையின் பிரம்மாண்டம்.... அவளை மிரள வைத்தது.
வா உள்ளே வா கனிஷ்கா வலது காலை எடுத்து வைத்து வா...!
மறக்க முடியாமல் சலங்கை பூட்டி என் வலது பாதத்தை எடுத்து வைத்தாள்.
சலங்கைகள் அணிந்து அவளது பாதங்களை சிறு கணங்கள் ரசித்துப் பார்த்தான் அகத்தியன்.
வீ..... வீட்ல வேற யாரும் இல்லையா சார் கிணற்றுக்குள் இருந்து வருவது போல அவர் குரல் சின்னமாய் வந்தது.
எங்கப்பா இருக்காரு எங்க அத்தை காந்தமணி இருக்காங்க அத்தைன்னா... ஒன்னு விட்டு அத்தை...
அவங்க ஒரு டாக்டர்..... எங்கப்பா உங்கள் படிக்க வச்சாரு கல்யாணம் பண்ணி வச்சாரு.
ப்ச்.....! அத்தைக்கு மணவாழ்வு சரியா அமையல சொல்லப்போனா நல்ல கணவர் அமையலை.
அதனால அவங்க இங்கே வந்துட்டாங்க அப்ப அவங்களுக்கு இந்த பூம்பொழில் ஹாஸ்பிடல் ஒன்று கட்டிக் கொடுத்தாரு....
யூடியூப் போயிட்டு வராங்க என்பதையும் கவனிச்சுக்கிறாங்க.
எங்கம்மா 5 வயசு பையனா இருக்கும் போது இறந்துட்டாங்க.
காந்தமணி அத்தை தான் என்னை வளர்த்தாங்க
அவங்கள அத்தனை சொல்வதைவிட ..... எனக்கு அம்மான்னு சொல்லலாம் அந்த அளவுக்கு என் மேல பாசமா இருப்பாங்க.
இன்னிக்கி பௌர்ணமி இல்லையா ? அப்பா அத்தையும் எங்க குலதெய்வ கோவிலுக்கு போய் இருக்காங்க.
பௌர்ணமி பூஜை முடிஞ்சதும் அவங்க வர்ற நேரம்தான் கோவில் அரண்மனைக்கு பின்னாடி தான் இருக்கு.
அரண்மனை குடும்பத்தினர் மட்டும் தான் அங்கு வழிபடக்கூடிய கோவில் அறம் காத்த நாயகி என்ற அம்மனேடா பேர்..! சக்தி வாய்ந்த தெய்வமாக்கும்.
வெகு காலம் பழகிய நபரிடம் கூறுவது போல் குடும்ப விவரங்கள் அவன் கூறிய விதம்.... அவளுக்குப் பிடித்திருந்தது.
அந்த பிரமாண்ட ஹாலில் ஆள் உயரத்தில் பெரிய படம்.
ஒரு சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து கம்பீரமாய் நேர் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் பெரிய ஜமீன்தார் இசைஅமுதன்.
அந்தப் படத்தைப் பார்த்ததும் அவளை அறியாமல் இரண்டடி பின் வாங்கினால் கனி ஸ்ரீ.
ஜமீன்தாரின் கூறிய விழிகள் அவளைப் பார்த்து முறைப்பது போல் இருந்தது.
? தன் காதல் கூறுவாளா கனி ஸ்ரீ??
? புரோக்ராம் நல்லபடியாக நடக்குமா ??
? விதியின் விளையாட்டு முன்கூட்டி தெரிய வருமா? ?
கனி ஸ்ரீக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் அவன் மனதை குற்றால அருவியாய் சந்தோஷமாக பிரகாசமாக இருந்து.
ஏனென்றால்.... அவளது இதயத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்ட அகத்தியன்... அவளது நடனத்தை ரசிக்கப் போகிறான்.
அவனை நேருக்கு நேர் மீண்டும் சந்திக்க போகிறோம்.
அவனுக்காகவே நாட்டியம் ஆட போகிறோம் என்று நினைக்கும்போதே அடிக்கடி மோனாலிசாவைப் போல் புன்னகைத்துக் கொண்டாள்.
பசி எடுத்தது . ஆனால் சாப்பிட பிடிக்கவில்லை.
கண்கள் மூடினால் தூக்கம் வரமாட்டேன் என்று அடம் பிடித்து.
உறங்கினாலும் விழித்தாலும் சதா அகத்தியனின் முகம் தான் கண்முன் தெரிந்தது.
காதல் பொங்க பிரேமையுடன் அவன் பேசிய வார்த்தைகள்.... மீண்டும் மீண்டும் அவள் செவிகளில் எதிரொலித்தது.
இவரது முகத்தில் தனி ஜாஜ்வல்யம் பிரகாசித்தது துர்கா கவனிக்க தவறவில்லை.
இளைய ஜமீன்தார் அகத்தியன் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து.... மகளின் அழகு முகத்தில் விளக்கு போட்டார் போல் வெளிச்சம் பரவியிருந்த பார்த்ததும்.... அவளுக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.
இளைய ஜமீன்தார் கெட்டிக்காரன் தான்... ! நான் எடுத்து சொன்னாலும். அவள் காது கொடுத்து கேட்கவில்லை.
இன்று நேரில் அவரை சந்தித்து விருந்து ஸ்ரீ ஒரு மார்க்கமா இருக்கிறாள்?
அகத்தியன் இவளை எப்படி வைத்து விட்டார். இந்த மயக்கத்திலிருந்து விடுபட்டு விழித்துக் கொள்ளவே கூடாது.
நான் நினைத்தபடி எல்லாம் நடந்து விட வேண்டுமே ! அதற்கு என்ன வழி?
மூளையை கசக்கிக்கொண்டே யோசித்தால் துர்கா.
அடிக்கடி மகளின் அறைக்குச் சென்று தொந்தரவு செய்யாமல் சற்று விலகியே இருந்தாள்.
மறுநாள் மாலை பொழுதும் வந்தது.
பரதநாட்டிய உடை அணிந்துகொண்டு வெளிப்பட்டாள் கனி ஸ்ரீ.
அடர் நீல வண்ணத்தில் அமைந்த பரதநாட்டிய உடை அவளது அழகும் மேனிக்கு சிக்கென்று பொருந்தியிருந்தது.
அவளது அழகை பன்மடங்காக்கி காட்டியது.
துர்கா மகளின் கன்னத்தைத் தொட்டு வருடி விரல்கள் தனது நெற்றியில் நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.
ஐயோ...! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ? இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க ஸ்ரீ..சூடா கொஞ்சம் மசாலா டீ சாப்பிடறியா?
"உம் ... சீக்கிரம் கொண்டுவாம்மா"
அமைதியாய் டீயை வாங்கிப் பருகி விட்டு..... காரில் ஏறிக் கொண்டாள்.
துர்கா காரில் ஏறியதும் கார் பூம்பொழில் நோக்கி சென்றது.
பின்னால் மற்றொரு காரில் கனிவின தட்டுவனார் முதலான நடனம் கச்சேரி குழுவினர் பின்தொடர்ந்து வந்தனர்.
அரண்மனை முகப்பு காட்டியதும் முன் காம்பவுண்டு சுவர் வளாகமும் அரங்கம் முழுவதும் சீரியல் பல்புகள் கட்டப்பட்டு ஜெகஜோதியாய் ஜொலித்தது.
தோரணங்கள் கட்டப்பட்டு வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
எஸ்டேட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தீ தொழிற்சாலையில் பணி புரிபவர்களும் சுற்று வட்டாரங்கள் இருப்பவர்களும் ஜமீன்தார்களும் என்று ஏராளமான கூட்டம் அங்கு திரண்டு இருந்தது.
அவர்கள் ஏற்றுக் கொண்டு வந்த கார்கள் வேன்கள் பஸ்களும் வரிசையாக வெளியே அணிவகுத்து இருந்தது.
கனி ஸ்ரீ காரிலிருந்து இறங்கியதும் அதற்காக காத்திருந்து போல்... அகத்தியரைக் இருகரம் கூப்பி வரவேற்றான்.
வெல்கம் கனி ஸ்ரீ...! உனது வரவு நல்வரவாகட்டும்... வா...! நம்ம பங்களாவில் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போ.
உன்னோட டான்ஸ் குரூப் கரங்கள் தங்களுடைய இசைக் கருவிகளோடு உட்கார்ந்து செட்டில் ஆகட்டும்.
கனிஸ்ரீ தயங்கினாள்.
அஞ்சு நிமிஷம் தான்.... நீ உள்ள வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்....
தம்பி இவ்ளோ பிரியமா கூப்பிடறாரு இல்ல? இளைய ஜமீன்தார் வார்த்தைக்கு மதிப்பு தர வேண்டாமா ? அவருடைய ஆசையை ஏன் கெடுக்கணும்? வா ஸ்ரீ.
இதுதான் சாக்கு என்று துர்கா ஒத்து ஊதினாள்.
பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அது நன்றாக இருக்காது என்று தோன்றிய சரி என்பதுபோல் அவளைப் பார்த்து புன்னகையுடன் தலை ஆட்டினாள்.
தேங்க்ஸ் கனி ஸ்ரீ....! வா...!
அம்மாடி ஸ்ரீ...! தம்பி கூட நீ போ... நான் வழக்கம் போல தட்டுவனார் பக்கத்துல உட்கார்ந்து இருக்கேன்.....
நாசூக்காய் நழுவிக் கொண்டாள் துர்கா.
ஐயோ... !எ.... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு கனி ஸ்ரீ....
நேத்து நைட் முழுக்க நான் தூங்கவே இல்லை தெரியுமா?
என்னை நீ ரொம்பவே டிஸ்டர்ப் பண்றே...!
அவளுக்கு மட்டும் கேட்கும்படி... தழைத்த குரலில் பேசினான்.
என்ன? ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறே?
எ.... எல்லாரும் நம்மள பாக்குறாங்களா தான் சங்கோஜமாக இருக்கு.
பார்த்தா.... பார்த்திட்டு போகட்டும். நமக்கென்ன?
அரண்மனையின் முன்புறத் தோட்டம் அவ்வளவு பிரமாண்டமாய் அழகாய் விழிகளை கவர்ந்தது.
பங்களாவின் ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஏதேனும் நினைப்பார்கள் என்று உள்ளுக்குள்ளே அவளுக்கு தர்ம சங்கடமாய் இருந்தது.
அரண்மனையின் பிரம்மாண்டம்.... அவளை மிரள வைத்தது.
வா உள்ளே வா கனிஷ்கா வலது காலை எடுத்து வைத்து வா...!
மறக்க முடியாமல் சலங்கை பூட்டி என் வலது பாதத்தை எடுத்து வைத்தாள்.
சலங்கைகள் அணிந்து அவளது பாதங்களை சிறு கணங்கள் ரசித்துப் பார்த்தான் அகத்தியன்.
வீ..... வீட்ல வேற யாரும் இல்லையா சார் கிணற்றுக்குள் இருந்து வருவது போல அவர் குரல் சின்னமாய் வந்தது.
எங்கப்பா இருக்காரு எங்க அத்தை காந்தமணி இருக்காங்க அத்தைன்னா... ஒன்னு விட்டு அத்தை...
அவங்க ஒரு டாக்டர்..... எங்கப்பா உங்கள் படிக்க வச்சாரு கல்யாணம் பண்ணி வச்சாரு.
ப்ச்.....! அத்தைக்கு மணவாழ்வு சரியா அமையல சொல்லப்போனா நல்ல கணவர் அமையலை.
அதனால அவங்க இங்கே வந்துட்டாங்க அப்ப அவங்களுக்கு இந்த பூம்பொழில் ஹாஸ்பிடல் ஒன்று கட்டிக் கொடுத்தாரு....
யூடியூப் போயிட்டு வராங்க என்பதையும் கவனிச்சுக்கிறாங்க.
எங்கம்மா 5 வயசு பையனா இருக்கும் போது இறந்துட்டாங்க.
காந்தமணி அத்தை தான் என்னை வளர்த்தாங்க
அவங்கள அத்தனை சொல்வதைவிட ..... எனக்கு அம்மான்னு சொல்லலாம் அந்த அளவுக்கு என் மேல பாசமா இருப்பாங்க.
இன்னிக்கி பௌர்ணமி இல்லையா ? அப்பா அத்தையும் எங்க குலதெய்வ கோவிலுக்கு போய் இருக்காங்க.
பௌர்ணமி பூஜை முடிஞ்சதும் அவங்க வர்ற நேரம்தான் கோவில் அரண்மனைக்கு பின்னாடி தான் இருக்கு.
அரண்மனை குடும்பத்தினர் மட்டும் தான் அங்கு வழிபடக்கூடிய கோவில் அறம் காத்த நாயகி என்ற அம்மனேடா பேர்..! சக்தி வாய்ந்த தெய்வமாக்கும்.
வெகு காலம் பழகிய நபரிடம் கூறுவது போல் குடும்ப விவரங்கள் அவன் கூறிய விதம்.... அவளுக்குப் பிடித்திருந்தது.
அந்த பிரமாண்ட ஹாலில் ஆள் உயரத்தில் பெரிய படம்.
ஒரு சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து கம்பீரமாய் நேர் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் பெரிய ஜமீன்தார் இசைஅமுதன்.
அந்தப் படத்தைப் பார்த்ததும் அவளை அறியாமல் இரண்டடி பின் வாங்கினால் கனி ஸ்ரீ.
ஜமீன்தாரின் கூறிய விழிகள் அவளைப் பார்த்து முறைப்பது போல் இருந்தது.
? தன் காதல் கூறுவாளா கனி ஸ்ரீ??
? புரோக்ராம் நல்லபடியாக நடக்குமா ??
? விதியின் விளையாட்டு முன்கூட்டி தெரிய வருமா? ?