Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-17

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-17
முரளியும் என் தங்கையும் விரும்புறாங்கன்னு தெரிஞ்சது. எங்க அப்பாவுக்கு சந்தோஷம் தான் முரளி மாதிரி நல்ல பையன் கிடைக்க கொடுத்து வைக்கனும். அவன் தன் விருப்பத்தை சொல்லி , பெண் பார்க்க அன்னிக்கு மாலை அனைவரும் எங்க வீட்டுக்கு வந்தார்கள்.
வைஷூ மாப்பிள்ளை பார்த்தவுடனே எங்களை மறந்துடுவ இல்ல..
தன் கண்கள் கலங்க அண்ணா நீங்க இப்படி சொன்னா எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் வைஷு அழ.
பட்டு, அண்ணா சும்மா உன்னைய கலாய்த்தேன்டா என் தங்கச்சியை பற்றி எனக்கு தெரியாதா.

போங்க அண்ணா. ரொம்ப பயந்த சுபாவம் என் தங்கச்சி நிலா சத்தம்மா பேச கூட மாட்டா. முரளி அவள்மேல் நிறைய காதல் வைத்திருந்தான்.

பேசும்போது உள்ளே நுழைந்த சாந்தி மகியோட அம்மா, சீக்கீரம் ரெடியாகு வைஷு மாப்பிள்ளை வீட்டில கிளம்பிட்டாங்கலாம். டேய் மகி அப்பா உன்ன கூப்பிட்டாங்கடா. சரிம்மா நான் போய் பார்க்கிறேன் கீழே இவன் வரவும் ..

முரளி வீட்டிலிருந்து அனைவரும் வந்திருந்தார்கள், முரளி அப்பா சுந்தரம்,அம்மா திலகம்,பாட்டி , தாத்தா . தட்டில் பூ ,பழம், சீலையோடே வந்திருந்தார்கள்.

அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு வைஷூ,நிமிர்ந்து தன்னவனை பார்த்தால். முரளியும் அவளைதான் பார்த்திருந்தான்.

மகி நம்ம பிரண்டே உனக்கு மச்சான்னா வரான், ராகவ் ஓட்டிக்கொண்டிருந்தான். பெரியவர்கள் நல்ல முகூர்த்த நாள் பற்றி பேசினார்கள். இங்கே மகி ,ராகவ்,விக்கி அரட்டையில் இருக்க.

தீடிரென்று அவங்க தாத்தா பேச ஆரம்பிச்சார் நிலா. எங்களுக்கு உங்க குடும்பம் ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க வீட்டு பொண்ண எடுக்கிறப்போ எங்க வீட்டு பொண்ணு சாதனாவ உங்க பெரிய மகன் ஈஷ்வருக்கு கொடுக்கலாம் ஆசை என்ன சொல்லிறீங்க பார்த்தியிடம் கேட்க.

அது... பையன்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும் ..

என்ன தாத்தா இத பற்றி என்கிட்ட சொல்லவேயில்ல மகி என்ன நினைப்பான் முரளி அவர்களை முறைக்க.

பெரியவங்க மனசில இருக்கிறத கேட்டுட்டாங்க தம்பி ஒண்ணும் தப்பில்ல சாந்தி முரளியை சமாதானம் செய்தார்.

ஒரு ஐந்து நிமிஷம் மகியோட பேசிட்டு வரேன்...

வைஷுக்கு பிடிக்கவில்லை அண்ணாவ ஏன் இவர்கள் இழுக்கிறார்கள். அண்ணா அவருக்கு வர போற மனைவியை எப்படியிருக்கனும் எதிர்ப்பார்ப்பு இருக்குமில்ல.

உள்ள பார்த்தி, மகியை பார்த்து என்ன சொல்லற , உனக்கு விருப்பமிருந்தா சொல்லு இல்லையன்னா வேணாம். வைஷுவும் முக்கியம் நீயும் முக்கியம் எங்களுக்கு.

அப்பா உங்களுக்கு அம்மாவுக்கும் ஒகேன்னா எனக்கும் ஓகே தான்ப்பா...தன் மகனை உச்சி முகுர்ந்து கட்டிக் கொண்டார்.

இரண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே வைச்சிக்கலாம். அப்பறம் எல்லா பார்மலிட்டிஸ் நடந்தது நிலா, ஆனா சாதனா எங்கிட்ட பேசவேயில்ல,நானும் பெரியவங்க பார்த்த கல்யாணம்தானே அந்தபெண் கூச்சப்படும், வெட்கபடுது நினைச்சேன் நிலா. அங்கதான் நான் தப்பு பண்ணிட்டேன்.

கல்யாணம் முடிஞ்சு ,வைஷு அவங்க வீட்டுக்கு போனா, சாதனா எங்கவீட்டுக்கு வந்தா.

அன்னிக்கு நைட் முதலிரவு , என் ரூமில் அவயிருந்தா நான் பால்கனியில இருப்பதை அவ பார்க்கல ஆனா நான் அவள பார்த்திட்டே இருந்தேன். எனக்கு அவ மேல விருப்பம் எதுவுமில்ல , என் மனைவி என்ற உரிமை , இவ சடர்ன்னா கையில இருந்த விஷ பாட்டில எடுத்து குடிக்க போனா.

நான் பாட்டில தட்டிவிட்டு அவ கண்ணத்தில அடிச்சேன். காலை பிடித்து என்னை மன்னிச்சிடு ஈஸ்வருன்னு அழ ஆரம்பிச்சா. நான் நினைச்சேன் லவ் பையிலியர் போல பேசி தீர்த்திக்கலாம்.

ஆனா அவ சொன்னா பாரு.
ஈஷ்வர் நான் என் கூட படிச்ச சீனியரை பாலுவ லவ் பண்ணுறேன், அவன் இப்ப கனடா வேலையில இருக்கான். அவன் வரவதுக்குள் எனக்கு கல்யாணம் பண்ணிவிட்டாங்க.
இதையேன் முதல்ல சொல்லலை நானே பேசிருப்பேன் உன் அண்ணாகிட்ட. இப்ப என்ன பண்ண முடியும் அவனை மறந்திடு என்கூட வாழு. எல்லோருக்கு பாஸ்ட்டல காதல் இருக்கும். புரியுதா சாதனா.

இறந்த காலத்தில காதல் இருக்கும் ஆனா நான் நாலு மாசம் கர்ப்பமா இருக்கேன் சொன்னா.

மகி உன்னை நல்லா ஏமாத்திருக்கா அந்த சாதனா சாகனும் நினைச்சா அவங்க வீட்டில விஷம் குடிச்சிருக்கலாம். உன் முன்னாடி சிம்பத்தி கிரியேட் செஞ்சிருக்கா.

ஏய் எவன் குழந்தைக்கு நான் எப்படி அப்பா ஆக முடியும் லூஸு , என்னை முழுசா பேச விடு.

கடைசி வரைக்கு போராடியிருக்கா அந்த பையனால வர முடியில. உங்க வீட்டில சொல்லவா கேட்டேன். அவங்க என்னைய கொண்ணுடுவாங்க ஈஷ்வர்.

நான் அவ முகத்தையே பார்த்தேன் என் பொண்டாட்டி என்ற உணர்வே வரல. விரும்பாத ஒர் பெண்ணை எப்படி மனைவியா பார்க்கிறது. ஏதோ கூட வேல பார்க்கிறவ மாதிரி தெரிந்தா.
ஈஷ்வர் இன்னும் இரண்டு நாள்ல பாலு வந்திடுவான்னு ,அவன்கிட்ட அனுப்பிடுங்க,நாங்க எங்கன்னா போய் வாழ்வோம். உங்க கண்ணிலே பட மாட்டோம் பீளீஸ் ஈஷ்வர்.

என்ன பேசிற சாதனா இதுல என் வாழ்க்கை ,அதவிடு என் தங்கச்சிய உன் வீட்டில கொடுத்திருக்கோம். முடியாது முரளி என்ன நினைப்பான்.

ஈஷ்வர் இன்னிக்கு நான் தற்கொலை செய்ய போனதை தடுத்திட்டே, நான் முயற்சி பண்ணிட்டே இருப்பேன் நீ தடுத்திட்டே இருப்பியா. அடுத்த செகண்டே நான் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவேன். நீ என்ன செய்வே .

என்னால உன் கூட வாழ முடியாது என் பாலுதான் இதயம் முழுக்க இருக்கான்.அவன மனசில வைச்சிக்கிட்டு உனக்கு துரோகம் செய்ய முடியாது ஈஷ்வர் என்னைய சாகவிட்டுட்டு.
அப்பறம் ஹனிமூன் போறேன் ஊட்டிக்கு போனோம். அங்க அவன் பாலு வந்தான் அனுப்பி விட்டேன். அம்மாகிட்டே சொல்லிட்டேன் நிலா அவங்களால தாங்க முடியில அதான் ஹார்ட் அட்டாக் வந்து இறந்திட்டாங்க.

முரளி நம்பவேயில்ல, உனக்கு அவ கூட வாழ பிடிக்கலன்னா அண்ணா என்ற முறையில்ல என்கிட்ட விட்டிருக்கனும் ஒண்ணும் இல்லாத பையன்கிட்ட அதுவும் ஒரு அனாதை அவன்.
உன் தங்கச்சிய அப்படி விட்டா நீ என்னாடா பண்ணுவ எங்க குடும்ப மாணம் போச்சு தாத்தா புலம்புறாரு.

ஸாரிடா எனக்கு புரியுது, என்னுடைய சிட்ஷுவேஷன் அப்படியில்லடா என்ன நடந்துன்னு நான் சொல்லுறேன்டா நீ கோவத்தில இருக்க முரளி.

ச்சீ வாய மூடுடா உனக்கு இந்த மேரேஜில் விருப்பமில்ல கடைசில உன் பொண்டாட்டிய கூட்டி கொடுத்திட்ட . ஏய் வைஷு உனக்கு உங்க அண்ணா வேனுமுன்னா என்னை மறந்துடு.நான் வேனும் நினைச்சா உன் அப்பா குடும்பத்தை மறந்திடு. இந்த உலகத்தில என் முதல் எதிரி நீ தான்டா ஈஷ்வர்....
நான் வைஷீவ முரளிக் கூட அனுப்பி வைச்சேன் போக மாட்டேன் சொன்னா என் நன்பனை பற்றி எனக்கு தெரியும் அவன் என் தங்கச்சி மேல உயிரே வச்சிருக்கான் அவ பிரிவை தாங்க மாட்டான் நிலா.
இதுதான் நடந்தது. நம்ம கிளையன்ட பார்த்திட்டு வர சொல்ல வைஷுவ பார்த்தேன் அதான் யாருக்கும் தெரியாம பேசினே.

நிலா அழ ஆரம்பித்தாள். நீ ஏன்டி டேம்ம திறக்கிற... என் கதை அவ்வளவு சோகமா இருக்கு.
கண்ணை துடைத்துக்கொண்டு நிலா, மகி இந்த சாதனா உன்னைபோய் வேணா சொல்லிட்டாளே, நீ எவ்வளவு நல்லவன் தெரியுமா. எவ்வளவு ஹான்ட்ஸம் தெரியுமா நீ. தன் கண்களை கூர்மையாக்கி நிலாவை பார்க்க... உன்னை எப்படி வேனா சொன்னா,

பெட்டில் நன்றாக படுத்துக்கொண்டு . தன் தலையில் அடித்துக்கொண்டான்.
ஏய் எரும அவ வேணா சொன்னதால உன்னையை கட்டிக்கிட்டேன்.

ஆமாமில்ல, அப்ப நீ கண்ணிபையன் தானா.
ஆமான்டி ஃபியூர் கை படாத பீஸ், உனக்கே உனக்குதான் இந்த மகி அவள பார்த்து கண்ணை அடித்தான்.

ஆனா உன்னை வெளியில எப்படி கீழிக்கிறாங்க. செக்ஸ் டார்ச்சர் ,பிரியர் அப்படி இப்படின்னு .

எல்லாம் பாதி நம்ம முரளி வேல, பாதி நம்ம பிஸினஸ் எதிரி வேலை.

சரி நான் போய் சாப்பாடு எடுத்திட்டு வரேன் தூங்காத, நீ பசியில்ல இருப்ப.

இப்பதான் தெரியிதா உனக்கு, எனக்கு எதுவும் வேணாம், நீயே கொட்டிக்கோ நான் தூங்கிறேன்.உடனே கீழே இருந்து சாப்பாத்தி சென்னாவும் எடுத்து வந்தாள்.இவன் பால்கனியில் நிலவை பார்த்து சோபாவில் அமர்ந்திருக்க , அவன் அருகில் உட்கார்ந்தாள் நிலா.
எதை பார்ப்பது என்று மகிக்கு தெரியவில்லை அங்கே நிலா காய்கிறது இங்கே என் நிலா என்னை நினைத்து தேய்கிறாள், அவனுக்கு சாப்பாத்தி எடுத்து ஊட்டினாள்.

என்னடி பாசம் ஒவரா பொங்குது. நிலா அவனை முறைக்க பின்னாடி எங்கேயோ ஒரு வீட்டில் எப்.எமில் இளையராஜா காதல் இன்னிசை ஓலித்துக்கொண்டிருக்க. அந்த ரம்மியமான இரவில் , நிலவின் குளிர்ச்சி நிலாவின் அருகாமை நம்ம ஈஷ்வருக்கு தன் காதல் உணர்ச்சி வெளியே வர மெல்ல அவள் இதழை பார்த்தான்.

அந்த நிலவின் வெளிச்சத்தில் ரோஜா நிறமாக தெரிந்தது நிலாவின் இதழ் .. இது உன்னுடையது ஈஷ்வர் என்று அமைதியாக அழைப்பு விடுத்தது. ஆனாலும் மகி இந்த சாதனா உன்னை போய் முடிப்பதற்குள் அவளின் வார்த்தையை தடுத்தான் தன் இதழ்களால் .
அவனின் இதழ் தீண்டல் நிலாவின் உயிர் வரை சென்று அவனுக்கு உயிர் கொடுத்தது. இருவரும் உணர்ச்சியின் பிடியில். இத்தனை வருட ஏக்கத்தை அவளிடம் இறக்கி வைத்தான். அவன் தீண்டலில் உருக்கினால். அவளும் அவன் இதழ்களை சுவைக்க. ஈஷ்வரின் கை அவளின் இடுப்பை வளைத்தது.

சிறிது நாழி விட்டு திரும்பவும் முத்தமிட்டான் மகி. மொத்தமும் வேண்டும் என்று மனசு ஏங்க அவள் கழுத்து வளைவில் புதைந்தான்.

நிலா என்ன நடக்குது என்று உணர ஆரம்பிக்க. வேண்டாம் மகி...... என்று தள்ளினாள்.
 
அடக்கடவுளே இந்த சாதனா
மேல தான் தப்பா
 
Top