Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-14

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-14
கொஞ்சம் தூரம் நடந்தா பம்புசெட் வரும் , தண்ணீல சுத்தம் செஞ்சிக்கலாம் மகி. சரி என்று நடக்க ஆரம்பித்தான். வாழைத்தோட்டம் பக்கம் நடந்து வந்தனர். வாழை குலை தள்ளி வாழைக்காயோடு நின்றது.

நிலா ஸ்ஸ்ஸ் சத்தம் வருதுடி இந்த வாழை மரத்தில பாம்பு இருக்குமோ.

இருக்கலாம் ஆனா வேற மாதிரியில்ல வருது.

ஆமாண்டி, யாரோ உள்ள இருக்காங்க, இல்ல பாம்பா இருக்கலாம், கீழே இருந்த கம்பை எடுத்து நான் போய் பார்க்கிறேன்.

மகி வேணாம், நாம்ம போலாம். ஏய் தீவிரவாதிங்க யாராவது வந்திருப்பாங்கடி, இல்ல திருட்டு பசங்கலா இருக்குமோ நிலா.

இங்க தீவிரவாதி போ மகி...

என்னடி இப்படி பேசிட்ட நான் பிளாக் பெல்ட் வாங்கிருக்கேன், நீ பயப்படாத புரியுதா. ச்சு...ச்சு சத்தம். என்ன சத்தம் ரோம்ப வருது. இது வேலைக்ககாது நான் உள்ளே போறேன்.

மகி வேணாம், இங்க இப்படியெல்லாம் நடக்கும், நாங்க கண்டுக்காத போயிடுவோம்.
உள்ளே போய் பார்க்க காதல் ஜோடி கொஞ்சிக் குளாவி கொண்டிருந்தனர். பின்னாடி வந்த நிலா ச்சீ என்று ஈஷ்வர் முதுகில் தன் முகத்தை மறைத்தாள். இருவரும் வெளியே வந்தார்கள் என்னடி நடக்குது பட்டபகலில் கசமுசா..

அதுக்குதான் சொன்னேன் போக வேண்டாம். சென்னையில் பீச்சு மாதிரி, இங்க லவ்வர்ஸ் எங்க மீட் பண்ணுவாங்க...

ஆனா செம சீனு, ஆமாம் இந்த ரகு கிஸ்ஸடிச்சிட்டு இருக்கானே அந்த பொண்ணு யாருடி...
யாரு ரகுவா, ஆமாம் உள்ளே ரகு தான் ரோமென்ஸ் பண்ணிட்டு இருக்கான், கொடுத்து வச்சவன், நானும் பாரு கல்யாணமாகி நோ யூஸ்...

ஐயோ மகி அவன கூப்பிடு யாராவது பார்த்துட்டா,ஏற்கனவே என் சித்தப்பா பொண்ண தர மாட்டேன் சண்டை போடுறாரு, இந்த கவிதாவ சொல்லனும்.

விடுடி அவங்களாச்சும் என்ஜாய் பண்ணட்டும்...நிலாக்குட்டி இப்பதான் இந்த மாமனுக்கு புரியுது, நீ ஏன் வயலுக்கு வரனும்,தோப்புக்கு போலாம் சொன்னது நம்ம கசமுசா பண்ணதானே.

தலையில் அடித்துக்கொண்டாள் நிலா, மகி சும்மா லூசு மாதிரி பேசாதே.

யாரு நான் லூசா நான் வீட்டுக்கு போறேன் போடி..., ஸாரி மகி வாங்க, அங்க பம்புசெட் இருக்கு போய் குளிக்கலாம். இருவரும் தொட்டியில் இறங்கினார்கள்.

தண்ணீரில் மூழ்கி எழுந்து நிலாவை பார்த்தான் ஈஷ்வர், நீரில் நனைந்த உடை அவள் நளினத்தை எடுத்து காட்ட, மெய் மறந்து நிலாவையே பார்த்தான்.

ஐயோ இவன் இப்படி பார்க்கிறான், மகி வா நாம்ம அந்த கால்வாய், (தண்ணீர் போகும் இடம்), அதில உட்கார்ந்தா வெயில்ல சீக்கிரம் துணி காய்ந்துவிடும்.

வேணாம் நிலா, இந்த மோட்டர் ரூமிற்குள் போகலாமா.

நிலா மகியை முறைக்க, என்ன அடிக்கடி இப்படி கண்ணை பெரிசாகி பெரிசாகி பார்க்கிற...நீ சொன்ன இடத்திற்கே போகலாம்...

மகி, அங்க தூக்கனாகுருவி எப்படி வீடு கட்டுது பாரேன், எவ்வளவு அழகு.

ம்ம்ம் இதெல்லாம் நான் யுடிப்ல பார்த்திட்டேன் நிலா , கண்ணத்தில் கையை வைத்து உட்கார்ந்தான்.

உனக்கு இயற்கையை ரசிக்கவே தெரியில மகி.

நான் இயற்கையைதான் ரசிச்சுட்டு இருக்கேன், அவளை பார்த்திட்டே சொன்னான், இவளு புரியிலையா இல்ல நடிக்கிறாளா...

அந்தபக்கமா நான்கு பெண்கள் குளித்துவிட்டு பாவாடையை தூக்கி கட்டிக்கொண்டு நடந்து வந்தார்கள், ஈஷ்வரை பார்த்து ஹாய் மாமோய் என்ன இந்தபக்கம் என்று கத்த...

ஹாய் பியூட்டிஸ் குளிச்சிட்டா வரீங்க... இவர்கள் பேசுவதை முறைத்துக்கொண்டே பார்த்தாள் நிலா. வரீங்களா மாமா குளிக்கலாம் என்று ஓரு பெண் அழைக்க, நிலாவை பார்த்து ஈஷ்வர் , நான் வீட்டிலே குளிச்சிட்டேன், நாளைக்கு வரேன் சொல்ல...

நிலா கோவத்தில் கீழே இறங்கி நடந்தாள்,ஏய் நிலா எங்க என்ன விட்டுட்டு போறே... நிலா ஆஆ என கத்தி கீழே காலை பிடித்து உட்கார்ந்தாள்.

ஈஷ்வரும் பதட்டத்தில் என்னாச்சு நிலா என்று அவள் காலை பார்த்தான் பெரிய கருவேலமரத்து முள் அவள் காலில் குத்திருந்தது.

என்ன நிலா இவ்வளவு பெரிசா இருக்கு, தன் சுண்டு விரல் சைஸ் முள்ளை இப்பொழுதுதான் பார்த்தான் ஈஷ்வர். நான் எடுக்கட்டா என்று தொட போக, வலிக்குது மகி என்று அழ ஆரம்பித்தாள். அவளை தன் கையால் தூக்கிக் கொண்டு மரத்தின் அடியில் உட்கார்ந்து, அவளை தன் மடியின் மீது உட்கார வைத்தான்.

ரொம்ப வலிக்குதா நிலா..ம்ம்ம் அவள் கண்ணில் கண்ணீர் வந்தது. மெல்ல ஓரு கையால் அவள் முகத்தை பற்றி ஓண்ணும் ஆகாது நிலா அழாதே சொல்லி தன் இதழ் கொண்டு கண்ணீரை துடைத்தான்.

ஈஷ்வரின் செயலில் நிலாவுக்கு வெட்கம் வர, வந்த கண்ணீரும் உள்ளே போய்விட்டது. மெல்ல தன் தோள்மீது சாய்த்து கொண்டான் அவன் மூச்சு காற்று அனலாக வீசியது நிலாவின் மேல், நிலா அவளை மறந்த வேளையில் ஈஷ்வர் ஒரு கையால் முள்ளை எடுத்தான்....

உடனே ஈஷ்வர் ஆஆஆ ன கத்த... என்னடி பண்ண எழுந்திருடி இப்படியா கடிச்சு வைப்ப , ரத்தம் வருது அம்மா...பாஸ்சன் ஆக போதுடி டாக்டர்கிட்ட போய் ஊசி போடனும். அம்மா என தோள்பட்டை பிடிக்க... முள் எடுக்கும் வலி தாங்காமல் ஈஷ்வரை கடித்திருந்தாள் நிலா.

ஐய்யோ லைட்டா பல் பட்டுச்சு, இதுக்குபோய் இப்படி குதிக்கிறீங்க. தன் சட்டையின் பட்டனை கழிட்டி காட்டினான் ஈஷ்வர், மொத்தம் பத்து பல்ல பதிஞ்சிருக்கு...

காரில் உட்கார்ந்து ஆ..ஊ.. கத்திக்கொண்டே வர.. ஈஷ்வரின் செயலை பார்த்து பயம் வந்தது நிலாவுக்கு , மகி உன் ஷோல்டரை காட்டு என்று கிட்ட வந்து பார்க்க நச்சுன்னு கண்ணத்தில் முத்தமிட்டான் ஈஷ்வர்...

மகிகி... அடிக்க வர நிலாவின் கையை பிடித்து என்னடி தொட்டா ஓடி போற. கவுண்டமனி படத்தில வர மாதிரி வயசுக்கு வராத பெண்ணை உங்க அப்பா கட்டிக் கொடுத்திட்டாரா.. ம்ம்..தன் கண்ணை சுருக்கி வந்திட்டியா.. இல்லையா...

நிலா அவன் தலை முடியை பிடித்து ஆட்டிவிட்டு இன்னோரு முறை இப்படி கேட்ட கொண்ணுடுவேன் சொல்லிட்டேன்...

அப்பாடா பயந்துட்டேன் எங்கடா நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமோ நினைச்சேன்... சிரித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர்..

பார்த்தி வந்து தன் மகனை பார்த்து என்னடா ஓகேவா..

ஈஷ்வர் உதட்டை பிதுக்க,ராம் பார்த்திடம் கேட்க பைலியராம்...

உடனே ராம், மாப்பிள்ளையிடம், பெண்ணுக்கு நகை வாங்க வேண்டும் கோயமுத்தூர் போயிட்டு நீங்களும்,நிலாவும் வாங்கிட்டு வாங்க சொல்ல...

சரியப்பா சொல்லி தன் உடையை மாற்ற நிலா ரூமிற்குள் சென்றாள், தேங்க்யூ மாமா என்று ராமை கட்டிக் கொண்டான்...மாப்பிள்ளை மாலுக்கு கூட்டிட்டு போங்க.

என்ன சகல காலையிலிருந்து ஆளே காணோம் எங்க கிளம்பிட்ட , இன்னிக்கு நைட்டு பார்ட்டி இருக்கு சகல–ரகு.

வாடா ரகு , உன்னதான் தேடிட்டு இருந்தேன். என் புருஷனுக்கு இல்லாத பழக்கமெல்லாம் சொல்லி குடுத்து கெடுத்து வச்சிருக்கே...

ஆமாம் என் பொண்டாட்டி உன் கூட பேச கூடாது சொல்லிட்டா...போடா நான் வரல..
யாரு உன் புருஷனுக்கு ஓண்ணும் தெரியாது, அப்ப ஜிகினா கூட இடுப்ப வளைச்சு வளைச்சு ஜோடி போட்டு ஆடுனது நானா , உன் மகியா..

நிலா ,ஈஷ்வரை முறைக்க...அது நேத்து நைட்டே முடிஞ்சிடிச்சு, டேய் எரும நீயும், கவிதாவும் வாழைதோப்புல... கசமுசா..ஈஷ்வரின் வாயை மூடினான் ரகு.. டேய் சகல வெளியே சொல்லாத கொலையே பண்ணிடுவானுங்க.

நாங்க பார்த்துட்டோமே ஈஷ்வர் கலாய்க்க,அப்ப கல்லை தூக்கி எறிஞ்சது நீயாடா ஈஷு...

நானில்ல நிலா என்று கையை காட்ட..டேய் ரகு உன்னால கவிதா பெயரு கெடும் ஜாக்கிரதை நிலா எச்சிரிக்கை.

ஏன் உன் சித்தாப்பா மேரேஜ் செஞ்சி வைக்கிறது அவங்க விரும்பிறாங்க தானே.
ஆனா சித்தப்பா வேலைக்கு போகனும் சொல்லுறாரு, இவன் கேட்டாதானே.

அவ்வளவுதானே நீ வாடா என் கம்பெனிக்கு நான் மேனேஜர் வேலை தரேன். நீ என் கம்பெனி பிரான்ச்சை இங்க ஆரம்பிக்கலாம்.

சகல நிஜமாவா, தேங்க்ஸ் என்று கட்டிக் கொண்டான் ரகு.
--------
பிங் சுடியில் தேவதைபோல் வந்தாள் நிலா, அவளை பார்த்துக் கொண்டே வண்டியை ஓட்டினான் ஈஷ்வர்.

ஈஷ்வர் தன்னை பார்ப்பதை உணர்ந்த நிலா வெளியே வேடிக்கை பார்த்தாள்.
நிலா...ம்ம்...உன் காதுல போட்டிருக்கியே அதுக்கு பெயரு என்ன..

சிமிக்கி கம்மல் மகி..

உனக்கு அழகாக இருக்கு, நீ பேசம்போது அதுவும் ஆடுது...

தன்னவளின் கையை மெல்ல பிடித்து, நிலா ஐ லவ் யூடி என்று தயங்கி தயங்கி ஈஷ்வர் சொல்ல, அவள் கையை பிடித்து தன் இதழ் பதித்தான்...நான் என் காதலை கூறிவிட்டேன் என்று சாட்சியாக...

நிலாவிற்கு என்ன சொல்லுவதே தெரியவில்லை தன்னை மறந்து பார்ந்தாள்... என் மகி, இன்றல்ல மூன்று வருட எதிர்பார்ப்பு... என்னையெல்லாம் உனக்கு பிடிக்குமா மகி என்று இரவில் அழுதிருப்பாள்...சுமாரான பெண், மேல்தட்டு நாகரிகம் இல்லை, கண்ணை உறுத்தாத வண்ணத்தில் உடை அணிவாள்
இன்று ஈஷ்வரே தன்னை பிடிக்கும் என்று கூறுவதை கேட்டு மனம் நிறைந்தது. சொல்ல வார்த்தையில்ல நிலாவிற்கு... இன்று இரவு வீட்டில் அவனிடம் தன் மனதிலிருப்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள்.

நிலா என்ன எதுவும் பேச மாட்டே,பிடிக்கலையா இனிமேல் நம்ம வாழ்க்கையை வாழனும் நிலா... மால் வர காரை பார்க் செய்து நிலாவின் கையை பிடித்து நடந்தான்.

ஃபுட் கோர்ட்டில் அமர்ந்தார்கள் , என்ன சாப்பிடற நிலா...

உனக்கு பிடிச்சதை சொல்லு மகி.. அவள் கணவனை காதலாக பார்க்க... சர்வரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு, என்னடி இப்படி லுக்கு விடுற செமயா இருக்குடி, அவள் முடியை காதோறும் சொருகிவிட ... நானத்தால் முகம் சிவந்தது நிலாவுக்கு...

ஹாய் ஈஷ்வர், ஓருவன் தன் கையில் நான்கு வயது மகளுடன் நிற்க, ஹலோ அரவிந்த வாங்க என்று கையை குலுக்கினான் ஈஷ்வர்..

நிலா தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது... இவ்வளவு நேரம் அவள் இருந்த சந்தோஷம் தவிடு பொடியானது...

ஆங் நிலா உனக்கு ஏற்கனவே தெரியும் அரவிந்த,ஈஷ்வருக்கு போன்கால் வர ஓன் மினிட் சிறிது தூரம் சென்று பேசினான்.

அரவிந்தன் நிலான்னு கூப்பிட, யார் நீ என்று முறைத்தாள்..

என்ன நிலா மறந்திட்டியா, உனக்கு பண்ண வேலைக்குதான் நான் இப்ப தண்டனை அனுபவிக்கிறேன். சாரிம்மா.

உன் வேலை என்னவோ அத பாரு... என் வாழ்க்கையில் தலையிடாத-நிலா.

நான் உன்னை ஏத்துக்க தயாரா இருக்கேன் வா என்கூடவே நிலா.
அவன் பெண் நிலாவை பார்த்து அம்மா என்று கூப்பிட,

நான் உனக்கு அம்மாயில்ல ஆண்ட்டி சொல்லு, உன் பொண்ணுக்கு நல்லா டிரைனிங் கொடுத்திருக்க போல, என்னைய உன் பொண்ணுக்கு ஆயாம்மா ஆகிடலாம் நினைச்சியா.

நிலா பொருமையா பேசிக்கலாம் ஈஷ்வரை விட்டு வா நீ, என்று கையை பிடிக்க போக, பளாருன்னு அரவிந் முகத்தில் அடித்தான் ஈஷ்வர்..

இவ என் பொண்டாட்டி , அவள் மேல கை பட்டிச்சு கொண்ணுடுவேன், நிலாவின் கையை பிடித்துக் இழுத்துச் சென்றான் ஈஷ்வர்.

நிலாவிற்கு கோபம் வழியில் ஏதுவும் பேசவில்லை......
-------- நிலாவை பிடித்தேன்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Aravaindh???evlo kozhuppu indha aravindh ku eshwar oru adiyoda vittutanga innum naalu saathu saathirukkanum...
 

Advertisement

Top