Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-22

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-22

கேன்டினில் சக்தி புத்தக்கத்தை திருப்பி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க... பாப்பா இந்தா காபி குடிச்சிட்டு படி... சித்தப்பூ முகத்தை பார்க்காமலே கையில் வாங்கி டேபிளில் வைத்தாள்...

ஆனாலும் பாப்பா நீ ரொம்ப படிக்கிற... கண்ணு வைக்காதே சித்தப்பூ நானே மூடு வந்து இப்போதான் படிக்க புக்ஸ் எடுத்திருக்கேன்...

அதெல்லாம் சரி செல்லுல அவன் போட்டாவ பார்த்திட்டே படிப்பையா...

ஹீ ஹீ...பார்த்திட்டியா.. சும்மாதான் சித்தப்பூ.. உடனே கண்கள் கலங்கினாள்..

ஏய் பாப்பா எதுக்கு இப்போ அழற...அவன் பேசி மூனு மாசம் ஆகுது தெரியுமா... ஒரே ரூமில நான் எப்படியிருக்கேன்.. என்னைய பாரக்கவே மாட்டான் மூஞ்சை திருப்பிட்டு போயிடுவான்... எனக்கு சாகலாம் போல இருக்கு. வாழ்க்கையே வெறுத்திடுச்சி...

பாப்பா இதுதென்ன சாக போறனும் பேச்சு... உனக்கு உன் புருஷன்ன சமாதானம் படுத்த தெரியில...

ஆமாம் இதுக்கு முன்னாடி அப்படியே இருஉயிர் ஒர் உடல் போல ஒட்டிட்டு இருந்தோம்... அப்பவும் முறைச்சிட்டு தான் இருப்பான்... இங்க பாருண்ணா ரொம்ப பண்ணுறான் அப்பறம் இந்த சக்தி அவ வேலையை காண்பிப்பா சொல்லிடு அவன்கிட்ட...

அதானே ரொம்ப பண்ணுறான் பாப்பா... உனக்கு சூட்டாக்கல இந்த கெட் டப்.. பழைய படி மாறுபாப்பா. ஆனா படிக்காத மட்டும் இருக்காதே...

நீ கவலை படாதே சித்தப்பூ பேப்பரை மாத்தியாவது நான் பாஸ் பண்ணிடுவேன்... அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான் வேலு.. அதுக்குதான் இந்த சிவா உன்னை திட்டுறான்...

கேன்டின் உள்ளே லாவண்யா கூட சந்தியா நுழைந்தாள். சக்தி இவங்க உன்னை பார்க்கனும் சொன்னாங்க... சக்தி, சந்தியாவை பார்த்து தலையை அசைக்க..

ஹாய் நேம் சந்தியா... உட்காருங்க சந்தியா... சக்தி சொல்ல

ம்ம் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்...

இவங்க என் அண்ணாதான் பேசலாம்.

எப்படி சொல்லறது... சிவா எனக்கு இரண்டு வருஷமா தெரியும்... பிஸினஸ் மூலம்தான்...நான் அவங்களை விரும்பினேன்... கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்டேன். விருப்பமில்ல சொன்னாரு... எனக்கு சிவா உங்களை கல்யாணம் செஞ்சது தெரியாது சக்தி... அன்னிக்கு டீலர் விஷியமா பேச வந்தாரு... நான் படிக்கட்டில இருந்து விழுந்திட்டேன்... அதான் தூக்கிட்டு வந்தாரு..தப்பு என்மேல தான் நீ அங்கேயிருந்தேன் லாவண்யா சொன்னா..

ஸாரி சக்தி... கண்டிப்பா சிவாவுக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது...நான் அப்போ கனடாவில இருந்தேன்...

ஆனா இரண்டு வருஷம் முன்னாடியே சொன்னான்.. நான் ஏற்கனவே கமிட்டடு... என் காதலி எனக்காக காத்திட்டு இருக்கா சொன்னாரு நான்தான் நம்பவில்லை...

என்னடா, இரண்டு வருஷம் முன்னாடியா.. பொய் சொல்லியிருக்கான் பாரு...

பரவாயில்ல விடுங்க சந்தியா... என்ன சாப்பிடுறீங்க ஜஸ்ட் காபி என்றால் சக்தி.

ஓகே.. சக்தி இன்னோரு விஷியம் சிவா என்னுடைய டீலரை கேன்சல் பண்ணிட்டான்... நீ கொஞ்சம் பேசு..

நான் அவர் பிஸினஸ்ல தலையிடுறதில்ல சந்தியா.. அது அவர் விருப்பம்...

சந்தியா ,உங்களுக்கு சிவாவுக்கு ஏதோ பிரச்சனையின்னு கேள்விப்பட்டேன்...

அதெல்லாம் ஒண்ணுமில்லையே சந்தியா ,நான் இப்போ மூனுமாசம் முழுகாம இருக்கேன்... அதான் கொஞ்சம் டல்லா இருக்கேன்...

ஓஓ சரி நான் வரேன் சக்தி என்று கிளம்பினாள்...

பாப்பா என்ன இப்படி பொய் சொல்லுற... சிவா கேட்டா...

என்ன செய்வான், சண்டை போடுவான் பரவாயில்ல சித்தப்பூ... எங்களுக்குள்ள பிரச்சனை சொன்னா இவ உள்ளே வந்துடுவா புரியுதா...

சரி இப்போ கிளீயர்ராயிடுச்சா... சிவா நல்ல பிள்ளையின்னு...

அப்பவே கிளீயர் ஆயிச்சு சித்தப்பூ... இவன் கோவம் தான் போக மாட்டுது...

யாராவது வந்தா எப்படி பேசுவான் சக்தி...

பாசமா இருக்கிற மாதிரி பில்டப் தருவான் பாரு...இவர்கள் பேசிட்டு இருக்கும்போதே வந்தான் சிவா...

பாப்பா சிவா வரான்..ம்ம் என்று அமைதியானாள்.வேலு பக்கத்தில் அமர்ந்தான்... தன் லேப்டாப்பை ஒபன் செய்து கணக்குகளை பற்றி வேலுவிடம் பேசிக்கொண்டிருந்தான்... வேலை செய்யும் மணி, சிவாவிற்கு ரோஸ்மில்க் எடுத்து வந்து கொடுத்தான் . ஒரு மிடர் குடித்துவிட்டு டேபிளில் வைத்தான் சிவா.பிறகு பேச ஆரம்பிக்க...சக்தி அவன் குடித்த ரோஸ்மில்கை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு வைத்தாள்...



எதிர்பக்கம் சிவாவை பார்க்காமல் தன் வேலையை கண்ணாக செய்து கொண்டிருந்தாள் சக்தி. ஒரு நிமிடம் சிவாவே யோசித்தான்... என்னடா ராட்சஸி அமைதியா இருக்கு.. பிறகு வேலுவிடம் வேலையை பற்றி பேசியபடி இருந்தான்...

பேணா வை கையில் ஆட்டியபடி பக்கத்தை திருப்பினால்... கீழே தன் காலின் கட்டை விரல்லால் சிவாவின் காலை தேய்த்தாள். ஏதோ உறுவதுபோல் இருந்தது. பிறகு அவன் பேண்ட்க்குள் நுழைத்தாள். அவன் காலை தேய்த்தாள்.

ம்ப்ச்..ச்சே என்று பேசுவதை நிறுத்தி அவளை பார்த்தான்.. ஏதுவும் தெரியாது போல் படித்துக் கொண்டிருந்தாள்... என்ன சிவா என்னாச்சு பாதியிலே நிறுத்திட்ட..

ஒண்ணுமில்ல என்று பல்லை கடிக்கிற சத்தம் சக்தி காதில் விழுந்தது. டேய் நானெல்லாம் யாரு என்கிட்டவா... சண்ட போடுடா பார்க்கலாம்.. அதுக்குதான் வையிட்ங் என்று நினைத்தாள்...

திரும்பவும் சிவா கணக்கை பற்றி வேலுவிடம் கூற... இப்போ அடுத்த காலில் முன்னேறினாள்... திரும்ப நிறுத்தி சக்தியை பார்த்தான்... எதுவும் தெரியாது போல் நடித்தாள்..

வேலுவுக்கு புரிந்து விட்டது பாப்பா தன் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டா... ஏன்டா சிவா...

இங்க டிஸ்டபன்ஸா இருக்கு சித்தப்பூ...இல்லையே இங்க நெட்வொர்க் நல்லா எடுக்குமே... வெளியே பசங்க வந்திருப்பாங்க சிவா...நம்ம இங்கேவே கண்டினியூவ் செய்யலாம்..

சக்தி கீழ் உதட்டை கடித்து சிரிக்க.. காலை உள்ளே விட...தன் இரு காலால் அவள் காலை மடக்கி பிடித்தான்...அய்யோ வலிக்குது விடுடா சிவா என்று அவனை பார்க்க... அவளை முறைத்து பார்த்தான்.

தன் கையால் அவன் தொடையை கிள்ள முயன்றாள்... சிவா நகர்ந்து நகர்ந்து உட்கார கடைசியில் கிள்ளிவிட்டாள்.. பட்டென்று எழுந்து சக்தியின் கண்ணத்தில் ப்ளாருன்னு அடித்தான் சிவா...

தீடிரென்று சிவா அடிப்பான் நினைக்கவில்லை... கண்கள் கலங்க...டேய் சிவா ஏன்டா பாப்பாவ அடிக்கிற அமைதியாதானே இருந்தா இதுக்குமேல் எதுவும் பேச முடியாத வேலு வெளியே செல்ல...

ஏய் கொண்ணுடுவேன்டி எங்கிட்ட இனிமே வச்சிக்கிட்ட...

என்னடா பண்ணுவ ..

ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா...

என்ன எப்ப பார்த்தாலும் பொண்ணா பொண்ணா கேட்கிற... டவுட் இருந்தா டெஸ்ட் பண்ணி பாரு...

இப்போதான்டி அடி வாங்கின உன் வாய் அடங்குதா பாரு...

சிவ்வா... என்று அழைக்க...

அப்படி கூப்பிடாத எனக்கு பத்திக்கிட்டு வருது...ச்சே என்று வெளியே சென்றான்..

ஏன் இப்படி கோவிச்சிக்கிறான்...யோசித்தாள் அய்யோ சக்தி அவன் தொடையை கிள்ளல... ஹோ மை காட்....ச்சீ சக்தி அவன் உன்னையை கேவலமா நினைக்க போறான்...அவள் மனசாட்சி கேட்க...அவனே எனக்குதான் சொந்தம் எனக்கில்லாத உரிமையா...

தன் கையை பார்த்தால்... சோப்பு போட்டு கழுவுனோம் போல...விடு விடு வாழ்க்கையில அதெல்லாம் சகஜம்பா.. நாளைக்கு மறுநாள் கல்யாண நாள் எனக்கு பொறந்த நாளும்... என்ன நடக்கும் பார்க்கலாம்.

அன்று மாலை சக்தி குழந்தை பார்க்க தேனு வீட்டிற்கு வந்தாள்... அப்படியே இரவு அங்கே தங்கிவிட்டாள்.. ரேனுகா தன் மருமகளிடம் ஒரு நாள் தங்க சொல்ல மறுப்பு கூறாமல் தங்கிவிட்டாள்... சிவா வேற கோவமா இருக்கான் அங்கே போக பயந்து இந்த முடிவை எடுத்தாள்.

முவரும் பேசி அரட்டை அடித்துவிட்டு தூங்க சென்றனர்...

ரேனுகா தன் மகன் சிவாவிடம் சொல்லிவிட்டாள் இன்று சக்தி தேனுவீட்டில் தங்குவதாக...

பெட்டில் படுத்து அடிக்கடி போனை எடுத்து பார்த்தாள் சிவா கால் பண்ணுவானோ என்று... கல்யாணம் ஆன நாளிலிருந்து இன்று வரை தனியே படுத்தது இல்லை...புருஷன் கூடதான் இருக்கனும் சொல்லுவான்... ஆனால் இன்று... சக்திக்கு கவலையாக இருந்தது.. அந்த அளவுக்கு நம்மளை வெறுத்துவிட்டான் போல...இன்னிக்கி வேற கையை வச்சிகிட்டு சும்மாயில்லாம...தன் கையை பார்த்தால்... இந்த சிவாவை இம்ப்ரஸ் செய்யலாம் நினைச்சா நமக்கே ஆப்பு வைக்குது... புலம்பிக்கிட்டே தூங்க ஆரம்பித்தாள்...

திரும்பி படுத்தாள்... தூக்கத்தில் யார் மேல கையை போட்டோம் என்று தெரிந்துவிட்டது, கண்ணை திறந்து பார்த்தாள் சிவா பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் ரொம்ப சந்தோஷமாக இருந்தது சக்திக்கு மணியை பார்த்தாள் 12.30... எப்போ வந்தான் சாப்பிட்டானா தெரியிலையே அத்தையை பார்த்துட்டுதான் வந்திருப்பான்...

மெதுவாக அவன் கண்ணத்தை தொட்டாள், பிறகு தலையை கலைத்து விட்டாள்... அழகுடா நீ ... என்மேல எவ்வளவு லவ்.. நான் கூட உன்னை லவ் பண்ணுரேன்... உதட்டை குவித்து அவனை தொடாமலே முத்தமிட்டாள்...அவன் பக்கத்தில் இருந்தால் பாதுகாப்பாக உணர்வாள் எப்போதுமே... அவன் மேலே கையை போட்டு தூங்க ஆரம்பித்தாள்...
இங்கே கருணா வீட்டில் தயா தன் மனைவி தேவியை கட்டியணைத்திருந்தான்.. இப்போதான் அவன் தேடல் முடிந்தது... தேவிம்மா என்று உச்சதலையில் முத்தமிட்டான்..

மாமா...

ம்ம் என்னடா..

நான் உங்களை திருப்தி படுத்தினேன்னா... அவளை விலகிவிட்டு என்னடி கேள்வி கேட்கற..

இதுக்குமேல நான் என்ன செய்ய முடியும் மாமா..என்னால பிள்ளையை பெத்துக்க முடியில சொல்லுறீங்க... வேறொருத்தியை கல்யாணம் செஞ்சிக்க கேட்டிங்க..

இப்போ நானே சொல்லுறேன் டிவோர்ஸ் கொடுக்க சம்மதிக்கிறேன் மாமா... எனக்கு நீங்க வேணாம்... முடிஞ்சா என்னுடைய குறையை பெரிதுப்படுத்தாமல் என்னை விரும்புற ஒருத்தன் வந்தான் மறுமணமும் செஞ்சிக்குவேன்...

தேவி...தேவி...ஏன்டி மாமாவ பிடிக்கலையா உனக்கு... இப்படி பேசாதடி நான் தப்பு பண்ணிட்டேன் தான் ஆனா இந்த இரண்டு மாசமா நான் மாறிபோயிருக்கேன் உனக்கு தெரியிலையாடி...

தப்பு தான் மன்னிச்சிடுடி எனக்கு குழந்தையே வேணாம் தேவி... நீ மட்டும் போதும் கண்ணீரை வழிய தயா பேச..மாமா என்று அணைத்துக் கொண்டாள் தேவி... திரும்ப காதலினால் ஒரு அரங்கேற்றம் நடந்தது.

  • --தெறிக்க விடுவான்
 
Sakthiyum summa irukkarathilla. Yethavathu panni Sivakitta thittu vangtte irukku.
 
தெறிக்க விடுவான்-22

கேன்டினில் சக்தி புத்தக்கத்தை திருப்பி நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க... பாப்பா இந்தா காபி குடிச்சிட்டு படி... சித்தப்பூ முகத்தை பார்க்காமலே கையில் வாங்கி டேபிளில் வைத்தாள்...

ஆனாலும் பாப்பா நீ ரொம்ப படிக்கிற... கண்ணு வைக்காதே சித்தப்பூ நானே மூடு வந்து இப்போதான் படிக்க புக்ஸ் எடுத்திருக்கேன்...

அதெல்லாம் சரி செல்லுல அவன் போட்டாவ பார்த்திட்டே படிப்பையா...

ஹீ ஹீ...பார்த்திட்டியா.. சும்மாதான் சித்தப்பூ.. உடனே கண்கள் கலங்கினாள்..

ஏய் பாப்பா எதுக்கு இப்போ அழற...அவன் பேசி மூனு மாசம் ஆகுது தெரியுமா... ஒரே ரூமில நான் எப்படியிருக்கேன்.. என்னைய பாரக்கவே மாட்டான் மூஞ்சை திருப்பிட்டு போயிடுவான்... எனக்கு சாகலாம் போல இருக்கு. வாழ்க்கையே வெறுத்திடுச்சி...

பாப்பா இதுதென்ன சாக போறனும் பேச்சு... உனக்கு உன் புருஷன்ன சமாதானம் படுத்த தெரியில...

ஆமாம் இதுக்கு முன்னாடி அப்படியே இருஉயிர் ஒர் உடல் போல ஒட்டிட்டு இருந்தோம்... அப்பவும் முறைச்சிட்டு தான் இருப்பான்... இங்க பாருண்ணா ரொம்ப பண்ணுறான் அப்பறம் இந்த சக்தி அவ வேலையை காண்பிப்பா சொல்லிடு அவன்கிட்ட...

அதானே ரொம்ப பண்ணுறான் பாப்பா... உனக்கு சூட்டாக்கல இந்த கெட் டப்.. பழைய படி மாறுபாப்பா. ஆனா படிக்காத மட்டும் இருக்காதே...

நீ கவலை படாதே சித்தப்பூ பேப்பரை மாத்தியாவது நான் பாஸ் பண்ணிடுவேன்... அவள் தலையில் ஒரு கொட்டு வைத்தான் வேலு.. அதுக்குதான் இந்த சிவா உன்னை திட்டுறான்...

கேன்டின் உள்ளே லாவண்யா கூட சந்தியா நுழைந்தாள். சக்தி இவங்க உன்னை பார்க்கனும் சொன்னாங்க... சக்தி, சந்தியாவை பார்த்து தலையை அசைக்க..

ஹாய் நேம் சந்தியா... உட்காருங்க சந்தியா... சக்தி சொல்ல

ம்ம் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்...

இவங்க என் அண்ணாதான் பேசலாம்.

எப்படி சொல்லறது... சிவா எனக்கு இரண்டு வருஷமா தெரியும்... பிஸினஸ் மூலம்தான்...நான் அவங்களை விரும்பினேன்... கல்யாணம் பண்ணிக்கலாம் கேட்டேன். விருப்பமில்ல சொன்னாரு... எனக்கு சிவா உங்களை கல்யாணம் செஞ்சது தெரியாது சக்தி... அன்னிக்கு டீலர் விஷியமா பேச வந்தாரு... நான் படிக்கட்டில இருந்து விழுந்திட்டேன்... அதான் தூக்கிட்டு வந்தாரு..தப்பு என்மேல தான் நீ அங்கேயிருந்தேன் லாவண்யா சொன்னா..

ஸாரி சக்தி... கண்டிப்பா சிவாவுக்கு கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது...நான் அப்போ கனடாவில இருந்தேன்...

ஆனா இரண்டு வருஷம் முன்னாடியே சொன்னான்.. நான் ஏற்கனவே கமிட்டடு... என் காதலி எனக்காக காத்திட்டு இருக்கா சொன்னாரு நான்தான் நம்பவில்லை...

என்னடா, இரண்டு வருஷம் முன்னாடியா.. பொய் சொல்லியிருக்கான் பாரு...

பரவாயில்ல விடுங்க சந்தியா... என்ன சாப்பிடுறீங்க ஜஸ்ட் காபி என்றால் சக்தி.

ஓகே.. சக்தி இன்னோரு விஷியம் சிவா என்னுடைய டீலரை கேன்சல் பண்ணிட்டான்... நீ கொஞ்சம் பேசு..

நான் அவர் பிஸினஸ்ல தலையிடுறதில்ல சந்தியா.. அது அவர் விருப்பம்...

சந்தியா ,உங்களுக்கு சிவாவுக்கு ஏதோ பிரச்சனையின்னு கேள்விப்பட்டேன்...

அதெல்லாம் ஒண்ணுமில்லையே சந்தியா ,நான் இப்போ மூனுமாசம் முழுகாம இருக்கேன்... அதான் கொஞ்சம் டல்லா இருக்கேன்...

ஓஓ சரி நான் வரேன் சக்தி என்று கிளம்பினாள்...

பாப்பா என்ன இப்படி பொய் சொல்லுற... சிவா கேட்டா...

என்ன செய்வான், சண்டை போடுவான் பரவாயில்ல சித்தப்பூ... எங்களுக்குள்ள பிரச்சனை சொன்னா இவ உள்ளே வந்துடுவா புரியுதா...

சரி இப்போ கிளீயர்ராயிடுச்சா... சிவா நல்ல பிள்ளையின்னு...

அப்பவே கிளீயர் ஆயிச்சு சித்தப்பூ... இவன் கோவம் தான் போக மாட்டுது...

யாராவது வந்தா எப்படி பேசுவான் சக்தி...

பாசமா இருக்கிற மாதிரி பில்டப் தருவான் பாரு...இவர்கள் பேசிட்டு இருக்கும்போதே வந்தான் சிவா...

பாப்பா சிவா வரான்..ம்ம் என்று அமைதியானாள்.வேலு பக்கத்தில் அமர்ந்தான்... தன் லேப்டாப்பை ஒபன் செய்து கணக்குகளை பற்றி வேலுவிடம் பேசிக்கொண்டிருந்தான்... வேலை செய்யும் மணி, சிவாவிற்கு ரோஸ்மில்க் எடுத்து வந்து கொடுத்தான் . ஒரு மிடர் குடித்துவிட்டு டேபிளில் வைத்தான் சிவா.பிறகு பேச ஆரம்பிக்க...சக்தி அவன் குடித்த ரோஸ்மில்கை எடுத்து கொஞ்சம் குடித்துவிட்டு வைத்தாள்...



எதிர்பக்கம் சிவாவை பார்க்காமல் தன் வேலையை கண்ணாக செய்து கொண்டிருந்தாள் சக்தி. ஒரு நிமிடம் சிவாவே யோசித்தான்... என்னடா ராட்சஸி அமைதியா இருக்கு.. பிறகு வேலுவிடம் வேலையை பற்றி பேசியபடி இருந்தான்...

பேணா வை கையில் ஆட்டியபடி பக்கத்தை திருப்பினால்... கீழே தன் காலின் கட்டை விரல்லால் சிவாவின் காலை தேய்த்தாள். ஏதோ உறுவதுபோல் இருந்தது. பிறகு அவன் பேண்ட்க்குள் நுழைத்தாள். அவன் காலை தேய்த்தாள்.

ம்ப்ச்..ச்சே என்று பேசுவதை நிறுத்தி அவளை பார்த்தான்.. ஏதுவும் தெரியாது போல் படித்துக் கொண்டிருந்தாள்... என்ன சிவா என்னாச்சு பாதியிலே நிறுத்திட்ட..

ஒண்ணுமில்ல என்று பல்லை கடிக்கிற சத்தம் சக்தி காதில் விழுந்தது. டேய் நானெல்லாம் யாரு என்கிட்டவா... சண்ட போடுடா பார்க்கலாம்.. அதுக்குதான் வையிட்ங் என்று நினைத்தாள்...

திரும்பவும் சிவா கணக்கை பற்றி வேலுவிடம் கூற... இப்போ அடுத்த காலில் முன்னேறினாள்... திரும்ப நிறுத்தி சக்தியை பார்த்தான்... எதுவும் தெரியாது போல் நடித்தாள்..

வேலுவுக்கு புரிந்து விட்டது பாப்பா தன் வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டா... ஏன்டா சிவா...

இங்க டிஸ்டபன்ஸா இருக்கு சித்தப்பூ...இல்லையே இங்க நெட்வொர்க் நல்லா எடுக்குமே... வெளியே பசங்க வந்திருப்பாங்க சிவா...நம்ம இங்கேவே கண்டினியூவ் செய்யலாம்..

சக்தி கீழ் உதட்டை கடித்து சிரிக்க.. காலை உள்ளே விட...தன் இரு காலால் அவள் காலை மடக்கி பிடித்தான்...அய்யோ வலிக்குது விடுடா சிவா என்று அவனை பார்க்க... அவளை முறைத்து பார்த்தான்.

தன் கையால் அவன் தொடையை கிள்ள முயன்றாள்... சிவா நகர்ந்து நகர்ந்து உட்கார கடைசியில் கிள்ளிவிட்டாள்.. பட்டென்று எழுந்து சக்தியின் கண்ணத்தில் ப்ளாருன்னு அடித்தான் சிவா...

தீடிரென்று சிவா அடிப்பான் நினைக்கவில்லை... கண்கள் கலங்க...டேய் சிவா ஏன்டா பாப்பாவ அடிக்கிற அமைதியாதானே இருந்தா இதுக்குமேல் எதுவும் பேச முடியாத வேலு வெளியே செல்ல...

ஏய் கொண்ணுடுவேன்டி எங்கிட்ட இனிமே வச்சிக்கிட்ட...

என்னடா பண்ணுவ ..

ச்சீ நீயெல்லாம் ஒரு பொண்ணா...

என்ன எப்ப பார்த்தாலும் பொண்ணா பொண்ணா கேட்கிற... டவுட் இருந்தா டெஸ்ட் பண்ணி பாரு...

இப்போதான்டி அடி வாங்கின உன் வாய் அடங்குதா பாரு...

சிவ்வா... என்று அழைக்க...

அப்படி கூப்பிடாத எனக்கு பத்திக்கிட்டு வருது...ச்சே என்று வெளியே சென்றான்..

ஏன் இப்படி கோவிச்சிக்கிறான்...யோசித்தாள் அய்யோ சக்தி அவன் தொடையை கிள்ளல... ஹோ மை காட்....ச்சீ சக்தி அவன் உன்னையை கேவலமா நினைக்க போறான்...அவள் மனசாட்சி கேட்க...அவனே எனக்குதான் சொந்தம் எனக்கில்லாத உரிமையா...

தன் கையை பார்த்தால்... சோப்பு போட்டு கழுவுனோம் போல...விடு விடு வாழ்க்கையில அதெல்லாம் சகஜம்பா.. நாளைக்கு மறுநாள் கல்யாண நாள் எனக்கு பொறந்த நாளும்... என்ன நடக்கும் பார்க்கலாம்.

அன்று மாலை சக்தி குழந்தை பார்க்க தேனு வீட்டிற்கு வந்தாள்... அப்படியே இரவு அங்கே தங்கிவிட்டாள்.. ரேனுகா தன் மருமகளிடம் ஒரு நாள் தங்க சொல்ல மறுப்பு கூறாமல் தங்கிவிட்டாள்... சிவா வேற கோவமா இருக்கான் அங்கே போக பயந்து இந்த முடிவை எடுத்தாள்.

முவரும் பேசி அரட்டை அடித்துவிட்டு தூங்க சென்றனர்...

ரேனுகா தன் மகன் சிவாவிடம் சொல்லிவிட்டாள் இன்று சக்தி தேனுவீட்டில் தங்குவதாக...

பெட்டில் படுத்து அடிக்கடி போனை எடுத்து பார்த்தாள் சிவா கால் பண்ணுவானோ என்று... கல்யாணம் ஆன நாளிலிருந்து இன்று வரை தனியே படுத்தது இல்லை...புருஷன் கூடதான் இருக்கனும் சொல்லுவான்... ஆனால் இன்று... சக்திக்கு கவலையாக இருந்தது.. அந்த அளவுக்கு நம்மளை வெறுத்துவிட்டான் போல...இன்னிக்கி வேற கையை வச்சிகிட்டு சும்மாயில்லாம...தன் கையை பார்த்தால்... இந்த சிவாவை இம்ப்ரஸ் செய்யலாம் நினைச்சா நமக்கே ஆப்பு வைக்குது... புலம்பிக்கிட்டே தூங்க ஆரம்பித்தாள்...

திரும்பி படுத்தாள்... தூக்கத்தில் யார் மேல கையை போட்டோம் என்று தெரிந்துவிட்டது, கண்ணை திறந்து பார்த்தாள் சிவா பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் ரொம்ப சந்தோஷமாக இருந்தது சக்திக்கு மணியை பார்த்தாள் 12.30... எப்போ வந்தான் சாப்பிட்டானா தெரியிலையே அத்தையை பார்த்துட்டுதான் வந்திருப்பான்...

மெதுவாக அவன் கண்ணத்தை தொட்டாள், பிறகு தலையை கலைத்து விட்டாள்... அழகுடா நீ ... என்மேல எவ்வளவு லவ்.. நான் கூட உன்னை லவ் பண்ணுரேன்... உதட்டை குவித்து அவனை தொடாமலே முத்தமிட்டாள்...அவன் பக்கத்தில் இருந்தால் பாதுகாப்பாக உணர்வாள் எப்போதுமே... அவன் மேலே கையை போட்டு தூங்க ஆரம்பித்தாள்...
இங்கே கருணா வீட்டில் தயா தன் மனைவி தேவியை கட்டியணைத்திருந்தான்.. இப்போதான் அவன் தேடல் முடிந்தது... தேவிம்மா என்று உச்சதலையில் முத்தமிட்டான்..

மாமா...

ம்ம் என்னடா..

நான் உங்களை திருப்தி படுத்தினேன்னா... அவளை விலகிவிட்டு என்னடி கேள்வி கேட்கற..

இதுக்குமேல நான் என்ன செய்ய முடியும் மாமா..என்னால பிள்ளையை பெத்துக்க முடியில சொல்லுறீங்க... வேறொருத்தியை கல்யாணம் செஞ்சிக்க கேட்டிங்க..

இப்போ நானே சொல்லுறேன் டிவோர்ஸ் கொடுக்க சம்மதிக்கிறேன் மாமா... எனக்கு நீங்க வேணாம்... முடிஞ்சா என்னுடைய குறையை பெரிதுப்படுத்தாமல் என்னை விரும்புற ஒருத்தன் வந்தான் மறுமணமும் செஞ்சிக்குவேன்...

தேவி...தேவி...ஏன்டி மாமாவ பிடிக்கலையா உனக்கு... இப்படி பேசாதடி நான் தப்பு பண்ணிட்டேன் தான் ஆனா இந்த இரண்டு மாசமா நான் மாறிபோயிருக்கேன் உனக்கு தெரியிலையாடி...

தப்பு தான் மன்னிச்சிடுடி எனக்கு குழந்தையே வேணாம் தேவி... நீ மட்டும் போதும் கண்ணீரை வழிய தயா பேச..மாமா என்று அணைத்துக் கொண்டாள் தேவி... திரும்ப காதலினால் ஒரு அரங்கேற்றம் நடந்தது.

  • --தெறிக்க விடுவான்
Nirmala vandhachu ???
 
Top