Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா -03

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா -03

அய்யோ குடிச்சிட்டேனா... சரி விடுங்க டாக்டரே மருந்துன்னு நினைச்சிக்கிறேன்... தீரன் தன் கண்ணத்தில் கையை வைத்து அமைதியாக இருந்தான்..

என்னாச்சு டாக்டர் ஸார்..

உனக்கு தெரியுமா நான் வருஷத்தில நாலுநாள்தான் குடிப்பேன்... அதெல்லாம் லவ் பீலீங்க்ஸ்..

சொல்லுங்க டாக்டரே ஜாலியா இருக்கும் போல.

என் கஷ்டம் உனக்கு சந்தோஷம்.. சரி சொல்லுறேன் என் அத்தை பொண்ணு வர்ஷினி என்னை பிடிக்கலையின்னு சொல்லிட்டு என் தம்பிய..

நிறுத்து ஸாரே எனக்கு தெரியும் ரோசாப்பூ...சின்ன ரோசப்பூ லலல்ல்லலா... சூர்யவம்சம் படம் மாதிரி நீங்க படிக்கல உங்க தம்பி படிச்சிட்டான் அதான் அவனை கல்யாணம் பண்ணிடுச்சு.. கரெக்டா..

வெங்காயம்... ஏய் நான் டாக்டருடி.. அவ தலையில் கொட்டினான்

ஆமாம் இல்ல எங்கியோ இடிக்குதுதே..

எங்கயும் இல்ல உன் கால்தான் என்மேல இடிக்குது.. காலை தூர வை...

ஸாரி... பின்ன ஏன் ஸ்டாப் ஆயிடுச்சு...

ப்ச் அவளுக்கு என் தம்பியை தான் பிடிச்சிருக்காம்...

தன் கண்ணத்தில் விரலை வைத்து யோசித்தபடி.. உங்க தம்பி அழகாயிருப்பாரு போல..

அடிங்க... அவளை அடிக்க கையை ஓங்கினான்... விடுங்க உண்மை கசக்கதான் செய்யும்... உங்க அடுத்த காவியக்காதலை இறக்குங்க..

அது நான் ஆறாவது படிக்கிறேன் பப்பி லவ்...

டாக்டரே பப்பி நாயோட காதல் கதை வேணாம் உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க..

உன்கிட்ட இங்கிலீஷ்ல பேசினபாரு இங்கிருந்த பாட்டிலை காட்டி இதையேடுத்து வயித்துல குத்திக்கனும் நானு..

அய்யோ டாக்டருக்கு கோவம் வந்திருச்சு சிட்டு அமைதியா கதையை கேளு...

அது ஜெஸி மை பப்பி லவ்... எனக்கு ஊட்டிவிடுவா தெரியும்மா... நாங்க கையை பிடிச்சிட்டே நடப்போம்..

டாக்டரே ஒரு டவுட் , சின்னவயசிலே எப்படி லவ்வுன்னு தெரிஞ்சது..

டவுட்டை வாத்தியார்கிட்ட கேட்டிருந்தேனா இங்கிலீஷ்ல பாஸாயிருப்ப.. புத்திசாலிக்கு மட்டும்தான் அந்த ஃபீல் வரும்... அப்பறம் அவங்க அப்பா ட்ரான்ஸ்பர் ஆயி ஊரை விட்டே போயிட்டாங்க...

பத்தாவது வந்தேன்.. மோகனா அவ பெயரு... பெரே கிக்காயில்ல செமையா இருப்பா தெரியுமா.. பயங்கற ஸைட்தான் கணக்கு பீரியட்ல...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே சேரன் படம்போல லவ்...அப்பறம் என்னாச்சு டாக்டரே..

சொல்றேன்... அவ புதுசு அந்த வருஷம்தான் ஸ்கூல்ல சேர்ந்தா அட்டனஸ்ல அவ முழுபெயரு மகா மோகனாஸ்ரீன்னு இருந்துச்சு.. உடனே பிரேக் கப் பண்ணிட்டேன்..

டாக்டரே பெயருக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம்...

அது உனக்கு தெரியாது.. மகான்னா எனக்கு ஆகாது.. காலேஜ் தேர்டு இயர் ப்ரியான்னு செம்ம பிகரு தெரியுமா நீயெல்லாம் அவ கிட்ட கூட வரமாட்டே..

சிட்டு முறைக்க.. உண்மையை சொன்னா கசக்கதான் செய்யும் பேபி... ஹா..ஹான்னு சிரித்தான்.

தீடிரென்று வெளிநாட்டுல இருக்கிற அப்பாவ பார்க்க போறேன் சொன்னா ஆனா ஒரு பதிலும் வரல... ஒரு மேசேஜ் வந்தது.. ஸாரி என்னை மறந்திடுங்கன்னு... அந்தநாள் இன்று அதுக்குதான் குடிக்கிறேன்... என்னுடைய லவ் பெயிலியர்.. நாங்க சுற்றாத இடமேயில்ல... அப்ப சின்ன மிஸ் அன்டர்ஸென்டிங் வந்தது.. நம்ம அர்ஜூனுக்கும் தெரியும்.. அப்ப வெளிநாட்டுக்கு போனவதான்..

அச்சோ.. கவலை படாதீங்க டாக்டரே.. உங்க கதை பிரேமம் படம் போல போயிட்டே இருக்கு..

நீ சினமா பைத்தியமா...

எனக்கு வேற எதுவும் போழுதுபோக்கு இல்ல டாக்டர்... நிறைய படம் பார்ப்பேன்...

என்னால மறக்க முடியல.. உனக்கு ஒண்ணு தெரியுமா எனக்கு இன்னும் மூனு நாள்ல கல்யாணம்.. எனக்கு இஷ்டமில்ல குயிலு என்று அவள் தோள் சாய்ந்தான்..

டாக்டர்... என் பெயர் சிட்டு எப்ப பாரு மாத்தி மாத்தி சொல்லுறீங்க.. சி..ட்..டூடூ சொல்லுங்க..

போதையில் அவள் முகத்தை பார்த்தான் அவள் உதட்டை குவித்து தேன்சிட்டுடூ சொல்ல..

அப்ப கடிச்சா தேன் வருமா சிட்டூ என்றான்..

ம்ம் யோவ் நீ காசு கொடுத்து படிச்சு டாக்டராயிருக்க.. கடிச்சா ரத்தம்தான் வரும்..

இப்படிதான் என் ப்ரியா லிப்ஸ் இருக்கும்.. என்று சிட்டுவின் இதழில் தன் இதழை வைத்தான்... சிட்டு விலக்க.. மீண்டும் அழமான முத்தம் அவனிடமிருந்து.. கடைசியில் அவள் உதட்டை கடித்துவிட்டு... சூப்பர் கடிச்சா தேன்தான் வருது... தீரா போதையில் உளற..

அடப்பாவி என்னை கெடுத்திட்டியே டாக்டரு சிட்டு அழ.. இங்கிலீஷ் படத்தில வரமாதிரி டபக்குன்னு லிப்ல லிப் வச்சி கெடுத்திட்டியே டாக்டரு..

போதையில் அவளை கட்டியனைத்து மயங்கினான்...சிட்டு அழுதுக்கொண்டே பேசினாள் எதுவும் கேட்கும் நிலைமையில் தீரன் இல்லை..

.......

அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு.. பறவைகளின் சத்தம் வர ஆரம்பிக்க.. மெல்ல கதிரவன் கண்ணை திறந்தான்...தீரா..தீரா சேதுபதி எழுப்ப..

அவர் முகத்தை பார்த்து என்ன நம்ம ஜமீன் வீட்டிலியா இருக்கோம்.. ச்சே இது கனவு என்று மறுபடியும் சிட்டுவை கட்டிக்கொண்டு தூங்கினான்.

இவர்களை சுற்றி ஏழுபேர் உட்கார்ந்திருந்தன.. சிட்டு என்று அர்ஜூன் சிட்டுவை எழுப்ப.. மெல்ல கண்ணை திறந்தாள்.. அவன் நெஞ்சை மஞ்சமாக்கி இல்ல படுத்திருந்தாள்..

எல்லாரையும் பார்த்து பயந்து எழுந்தாள்... அண்ணா யார் இவங்க... டாக்டர் ஸார் எழுந்திருங்க.. நம்ம வீட்டில தீவிரவாதிங்க அட்டக் பண்ணிட்டாங்க..

அய்யோ இவள என்று அர்ஜூன் தலையில் அடித்துக்கொண்டான்.. சிட்டு டாக்டர் வீட்டு ஆளுங்க..

தீரன் தலையை பிடித்தபடி கண்ணை திறந்தான்.. எதிரில் தன் மாமன் நீலமேகம், தீரன் பக்கத்தில் சித்தப்பா சேதுபதி... கட்டிக்போற பெண்ணின் தகப்பன் ரகுநாத ஜமீன். அவர்களின் கணக்குபிள்ளை சங்கர்..மற்றும் அர்ஜூன்..

என்ன எல்லாரும் வந்திருக்கீங்க தீரன் கேட்க.. அவர்களின் பார்வையின் வித்தியாசத்தை கண்டான் அது சிட்டு அவனருகில்..

உடனே அவன் சித்தப்பா சேதுபதி என்னடா தீரா இந்த பொண்ணோட இப்படி படுத்துட்டு இருக்க... இன்னும் மூனு நாள்ல கல்யாணம்டா...

சித்தப்பா நேத்து... சொல்ல ஆரம்பிக்கும்போதே..

அதுக்குதான் ஜமீன் வேண்டாம் சொல்லிட்டு இளையவர் சென்னையில பொண்ணுங்க கூட கூத்தடிக்கிறாரு..

அவ அப்படி பட்ட பொண்ணுயில்ல மாமா..

அப்ப நீங்கயிருந்த கோலம்.. ரகுநாதன் காரித்துப்புராரு நீலமேகம் ரகுநாதனை பார்க்க..

நான் எப்படி பொண்ணை கொடுப்பேன்... ஜமீன் வாரிசு இப்படியா இருக்கும்..

இப்ப என்னாச்சு ஆளுக்காளு ஏதோ கற்பனையில பேசாதீங்க.. நேற்று கொஞ்சம் குடிச்சிட்டேன்..

அதான் அந்த பொண்ணை நாசம் பண்ணிட்ட ,மறுபடியும் நீலமேகம் குறுக்கிட..

மாமா வார்த்தையை அளந்து பேசுங்க... அவன் சித்தப்பா தலைகுனிந்து நிற்பதை பார்த்தான்..

தீரனின் தோளில் கையை வைத்த அர்ஜூன், டேய் தீரா பெரியவங்ககிட்ட நிதானமா பேசுடா , அதற்குமேல் பேசவில்லை அது அவர்கள் குடும்ப விஷியம் நாம் தலையிட கூடாது நினைத்தான்..

பின்ன அங்க ஜமீன்ல ஹாஸ்பிட்டல் கட்டியாச்சு.. இங்க எதுக்கு வேற ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யனும் நீலமேகம் கேள்வியை அடுக்க..

ம்ம் பிராக்டிஸ் எடுக்கனும்.. உடனே டாக்டர் ஆகமுடியாது.. நிறைய கத்துக்கனும்..

அதான் நீ கத்துகிட்டது பார்த்தேனே.. சிட்டுவை முறைச்சு பார்த்தார் நீலமேகம்.. நல்லா பொம்மள சுகத்தை கற்றுகிட்ட.. இந்த பொண்ணை கெடுத்துட்ட..

மாமா.. நீங்க கொஞ்சம் அமைதியாயிருங்க.. அந்த பொண்ணையே கேளுங்க... நான் என்ன செஞ்சேன்னு சொல்லுவா..

அவர்களை எல்லாம் பார்த்தபடி மௌனமாகவே நின்றாள்... சிட்டு பயப்படாத உண்மையை சொல்லு தீரன் நம்பிக்கையை கொடுத்தான்..

அவனை பார்த்து தலையை ஆட்டிவிட்டு, அவர்களிடம் திரும்பி டாக்டர் என்னை கெடுத்துட்டாரு சொன்னாள்..

அதிர்ச்சியாக தீரன் சிட்டுவை பார்த்தான்.. அர்ஜூனும், அவனுக்கு தெரியும் தன் நன்பனை பற்றி... இவளுக்கு அடைக்கலம் கொடுத்துட்டு பழியையும் சுமக்கிறான்..

ஏய் லூஸூ என்ன சொல்லுற..ஆமாம் டாக்டரே நீங்க நேற்று போதையில என் உதட்டுல தேம்ப ஆரம்பித்தாள்..

இதுக்குமேல விளக்கம் தேவையா ரகுநாதன் கோவமாக கேட்டார்.. இங்கபாருங்க சேது உங்க அண்ணாகிட்ட சொல்லிடுங்க இந்த கல்யாணம் நின்னுப்போச்சு..

உடனே சேது ,நீங்க ஜமீன்ல வந்து பேசிக்குங்க...நீங்க கிளம்பலாம் என்றார்.. எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக உட்கார்ந்தான் தீரன்.. சிட்டுவை முறைத்துக்கொண்டு.. சிறிது நேரத்தில் நீ உள்ளே வா சிட்டு என்று ரூமுக்கு அழைத்துச்சென்று கதவை தாளிட்டான்...

அவளை சேரில் உட்கார வைத்து.. இங்கபாரு சிட்டு நான் உன்னை கெடுத்துட்டேன் சொல்லுற.. எனக்கு எதுவுமே ஞாபகமில்ல.. என்ன நடந்துச்சு சொல்லு..

அதுவா டாக்டர்.. நீங்க கிட்ட வந்து என்னை என் லிப்ஸ்ல கிஸ் பண்ணிங்க...

சும்மா அதுவே சொல்லாதே..

ஆ..ஆ.. அழுதபடி கிஸ்பண்ணி கெடுத்துட்டிங்க...

என்னடி லூஸூ இங்க கையை வைச்சேனா என்று இடத்தை காட்ட...

இல்ல.. என்மேல அப்படியே படுத்துட்டீங்க...

எதாவது தெரியுதா உனக்கு ,சரி டிரஸைல்லாம் கழுட்டு நான் டெஸ்ட் செய்யுறேன்..

அய்யே எதுக்கு சினிமாவுல இப்படிதான் முத்தம் கொடுப்பாங்க அப்புறம் ஒருத்தர்மேல விழுவாங்க.. இங்க பாருங்க டாக்டர் என் புருஷன் கூட முத்தம் தந்தது இல்ல.. நீங்கதான் கெடுத்துட்டிங்க..

ஏய் நீ அஞ்சலி பாப்பாவாடி... லூஸூ தன் தலையில் அடித்துக்கொண்டான் என் நேரம் சரியில்ல...

டாக்டரு எப்ப நமக்கு பாப்பா வரும்..

அடிங்க என்று பச்சை பச்சையாக அவளை திட்டினான்..

தன் வாயில் கையை வைத்து .. டாக்டர் கூட இப்படி அசிங்கமா திட்டுவாங்க.. எல்லாம் கெட்ட பசங்க..-சிட்டு

தீரா சிறிது யோசித்து.. சரி இங்கவா, எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல.. நானும் வெளிநாடு போகதான் ப்ளான் செஞ்சேன்.. அதுக்குள் வந்துட்டாங்க..

இங்கபாருடி ஆறு மாசம் என் பொண்டாட்டியா நடி.. அப்பறம் உனக்கு செட்டில் பண்ணிடுறேன்... ஓகேவா யாருகிட்டயும் சொல்லாதே... டைம் பார்த்து எஸ்கேப் ஆயிடலாம்..

ம்ம்... சரி டாக்டர்.. என்று தலையை ஆட்டினாள்

------- பகைதீரா என்னவனே
 
தீரா...பகைதீரா -03

அய்யோ குடிச்சிட்டேனா... சரி விடுங்க டாக்டரே மருந்துன்னு நினைச்சிக்கிறேன்... தீரன் தன் கண்ணத்தில் கையை வைத்து அமைதியாக இருந்தான்..

என்னாச்சு டாக்டர் ஸார்..

உனக்கு தெரியுமா நான் வருஷத்தில நாலுநாள்தான் குடிப்பேன்... அதெல்லாம் லவ் பீலீங்க்ஸ்..

சொல்லுங்க டாக்டரே ஜாலியா இருக்கும் போல.

என் கஷ்டம் உனக்கு சந்தோஷம்.. சரி சொல்லுறேன் என் அத்தை பொண்ணு வர்ஷினி என்னை பிடிக்கலையின்னு சொல்லிட்டு என் தம்பிய..

நிறுத்து ஸாரே எனக்கு தெரியும் ரோசாப்பூ...சின்ன ரோசப்பூ லலல்ல்லலா... சூர்யவம்சம் படம் மாதிரி நீங்க படிக்கல உங்க தம்பி படிச்சிட்டான் அதான் அவனை கல்யாணம் பண்ணிடுச்சு.. கரெக்டா..

வெங்காயம்... ஏய் நான் டாக்டருடி.. அவ தலையில் கொட்டினான்

ஆமாம் இல்ல எங்கியோ இடிக்குதுதே..

எங்கயும் இல்ல உன் கால்தான் என்மேல இடிக்குது.. காலை தூர வை...

ஸாரி... பின்ன ஏன் ஸ்டாப் ஆயிடுச்சு...

ப்ச் அவளுக்கு என் தம்பியை தான் பிடிச்சிருக்காம்...

தன் கண்ணத்தில் விரலை வைத்து யோசித்தபடி.. உங்க தம்பி அழகாயிருப்பாரு போல..

அடிங்க... அவளை அடிக்க கையை ஓங்கினான்... விடுங்க உண்மை கசக்கதான் செய்யும்... உங்க அடுத்த காவியக்காதலை இறக்குங்க..

அது நான் ஆறாவது படிக்கிறேன் பப்பி லவ்...

டாக்டரே பப்பி நாயோட காதல் கதை வேணாம் உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க..

உன்கிட்ட இங்கிலீஷ்ல பேசினபாரு இங்கிருந்த பாட்டிலை காட்டி இதையேடுத்து வயித்துல குத்திக்கனும் நானு..

அய்யோ டாக்டருக்கு கோவம் வந்திருச்சு சிட்டு அமைதியா கதையை கேளு...

அது ஜெஸி மை பப்பி லவ்... எனக்கு ஊட்டிவிடுவா தெரியும்மா... நாங்க கையை பிடிச்சிட்டே நடப்போம்..

டாக்டரே ஒரு டவுட் , சின்னவயசிலே எப்படி லவ்வுன்னு தெரிஞ்சது..

டவுட்டை வாத்தியார்கிட்ட கேட்டிருந்தேனா இங்கிலீஷ்ல பாஸாயிருப்ப.. புத்திசாலிக்கு மட்டும்தான் அந்த ஃபீல் வரும்... அப்பறம் அவங்க அப்பா ட்ரான்ஸ்பர் ஆயி ஊரை விட்டே போயிட்டாங்க...

பத்தாவது வந்தேன்.. மோகனா அவ பெயரு... பெரே கிக்காயில்ல செமையா இருப்பா தெரியுமா.. பயங்கற ஸைட்தான் கணக்கு பீரியட்ல...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே சேரன் படம்போல லவ்...அப்பறம் என்னாச்சு டாக்டரே..

சொல்றேன்... அவ புதுசு அந்த வருஷம்தான் ஸ்கூல்ல சேர்ந்தா அட்டனஸ்ல அவ முழுபெயரு மகா மோகனாஸ்ரீன்னு இருந்துச்சு.. உடனே பிரேக் கப் பண்ணிட்டேன்..

டாக்டரே பெயருக்கும் காதலுக்கும் என்ன சம்மந்தம்...

அது உனக்கு தெரியாது.. மகான்னா எனக்கு ஆகாது.. காலேஜ் தேர்டு இயர் ப்ரியான்னு செம்ம பிகரு தெரியுமா நீயெல்லாம் அவ கிட்ட கூட வரமாட்டே..

சிட்டு முறைக்க.. உண்மையை சொன்னா கசக்கதான் செய்யும் பேபி... ஹா..ஹான்னு சிரித்தான்.

தீடிரென்று வெளிநாட்டுல இருக்கிற அப்பாவ பார்க்க போறேன் சொன்னா ஆனா ஒரு பதிலும் வரல... ஒரு மேசேஜ் வந்தது.. ஸாரி என்னை மறந்திடுங்கன்னு... அந்தநாள் இன்று அதுக்குதான் குடிக்கிறேன்... என்னுடைய லவ் பெயிலியர்.. நாங்க சுற்றாத இடமேயில்ல... அப்ப சின்ன மிஸ் அன்டர்ஸென்டிங் வந்தது.. நம்ம அர்ஜூனுக்கும் தெரியும்.. அப்ப வெளிநாட்டுக்கு போனவதான்..

அச்சோ.. கவலை படாதீங்க டாக்டரே.. உங்க கதை பிரேமம் படம் போல போயிட்டே இருக்கு..

நீ சினமா பைத்தியமா...

எனக்கு வேற எதுவும் போழுதுபோக்கு இல்ல டாக்டர்... நிறைய படம் பார்ப்பேன்...

என்னால மறக்க முடியல.. உனக்கு ஒண்ணு தெரியுமா எனக்கு இன்னும் மூனு நாள்ல கல்யாணம்.. எனக்கு இஷ்டமில்ல குயிலு என்று அவள் தோள் சாய்ந்தான்..

டாக்டர்... என் பெயர் சிட்டு எப்ப பாரு மாத்தி மாத்தி சொல்லுறீங்க.. சி..ட்..டூடூ சொல்லுங்க..

போதையில் அவள் முகத்தை பார்த்தான் அவள் உதட்டை குவித்து தேன்சிட்டுடூ சொல்ல..

அப்ப கடிச்சா தேன் வருமா சிட்டூ என்றான்..

ம்ம் யோவ் நீ காசு கொடுத்து படிச்சு டாக்டராயிருக்க.. கடிச்சா ரத்தம்தான் வரும்..

இப்படிதான் என் ப்ரியா லிப்ஸ் இருக்கும்.. என்று சிட்டுவின் இதழில் தன் இதழை வைத்தான்... சிட்டு விலக்க.. மீண்டும் அழமான முத்தம் அவனிடமிருந்து.. கடைசியில் அவள் உதட்டை கடித்துவிட்டு... சூப்பர் கடிச்சா தேன்தான் வருது... தீரா போதையில் உளற..

அடப்பாவி என்னை கெடுத்திட்டியே டாக்டரு சிட்டு அழ.. இங்கிலீஷ் படத்தில வரமாதிரி டபக்குன்னு லிப்ல லிப் வச்சி கெடுத்திட்டியே டாக்டரு..

போதையில் அவளை கட்டியனைத்து மயங்கினான்...சிட்டு அழுதுக்கொண்டே பேசினாள் எதுவும் கேட்கும் நிலைமையில் தீரன் இல்லை..

.......

அடுத்த நாள் காலை 5.30 மணிக்கு.. பறவைகளின் சத்தம் வர ஆரம்பிக்க.. மெல்ல கதிரவன் கண்ணை திறந்தான்...தீரா..தீரா சேதுபதி எழுப்ப..

அவர் முகத்தை பார்த்து என்ன நம்ம ஜமீன் வீட்டிலியா இருக்கோம்.. ச்சே இது கனவு என்று மறுபடியும் சிட்டுவை கட்டிக்கொண்டு தூங்கினான்.

இவர்களை சுற்றி ஏழுபேர் உட்கார்ந்திருந்தன.. சிட்டு என்று அர்ஜூன் சிட்டுவை எழுப்ப.. மெல்ல கண்ணை திறந்தாள்.. அவன் நெஞ்சை மஞ்சமாக்கி இல்ல படுத்திருந்தாள்..

எல்லாரையும் பார்த்து பயந்து எழுந்தாள்... அண்ணா யார் இவங்க... டாக்டர் ஸார் எழுந்திருங்க.. நம்ம வீட்டில தீவிரவாதிங்க அட்டக் பண்ணிட்டாங்க..

அய்யோ இவள என்று அர்ஜூன் தலையில் அடித்துக்கொண்டான்.. சிட்டு டாக்டர் வீட்டு ஆளுங்க..

தீரன் தலையை பிடித்தபடி கண்ணை திறந்தான்.. எதிரில் தன் மாமன் நீலமேகம், தீரன் பக்கத்தில் சித்தப்பா சேதுபதி... கட்டிக்போற பெண்ணின் தகப்பன் ரகுநாத ஜமீன். அவர்களின் கணக்குபிள்ளை சங்கர்..மற்றும் அர்ஜூன்..

என்ன எல்லாரும் வந்திருக்கீங்க தீரன் கேட்க.. அவர்களின் பார்வையின் வித்தியாசத்தை கண்டான் அது சிட்டு அவனருகில்..

உடனே அவன் சித்தப்பா சேதுபதி என்னடா தீரா இந்த பொண்ணோட இப்படி படுத்துட்டு இருக்க... இன்னும் மூனு நாள்ல கல்யாணம்டா...

சித்தப்பா நேத்து... சொல்ல ஆரம்பிக்கும்போதே..

அதுக்குதான் ஜமீன் வேண்டாம் சொல்லிட்டு இளையவர் சென்னையில பொண்ணுங்க கூட கூத்தடிக்கிறாரு..

அவ அப்படி பட்ட பொண்ணுயில்ல மாமா..

அப்ப நீங்கயிருந்த கோலம்.. ரகுநாதன் காரித்துப்புராரு நீலமேகம் ரகுநாதனை பார்க்க..

நான் எப்படி பொண்ணை கொடுப்பேன்... ஜமீன் வாரிசு இப்படியா இருக்கும்..

இப்ப என்னாச்சு ஆளுக்காளு ஏதோ கற்பனையில பேசாதீங்க.. நேற்று கொஞ்சம் குடிச்சிட்டேன்..

அதான் அந்த பொண்ணை நாசம் பண்ணிட்ட ,மறுபடியும் நீலமேகம் குறுக்கிட..

மாமா வார்த்தையை அளந்து பேசுங்க... அவன் சித்தப்பா தலைகுனிந்து நிற்பதை பார்த்தான்..

தீரனின் தோளில் கையை வைத்த அர்ஜூன், டேய் தீரா பெரியவங்ககிட்ட நிதானமா பேசுடா , அதற்குமேல் பேசவில்லை அது அவர்கள் குடும்ப விஷியம் நாம் தலையிட கூடாது நினைத்தான்..

பின்ன அங்க ஜமீன்ல ஹாஸ்பிட்டல் கட்டியாச்சு.. இங்க எதுக்கு வேற ஹாஸ்பிட்டல்ல வேலை செய்யனும் நீலமேகம் கேள்வியை அடுக்க..

ம்ம் பிராக்டிஸ் எடுக்கனும்.. உடனே டாக்டர் ஆகமுடியாது.. நிறைய கத்துக்கனும்..

அதான் நீ கத்துகிட்டது பார்த்தேனே.. சிட்டுவை முறைச்சு பார்த்தார் நீலமேகம்.. நல்லா பொம்மள சுகத்தை கற்றுகிட்ட.. இந்த பொண்ணை கெடுத்துட்ட..

மாமா.. நீங்க கொஞ்சம் அமைதியாயிருங்க.. அந்த பொண்ணையே கேளுங்க... நான் என்ன செஞ்சேன்னு சொல்லுவா..

அவர்களை எல்லாம் பார்த்தபடி மௌனமாகவே நின்றாள்... சிட்டு பயப்படாத உண்மையை சொல்லு தீரன் நம்பிக்கையை கொடுத்தான்..

அவனை பார்த்து தலையை ஆட்டிவிட்டு, அவர்களிடம் திரும்பி டாக்டர் என்னை கெடுத்துட்டாரு சொன்னாள்..

அதிர்ச்சியாக தீரன் சிட்டுவை பார்த்தான்.. அர்ஜூனும், அவனுக்கு தெரியும் தன் நன்பனை பற்றி... இவளுக்கு அடைக்கலம் கொடுத்துட்டு பழியையும் சுமக்கிறான்..

ஏய் லூஸூ என்ன சொல்லுற..ஆமாம் டாக்டரே நீங்க நேற்று போதையில என் உதட்டுல தேம்ப ஆரம்பித்தாள்..

இதுக்குமேல விளக்கம் தேவையா ரகுநாதன் கோவமாக கேட்டார்.. இங்கபாருங்க சேது உங்க அண்ணாகிட்ட சொல்லிடுங்க இந்த கல்யாணம் நின்னுப்போச்சு..

உடனே சேது ,நீங்க ஜமீன்ல வந்து பேசிக்குங்க...நீங்க கிளம்பலாம் என்றார்.. எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக உட்கார்ந்தான் தீரன்.. சிட்டுவை முறைத்துக்கொண்டு.. சிறிது நேரத்தில் நீ உள்ளே வா சிட்டு என்று ரூமுக்கு அழைத்துச்சென்று கதவை தாளிட்டான்...

அவளை சேரில் உட்கார வைத்து.. இங்கபாரு சிட்டு நான் உன்னை கெடுத்துட்டேன் சொல்லுற.. எனக்கு எதுவுமே ஞாபகமில்ல.. என்ன நடந்துச்சு சொல்லு..

அதுவா டாக்டர்.. நீங்க கிட்ட வந்து என்னை என் லிப்ஸ்ல கிஸ் பண்ணிங்க...

சும்மா அதுவே சொல்லாதே..

ஆ..ஆ.. அழுதபடி கிஸ்பண்ணி கெடுத்துட்டிங்க...

என்னடி லூஸூ இங்க கையை வைச்சேனா என்று இடத்தை காட்ட...

இல்ல.. என்மேல அப்படியே படுத்துட்டீங்க...

எதாவது தெரியுதா உனக்கு ,சரி டிரஸைல்லாம் கழுட்டு நான் டெஸ்ட் செய்யுறேன்..

அய்யே எதுக்கு சினிமாவுல இப்படிதான் முத்தம் கொடுப்பாங்க அப்புறம் ஒருத்தர்மேல விழுவாங்க.. இங்க பாருங்க டாக்டர் என் புருஷன் கூட முத்தம் தந்தது இல்ல.. நீங்கதான் கெடுத்துட்டிங்க..

ஏய் நீ அஞ்சலி பாப்பாவாடி... லூஸூ தன் தலையில் அடித்துக்கொண்டான் என் நேரம் சரியில்ல...

டாக்டரு எப்ப நமக்கு பாப்பா வரும்..

அடிங்க என்று பச்சை பச்சையாக அவளை திட்டினான்..

தன் வாயில் கையை வைத்து .. டாக்டர் கூட இப்படி அசிங்கமா திட்டுவாங்க.. எல்லாம் கெட்ட பசங்க..-சிட்டு

தீரா சிறிது யோசித்து.. சரி இங்கவா, எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல.. நானும் வெளிநாடு போகதான் ப்ளான் செஞ்சேன்.. அதுக்குள் வந்துட்டாங்க..

இங்கபாருடி ஆறு மாசம் என் பொண்டாட்டியா நடி.. அப்பறம் உனக்கு செட்டில் பண்ணிடுறேன்... ஓகேவா யாருகிட்டயும் சொல்லாதே... டைம் பார்த்து எஸ்கேப் ஆயிடலாம்..

ம்ம்... சரி டாக்டர்.. என்று தலையை ஆட்டினாள்

------- பகைதீரா என்னவனே
Nirmala vandhachu ???
 
Top