Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 16_B)

Advertisement

பகுதி-16 - B


உன் அப்பாவுக்கு .. உன் அம்மாவுக்கு .. முன்னாடியே .. என் அம்மா... மீது காதல் .. இருந்தது.. அதன் விளைவே நான்..

வசதியில்லாத என் தாயை ... மணந்துக்கிறேன்னு... பொய்.. சொல்லி .. நான் பிறக்கும் வரை .. நடித்தவர். நான் பிறந்ததும்.. ஆசைக்கு வேணா.. வைச்சுக்கிறேன்.. கல்யாணம் பண்ண முடியாது.. மீறி
வற்படுத்தினா?... உன் பையனை கொன்னுடுவேன்.. எனக்கு துருப்புச் சீட்டு... வேணுந்தான் ... உன்னை பெத்துக்க....வச்சேன்" .. என மிரட்டியே என் அன்னையை யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் ...சந்திக்க ஆரம்பித்தார் .. அப்படி வரும் சமயத்தில் .. குடித்து வந்தால் .. தன்னிலை பிறழ்ந்து அனைத்தையுமே.. என் அன்னையிடம் .. உளறி விடுவார்.. அப்படியே .. எந்த உண்மை தெரிந்தாலும், இவளால் .... என்ன செய்ய முடியும் ... என்ற இறுமாப்பு. .. மற்றும் ... குடித்தால் .... உளறும் ...தன்னைப் பத்தி தெரிஞ்சதால் .. வேறு.. எந்த நேரத்திலும், குடிக்க மாட்டார் ..

அப்படி... என் அன்னைக்கு இந்த சதி திட்டம் தெரிந்து.... தான் ..
. தன் அண்ணனோடு.....அங்கு. செல்வதற்குள் ... எல்லாம் முடிந்து....குற்றுயிராய் கிடந்த .. இருவரையும் .. என் அன்னையும், மாமாவும்.. மாட்டு வண்டி மூலம் ..



பக்கத்து ஊரில் அரசு .மருத்துவமனையில் .. என் அன்னை ...விட்டு வேலை செய்யும் .. டாக்டரின் ..வீட்டிற்கு... அழைத்து... சென்று .....அவரின் காலைப் பிடித்து... போலிஸ் கேஸ் ஆகாமல் .. இருவரின் உயிரை... மட்டும் காப்பாத்தி கொடுங்க... அதன் பின்,ஊரை விட்டே ...

போயிடுறோம்.. இதனால.. உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது..,,என மன்றாடி.. இருவரின் உயிரைக் காத்து ..தன் அண்ணன், வேலைப் பார்க்கும் ... பாண்டிச்சேரிக்கு... அவருடன்... அனுப்பி வைத்தார்..

இதைக் கேட்டு... ரதிக்கு ..மனம் .கனத்தாலும் .. "அப்போ .. அந்த அரக்கனுங்க.. என்ன ஆனானுங்க... என் கையில் கிடைச்சானுங்க.. அப்படியே..
கண்டத்துண்டமாக.. வெட்டிப் பொலிப் போட்டு இருப்பேன்..எனகாளியாக உறுமினால் ... ரதி.

அதை .. என் அம்மாவே பண்ணிடாங்க... அவங்கஉயிர்த் தோழிக்காக . என் சத்யா.. முடிக்க....

ஆச்சரியமாக... விழி விரித்தாள். அவனைப் பார்த்து...." எப்படி?.".. என

குடிபோதையில் ... தாறுமாறாக கிடந்தவர்களை .என் மாமா.. அடித்துநொறுக்க .. தன் தோழியையும், அவள் குழந்தையையும் .. இந்த சித்திரவதை செய்தவர்களை ..சும்மா.. விடக் கூடாது.. என்று .." அனைவரையும் .. மாமா உதவியுடன் .. காரில் அள்ளிப் போட்டு .. பள்ளத்தில் தள்ளி விட்டே ..அவ்விடம் விட்டு .. அகன்றார்கள் என் அன்னை....

இதைக் கேட்டு ..கைத் தட்டியவளுக்கு .. அப்போதுதான் ...என் அம்மா.. உன் அப்பா ... என்ற வார்த்தைகள் தாமதமாக .. மூளையில் ஒலிக்க .. பொறி தட்டியது... அவளுக்கு ..
"
டேய் சத்யா.. நீ என் அண்ணனடா.. என அவனின் .. கைப்பற்றி... வேதனை ஒரு புறம் இருந்தாலும்.. அதை மீறி மகிழ்ச்சி .. குரலில் கேட்டாள்.

"நல்ல... மரியாதை .. இவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுடுச்சு.. டீயூப் லைட்டு..". என தங்கை.. இத்தனை ...வருடத்தில் உரிமையாக .. அண்ணா என அழைத்த மகிழ்ச்சிக் குரலில் கூறினான்.

சரிடா.. அப்புறம் எப்படி.. நீ., என்.அழகன், அத்தை.. எல்லாரும் ஸ்பீனிக்ஸ் பறவைப் போல் .. மீட்டெழுந்தீர்கள் ..

அவளின் என் அழகன்... பதத்தில் ..அவளின் மனநிலை தெளிவாக தெரிய . பாண்டியனின் ..உணர்வை .. மீட்டெடுக்கும்.. சாவியை கண்டுக்கொண்டதில் .. சத்யாவின் மனம் .. இலேசாக...

குழந்தையற்ற என் மாமாவுடன் ... என்னையும் பாண்டியனுக்கு .. துணையாக ..தெய்வாம்மாவிற்கு .. இன்னொரு மகனாக.. அனுப்பி வைத்தார் என் தாய் மலர்..

அங்கே, தனியாக வீடு எடுத்து .. நாங்கள் .. தங்கிக் கொண்டோம்.. கொஞ்ச நாட்கள் ... எங்களுக்கு உணவை .. என் மாமா.. அத்தை..கொடுத்து.. பார்த்துக் கொண்டாரகள்..

முதலில், .சொத்திற்காக ...இவ்வளவு கேவல... கொடூர புத்தியோடு.. தன் அண்ணனே..
நடந்துக் கொண்டதை... மலர் சொல்ல. மருதவேலை .. மனதின் அடி ஆழம் வரை வெறுத்தவர்.மேலும்,

.தனக்கு.. இப்படி நடந்து விட்டதே.. என மறுகி .. கூடல்கூச.... தன்னையே.. உடலாலும், மனதாலும்.. வறுத்திக் கொண்டு...பாண்டியனின் பால் முகத்தையும் .. கத்திகுத்தால் வயிற்றில் உள்காயத்தால் ... அவ்வப்போது முகம் சுழித்து..... தன் முகத்தை ஆறுதலுக்காகப் பார்ப்பவனை ... விட்டு தற்கொலை பண்ணவும். முடியாமல் ... தன் காதல் உயிர் சுமந்த உடல் இன்று.. அசிங்கப் பட்டுவிட்டதே... அதை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் .. கடைசியில் ..விஷ மருந்தைக் குடிக்க போனவரை...

தடுத்த .. 5 வயது பாண்டியன் " அம்மா.. ஏன் மா?.... உன் புஜ்ஜுக்கிட்ட .. பேச மாட்டிங்கிற .. எனக்கு அழுகை, அழுகையா வருது..இங்கே, வலிக்குது.. என தன் வயிற்றை சுட்டிக் காட்டியவன்.. மேலும், அவரின் கையில் இருந்த .. மருந்தை சுட்டிக் காட்டியவன் ... இதை குடிச்சா.. நீயும் .. அப்பாக்கிட்ட
போய்டுவியாம்.. அதனால... இதை... நீ குடிக்காம.. பார்த்துக்க... சொல்லுச்சு....மலர் அத்தை

என்ைனயும்.. அப்பாட்ட.. கூட்டிட்டு .. போயிடுமா... நானும்.. வரேன்.. என அவரைக் கட்டி பிடித்து..அழுதவனின்
வார்த்தையில், தான் புரிய இருக்கும். தவறான ... செயல் புத்தியில் உரைக்க..

தனக்கு என்றால் எப்பேர்பட்ட வலியையைும் தாங்குமாம்....தாய்மை .. தன் குழந்தைக்கு சிறு தூசு பட்டாலும்.. பெரிய புயல் போல் தோன்றி ..தன் இதயத்தை அரண் ஆக்கி.. காப்பாளாம் மாபெரும் .. சக்தி படைத்தவள்.. அவளே.. "அம்மா"....


சடுதியில், ... . வெறி நாய் கடித்தால் .உயிரைப் போக்கிக் கொள்வோமா.. இல்லையே.. உரிய மருத்துவம் பார்த்து.. உயிரை காப்போமே.. அதுப்போல்., என்மனதில் . . என் கணவரின் மீதான .. காதல் ..தூய்மையாகவே .. இருக்கும் ..வெளிச்சதையைத் தான் .. பிணம்... தின்னி கழுகுகள் தின்ன முடியும்....
மேலும் ... என் உடலை .. என் அனுமதியின்றி ..தீண்டியவர்களுக்காக. . நான் ஏன்?சாக வேண்டும் ...

எப்பவுமே ?... நான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்க மாட்டேன் ... அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் .. .... அதை எனக்கு உருவாக்கியவர்களை... எதிர்த்து என் கடைசி மூச்சு வரை.... போராடுவேன்.. அது யாராக இருந்தாலும்... என சத்தமாக சூளுரைத்துக் கொண்டவர் ...

(தன் அன்னை கூறி ..தன் மனதில் பசும்மரத்தாணியாக பதிந்த ....இதே வார்த்தைகளைதான்.. பண்ணையில்
ரதி சொல்ல... பாண்டியன். கண்கள் கலங்க நின்றான் அதை இப்போது... நினைவுப் படுத்திக் கொண்டாள் ரதி..)

மேலும், தொடர்ந்து .." நீ சிறந்தவனா.. பெண்ணை மதிப்பவனா.. பணத்தை நேர்வழியில் சம்பாதித்து -பிறருக்கு உதவுபவனா..

நம்... இரத்தைக் கொன்று. மருதவேல் ..
நம்மகிட்டயிருந்து .. பறித்த .. நம் ஜமீன் .. சொத்தை .. நீ அவனை ஒரு அடி கூட அடிக்காம... திரும்ப..வாங்கணும், நீ ராஜாடா .. அம்மாக்காக ..இதை செய்வீயா ? என.... பாரதியாரின் .. புதுமைப்... பெண்ணாக நிமிர்ந்து நின்றவரிடம் ..

" செய்வேன் மா ?.. நீ கூட இருப்பியா ? என்றான் குழந்தை..

ம்ம்.. கண்டிப்பாக ..என்றார்"தெய்வா...

"நானும் செய்வேன் மா".. என சத்யாவும் இடைபுக... நீயும் தான் என் தங்கம் என இருவரையும் அணைத்துக் கொண்டார்

அதன்பின், தான் போட்டிருந்த நகைகளை .. என் மாமா.. உதவியுடன் .. விற்று .. கொஞ்சம் .. நிலமும் .. நாட்டு ; மாடு.. ஆடுகளை வளர்க்க .. ஆரம்பித்தார். தன் கணவர் .. காதலாக .. அணிவித்த.....வைர மோதிரத்தை மட்டும் விற்காமல் .. பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்.. ..எங்களையும்...அரசு பள்ளியில் ... படிக்க வைத்துக் கொண்டே அவர் .. செய்யும் அனைத்து வேலைகளிலும் எங்களையும் ... சேர்த்துக் கொண்டார்.

கிடைக்கும் வருமானத்தில்... நிலமாக .. இருவரின் பேரிலும், .. வாங்க ஆரம்பித்தார் ..

இப்படி ஒரு புறம் செல்ல.... மறுபுறம்.. தன்னையும், தன் தோழியையும் .. தங்கள் குழந்தை, குடும்பத்தை .. பணத்திற்காகவும்... சுகத்திற்காகவும்..
ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மருதவேலுக்கு.... உணவில் .. விஷம் வைத்து கொன்றாவது .... தெய்வாவுக்கும், தன் மகனுக்கும் நீதி கிடைக்க... முடிவு எடுத்தார்.. மலர் ..

அன்று பார்த்து, குடிக்காமல் வந்தவர் .. மலர் .. கலந்த உணவின் .. நச்சு ..வாடையில் ..அவரின் ... கொலை முயற்சியைக் கண்டு .. அவரை .... எட்டி .. நெஞ்சியின் மீது உதைத்து ..முடியைப் பற்றி.. அடி .. பின்னியெடுத்து விட்டு....

எனக்கு ஆகட்டும்னு .... இவ்வளவு நாளா...உன்னை....ஒண்ணும் பண்ணாம .... வைச்சிருந்தேன்.. எப்போ... இவ்வளவு ..தூரம் வந்துட்டியோ.. இனி .. ஊர்ல இருக்குற .. ஒவ்வொருதனும்.. உன் கையைப் பிடிப்பான்.. ஆனா.. ஒண்ணும் பண்ண மாட்டான். அப்போ .. உனக்கு பேரு.. அவுசரி, விபச்சாரி.. தெவிடியா .. கண்டவனுக்கிட்ட போற... இப்படி பல பேரு.. வாங்குவ..

உன் பையன்.. எனக்குப் பிறந்தவனு பலருக்கு இங்க... தெரியும்.. ஆனா ... ஒருத்தன் கூட வாயைத் திறக்க மாட்டான். எனக்கெதிராக .. இனி .. அவனும் ... அப்பன் பேர் ..தெரியாதவன் ... வப்பாட்டிபையன் .. அவனுக்கும் இப்படி பல பேர் .. கிடைக்கும்.


அப்புறம்.. உன்ணொண்ண ....(அண்ணன்) வீட்டுல ... இருக்குற ... சனியன் .... அப்போ .. அப்போ... வந்து .. ஜமீன் வக்கில் முன்னாடி .. என் தங்கச்சி பையன் அவன். தான்னு.. கையெழுத்து போடணும்.. அதுக்கு தகுந்த மாதிரி.. பழக்கி .. கூட்டிட்டு வா.. இல்லை .. உன் குடும்பத்துல.. ஒருத்தனும் மிஞ்ச மாட்டிங்க.. என
கர்ஜித்து விட்டு ..

நாலு தடிமாடுங்க கிட்ட .. அவளை போட்டுட்டு .. பையனை மட்டும் .. தூக்கிட்டு வாங்கான்னு.. சொல்லி விட்டா.. பொம்பளையைப் பார்த்ததும். தாறுமாற.. பாஞ்சி .. அதல பள்ளத்துல.. கூண்டோடு .. விழுந்து... செத்துருச்சிங்க.. கழிசடைங்க ..

அந்த பூபதி பீடை .. சொத்து எல்லாத்தையும் ..தன் மகன் பேர்ல .. எழுதி வைச்சுட்டு .. 18 - வயசுக்கு பிறகு.. தான் .. அவனே .. விற்க .. முடியும்னு... விவரமாக உயில் எழுதி... பெரிய வக்கீலையும் நியமிச்சு இருக்கிறான் .... காரு... பள்ளத்துல விழுகுற... முன்னாடி .. குழந்தையை மட்டும் .. கீழ தள்ளி விட்டுட்டா... என் தங்கச்சினு.... ஒரு ஹெவி நடிப்பை...போட்டுட வேண்டியதுதான்...

அப்படி .. அவ மகன் .. பாதியிலேயே செத்தது ..
எல்லாம்.. நல்லதுக்குதான் .. அப்புறம்.. 18 - வயசு .. முடிஞ்சதும் ... எல்லா .. சொத்தும்.. என்னுதுனு நிப்பான்.. அப்புறம் அவனைக் கொல்லணும்.. அதுக்கு இதுவே.. பெட்டர்.. வரட்டா ... என்று விட்டு சென்றவரை..."தூ" வென துப்பியிருந்தார்.. மலர் ..

அதன் பின் .. சில வருஷம்.. .. என் மாமா.. கையெழுத்துப் போட அழைத்துச் செல்லுவார்.

எனக்கு 10-வயது ஆகும் போது..ஊராரின்... அவ பேச்சாலும், மருதவேல் ..நெஞ்சில் அடிக்கடி உதைத்த உதையாலும்.. நெஞ்சுவலியால் இறந்த ... என் அன்னையை .. பார்க்க கூட விடவில்லை..மருதவேல் .. என இதயம் ..வெடிக்க... வாய் விட்டு அழுதான் சத்யா.,,,

அவனை.. அணைத்து .. தேற்ற... வார்த்தைகள் அற்று... மெல்லத் தட்டிக் கொடுத்தாள் ரதி..

அதில் .. மனம் .. ஆறுதல் அடைந்து....மேற்கொண்டு கூறலானான்.. .

கடைசி முறையாக .. என் அன்னை வந்து... என்னைப் பார்க்கும் போதும் அனைத்து... உண்மையையும் .. கூறி
.." சத்யா".. உன் பேருக்கு ..உதாரணமான ... பாண்டியன் .. சொத்தை மீட்டு தரணும்.. நல்லா படிச்சு.. உனக்கு பிடிச்சதொழிலுல.... பெரிய ஆளா வரணும்.. முக்கியமா... எந்த பெண்ணுக்கும் துரோகத்தை மனதால் .. கூட நினையாதே.. உனக்கு இந்த நிலமை... வர வெச்ச என்னை .. மன்னிச்சுடு.. சின்ன வயசுனாலும் உனக்கு.. புரியுதா.. என தாய் கேட்க..

"புரியுது....மா.. நீங்க சொல்லுறப்படி கேட்கிறேன்.. என தலை ஆட்டினான்..

அவரின் ..இறப்பின் பின் .. அனைத்துமாக ..தெய்வாவும் ... பாண்டியனும் மாற...பாண்டியிலேயே இன்ஜினியர் ..காலேஜ் ேசர்ந்தோம்.

நான் நிர்வாகம் ..பயில ; பாண்டியன் ... ரோபோடிக்ஸ் சேர்ந்தான். அப்போது - ஜமீன் வக்கில்... மகன் .. மாறனும்.. எங்க காலேஜ்ஜில் ... சிவில் சேர்்ந்தான்.

மாணவர்கள் சண்டையில் ..பாண்டியன் .. அனைத்து பையன்களையும் .. அடித்து ..மாறனைக் காக்க.. அன்றிலிருந்து ...அவனும் ... எங்களுடன் நட்பில் இணைந்தான்.
















...
Nirmala vandhachu ???
 
Top