Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொந்தம் 7

Advertisement

sharmila

Member
Member
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த ஈஸ்வரமூர்த்தி , "அங்கை ,இப்படி வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ". அங்கை வந்து அவருக்கு காபி குடுத்து அருகில் அமர்ந்து சொல்லுங்க மாமா என்றார் .
சிறிது நேர அமைதிகுப்பின் , " மனோகரன் பொண்ண நம்ம பரமனுக்கு பேசலாமா ? " அவரை ஆச்சிரியப்பார்வை பார்த்த அங்கை , பரமனின் விருப்பத்தை கூறினார் .
"ஹ்ம்ம் அப்போ ஏன் லேட் பண்ணனும், மனோகரன் டிஸ்சார்ஜ் ஆனதும் பேசி முடிவு எடுத்துக்கலாம் ", ஈஸ்வரமூர்த்தி . உன் தம்பி எங்க , மீனுவ கூட்டிட்டு போக வரலயா ? பசங்கள ஹாஸ்பிடல் ல துணைக்கு இருக்க சொல்லி இருக்கேன் நீ அவங்களுக்கு சாப்பாடு குடுத்து விட்டுடு ".
அப்போது அங்கே வந்தனர் மீனாட்சி மற்றும் சீதா. அவர்களை பார்த்த ஈஸ்வரமூர்த்தி , வாங்க பாப்பா , மீனு குட்டி . சீதா தந்தையின் அருகில் அமர்ந்து அவர் தோள் சாய்ந்தாள் , அவரும் மகளை அரவணைத்து கொண்டார். மீனாட்சி " என்ன குட்டி சொல்லாதீங்க மாமா , என்று எப்போதும் பாடும் பல்லவி கூற சிரித்தார் ஈஸ்வரமூர்த்தி.அவளும் அவருக்கு மற்றொரு பக்கத்தில் வந்து அணைத்துக்கொண்டாள்.
சீதா மற்றும் மீனு அந்த வீட்டின் இன்றியமையாத வர்கள் . மீனு துறுதுறு பிள்ளை என்றால் சீதா அமைதி. இருவருமே அனைவரின் செல்லம்.
இரவு உணவு முடித்து அமர்ந்த நேரம் ஈஷவரமூர்த்தி அனைவருக்கும் விஷயத்தை சொல்ல அனைவருக்கும் மகிழ்ச்சியே.
அடுத்த நாளே அனைத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டார் அங்கை. அவருக்கு மகன் விரும்பிய வாழ்கை அமையப்போகும் ஆனந்தம். வீடு வந்த விஷவா மற்றும் தங்கராசு அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விஷ்வா, " மாப்ள , பெரிய மகன் கல்யாணம் சொன்னதும் எங்க அம்மா 10 வயசு கொராஞ்ச மாதிரி இருக்கே . ஒரே ஒளிவட்டம் மின்னுது". தங்கராசு, " அட ஏன் டா நீ வேற நல்லா பாரு எங்க அத்த இப்பயே அப்பத்தா மாதிரி இருக்கு". அவன் முதுகில் அடித்த அங்கை , "போங்க டா ஓரண்டை இழுத்துட்டு. விஷ்வா கெளம்பி டா நம்ம இப்போவே போய் சம்மந்திய பாத்துட்டு வந்துரலாம் . அப்ரம் டா உங்க அப்பட்ட பேசி அடுத்த முகுர்ததுலயே கல்யாணம் வெச்சுரணும் . தங்கம் நீ என்ன சொல்ற. ? தங்கராசு, " நீ சொன்ன நோ அப்பீல் அத்தம்மா" . அங்கை, " அடுத்து உனக்கு பொண்ணு பாத்து பண்ணீரணும் டா தங்கம். உனக்கு எதாவது பொண்ணு பாத்து வெச்சிருக்கியா ? அத்தை கிட்ட சொல்லு டா அந்த பொண்ணயே கட்டிவெச்சுறேண்" .
தங்கம், " எனலாம் யாரு பாக்க போறா அத்தாம்மா விடு . மீனு கல்யாணம் முடிச்சுட்டு நா பண்ணிகுறேன் . எனக்கு எதுக்கு அவசரம் . இப்போ ஆகவேண்டிய வேலைய பாரு அத்த" . அங்கை" என்ன டா இப்படி சொல்ற? உனக்கு என்ன டா கொரை. நீ சொக்கதங்கம் டா ". அங்கு வந்த மீனு, " அண்ணன் உன் கல்யாணம் முடிஞ்சு அண்ணியோட சேந்துதா என் கல்யணத் த நடத்தி வெக்கணும். என்ன விஷ்வா மாமா சரி தான" என்று அண்ணா இடம் ஆரம்பித்து விஷ்வா இடம் முடித்தால் .
அதுவரை தேமே என்று இருந்த விஷ்வா வேகமாக தலையாட்ட அனைவருக்கும் சிரிப்பு. தங்கம் " மாப்ள நீ கடா கனக்கா தலையாட்ட . உன்ன நெனச்சா தாம்ல தூக்கம் வர மறுக்குது. "
நாளை மனோகர் வீட்டுக்கு போக அனைவரையும் தயாராக சொல்லிய அங்கை, சிறிது நேர அமைதிக்கு பின் பத்மா இருந்தா நல்லா இருக்கும் என்று பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
மனோகர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தமிழ், " அப்பா நீங்க எதும் நெனச்சா ஒடம்ப கெடுத்துக்காகதீங்க , நா வேணும்னா படிக்க போகாம வீட்ல இருந்துக்கிரென் ". மனோகரன், " இல்ல டா மா எனக்கு உன் மேல எந்த வருத்தம் இல்ல. நீ நல்ல படிக்கணும் டா. எல்லாத்தையும் சரி பண்ணலாம் டா. ஈஷல்வர் அய்யா பாதுக்குவரு".
அடுத்த நாள் அவர்களுக்கு காத்துக்கொண்டிருக்கும் இன்ப அதிர்ச்சி பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்தனர்.

தொடரும்.
 

Advertisement

Top