Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சொந்தம் 3

Advertisement

sharmila

Member
Member
Hi friends 3rd ud .... nala iruka ilaya.. negative comments nalum solunga friends , improve panikuren

அத்தியாயம் 3

முகேஷ், அரசியல்வாதியின் மகன் என்பதால் சற்று நல்ல முறையில் பேசி தமிழை இதில் இருந்து மீட்டெடுக்க எண்ணி செயல்பட்டனர் விஷ்வா மற்றும் தங்கராசு. தமிழ் வீட்டில் முகேஷ் பற்றி கூறியிருக்க மனோகரன் அதை ஈஷ்வரமூர்த்தியிடம் உதவி செய்ய வேண்டியிருந்தார். பெண் விஷயம் என்பதால் ஈஷ்வரமூர்த்தி விஷ்வாவிடம் பொறுப்பை விட்டிருந்தார்.
கல்லூரி எதிர் பேக்கரியில் விஷ்வா மற்றும் தங்கராசு காத்துக்கொண்டிருந்தனர். சற்று திமிராக அங்கு வந்தான் முகேஷ். .” ப்ரதர் இங்க “ தங்கராசு. அவர்களை ஆராய்ந்துபார்த்தான் முகேஷ், “சொல்லுங்க ப்ரதர், யார் நீங்க? என்ன எதுக்கு பாக்கனும்? “
விஷ்வா, அது வந்து ப்ரதர் நாங்க மூர்த்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஈஷ்வரமூர்த்தி பசங்க. எங்க மேனேஜர் பொண்ணு தமிழ்ச்செல்வி, அவங்களுக்கு நீங்க தொந்தரவு பன்றீங்களாம். முகேஷ் ஆவேசத்துடன் மிரட்ட வந்தீங்களா? நான் யார் தெரியுமா? தங்கராசு, ஐயய ப்ரதர், யார் நீங்க உங்கள போய் மிரட்ட முடியுமா. உங்க கட்சிக்கு நாங்க பெட்டி எவ்ளோ கொடுக்கிறோம். இப்போ கூட இந்த எலெக்ஷன் பத்தி பேச தான் அண்ணா கட்சிக்கு ஆபிஸ் இருக்கிறார் என்று பம்மிக்கொண்டு நக்கலாக பேச முகேஷ் அரண்டுவிட்டான்.
என்னதான் முகேஷ் அரசியல் பின்புலத்தில் பல குற்றங்கள் செய்தால.செய்தாலும் அவன் அப்பா கண்டுகொள்ளாமல் இருப்பார் ஆனால் அவர் பதவிக்கு இடையூறு வந்தால் மகன் என்றும் பார்க்கமாட்டார்.. தன் பின்புலத்தை கூறி மிரட்ட வந்த முகேஷ்க்கு இவர்கள் அரசியல் பேசவும் அரண்டுவிட்டான். சரி இவளை பின் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து சடுதியில், அண்ணா அதெல்லாம் இங்க எதுக்கு பேசிக்கிட்டு, தமிழ்ச்செல்வி எனக்கு தங்கச்சி இனிமேல் நீங்க நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பேசி விடைபெற்றான் .
அவன் சென்றதும் ஈஷ்வரமூர்த்திக்கு விடயத்யை தெரிவித்த விஷ்வா, தங்கராசு வீட்டுக்கு சென்றனர். மாலை காலேஜ் முடித்து மீனா மற்றும் சீதாலட்சுமி தமிழ்ச்செல்வியை உடன் அழைத்து வந்தனர். வீட்டில் விஷ்வா மற்றும் தங்கராசுவை பார்த்து எங்கடா போனீங்க என்று வந்தான் பரமேஸ்வரன். விஷ்வா , தங்கராசுக்கு ஜாடை காட்ட, அதை கவனியாத தங்கராசு, பாப்பா காலேஜ் ல சின்ன பைசல் மாமா என்றான். விஷ்வா தலையில் கை வைக்க , பரமேஸ்வரன் “நம்ம பிள்ளைகள வம்பு பண்ணது என்னடா” என்றான் ௌத்திரமாக.
மீனா, “ என்ன மாமா நம்ம கிட்ட வாலாட்ட யாருக்கு தைரியம் இருக்கு. அண்ண வேற வேலைய சொல்லுது, கிட்சன் பக்கம் பார்த்து அத்த தமிழ் வந்துருக்கா.
பரமேஸ்வரன் தமிழ்ச்செல்வியை பார்த்தால் கண்டு கொள்ளாமல் இருந்து கொள்வான். தமிழ்ச்செல்வி, இவருக்கு நம்ம வரது பிடிக்காது இவளுக சொன்னா விடமாட்டாளுக என்று மனதில் நினைத்துக் கொண்டு ஒரு வித அவஸ்தையில் நின்றுக்கொண்டிருந்தாள். அனைவருக்கும் காபி பலகாரம் கொண்டு வந்த அங்கை, வாமா தமிழ் அம்மா தங்கச்சி நல்லா இருக்காங்களா? இருக்காங்க ஆண்ட்டி, ம்கூம் அத்த சொல்லி கூப்ட்டா கூப்ட மாட்ற,
தமிழ்” நான் கிளம்பறேன் ஆண்…. அத்த என்று கூறி விடைபெற" பரமேஸ்வரன் கண்டு கொள்ளவில்லை. அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட, அங்கை “ பரமா மனோகரன் அண்ணா கிட்ட பொண்ணு கேட்கவா, அதிர்ந்து பார்த்த மகனிடம் சிரித்து நான் உனக்கு அம்மாடா, எனக்கு உன் மனசு தெரியாதா,அவங்க படிப்பு முடியட்டும் மா என்று அணைத்து கொண்டான். ஹம்ம் எதுனாலும் பாத்து பன்னு”.
அங்கே சென்னையில் விஜய் மதுரைக்கு வந்து ஈஷ்வரமூர்த்தி மாமாவ பார்த்து அம்மாவ அவரோட சேர்த்து வைக்கனும் என்று கிளப்பிக் கொண்டிருந்தான்


தொடரும்
 

Advertisement

Latest Posts

Top