Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-33 (final 1)

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-33 (final 1)

துரைபாண்டி ஓடிவந்து பூவரசனை தடுத்தான், அவன் கைகளை பிடித்து, டேய் பூவரசு ,சுந்தரியை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ, இவனை நான் பார்த்துக்கிறேன்.

எங்க ஆளுங்க வந்துட்டாங்க,இவங்களை பிடிச்சி போலீஸ்ல ஓப்படைக்கிறேன், நீ கிளம்பு சீக்கிரம்.

பொம்மியை தூக்கிக் கொண்டு ஓடினான் பூவரசன், அதற்குள் பரதா காரை எடுத்துக்கொண்டு வர, பொம்மியை காரில் ஏற்றினார்கள்.

பர்ஸ்ட் ஏயிட் பாக்ஸ் காரில இருக்கு எடு பரதா... சுந்தரி சொல்ல, காரிலிருந்து எடுத்துக் கொடுத்தான் பரதன்.

மாமா காட்டன் வச்சு கட்டு... பொம்மி வலிக்குதாடி... நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்ணில் நீர் கசிந்தது. தன் பல்லை கடித்துக்கொண்டு ம்ம் என்று தலையாட்டினாள் சுந்தரி. அவளை தன் மடியிலே வைத்துக்கொண்டான்.

பரதா வண்டிய பார்ஸ்டா ஓட்டு .

பொம்மி எனக்கு பயமா இருக்குடி பேசிட்டே வா, எல்லாம் என்னாலதானே புறம்பொக்கு எவ்வளவு நாள் தணியா போயிருக்கேன் அப்பெல்லாம் இந்த திவாகர் எதாவது செஞ்சிருக்கலாம். உன்னைப்போய் இப்படி பண்ணிட்டான், நீ யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல.

பொம்மி ரத்தம் வந்திட்டே இருக்குடி, கணவுல உனக்கு ஏதாவது ஆச்சின்னா என்னால தாங்க முடியாது இப்ப இப்ப என்னால முடியிலடி. அவன் கண்ணீரை தன் கைகளால் துடைத்தால் பொம்மி.

மாமா உன்கிட்ட ஒண்ணு சொல்லனும்

அவள் தலையை தடவி கொடுத்து என்னடா,

மாமா உன்ன ஏமாத்தி கல்யாணம் செஞ்சேன் கோவம் தானே. நான் உங்கிட்ட சில விஷியங்களை மறைச்சிட்டேன். அது அது..

எதுவும் நீ கஷ்டப்பட்டு சொல்ல வேண்டாம். எனக்கு எதிர்ப்பா நீ எதுவும் செய்ய மாட்டே.என்னைய தவிர வேற எதுவும் யோசிக்க மாட்டே. கோவம்தான் எனக்கு முன்னாடியே சொல்லலை என்ற ஆதங்கம் மட்டுமே.

மாமா நீ பவியை கட்டிக்கிறேன் சொன்னீயா, நான் அவளை துரத்திட்டு உன்னைய கல்யாணம் செஞ்சிக்க நினைக்கல பூவா. என்னுடைய ஆசையை விட என் பூவா ஆசையை நிறைவேத்தனும் நினைச்சேன். என் மனச மாத்திக்கிட்டேன். அன்னைக்கு மணி ஏழ இருக்கும் மாமா, நான் ஊருல இருக்கவேணாம் என் பிரண்டு வீட்டுக்கு போகலாம் போண் செய்ய கொள்ளப்பக்கம் போனேன்.

அப்ப பவி அவ பிரண்டு ரமாக்கூட பேசிட்டு இருந்தா... ரமா சரவனா என்ன சொன்னான் கடைசியா என் நிலைமையை சொன்னீயா...

சொன்னேடி , ஆனா அவன் நான் என்ன செய்யறது சொல்லுறான். நீ லட்டர் எழுதினது உன் மாமனுக்கு சொன்னது கோவம்... என்ன செய்ய போற பவி.

என்ன பண்ணறது அதான் இருக்கவே இருக்கான் என் மாமன், அவனைத்தான் கட்டிக்க போறேன், நான் எவ்வளவு கெஞ்சறது ரமா. போடி அவன் கிடக்கிறான். சொல்லிட்டு திரும்ப பவி முன்னாடி நின்றாள் சுந்தரி..

ரமா வெளியேற.

நீ மாமாவ காதலிக்கல... அப்ப ஏண்டி பொய் சொன்னே,

என்ன பொய் சொன்னேன்,லட்டர் மாமா கையில கிடைச்சிடுச்சு, எனக்கு பூவரசன் மேல பயம் அடிச்சிட்டா என்ன செய்யறது.

அவன் அக்காவால நம்ம குடும்பமே சிதைச்சி போயிடுச்சி, நம்ம அம்மா வாழ்க்கை நாசமா போயிடுச்சு, போயும் போய் அவனையா லவ் பண்ணே.

ஆமாம் படிச்சிருக்கான் என் பின்னாடியே சுத்தினான். நம்ம மாமாவ கம்பேர் செய்ய சொல்ல இவனுக்கு என்னடி குறைச்சல் சொல்லி திரும்ப.

அவ கையை பிடித்து இழுத்து , கண்ணத்தில் ஒரு அறையை விட்டாள் சுந்தரி. என் மாமனும் அவனும் ஒண்ணா சொல்லுடி. இன்னிக்கு நம்ம சாப்பிடுற சாப்பாடு நம்ம மாமா போட்ட பிச்சை, நீ வாழுற வாழ்வும்.

பவியின் கையை பிடித்து சிறிது நேரம் நிற்க, சுந்தரி மூளை விழித்துக் கொண்டது. கையின் நாடி துடிப்பை கவனித்தாள் சுந்தரி. டாக்டர் படிப்புயில்ல. திரும்ப பளார் என்று அடித்தாள் சுந்தரி,

சொல்லுடி எத்தனை நாள் தள்ளி போயிருக்கு. அவன்கிட்ட படுத்துட்டு என் மாமனை கட்டிக்குவியா. பிளான் பண்ணி செஞ்சிருக்கே,

கண்ணத்தில் கையை வைத்துக்கொண்டு பவி அழ ஆரம்பித்தாள். முதல்ல நல்லாதான் பேசினான் சுந்தரி, அப்பறம் ஒருநாள் டையிலரிங் கிளாஸ் போக சொல்ல, என் பிறந்த நாள் என் கூடதான் இருக்கனும் சொல்லி, அப்ப இருந்த தணிமையில நாங்க இரண்டுபேரும் தப்பு செஞ்சிட்டோம்.

முதல்ல ஒண்ணு ஆகாது நினைச்சேன், அப்பறம் நாள் தள்ள ஆரம்பித்தது. அவன்கிட்ட சொன்னேன், பூவரசு மாமாவுக்கு பயப்படுறான், அப்பா ஏதாவது செய்வாரு பயப்படுறான்.தேம்பி தேம்பி அழ.... நீ போய் தூங்கு நாளைக்கு உனக்கும் சரவனாவுக்கும் கல்யாணம் ரெடியா இரு ,

இங்க நடந்ததை யாருக்கும் சொல்லாத... சரி என்று தலையை ஆட்டி ரூமுக்குள் சென்றாள் பவி.

சுந்தரி தன் அப்பாவை அழைத்தாள் ,நான் உங்கிட்ட பேசனும்.

நல்லாயிருக்கியாடா ,என்னடா சொல்லு. நீங்க வளர்த்த பையன் அதான் உங்க பாக்கியத்தோட தம்பி சரவணா உங்க பொண்ணு பவி மேலே கையை வச்சிட்டான்.

பொம்மி என்ன சொல்லுறே , உன்மையே சொல்லுறேன் எவ்வளவு பாசமா பாம்பை வளர்த்தாலும் அது கொட்டத்தான் செய்யும்.கொஞ்ச நேரத்தில நீங்களே போன் செய்வீங்க நான் வைக்கிறேன்.

சரவணா சரவணா...மாமா என்னாச்சு மாமா, ரூமிலிருந்து சரவணா வர.கண்ணத்துல இரண்டு அடி கொடுத்தார், பவி என் பொண்ணுடா, உங்கள வளர்த்தற்கு நீ செஞ்ச நன்றி கடன். பூவரசனை பழி வாங்கவாடா.

நீயெல்லாம் ஆம்பளை த்தூ...எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வளர்த்து வந்தானேடா அவன் ஆம்பளடா என் மாப்பிள்ள பூவரசன். தப்பா ஒரு பார்வை பார்த்தானாடா. தனியா தங்கிருக்கான், பிள்ளைங்க பெரிசா வளர்ந்திடுச்சுன்னு.

மாமா என்னைய மண்ணிச்சுடுங்க என்று காலில் விழுந்தான் சரவனன். என்மேல தப்பு நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன் மாமா. எனக்கு பவியை ரொம்ப புடிக்கும் மாமா, பூவரசனுக்கு பயந்து போய் இப்படி பண்ணிட்டேன்.

போனை எடுத்து பொம்மியை அழைத்தான். நான் அப்பா பேசறேனடா...

ம்ம்ம் சொல்லுங்க, என்ன செய்யலாம்.

நீயே சொல்லும்மா,

நாளைக்கு காலையில் முருகன் கோவிலில் கல்யாணம் கூட்டிட்டு வாங்க அவனை...

சரி, அதுக்கு நான் சொல்லுறதை நீ செய்யனும் ...

அப்பா....

அப்பாதான் எத்தனை வருஷம் ஆச்சு இந்த வார்த்தையை கேட்க... நான் சொல்லுறதை நீ கேட்கனும்...

என்ன...

நீ பூவரசனை கல்யாணம் செஞ்சிக்கணும், இப்ப டாக்டருக்கு படிச்சிருக்க, நாளைக்கு வேற டாக்டர் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா,

நான் நீங்க பெத்த பொண்ணு என்றதால உங்களை மாதிரி இருக்க மாட்டேன். என் மாமனைத்தவிர இந்த ஜென்மத்தில வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்.

என் பொம்மி கல்யாணத்தை கண்குளிர பார்க்கணும், என் மாப்பிள்ள பூவரசு என் பொண்ணு கழுத்தில தாலிக்கட்டறதை பார்க்கனும். பூவரசன் விட மாட்டான் என்னையை.

என்ன மாப்பிள்ள மாப்பிள்ள ரொம்ப உருக்குறீங்க...

பூவரசன் என்னைக்கும் எனக்கு மாப்பிள்ளதான் பொம்மி, அன்று விடியும் பொழுது பவியை கூட்டிக்கொண்டு கோவிலுக்கு சென்றாள். தாலியை கட்டியவுடன் முன்னாடியே கிளம்பிவிட்டாள் பொம்மி....

தன்னை மறந்து அவளையே பார்த்தான் பூவரசன்... மாமா உங்ககிட்ட இத சொன்னா நீ ரொம்ப ஃபீல் செய்யுவே. எங்களை சரியா வளர்க்கலை நினைப்ப. உனக்கு ஒரு பிரச்சனையுமில்ல, நீ தப்பு செஞ்ச பவியை கூட கட்டிக்குவே... எங்களுக்காக உன் படிப்பை விட்டு, உன் ஆசையை விட்டு எவ்வளவு கஷ்டப்பட்ட .

சின்ன வயசில உனக்கு பாரம்மா நாங்க வந்துட்டோம். திரும்பவும் எவனுக்கோ பிறந்த பிள்ளையை உன் முதுகில் ஏத்த நான் விரும்பல மாமா. என் மாமாவுக்கு துரோகம் செய்ய நினைச்ச பவிக்கிட்ட, நான் பேசறதில்ல.

பொம்மி, எனக்காகவா...உன்னைய திட்டிட்டேன்டி.நான் என்னடி செஞ்சேன் மாமாமேல அம்பூட்டு பாசம். முகம் முழுவதும் முத்தமிட்டான் ,

ஏய் பரதா இங்க திரும்பி பார்க்காதே... பொம்மி பரதாவிடம் சொல்ல...

சரிடா நான் பார்க்கல கண்களை துடைத்துக்கொண்டான், பரதா. சுந்தரி கண்கள் சொறுக.

ஏய் இங்க பாருடி, கண்ணை திற பொம்மி... கண்ணங்களை தட்டினான்.

ஆங் பூவா இதழ்கள் முனுக கண்ணை திறந்தாள் ,மாமா உன்கிட்ட நான் மறைச்சதுக்கு எனக்கு தண்டனை கிடைச்சிடுச்சு மாமா.

என்னடி சொல்லுற லூஸு..

ம்ம்ம் பல்லைக் கடித்துக்கொண்டு , நம்ம குழந்தை.. குழந்தை அழுதுக்கொண்டே சுந்தரி சொல்ல .பூவரசன் தன் மடியை பார்க்க...மடி முழுவது உதிரம்.

பொம்மிமி... ஆமாம் மாமா .. பூவரசன் தன் தலையில் அடித்துக்கொள்ள, பதட்டத்தில் பொம்மி ... பொம்மி வலிக்குதாடி. அய்யோ தாங்க மாட்டாளே அவளை அனைத்துக்கொள்ள. பரதன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் ஹாஸ்பிட்டல் முன். மாதவன் ஒடி வர சுந்தரியை தூக்கிக் கொண்டு ஸ்ட்ரச்சரில் ஏற்றி தள்ளிக்கொண்டே போனார்கள்

பூவா...கண்கள் சொருக, எனக்கு கடைசியா முத்தம் ...சுந்தரி கேட்க

மாட்டேன் , நான் தர மாட்டேன்.... நீ என்னைய விட்டு போயிடுவ,,, நான் மாட்டேன்டி, எனக்கு நீ வேணும் ..

பரதா என் மாமாவ பார்த்... து.. க் கோ.

ஆபரேஷன் தியேட்டருக்கு எடுத்துச்சென்றனர்....பரதன் பூவரசனை கட்டிக்கொள்ள. பயப்படாத மாப்பிள்ள ஒண்ணும் ஆகாது.

மாதவன் ரிஜிஸ்டரில் கையெழுத்து வாங்க போலீஸ் கேஸ் ஆகும் பூவரசு பார்மலிடிஸ்க்காக கணவன் என்று சைன் பண்ணின்னான்.

பரதா விஷியத்தை வீட்டில் சொல்ல , அனைவரும் கிளம்பி வந்துக்கொண்டிருந்தன.

கண்களை மூடி சுவற்றில் சாய்ந்து நின்றான் பூவரசன். என்ன செஞ்சேன் பொம்மிக்கு , சின்ன வயசிலே மாமா மாமான்னு தாயை போல் தாங்கினா. ஆசையா என்னைய பார்த்த போது விலகிபோனேன். யாரோ பேச்சி கேட்டு என் பொம்மியை நான் நம்பல. இந்த கையால எத்தனை முறை அடிச்சிருப்பேன் , நான் பாவி . கடவுளே பொம்மிய என்கிட்ட கொடுத்துடு. முடியை கோதிவிட்டு பயப்படாத மாமா நான் வந்துடுவேன். அவன் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது சுந்தரியின் குரல்....

--------------------------
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

போங்கப்பா லக்ஷு
எனக்கு அழுகை அழுகையா வருது
சுந்தரிக்கு ஒண்ணும் ஆகக் கூடாதுப்பா
பொம்மி எவ்வளவு நல்ல பொண்ணு
பூவரசனுக்காக எத்தனை பார்த்து எத்தனை செய்திருக்கிறாள்
அவளுடைய குழந்தை அநியாயமா போய் விட்டதே?
பவித்ரா மூதேவி இவளெல்லாம் ஒரு அக்காவா?
சரவணனின் குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டு பூவரசனைக் கல்யாணம் பண்ணுவாளாமா?
 
Kuzhandhai ennappa pannuchu. Athukku keduthal pannaringale.
அதானே
சுந்தரியின் குழந்தைக்கு ஒண்ணும் ஆகக் கூடாது, லக்ஷு டியர்
பூவரசன் பாவம் எவ்வளவு ஆசையா இருக்கிறான்
 
அதானே
சுந்தரியின் குழந்தைக்கு ஒண்ணும் ஆகக் கூடாது, லக்ஷு டியர்
பூவரசன் பாவம் எவ்வளவு ஆசையா இருக்கிறான்
Thk u banu mam logic eddikum thane epilogue baby varum banu mam. Ha ha ennuku feelings write panna varuthu. Story boringa pogum ninaichan. Thk u very much. Next story comedy than friends
 
Top