Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-26

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-26

பரதா மாமா ஊருக்கு கிளம்பலாம்மா என்று பூவரசன் கேட்க

வெளியே உட்கார்ந்திருந்த தலைவர் ,மாதவன் பூவரசனை பார்த்தார்கள்.

தம்பி மழை வேற பெய்து இப்ப ரோடும் சரியிருக்காது இன்னிக்கு ஒரு நாள் தங்கி நாளைக்கு கிளம்புங்க.

ஆமாம் பூவரசு மழை பெய்துப்பா, தெரியாத வழி, நாளை விடிஞ்சவுடன் போகலாம்.

சரிங்க ஐயா, சுந்தரியை பார்த்திட்டதுக்கு ரொம்ப நன்றி, மாதவன் உங்களுக்கும் நான் நன்றி சொல்லனும்.

என்ன பூவரசன் இப்படி பேசிறீங்க, சுந்தரியை என் தங்கச்சியாதான் பார்க்கிறேன், அவங்க கூட எப்பயும் அண்ணன்னா இருப்பேன்.

தேங்கஸ் மச்சான்.

சரி சாப்பிட வாங்க என்று தலைவர் அழைக்க, நீங்கல்லாம் சாப்பிடுங்க, நான் சுந்தரியோட சேர்ந்து சாப்பிட்டுக்கிறேன்,பரதன்,மாதவன் பூவரசை பார்த்து சிரிக்க.

என்ன மாப்பிள்ள இன்னிக்கு ஸ்பெஷல் விருந்து போல பரதன் கூற.

ஆமாம் ரொம்ப நாள் கழிச்சு மாதவன் சேர்ந்து கலாய்க்க...

டேய் இரண்டுபேரும் கொஞ்சம் வாய மூடுறீங்களா பெரியவர் என்ன நினைப்பாரு.

அக்கா அவங்க யாரு, என்ன அழகாக இருக்காங்க, உங்க அண்ணாவா என்று தலைவரின் பெண் செல்வி கேட்க.

ம்ம் என்னுடைய புருஷன், எந்த ஊருக்கு வந்தாலும் இவன பார்த்து ஜோள்ளு விடவே வருவாங்க மனதில் நினைத்தால் சுந்தரி,

அப்படியாக்கா, அப்பா உங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டாங்க நான் இங்க கீழே வச்சிட்டு போறேன்.

சிறுது நேரம் சென்று சுந்தரியின் ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தான் பூவரசன்.

வா சுந்தரி சாப்பிடலாம் , தட்டில் உணவிட்டு தன் மாமனிடம் கொடுக்க...

நீயும் சாப்பிடு, எனக்கு கஞ்சிதான் மாமா , அதான் சாப்பிடணும். மாமா இங்க சாப்பாடு நம்ம செய்யற மாதிரி இருக்காது ...

பரவாயில்ல பொம்மி எனக்கு ரொம்ப பசிக்குது நான் சாப்பிட்டே நாலு நாள் ஆச்சு, காபி டீ கூல் டிரிங்க்ஸ் இப்படிதான் போச்சு. பசியில் அனைத்தும் சாப்பிட்டு முடித்துவிட்டான். நீ மேல படுத்துக்கோ, நான் கீழே படுத்துக்கிறேன், இடத்தை சுத்தப்படுத்தி பாயை விரித்து, தலையனை வைத்து படுத்தான்.

திரும்பி படுக்கும் போது சுந்தரி அவன் பக்கத்தில் படுத்தாள், ஏய் நீ மேலே படுடா.

நான் இங்கே படுத்துக்கிறேன் பூவா...ஒரு கையை தலையில் ஊன்றி ஏன் ஒரு மாதிரியிருக்க மாமாகிட்ட ஏதாவது மறைக்கிறீயா.

இல்ல..

நீ இப்படி அமைதியாவே இருக்க மாட்டியே.சொல்லுடி

அவள் அமைதியாக பூவரசனை பார்க்க...

ஏதோ சரியில்லையே பொம்மி.

ம்ம் அவளை பார்த்துக்கொண்டே பூவரசன் முத்தா வேணும்மா பொம்மி.

நான் கேட்டனா உன்கிட்ட.

வேணுமுண்ணா வேணும் சொல்லு இல்ல வேண்டாம் சொல்லு அதவிட்டு ரொம்ப சிலுத்துக்கிற.

யாரு நானா, இரண்டு மாசம்மா என்னைய வேண்டாம் சொல்லிட்டு போனவன் தான, எது சொன்னாலும் நடிக்கிற நடிக்கிறன்னு பேச்சு, ஆள குத்தி கிழிக்கிற மாதிரி பேசறது. இப்பவந்து முத்தம் கொடுக்கிறான்னாம்.

ஹலோ, நியாமா நான்தான்டி கோபப்படணும், சொல்லாத வந்திட்டு பேச்ச பாரு, பார்த்தவுடனே ரெண்டு வெச்சிருப்பேன், நீயே முடியாது இருந்தியா அதான் பாவம் போது விட்டுட்டேன்.

க்கும் சொல்லி அந்தப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.சுந்தரி இப்படியே மையின்டன் பண்ணு இல்ல உன் மாமா கண்டுபிடிச்சிடுவான் அவள் மனசாட்சி பேச தூங்கி போனாள்.

பூவரசன் அவள் பக்கத்தில் நெருங்கி படுத்தான் . என்ன குளிரு , போர்வை மூடி அவள்மேல் கையை போட்டு தூங்கினான்.பாதி இரவில் சுந்தரிக்கு உடம்பு குளிரில் தூக்கிப்போட ஆரம்பித்தது. பொம்மி.பொம்மிமி என்னாச்சு, அவளை எழுப்ப ,

அவள் கை, கால் குளிரில் நடுங்க, இந்த நேரத்தில யார கூப்பிடரது நினைத்து, அவள் கை, காலையும் நன்றாக சூடு பறக்கும் அளவு தேய்த்தான். மாமா தாங்க முடியில ... பொம்மி முனக

தன்னிடமிருந்த போர்வையை அவள்மேல் போர்த்திவிட்டான். மறுபடியும் அவள் உடம்பு தூக்கி போட, அவளை கட்டி அனைத்து படுத்துக்கொண்டான். தன் சட்டையிலிருந்த பட்டனை கழிற்றி பொம்மியை மார்ப்போடு அனைத்துக்கொண்டான். அவனின் உடல்சுடு அவளுக்கு கதகதப்பை கொடுத்தது, அவளுக்கு போர்வையாக மாறினான்.

மெல்ல கண்விழித்து அவனை நிமர்ந்து பார்த்தாள், மாமா நான் குளுரிதுன்னு நடிக்கல.

தெரியும்டி , இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள , அவன் பார்வையின் விழிச்சி தாங்காமல் கண்ணை முட, பெண்ணின் வெட்கத்தை ரசித்தான் பூவரசன். அவளின் சம்மதத்தை கண்டவன் தன் உதடுகளால் அவள் உதடை தீண்டி அவள் கண்ணை திறந்தான்.முத்தத்தின் உணர்ச்சியில் அவள் முதுகை வருட ஒரு நிமிடம் அவன் மூளை விழித்துக்கொண்டது.பிறகு மெல்ல அவளை விடுவித்தான்.

மாமா எனக்கு பயமா இருக்கு...

என்ன பயம் பொம்மி, மாமா உன் பக்கத்தில தான இருக்கேன்.

கட்டி அனைத்துக்கொண்டாள், மாமா கிஸ் வேணும் என்று சொல்ல , மறுபடியும் இதழ் தீண்டினான். அவள் கொஞ்ச நேரத்தில் தூங்க. அவள் நேற்றி காயத்தை நன்றாக உற்று பார்த்தான். மெல்ல அவள் முதுகுபுறம் இருந்த சட்டையை விலகி பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் உருண்டது பொம்மியென்று வாரி அனைத்துக்கொண்டான்.

காலை விடிந்தவுடன், பூவரசனின் அனைப்பிலிருந்து மெல்ல எழுந்தாள் , அவளை எழ விடாமல் தூங்கு பொம்மி என, மாமா விடிஞ்சிடுச்சு ஊருக்கு கிளம்பணும் விடுங்க. முகத்தை துடைத்து வேறு சுடிதார் மாற்றி ரெடியானாள்.

எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு நான் வெளியே போனோம் பொம்மி.

எங்க போறே பூவா..

உங்கிட்ட எதுக்கு சொல்லனும், நீ எங்கிட்ட மறைக்கிற இல்ல.

நான் என்ன மறைச்சேன்.

அவள் முதுகை காட்டி இது என்ன காயம் சொல்லுடி ....

அது மாமா முள் குத்திடிச்சு, நாங்க வர சொல்ல.

கையை நீட்டி நிறுத்து, நீ சொல்லுற பொய்யை, கத்தியில கீரி இருக்காங்க,அது கூட எனக்கு தெரியாதா. இன்னும் கொஞ்சம் ஆழமா பட்டுச்சி தையல் போட்டிருக்கனும். இந்த சைட் கண்ணம் வீங்கியிருக்கு.

அது மாமா நான் ஒரு பக்கமா படுத்ததால...

மாதவன் கதவை தட்டி உள்ள வர அனுமதி கேட்க, வா மாதவன் நான் ரெடி....

மாதவன் பொம்மியை பார்த்து , சாரிம்மா நேத்து நைட்டே எல்லாம் தெரிஞ்சிகிட்டாரு,

ஏன்னா சொன்னீங்க, ஏன் எங்கிட்ட சொன்னா என்ன என்று ஏகிறிக்கொண்டு பூவரசன் வர.

அண்ணா நீங்க கொஞ்சம் வெளியே இருங்க இதோ வரோம்.

அவனை கொண்ணு போட்டாதான் என் ஆத்திரம் தீரும்.



ஆங் கொண்ணுட்டு நீ ஜெயிலுக்கு போ , நான் உன்ன நினைச்சிட்டே செத்துப்போறேன், மாமா நீ கோவத்தில என்ன பண்ணுறன்னு தெரியாது.

மாமா என்று பூவரசனை தொட,சீ கையை எடு, நேத்து என்ன பேசுன, கிட்ட வராத சொல்லிட்டேன். பின்னாடியே பூவரசன் நகர, சுந்தரி அவனை நெருங்கி வந்தாள். கடைசியில் கயிரு கட்டில் இடித்து பூவரசன் உட்கார.

அவன்மேல் சுந்தரி உட்கார்ந்து இறுக்கி அனைத்தாள் பூவரசனை,

அவள் கண்களை பார்த்து, என்னடி செய்யற.

ம்ம் காதுகளில் இதழால் கோலமிட்டு, கூல் பண்ணுறேன் பூவா , பூவா....

ம்ம் சொல்லு,

நாம்ம போலிஸ்க்கு போகலாம் பூவா, எதுக்கு ரிஸ்க்கு அவன்கிட்ட நிறைய அடியாட்கள் இருக்காணுங்க பூவா , என் செல்லமில்ல

என்னைய பொட்டையின்னு நினைச்சியாடி, அவள் கழுத்தில் கையை வைத்து கேட்க.

ச்சீ , நீ திருந்தவே மாட்டியா, போடா வெளியே .

போறேன்டி என் பொண்டாட்டி , அதுக்கு முன்னாடி உன் லீப் டிரை ஆயிடுச்சுயில்ல நான் வெட் செஞ்சிட்டு போறேன். அதை செய்துவிட்டு நிமிர ,அடங்கவே மாட்டியா மாமா என்று பூவரசன் கண்ணத்தை கடித்து விட்டாள்.

பரதா வண்டியை எடு, மாதவன் கிளம்பலாம் வாங்க. பரதா வண்டியை ஓட்ட அவன் பக்கத்தில் உட்கார்ந்தான் பூவரசன்.மாப்பிள்ள என்ன கண்ணத்தில சிவப்பா இருக்கு, காயமா...

அது ஓண்ணுமில்ல மாமா, ஏதோ பூச்சி கடிச்சிடுச்சு.

பொம்பள பூச்சியா மாப்பிள்ள,

ஆமாம், சொல்லி தன் கீழ் உதட்டை கடித்து சிரிப்பை அடக்கினான்..

பூவரசு சுந்தரி கோவமா இருக்கா, என்னைய தப்பா நினைச்சிச்சா மாதவன் கேட்க. அதெல்லாம் ஓண்ணுமில்ல மாதவன் நீங்க ஃபில் செய்யாதீங்க..

இரவு பூவரசன் தூக்கமில்லாமல் வெளியே வர அங்கே தலைவரும், மாதவன் மற்றும் சில ஆட்கள் வீட்டை சுற்றி நின்றார்கள்.

யாரக்காக காவல் இருக்கிறீங்க மாதவனை நோக்கி பூவரசன் கேட்க.

சும்மா , எப்பயுமே ஊர்க்காக இருப்பாங்க

பொய் சொல்லாதே மாதவா, நானே உன் பார்க்க வரனும் நினைச்சேன். என்ன ஆச்சு, நீங்க எப்படி இங்க வந்தீங்க...

அது வந்து சுந்தரி உங்ககிட்ட சொல்லகூடாது

அவ சின்ன பொண்ணு உங்களுக்கு தெரியாதா எப்படி நாம்ம ஹெண்டல் செய்வோம், இப்படியே பயந்திட்டு இருந்திங்கன்னா, அப்பறம் அவ முதுகில் யாரோ கத்தியால கிழிச்சிருக்காங்கா. என் பொம்மி எப்படி துடிச்சிருப்பா மாதவா.

சார் நாங்க எல்லோரும் திருமூர்த்தி எஸ்டேட்ஸ் பாஸ்கரன் கெஸ்ட் ஹவுஸில் தங்கி, தணித்தனியா பிரிந்து கேம்ப் போட்டோம். முதல் நாள் நல்லவே போய்ச்சு.அடுத்த நாள் சீப் போன் பண்ணாரு, நாங்க கிளம்பிட்டோம் சொன்னோம். அந்த டைம் 18 வயது பொண்ணு விஷம் குடிச்சிடுச்சுன்னு அந்த ஊரு ஆளுங்க தூக்கிட்டு வந்தாங்க. கவர்மண்ட் ஹாஸ்பிட்டல் போக நேரம் ஆகும், பொழைக்க வைக்க இங்க தூக்கிட்டு வந்தாங்க.

------------------------

டியர் பிரண்ட்ஸ்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021

உங்கள் lakshu
 
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் and நான்தான் First, லக்ஷு அருணாச்சலம் டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

அச்சோ
சுந்தரியை யாரு கத்தியாலே குத்தினது?
என்ன காரணம்?
தொடங்கிட்டு நல்ல இடத்தில் நிறுத்திட்டீங்களேப்பா
 
Last edited:
Top