Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுந்தர பூவரசனின் சுந்தரி-02

Advertisement

lakshu

Well-known member
Member
சுந்தர பூவரசனின் சுந்தரி-02



பண்னைவீட்டு முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள் சுந்தரி.

“என்ன லோகு உன் அண்ணே எங்கே“.

“வாங்க அண்ணி, அவரு மில்லுக்கு போயிட்டு டவுனுக்கு போறேன் சொன்னார். ““

“சரி நான் வந்து போனதா சொல்லு தம்பி“.

அப்பாட போயிட்டாங்க எங்க நான் உளறிடுவேனோ பயந்தேன், நமக்கே இப்படி இன்னா நம்ம அண்ணே பாவம்தான், உடனே பூவரசனுக்கு போன் போட்டான் லோகு.

“அண்ணே , நான் அண்ணிய சமாளிச்சிட்டேன் எப்படிடி.. “

“டேய் முட்டாள் பின்னாடி திரும்பி பாருடா, “

லோகு பின்னாடி திரும்ப சுந்தரி கையை கட்டி நின்றுக்கொண்டிருந்தாள், “அண்ணே, “

“உடனே சாரி கேட்டுடா இல்ல“, பளாரு சந்தம் அந்தப்பக்கம் கேட்டது

“மாட்டினான் லோகு“- பூவரசன்

“என்னடா நீயும், அவனும் விளையாடுறீங்களா எங்கிட்ட தொலைச்சிடுவேன்“ சொல்லி கோவமாக வண்டியை எடுத்தாள்.

பெரிய வீட்டின் முன் கம்பீரமாக நின்ற ராயல் என்பில்ட் நோக்கி வந்தாள் சுந்தரி , நம்ம ராயலோட மைன்ட் வாய்ஸ்ங்க “ அய்யோ கிட்ட வரலே போன மாசம் உதைச்சதே ஓருபக்கம் சைடு வாங்கி ஓட்டேறேன். அவன்மேல உள்ள கோவத்தை என்மேல காட்டுவா.என் மாமா உட்கார்ந்த இடம் எத்தனைவாட்டி என் சீட்டல முத்தம் கொடுத்திருப்ப நன்றி கெட்டவ“ எட்டி ஓரே உதை நம்ம ராயல் மல்லாக்க விழுந்ததுங்க.

வண்டி விழுந்த சத்ததை கேட்டு வந்துட்டாலா ராட்சஸி-பூவரசன்.

“அப்பத்தா எங்க மாமா“,

“என்னடி இவ்வளவு கோபமா இருக்க , மேல அவன் ரூமுல இருக்கான். “

“எல்லாம் நீ குடுக்கிற செல்லம்தான் , தடிமாடு வயசு ஆகுது, இன்னும் அடிதடி பண்ணிட்டு இருக்கு கல்யாணம் செஞ்சிவச்சியா, கேட்க ஆளு இல்லாத ஊரு சுத்தறான் உன் மவன்“

“ஆமாம் பரிசம் போட்டு மூனு வருஷமாச்சு, நீ படிக்கிற சொல்லற, “

“படிப்புக்கும் , கல்யாணத்துக்கும் என் சம்பந்தம் , எல்லாம் என்னைய வேணா சொல்லறத்துக்கு இந்த காரணம் உன் மவனுக்கு“.

“அவன கையுக்குள்ள போட்டுக்க துப்புயில்ல பேச வந்துட்டா போடி,

ஏய் மேல போயிட்டு வந்து கவனிச்சிக்கிறேன்.

பேசறதையெல்லாம் கேட்டுக்கொண்டே கண்னைமூடி படுத்துக்கொண்டிருந்தான் பூவரசன்.

உள்ளே நுழைந்த சுந்தரி அவன் அருகில் அமர்ந்து கையை தொட்டாள் , அவள் கையை தட்டி விட்டான்,திரும்ப கையை இழுத்து பிடித்தாள், கையிலிருந்த காயத்தை பார்த்து“ யாராவது ஹாண்டிபிளாஸ்ட் போடுவாங்களா , உனக்கு அறிவு இல்லையா மாமா. “

“எல்லாமிருக்கு, எப்பிடியும் நீ வருவ,எதுக்கு வேட்டியா வேற டாக்டர் பார்த்து காசு சிலவு இதையே போட்டுக்கினேன்“.

பிளாஸ்டை எடுக்க ஸ்ஸ் முகத்தை சுருக்கினான் பூவரசன், காயத்தை பார்த்து சுந்தரி கண்கள் கலங்கி கண்ணீர் விட்டாள்.

“இப்ப எதுக்குடி அழுவுறவ இந்த நடிப்புக்கெல்லாம் நான் கரைய மாட்டேன் புரியுதா. “

“ஓ, இன்னும் அவளே நினைச்சிட்டு இருக்கியோ“.

“ஏய் வாய அடக்குடி, அவ இன்னோருந்தனோட மனைவி.உன் அக்காவும் கூட“

“இருக்கட்டுமே , என் மாமாவ வேணா சொன்னவ எனக்கு வேணாம்“.

“அய்யோ, ரொம்பதான் மாமன்மேல பாசம் பொங்குது.உங்கிட்ட பேசிய ஓரு மாசம் ஆகுது நான் கேட்டத நீ செய்யறீயா. “

தலையை ஆட்டி “மாட்டேன், “ பேசிக்கொண்டே மருந்து போட்டு பேண்டேஜ் போட்டுவிட்டாள், “ உனக்கும் எனக்கும் பரிசம் போட்டாச்சு இப்பபோய் வேற எவனோ கட்டிக்கசொன்னா முடியாது. உனக்கு டைம் இந்த சுந்தரி கொடுத்தாச்சு, என் படிப்பு முடிய ஒரு மாசம்தான் இருக்கு மைன்ட் செட் பண்ணிக்கோ, ஐ வாண்ட் டூ மேரி யு“.

“அக்கா“ என்று கத்திக்கொண்டே கீழே இறங்கினான், இவ என்னை கோவப்படுத்துறா. இன்னும் இரண்டு நாள்ல பொண்ணு பார்க்க வராங்க சொல்லிடு. நான் போய் கார் எடுத்திட்டு வரேன் , ரெடியா இருக்க சொல்லு அவள காலேஜில் விட்டுவரேன்.

“வா பவித்ரா, நல்லாயிருக்கியா மா“. அனந்தவல்லியின்னு முதல் பெண்.தனது மூணு வயது பையனை தூக்கி வந்தாள்.

“ நல்லாயிருக்கேன் மாமா. “

“சரிம்மா“ என்று வெளியே போனான் பூவரசன்.

“இதே ரோதனையா போச்சு இவன்கிட்ட ,அவளப்பத்தி தெரிஞ்சு இப்படி மூக்கு உடைச்சு போறான்“.

“ஏன் உன் பொண்ணு அந்த பையண கட்டிக்கனா என்ன, வந்த என்னைய எப்படியிருக்க கேட்க மாட்டா, ஐயா எப்படியிருக்காரு கேட்கிறாளா. “

“உன் மாதிரி சுயநலவாதியல்ல நானு, இதோ போறானே இவன்தான் எனக்கு அப்பா, அம்மா எல்லாம். நீங்களெல்லாம் அவனுக்கு அப்பறம்தான். அம்மா நான் கிளம்பிறேன்“.-சுந்தரி.

“பாரும்மா எப்படி தேள் கொடுக்கு கொட்டுற மாதிரி பேசறா. “

“அவ பேச்சுக்கு ஏன் போறே அவளுக்கு மாமானா உசுரு உனக்கு தெரியாதா“.

காரில் போய்க்கொண்டிருந்தார்கள் பூவிரசனும், சுந்தரியும்.

“பொம்மிம்மா“ எப்பவும் சுந்தரியை அப்படித்தான் அழைப்பான். சொல்லு பூவா, பையணும் டாக்டர், டில்லியில பெரிய ஹார்ட் ஸ்பேஷலிஸ்ட் சின்ன வயசிலே என்ன சாதனை தெரியுமா, உன் போட்டாவ பார்த்ததுமே புடிச்சிபோச்சு.

அப்படியா பூவா, ஏன் உனக்கு என்னைய பிடிக்கல ,போட்டவ பார்த்தே அவனுக்கு புடிச்சிருக்கு, பழகிய உனக்கு பிடிக்கல.

நான் சொல்லறத கேளு, நீ அவனை கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை எப்படியிருக்கும் தெரியுமா பொம்மிம்மா,

“ஓகே பொண்ணு பார்க்க வர சொல்லு“

“நிஜமாவ , இப்பதான் நீ என் செல்லக்குட்டி. காலேஜ் வந்திடுச்சு இறங்கு, “

“ஏய் இரு சேரிக்கட்டிக்கிட்ட பின்னாடி நாட் ஓழுங்க போடுவியா ,திரும்பு பொம்மிம்மா“,அழகா நாட்டை போட்டுவிட்டான், செல்லில் விடியோ எடுத்தாள்,

“ஐந்தாவது படிக்க சொல்லியும் இப்படித்தான் பிராக்கு நாட் கட்ட மாட்டே இப்பவும் இப்படியே இருக்க நீ, எனக்கு உன்ன ஸ்கூல விட்ட ஞாபகம் வந்திடுச்சு“.

“எனக்குக் கூடதான் பூவா, ஸ்கூல் போக சொல்ல கிஸ் பண்ணுவேன். இப்ப பண்ணுனா நீ துடைப்பக்கட்டை எடுத்து வாங்குவ. “ அவளை பார்த்து முறைக்க ,ஓவர் சீன போடாத பையன் போட்டவ வாட்ஸ் அப் அனுப்பு, வரேன்.

அடங்குதா ராட்சஸி , போடி.








 
Super super ??
Pavam andha royal enfield adha poyi thalli vitutanga.poovarasan knot pottuvittadha sundhari video eduththu andha doctor paiyanukku anupaporangala? ?
 
Top