Very nice review.நான் வாசித்து முடிக்க என்னுள் தோன்றியவை
"கவிதை பேசும் வானம் "
மிகவும் அருமையான யதார்த்தமான கதை களம். நடுத்தர வர்க்கத்தின் நிலைமை இதுதான் பெரும் பாலும்.
சிறுகச்சிறுக சேமித்து தன் பிள்ளைகளை கல்யாணம் செய்து வைக்கும் பெற்றோர்,
தன் அன்னை தந்தை நிலை அறிந்து தன் விருப்பம் துறந்து உள்ளதை கொண்டு திருப்தியடையும், தன் பெற்றோர் நிம்மதி சந்தோஷத்தை எண்ணி வாழும் பிள்ளைகள் பெரும் பாலும் கிடைத்தது அவர்கள் வரம் தான்.
தன் தரத்துக்கு ஏற்ற வாழ்வினை அமைத்துக்கொள்வதே சிறந்தது.
சில சமையம் அதில் தம்மை பொருத்திக்கொள்ள முடியாது போகும். சில சமையம் அதை மிஞ்சிட தோணும். இது இரண்டுமே அவ்வாழ்க்கைக்கு பிரச்சினையே உண்டு பண்ணும்.
(நம்ம தீப்பொறியோடபிரச்சினையை சொல்லல )
உயர் நிலை மக்கள் அவர்களின் தரத்திற்க்கு ஏற்ப வளர்வது, வாழ்வது அவர்களை சில நேரம் பிழையாக கட்டலாம். (அக்னி அம்மாவை போல )ஆனால் அவர் வாழ்க்கைக்கு பொருத்தமாய், அவர் தரம் தாளாது வாழ்வதோடு நல்லவராக, குடும்பத்தோடு அனுசரணையாக இருப்பதில் கீர்த்தி அவர் குணம், அவர் தன் நிலையை தாழ்த்திக்கொள்ள விரும்பாதவர் என்பதை புரிந்து அவருக் கேற்ற மரும்களாய் மாறி குடும்பத்தோடு ஒன்றி அவள் விருப்பத்திற்கு தன் சூழலை யாரும் நோகாது, மற்றவர் தரம் தாளாது வாழ்கிறாள்.
அக்னி செல்வன் ஆண்மையின் குணங்கள் முழுமையும் பெற்றவன்...
குணத்தில் செல்வந்தன்.
நல்ல உழைப்பாளி.. நேர்மையான, பிறர் குணமறிந்து, நிலையறிந்து, தேவையறிந்து நடப்பவன்.குடும்ப ஒற்றுமைக்கு தூணாய் நிற்பவன்.நடுத்தர குடும்பத்தில் பெண்ணெடுத்து அக்குடும்பத்தின் நிலை அறிந்து அவர்களே அறியாது, அவர்களின் தரம், சுயம் தளராது தோள் கொடுத்தவன். நல்ல மருமகன். அன்பான புரிந்துணர்வுடன் கூடிய பொறுப்பான கணவர் குடும்ப தலைவன்.
கதையில் கற்றுக்கொள்ள வேண்டியது எனும் போது கீர்த்தியின் அக்காள் வாழ்க்கை குறிப்பிடப் பட வேண்டியது. கணவன் இப்படி வேண்டாம் என்பதறகு உதாரணமான கணவனை பெற்றவள் சொந்த அத்தை பையனையே முடித்திருந்தாலும், ஆண்கள் மது குடித்தால்,பென்சகவாசம், பெண்ணை அடித்தால், கொடுமை படுத்தினால் தான் கெட்டவன் என்று பெயரா. இல்லை.
அவள் மனம் நோக, அவள் உணர்வுகளுடன் விளையாடுபவன், அவளை மதியாதவன், அவளைக் கொண்டு தன் தரத்தை, நிலைய உயர்த்திக்கொள்ள நினைப்பவன், அன்பையும் தேவைக்கு காட்டுபவன், தன் தேவையையே முதன்மையாய் நினைப்பவனும் மகா கெட்டவனே.
இவற்றையெல்லாம் பொறுமையாக கையாண்டு இன்றளவும் பெண்கள் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இது ராகா போன்ற பெண்களைபோல் இக்கட்டான நிலை வரும்போதே உணர்கின்றனர்.மீள நினைக்கின்றனர். அப்போதும் அதனை விட்டு மீள நினைக்க சமூகம் அதற்கு இடம் தராமல் நம்மை கட்டிவைக்கும் சூழல் கொடுமை.
அதை தகர்த்தெறிந்து வாழும் பெண்கள் அரிது என்றாலும் ராக போன்ற பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஸ்ரீநி போன்றவன் திருந்தி வருவானென்றால் பாதிக்கப்பட்டவள் உள்ளம் ஏற்க மறுப்பதும் யதார்த்தம். அவன் பழைய நிலையே மாறக்கூடும் என்பதும் யதார்த்தம் தான்.
திருந்தி தன் நிலை உணர்ந்து, தன் அவமானம் உணர்ந்து திருந்தி வாழ வருவனேயானால் ராகா ஏற்பாள்.
குழந்தைக்காக. பெரும் பாலும் பெண்கள் அப்படித்தானே வாழ்கின்றனர்.
சந்தனா, சுரேன், அடைக்கலம், பன்னீர், சுபா குடும்பத்துக்கு தேவையான இருக்க வேண்டிய கதாபாத்திரங்கள். சுரேன் தளர்ந்தாலும் குடுபத்துக்காக பாசமான நல்ல குணமுடையவன்.பாசம் ஒன்று மனதில் இருந்துவிட்டால் எப்பேர்பட்டவனுக்கும் நெஞ்சில் ஈரமிருக்கும்.
அடைக்கலம் அவரை தேடி வருவோருக்கு வார்த்தைகளால் செயலால் அடைக்கலம் தருபவர்.
சனா நல்ல மருமகள் மனைவியாய். உற்ற தோழியாய்.
Almost really superb story same as ur other storiessss.
உங்கள் கதைகள் தனித்தனி கருத்துக்களோடு அனுபவமிக்க யதார்த்தமான கதைகள்... மனதில் பதித்த விடும் குணங்களை கொண்ட கதாபத்திரங்கள்..
அனுபவித்து வாசித்தேன்...
Enjoyed reading
" கவிதை பேசும் வானம் "
அவனுக்கும் அவளுக்கும் அவர்கள் இருவரும், அவர்களை சூழ இருப்பவர்களும்.
நாம் பார்க்கும் விதத்திலே அவை நமக்கு....
வாழ்த்துக்கள்