Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண்மூடி காதல் நானாவேன் - இன்ட்ரோ

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்

எல்லோர்க்கும் பெரிய வணக்கம்.

என்னடா இவ அந்த பக்கம் போயிட்டு அதுக்குள்ளே இந்த பக்கம் வந்துட்டாளேன்னு
பாக்கறீங்களா? எஸ் புது கதையோட வந்துட்டேன்.


தலைப்பு - கண்மூடி காதல் நானாவேன்

விதுரன் – அம்மா சொல்ற பொண்ணை வீட்டுல பார்த்து எல்லோருக்கும் புடிச்ச பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்.

“லவ் மேரேஜ் எல்லாம் போர். பார்த்து பேசி பழகி ப்ளஸ் & மைனஸ் தெரிஞ்சு கல்யாணமும் செஞ்சிட்டா அப்பறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸியம் இருக்கு? இதுவே வீட்டுல பார்க்கிற பொண்ணா இருந்தா அவ கிட்ட தெரிஞ்சுக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கும். தேடல் அது சுகமானது”

ரோஜா – என்ன ஆனாலும் சரி அம்மா பாக்கற அப்பா முடிவு பன்ற பையனை கல்யாணம் செய்யவே கூடாது.

“பாக்கிற மாப்பிள்ளையை கூட அவங்களை மாதிரியே பார்த்து வச்சா வாழ்க்கை முழுக்க அட்டென்ஷன் தான். ஒரு ஸ்மார்ட்டான பையனை பார்க்கனும். பார்த்ததும் புடிக்கனும். பழகனும். ப்ளஸ் & மைனஸ் தெரிஞ்சுக்கனும். அப்போதான் கல்யாணத்துக்கு பின்னால எந்த பிரச்சனை வந்தாலும் ஈஸியா சால்வ் பண்ண முடியும்.”


இப்படி எதிர்கால வாழ்க்கைத்துணையை பற்றிய இரு வேறு லட்சியங்களை கொண்ட இருவருக்குமே அவரவருக்கு பிடித்த வாழ்க்கை அமைந்ததா? இல்லை அதற்கு நேர்மாறாக அமைந்ததா? என்பது தான் கதை.

கண்ணை மூடிக்கொண்டு யார் யாரின் காதலாக மாறவிருக்கிறார்கள்? கதையில் பார்க்கலாம்.

எந்த அழுத்தமும் டென்ஷனும் இல்லாம ஒரு ஜாலி ட்ரிப். போக ரெடியா?
நாளைல இருந்து அப்டேட் தரேன்.

உங்களோட கருத்துக்களை தவறாம பதிவு பண்ணுங்க ப்ரெண்ட்ஸ் :)
இப்பவும் சொல்றேன் உங்க கமெண்ட்ஸ் மட்டுமே என்னை அடுத்தடுத்த அத்தியாயத்துடன் ஒடி வரவைக்கும் :)

முதல் அத்தியாயத்துடன் நாளை வரேன். :)
 
உங்களுடைய "கண்மூடி காதல்
நானாவேன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சரண்யா ஹேமா டியர்
 
Last edited:
விதுரனின் மனமறிந்து அவன் விருப்பப்படி ரோஜா மலர்ந்து மணம் வீசுவாளா?
இல்லை விதுரன் ரோஜாவின் ராஜாவாகி விடுவானா? என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன், சரண்யா ஹேமா டியர்
 
Last edited:

Advertisement

Top