Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எது இன்பம் எது துன்பம்

Advertisement

Joyram

New member
Member
எது இன்பம் எது துன்பம்

விழித்த முகத்தில் கதிரொளி பட்டால் இன்பம்
வெறுத்த முகத்தில் கண்ணொளி பட்டாலும் துன்பம்
முகத்தில் குளிர்ந்த நீர் பட்டால் அது ஒரு இன்பம்
சிறுத்த முகத்தில் கண்ணீரை இரைத்து துன்பம்
காப்பி குடிக்கையில் இளங்காற்று பட்டால் இன்பம்
கஷாயம் குடிக்கையில் பிறர் கை பட்டாலே துன்பம்
உடற்பயிற்ச்சிக்குப் பின் உடலில் நீர் பட்டால் இன்பம்
மனம் துடிக்கையில் பன்னீர் தெளித்தாலும் துன்பம்
சுவையான சிற்றுண்டி நாக்கில் பட்டால் இன்பம்
காய்ச்சலின் போது வாயில் உணவு பட்டால் துன்பம்
வழியில் நண்பர்கள் கண்ணில் பட்டால் அது இன்பம்
அதுவே வேண்டாதவர்கள் தென்பட்டால் அது துன்பம்
அலுவலகத்திலிருந்து வீடு புறப்பட்டால் தனி இன்பம்
அலுவல்கள் அதிகமாக இருப்பின் வீட்டிலும் துன்பம்
வழியில் மல்லிகைப் பூ கண்ணில் பட்டால் இன்பம்
கண்களில் காரப்பொடி பட்டுவிட்டால் துன்பம்
வீட்டில் மனைவி அழகாக தென்பட்டால் இன்பம்
அவள் புத்துணர்வு இல்லாமல் தென்பட்டால் துன்பம்
இரவு படிக்க நல்ல புத்தகம் தென்பட்டால் இன்பம்
வங்கி கடனை அடைக்க ஓலை கண்டால் துன்பம்
படுக்கையில் மனைவியின் ஸ்பரிசம் பட்டால் இன்பம்
படுக்கையில் கவலைகள் அழுத்தினாலோ அது துன்பம்
இரண்டு நாட்களுக்கு பிறகு ஞாயிறு என்று இன்பம்
திங்கள் அலுவலகம் செல்வதை நினைத்து துன்பம்

இன்பம் துன்பம் மாறி மாறி வருவது தான் என்றுமே
வாழ்வின் துன்பம் கலந்த இன்பமான துன்பம்!

Joyram
 
Top