Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-31

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-31

காலையில் குளித்து ரெடியாகி சாப்பிட டைனிங் டெபிளில் உட்கார்ந்தான்.. இவனுடைய பக்கத்தில் மோகனும், எதிர்பக்கம் சிவாவும் அமர்ந்தார்கள்... அப்போழுது

மாப்பிள்ள எப்படியிருக்கீங்க, இனியனின் உறவுமுறையில் மாமா, அவரின் மகளுடன் வந்தார்..

வாங்க பாண்டி மாமா, இனியனும், வாங்க அண்ணா என்று ரேணும் அழைத்தார்கள்..

எப்படியிருக்கீங்க மாமா.. வீட்டில எல்லோரும் நல்லாயிருக்காங்களா..

அவங்களுக்கென்ன மாப்பிள்ள, நல்லாயிருக்காங்க... இதோ என் மூத்த பொண்ணு ரேவதி, காலேஜ்ஜீ படிக்குது... ஏதோ பெரிய படிப்பாம்...

ஹாய் அத்தான் என்று ரேவதி கையை கொடுக்க...

ஹாய்... என்றான் இனியன்... மார்டன் உடையான டீஷர்ட் மற்றும் த்ரீ பை போர்த் பேண்ட் போட்டிருந்தாள் ரேவதி..

இவங்களெல்லாம் யாரு மாமா.. இதுவரை நாங்க பார்த்ததேயில்ல மோகன் வினவ..

நம்ம சொந்தங்கள் தான்டா... சிவாவை பார்த்து சிரித்தான் இனியன்...

மாப்பிள்ள உனக்காக என் பொண்ணு நிறைய சமைச்சி எடுத்துட்டு வந்திருக்கா... நீங்க முதல்ல இதை சாப்பிடுங்க என்று கையில் வைத்திருந்த பெரிய கேரியரை எடுத்து டெபிளில் வைத்தார்..

ரேவதி நீயாம்மா சமைச்ச வெரி குட் இனியன் கவுன்டர் கொடுக்க... ஹி..ஹி ன்னு இளித்தாள்..

பாருங்க மாப்பிள்ள, இது மீன் வறுவல், இது சிக்கன் 65, இது..

தெரியும் மாமா மட்டன் ப்ரை.. கரெக்டா..

அய்யோ நீங்க கலெக்டர் உங்களுக்கு எல்லாமே தெரியும் மாப்பிள்ள..

தாத்தா எனக்குகூட தெரியும் இது சிக்கன் குழம்பு கரெக்டா என்றான் மோகன்...

பாண்டி மோகன் பேசுவதை கேட்டு அசடு வழிந்தபடி ஆமாம் தம்பி என்றார்.

ஏய் புள்ள ரேவதி அத்தானுக்கு வை, ரேணு நீ கொஞ்சம் நகரு என் பொண்ணு பரிமாறுவா..

ம்ம்..சரியண்ணா, நான் உங்களக்கு காபி எடுத்துட்டு வரேன் என்றார் ரேணு.. பாண்டி சோபாவில் அமர, இங்கு ரேவதி ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள்.. இதையெல்லாம் கிச்சனுக்குள் இருந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் இந்த வீட்டின் மகாராணி தேன்மொழியாள்..

என்னம்மா படிக்கிற,

பி.ஏ. இங்கிலீஷ் அத்தான், தேர்டு இயர் படிக்கிறேன்.. அவளிடம் பேசியபடி அவனுக்கு வைத்த உணவை எடுத்து மோகனுக்கும், சிவாவுக்கு வைத்தான்... நீ போய் அத்தானுக்கு காபி வாங்கிட்டு வா ரேவதி... அவளை கிச்சனுக்கு அனுப்பினான்..

இனியன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் சிவா... எங்க மாமா, மாமாதான்.. இதுக்குதான் அக்கா மாமாவேதான் வேணும் தவமிருந்தாரோ..

பிறகு உள்ளே வந்த மோகன், அக்கா மீனும், சிக்கன் குழம்பும் சூப்பரா இருந்துச்சு... ஆனா இந்த மாமா போயும் போயும் உன் உப்பில்லாத சாம்பாரும், இட்லியும் தான் சாப்பிட்டிச்சு... வேற எதையும் சாப்பிடல மாமா மிஸ் பண்ணுடுச்சு...

இதை கேட்டவுடனே அவள் மனம் சிறகில்லாமல் பறத்தது... ரொம்ப நாள் கழித்து மனம் முழுக்க ஆனந்தம்... தன் கீழ் உதட்டை கடித்தபடி மெதுவாக சொன்னாள் மாமா என்று...

நான்கு நாளில், கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றான் இனியன் ஐ.ஏ.எஸ்... முதல் நாளே கலெக்டரிடம் வந்த ஜோடிக்கு திருமணம் செய்துவைத்தான்... இருவரும் வேறு ஜாதி பிரிவினர்... தங்கள் பாதுகாப்புக்காக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்..

பிறகு, புதிய கலெக்டர் என்பதால் அந்த மாவட்ட வருவாய்துறை முதல் காவல் துறை முதற்கொண்டு மீட்டிங் போட்டான்... அவனுக்கு பங்களா, செக்யூரிட்டிக்கு போலீஸ் மூனுபேர், இரண்டு கார்ட்ஸ் இருந்தார்கள்...

அடுத்த வாரம் ஞாயிறு அன்று வரவில்லை, புயல் அடிக்கடி வரும் கடற் சார்ந்த பகுதி கடலூர் என்பதால், இந்த வருடம் புயல் வருவதற்கு முன்னேற்பாடாக தொடர்ந்து மூன்று நாளாக மீட்டிங் நடைபெற்றது. அதனால் இனியன் வரவில்லை..

மோகனிடம் கேட்டாள் தேனு... மாமா ஏன்டா இந்த வாரம் வரல...

அதுவாக்கா...ம்ம் என்று யோசித்துவிட்டு..அக்கா மாமா சொல்லிச்சு நீ கேட்டா எதுவும் சொல்லகூடாதுன்னு...

எரும எப்படி சொல்லிருக்கான் பாரு சின்னபையன்கிட்ட மனதில் நினைத்து...அவன் தலையை தடவியபடி ஏன் மாமா அப்படி சொல்லிச்சு மோகன்..

நானும் கேட்டேன்கா... ஒய்ப் ஹஸ்பெண்டு கிட்ட கேட்டுக்கிட்டும் சொன்னாரு... நீயே கேட்டுக்கோ ...

சரிடா பெரிய மனுஷா அப்படியே நீ உங்க மாமாதான்.. அலுத்தபடி ரூமைவிட்டு வெளியே வந்தாள்...

புதன்கிழமை அன்று சிவா மதியமே கடையைவிட்டு தேனுவோட வீட்டுக்கு கிளம்பினான்.. என்னடா சிவா என்கூடவே வீட்டுக்கு வர, நைட்டுதான் எப்பவும் வருவே...

அக்கா இன்னிக்கு மாமா வந்திருப்பாரில்ல... அதான் சீக்கீரமா கிளம்பிறேன்... அப்போதுதான் தேனுவிற்கே தெரியும் இனியன் வருவது... இன்றோடு பார்த்து பத்துநாள் ஆயிற்று... அவளுக்கும் ஆசையே தன் இனியவனை பார்க்க...

வீட்டில் வர.. வெளியே செக்குரிட்டி கார்ட்ஸ் இருவரும் நின்றிருந்தார்கள்... மாமா வந்துட்டாரு போல... இருவரும் வீட்டிற்குள்ளே வர... சிவா உங்க மாமா பன்ற கூத்த பாரேன்... உலகத்தில இவன்மட்டும்தான் ராஜா மாதிரி வாழ்க்கை வாழுறான்...

ஹாலில், பாயின் மேல் இனியன் படுத்து தன் தலையை அத்தை மடியில் வைத்திருந்தான்... அவனின் காலை மோகன் அழுத்தினான்... இனியனோ தன் செல்லில் கேன்டி கிராஷ் கேம் விளையாட்டிக் கொண்டே பேசினான்..

டேய் இனியா கலெக்டர் ஆபிஸில என்ன வேலைடா செய்வ...

நானா அத்தே, பத்துமணிக்கு போவேனா, காலையில சாப்பிடது நல்லா தூக்கம் வருமா... தூங்கனா தொப்பை விழுதுடும்... அப்பறம் கடலூர்ல அய்யாவுக்கு நிறைய கேர்ள்ஸ் பேன் இருக்காங்க... சோ ஹாட்ஸ்டார்ல நீ பார்க்கிற சீரியல்ஸ் பார்ப்பேன்.. மதியம் நீ கொடுத்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவேன்... சாயந்திரம் ஆயிடுமா வீட்டுக்கு போயிடுவேன்..

போடா பொய் சொல்லுற...

பின்ன.. என்ன கேள்வி கேட்கிற அத்தே... அந்த காலத்தில சின்ன சின்ன ராஜாங்க தன் இடத்தை பார்த்துப்பாங்க இல்ல... அந்த மாதிரி கடலூர் மாவட்டமே நம்ம கன்ட்ரோல்ல இருக்கும்... எல்லா துறையும் நான் பார்க்கனும்.. டைமே இருக்காது, லீவே இல்ல உன் மருமகனுக்கு... நீ நான் டிவியில வரதை பார்க்கிறதில்லையா அத்தே...

பார்ப்பேன்டா... அழகாயிருப்ப தெரியுமா..ராஜா மாதிரி இருக்க திருஷ்டி எடுத்தாள்...

என் ஜிங்கிலி வந்துட்டா போலிருக்கே... மாமாவுக்காக வடை செய்யற..

டேய் இனியா , அத்தே உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் நீ சொல்லுவியா...

கேளு அத்தே... அதற்குள் சிவாவும் மாமனின் காலை பிடிக்க..

டேய் சிவா என்னடா இது... மோகன்தான் சின்னபிள்ளை கேட்க மாட்றான், போடா என்னை இப்படி டீரிட் பண்ணாதீங்க... என் தேனுக்கு பொறாமை வந்திடும்... ஹா..ஹா எல்லோரும் சிரிக்க..

இனியா உனக்கும் தேனுக்கும் என்னடா சண்டை, நீ போனதிலிருந்து இப்படிதான் இருக்கா..

சொன்னா மனசு கஷ்டப்படும் பரவாயில்லையா டார்லிங்...

பரவாயில்ல நீ சொல்லு... அய்யோ இவன் என்ன உளர போறானோ என்று தேனு வெளியே வர..

எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா... அன்னிக்கு நைட்டு, என் பொண்டாட்டி கேட்கிறா... உனக்கு நான் முக்கியமா இல்ல உன் டார்லிங் முக்கியமா கேட்கிறா... நமக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே இனிமே இந்த கூட்டுக் குடும்பமே வேணா சொல்லுறா...

அப்படியாடா சொன்னா...

ஆமா அத்தே... டாலியா இல்ல டார்லிங்கா யோசிச்சேன்... அப்பறம் முடிவெடுத்தேன்... தன் அத்தையின் கண்ணத்தை கிள்ளி... எங்கம்மாவாக என் அத்தே தான் முக்கியம் சொல்லிட்டேன்... அதான் சண்ட... உன் பொண்ணுன்னு பார்க்கிறேன் இல்லன்னா இவள கட்டியே இருக்க மாட்டேன்...

இவ எனக்கு செட்டாக மாட்டா போல, நீ எனக்கு வேற இடத்தில பொண்ணு பாரு அத்தே...

ஏன்டா இனியா பாண்டியண்ணா பொண்ணு ரேவதி ஓகே வா..

அவளா வேணா அத்தே... உறவுல கட்டிக்கினா குழந்தை புத்திசாலியா இருக்காதாம்..தூரமா பாரு... ம்ம் அதாவது இந்தபக்கமா கேரளா பொண்ணா, இல்ல அந்தபக்கமா தெலுங்கு பொண்ணா பாரு அத்தே.. எவ்வளவு நாளா இந்த வடையே சாப்பிடறது.. அப்பொதுதான் வடை எடுத்து வந்து வைத்தாள் தேனு...அப்படியே குடிக்க தண்ணி எடுத்து வாக்கா சிவா சொல்ல..

ஒரு புட்டு, ஆப்பம் இல்ல பெசரட்டு , போளின்னு ட்ரை பண்ணலாமில்ல...

ஹய் ஜாலி...ஆப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா மோகன் எடுத்து சொல்ல... அப்படியாடா என் செல்லக்குட்டி... அத்தே கேரளா பொண்ணா பாரு...

பெரிய ஜக்கிலிருந்த தண்ணியை இனியன் மேலே ஊற்றினாள்... அய்யோ கால் தவறி தெரியாம ஊத்திடுச்சு சொல்லி தேனு நிற்க... தன் முகத்திலிருந்து வயிறு வரை முழுவதும் நனைந்திருந்தான் இனியன்...

இனியன் கோவமாக முறைக்கிறான் என்று நால்வரும் அறிந்து தன் ரூமிற்குள் ஓடினார்கள்...

முகத்திலிருக்கும் தண்ணீரை வழித்துவிட்டு, மாட்டுனடி எங்கிட்ட... அவள் ருமிற்குள் சென்றான் அப்போதும் அவன் கண்களை பார்க்காமல் தலை குனிந்தபடியே நின்றாள்... இன்னிக்கு வேற அத்தே பழையதை கிளறி விட்டாங்களா மாமா மூட் ஆயிட்டேன்

அவள் கையில் கவரை வைத்தான்... அதை பார்த்து தேனு கண்கள் விரிய... என்னடி அப்படி பார்க்கிற ஸ்ட்ரா பெர்ரி சாக்லெட்டா கேட்வ தானே உன் ஞாபகமா பத்திரமா வச்சிருக்கேன். எதையும் வேஸ்ட் பண்ணக்கூடாதில்ல.. அதான் இப்போ யூஸ் பண்ண போறேன்... எத்தனை நாளுடி கவுந்தடிச்சு படுக்கிறது... தன் இருகைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்து அவளை நெருங்கி வர இனியனின் பி.ஏ.விடமிருந்து போன் வந்தது...

போனை ஆன் செய்து பேசியே படியே தன் சட்டையை மாற்றி அவசரமாக கிளம்பினான்...

----சிக்க வைக்கிறான்
 
Last edited by a moderator:
அல்ம்பு புடிச்சவன்டாஇனியா
தேனு ரொம்ப கொடுமை
செய்ற ம்மா நீ
????
 
உன்னில் சிக்க வைக்கிற-31

காலையில் குளித்து ரெடியாகி சாப்பிட டைனிங் டெபிளில் உட்கார்ந்தான்.. இவனுடைய பக்கத்தில் மோகனும், எதிர்பக்கம் சிவாவும் அமர்ந்தார்கள்... அப்போழுது

மாப்பிள்ள எப்படியிருக்கீங்க, இனியனின் உறவுமுறையில் மாமா, அவரின் மகளுடன் வந்தார்..

வாங்க பாண்டி மாமா, இனியனும், வாங்க அண்ணா என்று ரேணும் அழைத்தார்கள்..

எப்படியிருக்கீங்க மாமா.. வீட்டில எல்லோரும் நல்லாயிருக்காங்களா..

அவங்களுக்கென்ன மாப்பிள்ள, நல்லாயிருக்காங்க... இதோ என் மூத்த பொண்ணு ரேவதி, காலேஜ்ஜீ படிக்குது... ஏதோ பெரிய படிப்பாம்...

ஹாய் அத்தான் என்று ரேவதி கையை கொடுக்க...

ஹாய்... என்றான் இனியன்... மார்டன் உடையான டீஷர்ட் மற்றும் த்ரீ பை போர்த் பேண்ட் போட்டிருந்தாள் ரேவதி..

இவங்களெல்லாம் யாரு மாமா.. இதுவரை நாங்க பார்த்ததேயில்ல மோகன் வினவ..

நம்ம சொந்தங்கள் தான்டா... சிவாவை பார்த்து சிரித்தான் இனியன்...

மாப்பிள்ள உனக்காக என் பொண்ணு நிறைய சமைச்சி எடுத்துட்டு வந்திருக்கா... நீங்க முதல்ல இதை சாப்பிடுங்க என்று கையில் வைத்திருந்த பெரிய கேரியரை எடுத்து டெபிளில் வைத்தார்..

ரேவதி நீயாம்மா சமைச்ச வெரி குட் இனியன் கவுன்டர் கொடுக்க... ஹி..ஹி ன்னு இளித்தாள்..

பாருங்க மாப்பிள்ள, இது மீன் வறுவல், இது சிக்கன் 65, இது..

தெரியும் மாமா மட்டன் ப்ரை.. கரெக்டா..

அய்யோ நீங்க கலெக்டர் உங்களுக்கு எல்லாமே தெரியும் மாப்பிள்ள..

தாத்தா எனக்குகூட தெரியும் இது சிக்கன் குழம்பு கரெக்டா என்றான் மோகன்...

பாண்டி மோகன் பேசுவதை கேட்டு அசடு வழிந்தபடி ஆமாம் தம்பி என்றார்.

ஏய் புள்ள ரேவதி அத்தானுக்கு வை, ரேணு நீ கொஞ்சம் நகரு என் பொண்ணு பரிமாறுவா..

ம்ம்..சரியண்ணா, நான் உங்களக்கு காபி எடுத்துட்டு வரேன் என்றார் ரேணு.. பாண்டி சோபாவில் அமர, இங்கு ரேவதி ஒவ்வொன்றாக எடுத்து வைத்தாள்.. இதையெல்லாம் கிச்சனுக்குள் இருந்து அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் இந்த வீட்டின் மகாராணி தேன்மொழியாள்..

என்னம்மா படிக்கிற,

பி.ஏ. இங்கிலீஷ் அத்தான், தேர்டு இயர் படிக்கிறேன்.. அவளிடம் பேசியபடி அவனுக்கு வைத்த உணவை எடுத்து மோகனுக்கும், சிவாவுக்கு வைத்தான்... நீ போய் அத்தானுக்கு காபி வாங்கிட்டு வா ரேவதி... அவளை கிச்சனுக்கு அனுப்பினான்..

இனியன் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தான் சிவா... எங்க மாமா, மாமாதான்.. இதுக்குதான் அக்கா மாமாவேதான் வேணும் தவமிருந்தாரோ..

பிறகு உள்ளே வந்த மோகன், அக்கா மீனும், சிக்கன் குழம்பும் சூப்பரா இருந்துச்சு... ஆனா இந்த மாமா போயும் போயும் உன் உப்பில்லாத சாம்பாரும், இட்லியும் தான் சாப்பிட்டிச்சு... வேற எதையும் சாப்பிடல மாமா மிஸ் பண்ணுடுச்சு...

இதை கேட்டவுடனே அவள் மனம் சிறகில்லாமல் பறத்தது... ரொம்ப நாள் கழித்து மனம் முழுக்க ஆனந்தம்... தன் கீழ் உதட்டை கடித்தபடி மெதுவாக சொன்னாள் மாமா என்று...

நான்கு நாளில், கடலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றான் இனியன் ஐ.ஏ.எஸ்... முதல் நாளே கலெக்டரிடம் வந்த ஜோடிக்கு திருமணம் செய்துவைத்தான்... இருவரும் வேறு ஜாதி பிரிவினர்... தங்கள் பாதுகாப்புக்காக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்..

பிறகு, புதிய கலெக்டர் என்பதால் அந்த மாவட்ட வருவாய்துறை முதல் காவல் துறை முதற்கொண்டு மீட்டிங் போட்டான்... அவனுக்கு பங்களா, செக்யூரிட்டிக்கு போலீஸ் மூனுபேர், இரண்டு கார்ட்ஸ் இருந்தார்கள்...

அடுத்த வாரம் ஞாயிறு அன்று வரவில்லை, புயல் அடிக்கடி வரும் கடற் சார்ந்த பகுதி கடலூர் என்பதால், இந்த வருடம் புயல் வருவதற்கு முன்னேற்பாடாக தொடர்ந்து மூன்று நாளாக மீட்டிங் நடைபெற்றது. அதனால் இனியன் வரவில்லை..

மோகனிடம் கேட்டாள் தேனு... மாமா ஏன்டா இந்த வாரம் வரல...

அதுவாக்கா...ம்ம் என்று யோசித்துவிட்டு..அக்கா மாமா சொல்லிச்சு நீ கேட்டா எதுவும் சொல்லகூடாதுன்னு...

எரும எப்படி சொல்லிருக்கான் பாரு சின்னபையன்கிட்ட மனதில் நினைத்து...அவன் தலையை தடவியபடி ஏன் மாமா அப்படி சொல்லிச்சு மோகன்..

நானும் கேட்டேன்கா... ஒய்ப் ஹஸ்பெண்டு கிட்ட கேட்டுக்கிட்டும் சொன்னாரு... நீயே கேட்டுக்கோ ...

சரிடா பெரிய மனுஷா அப்படியே நீ உங்க மாமாதான்.. அலுத்தபடி ரூமைவிட்டு வெளியே வந்தாள்...

புதன்கிழமை அன்று சிவா மதியமே கடையைவிட்டு தேனுவோட வீட்டுக்கு கிளம்பினான்.. என்னடா சிவா என்கூடவே வீட்டுக்கு வர, நைட்டுதான் எப்பவும் வருவே...

அக்கா இன்னிக்கு மாமா வந்திருப்பாரில்ல... அதான் சீக்கீரமா கிளம்பிறேன்... அப்போதுதான் தேனுவிற்கே தெரியும் இனியன் வருவது... இன்றோடு பார்த்து பத்துநாள் ஆயிற்று... அவளுக்கும் ஆசையே தன் இனியவனை பார்க்க...

வீட்டில் வர.. வெளியே செக்குரிட்டி கார்ட்ஸ் இருவரும் நின்றிருந்தார்கள்... மாமா வந்துட்டாரு போல... இருவரும் வீட்டிற்குள்ளே வர... சிவா உங்க மாமா பன்ற கூத்த பாரேன்... உலகத்தில இவன்மட்டும்தான் ராஜா மாதிரி வாழ்க்கை வாழுறான்...

ஹாலில், பாயின் மேல் இனியன் படுத்து தன் தலையை அத்தை மடியில் வைத்திருந்தான்... அவனின் காலை மோகன் அழுத்தினான்... இனியனோ தன் செல்லில் கேன்டி கிராஷ் கேம் விளையாட்டிக் கொண்டே பேசினான்..

டேய் இனியா கலெக்டர் ஆபிஸில என்ன வேலைடா செய்வ...

நானா அத்தே, பத்துமணிக்கு போவேனா, காலையில சாப்பிடது நல்லா தூக்கம் வருமா... தூங்கனா தொப்பை விழுதுடும்... அப்பறம் கடலூர்ல அய்யாவுக்கு நிறைய கேர்ள்ஸ் பேன் இருக்காங்க... சோ ஹாட்ஸ்டார்ல நீ பார்க்கிற சீரியல்ஸ் பார்ப்பேன்.. மதியம் நீ கொடுத்த ஸ்நாக்ஸ் சாப்பிடுவேன்... சாயந்திரம் ஆயிடுமா வீட்டுக்கு போயிடுவேன்..

போடா பொய் சொல்லுற...

பின்ன.. என்ன கேள்வி கேட்கிற அத்தே... அந்த காலத்தில சின்ன சின்ன ராஜாங்க தன் இடத்தை பார்த்துப்பாங்க இல்ல... அந்த மாதிரி கடலூர் மாவட்டமே நம்ம கன்ட்ரோல்ல இருக்கும்... எல்லா துறையும் நான் பார்க்கனும்.. டைமே இருக்காது, லீவே இல்ல உன் மருமகனுக்கு... நீ நான் டிவியில வரதை பார்க்கிறதில்லையா அத்தே...

பார்ப்பேன்டா... அழகாயிருப்ப தெரியுமா..ராஜா மாதிரி இருக்க திருஷ்டி எடுத்தாள்...

என் ஜிங்கிலி வந்துட்டா போலிருக்கே... மாமாவுக்காக வடை செய்யற..

டேய் இனியா , அத்தே உன்கிட்ட ஒண்ணு கேட்பேன் நீ சொல்லுவியா...

கேளு அத்தே... அதற்குள் சிவாவும் மாமனின் காலை பிடிக்க..

டேய் சிவா என்னடா இது... மோகன்தான் சின்னபிள்ளை கேட்க மாட்றான், போடா என்னை இப்படி டீரிட் பண்ணாதீங்க... என் தேனுக்கு பொறாமை வந்திடும்... ஹா..ஹா எல்லோரும் சிரிக்க..

இனியா உனக்கும் தேனுக்கும் என்னடா சண்டை, நீ போனதிலிருந்து இப்படிதான் இருக்கா..

சொன்னா மனசு கஷ்டப்படும் பரவாயில்லையா டார்லிங்...

பரவாயில்ல நீ சொல்லு... அய்யோ இவன் என்ன உளர போறானோ என்று தேனு வெளியே வர..

எங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா... அன்னிக்கு நைட்டு, என் பொண்டாட்டி கேட்கிறா... உனக்கு நான் முக்கியமா இல்ல உன் டார்லிங் முக்கியமா கேட்கிறா... நமக்குதான் கல்யாணம் ஆயிடுச்சே இனிமே இந்த கூட்டுக் குடும்பமே வேணா சொல்லுறா...

அப்படியாடா சொன்னா...

ஆமா அத்தே... டாலியா இல்ல டார்லிங்கா யோசிச்சேன்... அப்பறம் முடிவெடுத்தேன்... தன் அத்தையின் கண்ணத்தை கிள்ளி... எங்கம்மாவாக என் அத்தே தான் முக்கியம் சொல்லிட்டேன்... அதான் சண்ட... உன் பொண்ணுன்னு பார்க்கிறேன் இல்லன்னா இவள கட்டியே இருக்க மாட்டேன்...

இவ எனக்கு செட்டாக மாட்டா போல, நீ எனக்கு வேற இடத்தில பொண்ணு பாரு அத்தே...

ஏன்டா இனியா பாண்டியண்ணா பொண்ணு ரேவதி ஓகே வா..

அவளா வேணா அத்தே... உறவுல கட்டிக்கினா குழந்தை புத்திசாலியா இருக்காதாம்..தூரமா பாரு... ம்ம் அதாவது இந்தபக்கமா கேரளா பொண்ணா, இல்ல அந்தபக்கமா தெலுங்கு பொண்ணா பாரு அத்தே.. எவ்வளவு நாளா இந்த வடையே சாப்பிடறது.. அப்பொதுதான் வடை எடுத்து வந்து வைத்தாள் தேனு...அப்படியே குடிக்க தண்ணி எடுத்து வாக்கா சிவா சொல்ல..

ஒரு புட்டு, ஆப்பம் இல்ல பெசரட்டு , போளின்னு ட்ரை பண்ணலாமில்ல...

ஹய் ஜாலி...ஆப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா மோகன் எடுத்து சொல்ல... அப்படியாடா என் செல்லக்குட்டி... அத்தே கேரளா பொண்ணா பாரு...

பெரிய ஜக்கிலிருந்த தண்ணியை இனியன் மேலே ஊற்றினாள்... அய்யோ கால் தவறி தெரியாம ஊத்திடுச்சு சொல்லி தேனு நிற்க... தன் முகத்திலிருந்து வயிறு வரை முழுவதும் நனைந்திருந்தான் இனியன்...

இனியன் கோவமாக முறைக்கிறான் என்று நால்வரும் அறிந்து தன் ரூமிற்குள் ஓடினார்கள்...

முகத்திலிருக்கும் தண்ணீரை வழித்துவிட்டு, மாட்டுனடி எங்கிட்ட... அவள் ருமிற்குள் சென்றான் அப்போதும் அவன் கண்களை பார்க்காமல் தலை குனிந்தபடியே நின்றாள்... இன்னிக்கு வேற அத்தே பழையதை கிளறி விட்டாங்களா மாமா மூட் ஆயிட்டேன்

அவள் கையில் கவரை வைத்தான்... அதை பார்த்து தேனு கண்கள் விரிய... என்னடி அப்படி பார்க்கிற ஸ்ட்ரா பெர்ரி சாக்லெட்டா கேட்வ தானே உன் ஞாபகமா பத்திரமா வச்சிருக்கேன். எதையும் வேஸ்ட் பண்ணக்கூடாதில்ல.. அதான் இப்போ யூஸ் பண்ண போறேன்... எத்தனை நாளுடி கவுந்தடிச்சு படுக்கிறது... தன் இருகைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்து அவளை நெருங்கி வர இனியனின் பி.ஏ.விடமிருந்து போன் வந்தது...

போனை ஆன் செய்து பேசியே படியே தன் சட்டையை மாற்றி அவசரமாக கிளம்பினான்...

----சிக்க வைக்கிறான்
Nirmala vandhachu ???
 
போடா இனியா, வர வர ரொம்ப தான் புடிக்குது உன்னை, தேனு சீக்கிரம் ஓகே ஆகு இல்லை கன்பார்ம் கேரளா பொண்ணு பார்க்க போரோம்!!!!
சிரிச்சுகிட்டே படிச்சேன் அவ்ளோ சூப்பர்
 
Top