Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இசை தூறலாய் என்னுள்ளே நீ - 2

Advertisement

Anu Chandran

Well-known member
Member
ஹாய் நட்பூக்களே...

இதோ “இசைத்தூறலாய் என்னுள்ளே நீ” இரண்டாம் பாகம்...
படிச்சிட்டு மறக்காமல் கருத்து சொல்லுங்க மக்களே...
324325

துளி 2

விழி மூடி யோசித்தால்
அங்கேயும் வந்தாய்
பெண்ணே பெண்ணே.....


அவர்கள் லிஸ்டில் இருந்தவர்கள் வாசலில் வரும்போதே அபியும் அகிலனும் சிக்னல் கொடுத்துவிட தூரத்தில் இருந்தே அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை கெத்தாய் அழைத்து ராகிங் என்ற பெயரில் தம் பேண்ட் குழுவிற்கு ஆட்கள் சேர்த்துக்கொண்டிருந்தது தேவ்வின் குழு...

முதலில் அக்குழுவிடம் சிக்கியது தரணி. அவன் ஒரு பீட் பாக்ஸர். அதாவது வாயினால் பல்வேறுபட்ட சப்தம் எழுப்பி இசையாய் மாற்றும் திறன் கொண்டவன்... குறிப்பாக ட்ரம்ஸ், மின்சாரத்தில் இயங்கும் கிட்டார், ட்ரம்பர்ட் போன்ற இசைக்கருவிகளின் ஒலியை வெவ்வேறு ஸ்ருதியில் இசைக்கப்பதில் அவன் வல்லவன்.

அவனை அழைத்த தேவ் அவனிடம்
“டேய் தம்பி சீனியர்சுக்கு குட்மார்னிங் சொல்லாமல் எங்க போறீங்க??”

“என்ன அண்ணா ரேகிங்கா??”

“இல்லைனு சொன்னா என்ன பண்ண போறீங்க ப்ரதர்...??”

“அப்போ எதுக்கு அண்ணா என்னை கூப்பிட்டீங்க???”

“டேய் கபி தம்பிக்கு வாய் ரொம்ப நீளுது.... நம்ம பங்குக்கும் கொஞ்சம் நீட்டி விட்டுடுவோமா???” என்று தேவ் கேட்க அவனது பட்டாளமும் ஆதரவு தெரிவுக்கும் முகமாய் முன்னே வந்தது...

அதை கண்டு பயந்த தரணி மனதினுள்
“வந்த முதல் நாளே சீனியர்ஸ் கிட்ட பிரச்சனைபட்டா பிறகு ஒரு உதவினா யாரும் வரமாட்டாங்கனு அண்ணா சொன்னாரு... இப்போ இவங்க சொல்லுறத செய்திட்டா எந்த பிரச்சனையும் வராது.. நமக்கு இவங்களோட நட்பு கிடைத்த மாதிரியும் இருக்கும்.... ஏதும் ஹெல்ப்னா இவங்ககிட்ட பயப்படாமல் கேட்கலாம்...” நினைத்துக்கொண்டு

“ஐயோ இல்லை அண்ணா... நான் கொஞ்சம் அப்படி தான்.. ஒரு வகையான ஆர்வக்கோளாறு.... அதான் அப்படி பேசிட்டேன்... மன்னிச்சிருங்க அண்ணா.. இப்போ நான் என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க... சூப்பரா பண்ணி உங்களை இம்ப்ரெஸ் பண்ணுறேன்...”

“ம்ம்.. அது.... சரி முதல்ல தமிழ்,இங்கிலீஸ், சிங்களம் இந்த மூன்று மொழியிலும் மூன்றுமுறை குட்மார்னிங் சொல்லு....”

“காலை வணக்கம், குட்மார்னிங், சுப உதேசனக் வேவா, காலை வணக்கம், குட்மார்னிங், சுப உதேசனக் வேவா, காலை வணக்கம், குட்மார்னிங், சுப உதேசனக் வேவா..”

“ம்ம்ம்... இப்போ அதை கொஞ்சம் இழுத்து மூன்று முறை சொல்லு...”

“கா..லை... வ..ண..க்..க..ம்.., கு..ட்... மார்..னி..ங்.., சு..ப..உ...தே..ச..ன..க்...வே..வா.. கா..லை... வ..ண..க்..க..ம்.., கு..ட்... மார்..னி..ங்.., சு..ப..உ...தே..ச..ன..க்...வே..வா.. கா..லை... வ..ண..க்..க..ம்.., கு..ட்... மார்..னி..ங்.., சு..ப..உ...தே..ச..ன..க்...வே..வா”

“ம்ம்... இப்போ இதுக்கு ஒரு டியூன் போட்டு பாட்டா பாடிக்காட்டு..”

“ஐயோ அண்ணா எனக்கு பாட்டெல்லாம் வராது..”

“அப்போ என்ன வரும்...??”

“வேணும்னா நான் டியூன் போடுறேன்... நீங்க பாடுங்க...”

“இங்க நான் உன்னை ராகிங் பண்ணுறேனா இல்லை நீ என்னை ராகிங் பண்ணுறியா??” என்று தேவ் சற்று கோபத்தொனியில் கேட்க அதில் பதறிய தரணி

“ஐயோ இல்லணா...எனக்கு சத்தியமா பாட வராது... நீங்க பாடாதீங்க... நான் ட்யூன் போட்டு காட்டுறேன்...” என்றவன் தன் திறமையை தேவ் மற்றும் அவனது குழுவினரின் முன் அரங்கேற்றினான்...

அவனது திறமையின் நெளிவு சுழிவுகளை நன்கு ஆராய்ந்த தேவ் அதில் திருப்தியுற்று
“ம்ம்.. நல்லா பீட் பாக்ஸ் பண்ணுற.... உன்னோட பெயர் என்ன???”

“தரணி..”

“ம்ம்.. தரணி நீ என்ன பண்ணுறனா லன்ச் ப்ரேக்கிற்கு மியூசிக் ரூமிற்கு வந்துடு..”

“எதுக்கு அண்ணா??”

“ஏன் சார் எதுக்குனு சொன்னா தான் வருவீங்களோ??”

“ஐயோ இல்லை அண்ணா... நான் வந்திர்றேன்..”

“சரி இப்போ நீ கிளம்பு..” என்று தேவ் கூறியதும் தரணி தப்பித்தோம் பிழைத்தோமென்று அங்கிருந்து நகன்றான்..

“தேவ் பய சூப்பரா பண்ணுறான்ல..??” என்ற கபிலன் கேட்க தேவ்வும்

“ஆமாண்டா... இன்னும் கொஞ்சம் ட்ரெயின் பண்ணா இவனை யாராலும் மிஞ்சிக்க முடியாது... இவன் இறங்கி வேலை செய்வான்னு நினைக்கிறேன்... பார்ப்போம்..” என்றவன் சுற்றும் முற்றும் பார்வையை செலுத்த அவர்களை திரும்பி திரும்பி பார்த்தபடி இரு பெண்கள் அந்த கும்பலை வேகமாக கடக்க முயல தேவ்விற்கோ அவர்களது திருட்டுத்தனம் வம்பிழுக்கும் ஆசையை தூண்டியது...

தன் நண்பர் பட்டாளத்திருந்து ஒருவனை அனுப்பி அவர்களை அழைத்து வரச்சொன்னான் தேவ்...

அந்த பெண்கள் இருவரும் அவனருகே வந்ததும் அவர்களை சந்தேகமாகப்பார்த்தபடியே தேவ் அவர்களிடம்

“எந்த இயர்???” என்று கேட்க அதில் ஒரு பெண்

“பஸ்ட் இயர்” என்று கூற தோளில் தொங்கிய தோள்பையை இறுகப்பற்றியபடியிருந்த மற்ற பெண்ணை பார்த்த தேவ் அவளிடம்

“நீயும் பஸ்ட் இயரா??” ஒன்று அப்பெண்ணை ஒருமையில் விழிக்க அதற்கும் முதல் பெண்ணே ஆம்மென்று பதிலளிக்க அதில் கடுப்பான தேவ்

“ஏன் மேடம் மௌனவிரதமா??” என்று கேட்க அந்த பொண்ணோ மலங்க மலங்க விழித்தபடி ஒரு வித பதட்டத்தோடு

“ப..பஸ்..பஸ்ட் இயர்...”

“ம்ம்...உன்னோட பெயர் என்ன??”

“ஸ்ரவ்யா..”

“உங்க பெயர் என்னம்மா??” என்று முதல் பெண்ணிடம் கேட்க

“திவ்யாஷினி...” என்று பதில் தந்தாள்..

“ஏம்மா திவ்யா.. ஒரு நல்லா குத்து சாங்கா பாடு..”

“ஐயோ அண்ணா எனக்கு பாட்டு பாடத்தெரியாது... நான் பாடுனா உங்க நிலைமை மோசமாகிடும்.. வேற ஏதாவது சொல்லுங்க செய்றேன்..”

“இது என்ன ஆளாளுக்கு வேற ஏதாவது சொல்லுங்க செய்றேன்னு ஒரே டயலோக்கை ரிப்பிட் மோர்ட்டில் சொல்லிட்டு இருக்கீங்க??? இங்க நாங்க உங்களை ராகிங் பண்ணுறோமா?? இல்லை நீங்க எங்களை ராகிங் பண்ணுறீங்களா??” என்று கோபமாய் கேட்க அதில் பயந்த திவ்யா

“ஐயோ இல்லண்ணா.. நிஜமாகவே எனக்கு பாட வராது..”

“சரி உன் ப்ரெண்டு பாடமாட்டாளா??”

“அவ... அவ..”

“இப்போ இரண்டு பேரும் கட்டாயம் ஏதாவது ஒரு பாட்டை பாடியே ஆகனும்.. இல்லைனா இங்கயிருந்து போக முடியாது..” என்று தேவ் உறுதியாய் கூற திவ்யாவோ அவர்களது விதியை நொந்தபடி தன் படு கேவலமான குரலில் ஒரு பாட்டை பாடினாள்... பாடினாள் என்று சொல்வதை விட பாடுவதாய் எண்ணி கத்தினாள்.. அதை கண்டு பதறிய தேவ்

“அம்மா தாயே உன்னை தெரியாமல் பாடச்சொல்லிட்டேன்... இனிமேல் எவனாவது வந்து காலில் விழுந்தாலும் கூட தயவு செய்து பாடிராத..அப்புறம் அவன் உயிருக்கு உத்தரவாதமில்லை... முதல்ல இடத்தை காலி பண்ணு.. உனக்கு ஒரு கும்பிடு உன் பாட்டுக்கு ஒரு கும்பிடு..” என்று தேவ் ஒரு கும்பிடு போட திவ்யாவோ

“இதுக்கு தான் நான் முதல்லயே சொன்னேன்.. நீங்க தான் கேட்கலை.. இப்போ நாங்க போகலாமா??”கேட்க

“முதல்ல இடத்தை காலி பண்ணுங்கமா.. இசைக்கு உன் உருவத்தில இப்படி ஒரு சோதனை வந்திருக்கக்கூடாது... “ என்றவன் அவர்கள் செல்ல அனுமதித்தான்...

அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்ததும் தேவ்வின் நண்பின் அக்ஷய்
“மச்சான் ஸ்ரவ்யா நல்லா பாடுவாடா..”

“யாருடா ஸ்ரவ்யா??”

“இப்போ பாடுச்சே.. அதோட கூட வந்த பொண்ணு..”

“உனக்கு எப்படி தெரியும்??”

“அவ கண்டியில தான்டா படிச்சா... அகில இலங்கை பாடசாலை மட்ட தமிழ் தின போட்டியில மூன்று வருஷம் இவளுக்கு தான் முதலிடம்.. இவ பாடுறானு தெரிஞ்சாலே மத்தவங்க பாடப்பயப்படுவாங்க. . அவ்வளவு சூப்பரா பாடுவா...”

“டேய் உண்மையா தான் சொல்லுறியா??”

“ஆமாண்டா... அவ வேற லெவல்ல பாடுவா..”

“அது சரி உனக்கு எப்படி இது தெரியும்..??”

“நானும் ஒரு வருஷம் அதுல கலந்துக்கிட்டேன்டா.. அப்போ தான் எனக்கு இந்த பொண்ணை பத்தி தெரியும்..”

“அப்போ அவ நம்ம பாண்ட் க்ரூப்பிற்கு கட்டாயம் தேவை.. நீ என்ன பண்ணுறனா அவளை லன்ச் ப்ரேக்கிற்கு மியூசிக் ரூமிற்கு வரச்சொல்லு...” என்று தேவ் கூற அக்ஷயும் அதன்படி செய்வதாக கூறிவிட்ட மற்றைய வேலையில் இறங்கினர்..

ப்ரேக்கிற்கு அக்ஷய் ஸ்ரவ்யாவை மியூசிக் ரூமிற்கு வரச்சொல்ல அவளும் தயங்கியபடி மிரண்ட பார்வையுடன் மியூசிக் ரூமிற்குள் நுழைந்தாள்... கையில் தன் மொபைலை இறுக்கி பிடித்தபடி தன் பார்வையை அங்கும் இங்கும் சுழற்ற அவள் வருவதை தூரத்திலிருந்தே கண்டுகொண்ட தேவ்
“ஓய்.. நாங்க இங்க இருக்கோம்..” என்று உரக்க சப்தமிட சத்தம் வந்த புறம் நடந்தாள் ஸ்ரவ்யா...
அவர்கள் அருகில் வந்ததும் மெதுவான குரலில்
“எதுக்கு... என்னை...வரச்சொன்னீங்க??”

“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்..” என்று தேவ் கூற

“எ...என்ன.. விஷயம்??”

“ஹேய்.. இப்போ எதுக்கு நீ இப்படி பயப்படுற?? எங்களை எல்லாம் பார்த்தா பேய் பிசாசு மாதிரியா இருக்கு??”

“அப்.. அப்படி.. இல்லை..”

“ம்ம்.. சரி நான் நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன்.... நீ நல்லா பாடுவனு கேள்விபட்டேன்.. ஒரு பாட்டு பாடிக்காட்டு..”

“இ..இல்.. இல்லை.. என..எனக்கு பாடத்தெரியாது...”

“நீ தானே ஸ்ரவ்யா பரமேஸ்வரன்..”

“ஆ..ஆமா..”

“அப்போ உனக்கு பாடத்தெரியும் பாடு...”

“இ..இல்லை.. என்னால பாடமுடியாது...”

“இங்க பாரு.... நாங்க உன்னோட சீனியர்ஸ்.. நாங்க சொல்லுறதை கேட்டு நடந்தா உனக்கு நல்லது... இப்போ நீ பாடப்போறியா இல்லையா??”

“நா..ன்.. என்னால.. பாடமுடியாது..” என்று தன் பதிலில் ஸ்ரவ்யா உறுதியாய் இருக்க அதில் கடுப்பான தேவ்

“உனக்கு எவ்வளவு திமிரு.. சீனியர்சிற்கு மரியாதை கொடுக்காமல் எதிர்த்தா பேசுற?? உன்னை..” என்றவன் சுற்றும் முற்றும் எதையோ தேடினான்.. அவனது செய்கையில் பயந்த ஸ்ரவ்யா

“நா...ன்.. எனக்கு..” என்றபடி மூர்ச்சையாகிவிட அதை கண்டு தேவ்வின் நண்பர் பட்டாளம் சப்தமிட்டனர்..

அந்த சத்தத்தில் திரும்பி ஸ்ரவ்யாவை பார்த்தவன் விரைந்து சென்று அவளை தூக்கிக்கொண்டு சிக் ரூமிற்கு சென்றான்..
அங்கு மருத்துவ உதவிக்காக இருந்தவரின் உதவியுடன் ஸ்ரவ்யாவின் மயக்கத்தை தெளிவித்தான் தேவ்..
கண்விழித்தவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க அதை வாங்கி குடித்து சற்று திடம் பெற்றதும் எழுந்து அமர்ந்த ஸ்ரவ்யா சுற்றும் முற்றும் பார்க்க தேவ்வோ

“ஓய் பேபி இப்போ எப்படி இருக்கு??”

“நா..நான் எப்படி இங்க??”

“நீ பேசிட்டு இருக்கும் போதே மயங்கிட்ட.. அதான் உன்னை சிக்ரூமிற்கு கூட்டிட்டு வந்தேன்....”

“நான்.. சாரி..”

“ஹேய் கூல் பேபி.. இது என்ன சின்ன பபா(குழந்தை) மாதிரி பயப்படுற??? இனிமேல் உன்னை பாட்டு பாடச்சொல்லமாட்டேன் போதுமா???”

“ம்.. தேங்க்ஸ்..”

“ஓகே நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளசிற்கு கிளம்பு... உன் துணைக்கு உன்னோட ப்ரெண்டை வர சொல்லுறேன்.. டேக் கெயார்..” என்றவன் அவளது நண்பியை அழைப்பித்து அவளை ஸ்ரவ்யாவின் துணைக்கு நிறுத்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தான்...

மறுநாள் லன்ச் ப்ரேக்கிற்கு பிறகான வகுப்புக்கள் ரத்து செய்யப்பட தேவ்வும் அவனது குழுவினரும் மியூசிக் ரூமிற்கு படையெடுத்தனர். எப்போதும் போல் புதுப்புது இசைகளை இசைக்கருவிகளின் துணையோடு சிருஷ்டிப்பதில் அக்குழு மும்முரமாயிருக்க அங்கே வந்தாள் ஸ்ரவ்யா...

அவளை முதலில் கண்ட கபிலன் தேவ்விடம் கண்களால் ஜாடை காட்ட அவளை திரும்பி பார்த்தான் தேவ்..
“ஹேய் சூட்டி..என்ன இந்த பக்கம்??” என்று தன் கையில் வீற்றிருந்த கிட்டாரின் ஒரு தந்தியை மீட்டியபடி அவள் முகம்பார்த்து தேவ் கேட்க அவளோ ஒரு தடுமாற்றத்துடன் தன் கைகளை பிசைந்தபடி

“நா..நான்..”

“சூட்டி.. இப்போ யாரை பார்த்து நீ இப்படி பயப்படுற?? நான் என்ன அவ்வளவு பயங்கரமாகவா இருக்கேன்..??” என்று தேவ் அவளை சகஜமாக்க முயல கபிலனும்

“இல்ல மச்சி.. சூட்டி நம்ம அபியை பார்த்து தான் பயந்து போயிருக்கு..”தன் பங்கிற்கு அபியை பகடையாய் எண்ணி உருட்ட அதில் கொதித்தெழுந்த அபி

“சிவனேனு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்க என்னை பார்த்து ஏன்டா அந்த பொண்ணு பயப்படனும்?? ஏன்டா எதுலயும் ஒரு நியாய தர்மம் வேணாமாடா??” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு இதோ அழுதுவிடுவேன் என்ற ரீதியில் அபி கூற ஸ்ரவ்யாவோ அவனது பாவனையில் சிரித்துவிட்டாள்..

அவளது குழந்தைத்தனம் ததும்பும் சிரிப்பில் மகிழ்ந்த நண்பர்கள் அவளை அங்கிருந்த இருக்கையில் அமரச்சொல்ல அவளும் அமர்ந்துக்கொண்டாள்..
இப்போது எவ்வித தடுமாற்றமோ தயக்கமோமின்றி தேவ்வுடன் பேசத்தொடங்கினாள் ஸ்ரவ்யா...

“சாரி நீங்க அப்படி கேட்டதும் பயத்துல மயங்கி விழுந்துட்டேன்...”

“பரவாயில்லை விடு... நானும் உன்னை அப்படி மிரட்டியிருக்கக்கூடாது.. ஆனால் நீ எதுக்கு பாடமாட்டேங்குற?? நீ நல்லா பாடுவனு அக்ஷய் சொன்னானே..”

“அது... அது... ப்ளீஸ் அது வேணாமே..”

“பரவாயில்லை.. உனக்கு விருப்பமில்லைனா விடு சூட்டி.. ஆமா உன்னோட பெயர் என்ன??”

“ஸ்ரவ்யா...”

“ம்ஹூம்... அது சரி வராது... நான் உன்னை சூட்டினே கூப்பிடுறேன்... அது சரி லெக்சர்ஸ் இல்லையா??”

“இருக்கு..”

“வந்து ரெண்டாவது நாளே கிளாஸ் பங்க் பண்ணுறியா??”

“இல்லை.. இப்போ மினி ப்ரேக்...அதான்..”

“சரி என்ன விஷயமா என்னை பார்க்க வந்த ???”

“என்னையும் உங்க டீமில சேர்த்துக்கிறீங்களா??”

“நீ தான் பாடமாட்டேனு சொல்லிட்டியே..”

“நான் பியானோ, கீபோர் இரண்டும் வாசிப்பேன்..”

“பார்டா..”

“வெஸ்டன் மியூசிக் பைனல் கிரேட் வரைக்கும் முடிச்சிருக்கேன்... வேணும்னா இப்போ வாசிச்சி காட்டவா??” என்று ஒருவித ஆர்வத்துடன் ஸ்ரவ்யா தேவ்விடம் கேட்க அவனோ தன் நண்பர்களிடம் என்ன செய்வதென்று கண் ஜாடையால் கேட்க அவர்களும் சம்மதம் சொல்லும் முகமாய் தலையாட்டினர்.. அவர்களது சம்மதத்தை பெற்றுக்கொண்டவன் ஸ்ரவ்யாவிடம்

“சரி வாசிச்சி காட்டு..” என்று கூற விரைந்து தன் இருக்கையில் இருந்து எழுந்த ஸ்ரவ்யா பியானோ இருந்த இடம் நோக்கி நகர்ந்தாள்.

பியானோ முன் அமர்ந்தவள் தன் கைகளிரண்டையும் ஒருமுறை ஒன்றோடொன்று தேய்த்துக்கொண்டு பியோனோவை தன் விரல்களால் இசைக்கத்தொடங்கினாள்...

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டில் குடி வைக்கலாமா??
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா??

நீரும் செம்புல சேறும்
கலந்தது போலே கலந்தவர் நாம்...

முன்பே வா என் அன்பே வா
ஊடே வா உயிரே வா...
முன்பே வா என் அன்பே வா
பூப்பூவாய் பூப்போம் வா...
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயா நெஞ்சம் சொன்னதே....

என்று இப்பாடலை ஸ்ரவ்யா மீட்டி முடிக்க தேவ்வும் அவனது நண்பர்களும் எழுந்து நின்று கைதட்டினர்..
அதை கண்டவளுக்கு எதையோ சாதித்துவிட்ட மகிழ்ச்சி..
அவளருகே வந்த தேவ் அவள் கையை குலுக்கி

“சூட்டி... சான்சே இல்ல போ...ப்பா.. என்னவொரு பீல்... அதை வார்த்தையால சொல்லமுடியாது.. ஒரு பாட்டை ரசித்து வாசித்தால் தான் அதன் உணர்வுகள் கேட்குறவங்களை தாக்கும்.. அப்படி தான் இருந்தது நீ வாசிச்ச போதும்.... சோ ரொமேன்டிக்... இதுலயே இந்த பாட்டை நீ எவ்வளவு ரசிச்சிருக்கனு எங்களுக்கு புரிந்தது.. சூப்பர் சூட்டி...” என்று தேவ் அவளை பாராட்ட அதற்கு நன்றி கூறியவள்

“என்னை உங்க டீமில் சேர்த்துப்பீங்களா??” என்று ஒருவித சந்தேகத்துடன் கேட்க முபாரக்கோ

“இப்படி பசிந்தா வாசுச்சு எங்களை மெர்சுலாக்குன சுட்டி உன்னை மிஸ் பண்ணுவோமா சூட்டி?? டேய் தேவ், கபிலா இனிமேல் சூட்டியும் நம் டீமில் ஒரு மெம்பர் ஓகேதான??” என்று கேட்க அனைவரும் ஒட்டுமொத்தமாய் முபாரக்கின் முடிவை ஏற்றனர்..

அப்போது தேவ் அங்கிருந்த அலுமாரியருகே சென்று அதனுள் இருந்து ஒரு பச்சை நிற பேண்டை எடுத்து வந்து அதை ஸ்ரவ்யாவின் முன் நீட்டி

“சூட்டி இது நம்ம க்ரூப்புக்கான பாண்ட்... இதை கையில போட்டுக்கோ..”என்று கூற ஸ்ரவ்யாவோ அவன் முன் தன் கையை நீட்டி அவனையே கட்டிவிடச்சொன்னாள்...

தேவ்வும் சிரித்தபடியே பாண்டை அணிவித்தவன்
“சரி சூட்டி.. இனி தினமும் ஈவ்வினிங் லெக்சர்ஸ் முடிந்ததும் ப்ராக்டிஸ் வந்திரு.. சரியா??” என்று தேவ் கேட்க அவளும் சரியென சம்மதிக்க அப்போது அபி

“டேய் ட்ரீட் எங்கனு கேளுடா..??” என்று முதல் ஆளாய் கேட்க அவனை முறைத்த அகிலன்

“இத்தன நேரம் வாய்திறக்காமல் இருந்தவன் இப்போ எப்படி பேசுறான் என்டு பாரேன்..”

“டேய் அகிலா.. இது என்னோட டிப்பார்ட்மண்ட்.. நான் தான் பேசனும்..” என்று அபி கூற மற்றவர்கள் அனைவரும் தலையில் அடித்துக்கொண்டனர்.. அவர்களது செயலில் குழம்பிய ஸ்ரவ்யா அபியை பார்க்க

“அது ஒண்ணுமில்லை சூட்டி.. குரூப்பில் புதுசா நீ வந்து ஜாயின் பண்ணியிருக்கல.. அதுக்கு நீ எங்களுக்கு ட்ரீட் தரனும்.. அதை தான் சொல்லச்சொன்னேன்.. அதுக்கு தான் இவனுங்க தலையில அடிச்சிக்கிறானுங்க...” என்று அபி கூற

“ட்ரீட் தானே குடுத்துட்டா போச்சு..” என்று ஸ்ரவ்யாவும் ஒப்புக்கொள்ள தேவ்வோ வேண்டாம் என்று மறுத்தான்..ஆனால் ஸ்ரவ்யா பிடிவாதமாக

“ஈவினிங் லெக்சர்ஸ் முடிந்ததும் எல்லாரும் டீ அவெனியு போறோம்.. இன்னைக்கு என்னோட ட்ரீட்... எல்லாரும் ரெடியா இருங்க..” என்று அவர்களை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தாள் ஸ்ரவ்யா..

இவ்வாறு தன்னவளின் அறிமுகநாளை எண்ணி சயனித்திருந்தவனை கலைத்தது “ஹாய் ப்ரோ” என்ற ஒரு ஆணின் குரல்....

 
Top