ஹாய் பிரியதர்ஷினி
எப்போதும் போல உங்கள் கதையில் கட்டி போட்டு விட்டீர்கள். கதையை விட்டு நகர முடியவில்லை. வாழி தன்விதா பெயரே அழகு. அதை விட கதை அவ்வ்ளவு விறுவிறுப்பு காதல் குறையாமல் இழுத்து சென்றது. உங்கள் கதை கதிர் நிலவு என் ரோஜா நீயா அந்த கதையின் மாந்தர்களை விட்டு பிரியும் போது ஒரு வலி அப்படி...
பிரியதர்ஷினி,
என்னப்பா கதை இது? இப்படிலாம் கதை எழுதுனா என்ன பண்றது?
சத்தியமா முடியலை.. நீங்களும் எங்கப்பா இருக்கீங்க?
என்னால கதையை விட்டுட்டு எந்திரிக்கவே முடியல. நான் வீட்ல வேலை எல்லாம் பாக்க வேண்டாமா? இப்படி காதலை கொட்டி கொட்டி குடுக்க முடியுமா? வார்த்தையில்? ஆனா கொண்டு வந்திருக்கீங்களே...
கதிர் - நிலவு
மனதை வருடிய கதை... சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரே குடும்பத்து ஆட்களை வைத்து. எந்த சலிப்பும் தட்டாமல் கதை நகர்வு. இதில் கதிர்குமரனின் பண்பு அவ்ளோ இயல்பாக இருந்தது. எந்த ஆர்ப்பாட்டம் இன்றி அழகான காதல்.
முதலில் நீங்கள் சொன்ன உறவுகளை எப்படி நினைவில் வைத்து கொள்ள என்று யோசித்தேன்...
கதை ஆசிரியரே,
யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் கோடி கோடி வாழ்த்துக்கள். இப்படி ஒரு கதையை தந்ததற்கு நன்றிகள். எப்படியான கதைக்களம். ஒட்டு மொத்தமாக பார்த்தால் கதை என்ற ஒன்று இருந்ததா? யோசிக்க வைக்கிறது. ஆனால் ஒரு ஒரு வார்த்தையும் என்னை கட்டி வைத்தது என்பது தான் உண்மை. சாதாரணமாக வாசிக்க...