“பற்றுக்கோலாய்
உன் ஒற்றைவிரலே
கதியென்று
பத்துமாதம் சுமந்தவளை
புறந்தள்ளி
தோள் மீது
தூக்கிவளர்த்தவரையும்
தள்ளிநிறுத்தி
நின் கரம் பற்றி
இல்லறம் துவங்க
அம்மி மிதித்து
மெட்டி பூட்டிய
பொற்பாதத்தோடு
பிறந்த இடம் விட்டு
புது அத்தியாயம்
ஒன்றை தொடங்கிட
புகுந்த வீட்டின்
தலைவாசலில்
என்னடியை...