EPILOGUE OF KUK:
சில்லென காற்று அனுமதியின்றி அந்த மரக்கதவுகளை கடந்து செல்ல, அமைதியான அந்த சூழலில் அரியவகை பறவையாய் மாறிப்போன சிட்டுக்குருவி தன் கீச்சு கீச்சு குரலில் திருப்பள்ளியெழுச்சி பாட, கலையப்பட்ட தூக்கத்தில் மெல்ல கண்திறந்தாள் மைதிலி.
ஜெய்பூர் நகரின் அருகே காட்டிக்குள் ப்ரத்யேகமாய் கட்டப்பட்டிருந்தது அந்த வனகுடில். இயந்திரகதியாய் சென்றுதுக்கொண்டிருந்த மைதிலி, அவள் வாழ்வில் ஒரு மாற்றம் தேடி வந்த அதே இடம். எங்கு தன்னுடைய ஸ்ரீராமை முதன்முதலாய் பார்த்தாலோ, எந்த குடிலில் யாரென்றே தெரியாத ஒருவனுடன் தன் வாழ்வை ஒப்படைக்க முடிவு செய்தாலோ, எந்த குடில் தன் வாழ்வுக்கு புது அர்த்தம் கொடுத்ததோ, அதே இடம்.
ராமுடன் அவள் முன்பு தங்கிஇருந்த அதே வனக்குடில். ராமை குழந்தையென அவள் பார்த்துக்கொண்ட அதே இடத்தில், ஆறு மாதத்திற்கு பின்பு அவனோடு அங்கு ஒன்றாய் இருக்கிறாள். அளவற்ற காதலும், தெவிட்டாத அக்கறையும், சேயை காக்கும் தாயாய், தீரா அன்பும் முன்பு போல இப்போதும் இருந்தது.
முன்பு போலின்றி சிறு மாற்றமாய் மைதிலிக்கு தாயென மாறிப்போனான் ஸ்ரீராம். நாளுக்கு நாள் அவன்மீது காதல் கூடியதே தவிர குன்ற வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு மைதிலியின் உயிர் மூச்சாய் மாறிப்போனான் ஸ்ரீராம்.
ராமிற்கு சொல்லவே வேண்டாம். கனவில் மிதப்பதை போல இருந்தது அவனுக்கு. தான் விருப்பப்பட்ட பெண்ணே, தன் வாழ்வில் சரிப்பாதியாய் அமைந்திட பொக்கிஷமாய் பார்த்துக்கொண்டான் அவளை.
சென்னையிலும் மும்பையிலும் திருமண வரவேற்ப்பு முடிந்தவுடன் மைதிலிக்கு சொல்லாமல் இங்கு அழைத்து வந்துவிட்டான் ராம். இங்கு நடந்தது எல்லாம் ராம் நினைவில் இல்லை என்றாலும், மைதிலியும் கௌதமும் சொல்ல கேட்டு அங்கு மீண்டும் செல்ல ஆவல் பிறந்தது அவனுக்கு. ரிஷி நண்பனுக்கு சொந்தமான காட்டேஜ் என்பதால் இவர்கள் தங்கிருந்த அதே குடிலை எளிதாய் புக் செய்துவிட்டான் ராம்.
"இங்கதானே நீ என்னை பார்த்தேன்னு சொன்ன? இங்க இந்த வீட்டுல தொடங்குன நம்ம வாழ்கையோட, அடுத்த கட்டமும் இங்கயே தொடங்குனா நல்லா இருக்கும்ன்னு ஆசைப்பட்டேன்.. அதான் இங்கயே ஹனிமூன் கொண்டாட போறோம்..." என ராம் சொன்னபோது அவள் எப்படி உணர்ந்தாள் என்றே சொல்ல முடியவில்லை. மகழ்ச்சிக்கும் மீறிய ஒரு நிலை.
இங்க வந்து மூன்று நாட்கள் முழுதாய் கடந்து விட, அன்று காலை...! கண்களை பாதிக்கும் குறைவாய் திறந்தபோதும், முழுதாய் தெளியாத தூக்கத்திலும் தான் இருக்கும் இடமும், அதன் இதமும் அவளை ஆட்க்கொள்ள, சுகமாய் சோம்பல் முறித்தபடி, ராமின் முதுகில் தன் மூக்கை வைத்து தேய்த்துவிட்டு உறக்கத்தை தொடர்ந்தாள் அவள்.
அவள் தேய்த்ததில் அந்த இடம் குறுகுறுக்க, தன் தலையை தலையணையில் அழுத்தியபடி, தன் முதுகை மெத்தையாக்கி படுத்திருந்தவளை கீழே இறக்கப்பார்த்தான் ராம். அவன் எவ்வளவு அசைந்தும் அவள் அசையாது ராமின் மீது ஜம்பமாய் படுத்திருக்க, 'இது வேலைக்கு ஆகாது' என உணர்ந்தவன் கையை நீட்டி அருகில் கிடந்த தன் அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தான்.
நேரம் வெறும் பதினொன்றை காட்ட, கைக்கு எட்டிய இடத்தில் மொபைலை வைத்துவிட்டு, "மையுமா?? பேபி!!! எழுந்துக்கோ... சாப்பிட்டுட்டு தூங்கலாம்..." என ஆதூரமாய் சொன்னான் ராம்.
'ம்ம்ம்...' என சொன்னாலே தவிர அவள் நிலையில் ஒரு மாற்றமும் இல்லை.
"பேபி.. இவ்ளோ நேரம் சாப்டலன்னா உடம்பு என்ன ஆகும்? மையு குட் கேர்ல் தானே!!! எழுந்துக்கோ!!!" என ராம் கெஞ்சியதும் எதற்கும் பலன் இல்லை.
தன் உடலை ஒரு இன்ச் கூட அவனால் நகர்த்தவே முடியவில்லை. அவ்வளவு சட்டமாய் அவன் முதுகில் படுத்திருந்தாள் மைதிலி.
"அடியேய்.... முடியலடி என்னால... பஞ்சுமூட்டை மாறி இருப்பன்னு பார்த்தா பன்னிக்குட்டி மாறி இருக்க...." என அவன் சொன்னதும், அவன் தோள்பட்டையில் வலுவாய் கடித்தாள் மைதிலி.
"ஆஆஆ!!!" என அவன் கத்த, "நான் பன்னிகுட்டியாடா...?? சொல்லுடா..." என அவள் மேலும் அடிக்க, அவள் அசைந்த நொடியை தன் வசமாகி, அவளை கீழே சரித்து அவள் மீது படர்ந்தான் ராம்.
அடிக்கும் அவள் கைகளை தன் பிடிக்குள் கொண்டு வந்து, "இப்படி சொன்னாதானே செல்லக்குட்டி, நீ கீழ இறங்குவ? அதுக்காக தான்டா அப்படி சொன்னேன்... ஸ்பைசி ரசகுல்லா மாறி நீ இருக்க, கண்ணு இருக்க எவனாது உன்னை அப்படி சொல்ல முடியுமா?" என ஐஸ் வைக்க தொடங்கினான் ராம்.
"ஹும்ம்..." என அவள் சலித்துக்கொண்ட போதும், அவனது நெருக்கம் அவளை தடுமாற வைக்கவே, "தள்ளு, குளிச்சுட்டு சாப்டலாம்" என்றாள் எங்கோ பார்த்தபடி.
அவள் தடுமாற்றத்தை உணர்ந்தவனாய், அவள் மீது இன்னும் அழுத்தமாய் படர்ந்தவன், "கொஞ்ச நேரம் போட்டும்,, அதுவரை இப்படியே இரு.." என்றான், அவள் படும்ப்பாட்டை ரசித்தபடி.
குரலே எழும்பவில்லை அவளுக்கு.. "போல்....லா...ம் ராம்..." என அவள் சொல்ல, "இங்க ஒரு உம்ம்மா குடு, போலாம்.." என்றபடி தன் உதட்டை காட்டினான் ராம்.
"நானா? மாட்டேன் போ.." என அவள் மறுக்க, "குடுத்தா போலாம்..." என கறாராய் பேசினான் ராம்.
"ம்ஹும்.. ம்ஹும்... சரி நீயே குடுத்துக்கோ..." என பேரம் பேசினாள் மைதிலி.
"நீ குடுத்தா போலாம்.. நான் குடுத்தா நீ நைட் தான் குளிக்க போக முடியும், பரவலையா?" என கண்ணடித்து சிரித்தான் ராம்.
சில நிமிடங்கள் கெஞ்சியும் அவன் தன் பிடியில் இருந்து இறங்காமல் இருக்க, "சரி கண்ண மூடு.." என்றாள்.
"கண்ண மூடவா? எதுக்கு? நான் பாக்காத மிச்சம் ஏதாது....." என அவன் ஏதோ சொல்ல தொடங்க அவனை சொல்லவிடாமல், தன் இதழால் அவனிதலழை பூட்டிக்கொண்டாள் மைதிலி.
தொட்டுவிட்டு நகர அவள் நினைக்க, அவளை நகர விடாமல் அவழிதளுக்குள் புதைந்தான் ராம். மூச்சுக்கு வழிதேடி அவள் விலக, அவளை தூக்கிகொண்டு குளியறைக்குள் புகுந்தவன் நேரம் இரண்டை நெருங்கும்போதே, குளித்துமுடித்து அவளுடன் வெளியே வந்தான்.
உள்ளிருக்கும் வரை தெரியாத பசி, வெளியே வந்ததும் தெரிய, "செம்ம்மம்ம பசி ராம்.. உன்னாலதான் லேட்.. போ..." என கடிந்துக்கொண்டு உடைக்கூட மாற்றாது, சுற்றியிருந்த துவாலையோடு அடுக்களைக்குள் ஓடினாள் மைதிலி.
செல்லும் அவளை சிரிப்புடன் பின்தொடர்ந்தவன், "என்னால மட்டும்தான் லேட்டா...?" என கேட்க, அவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு அவன் கையில் ஒரு ஆப்பிள்ளை திணித்தாள் மைதிலி.
"எனக்கு இது வேணாம்.. அதுதான் வேணும்..." என மைதிலி கடித்துக்கொண்டிருந்த ஆப்பிள்ளை அவன் குறி வைக்க, "ஏய்ய்ய்ய்ய்ய்... போடா...." என சொல்லிவிட்டு அவன் கைகளில் சிக்காமல் பால்கனி போல இருந்த இடத்திற்கு அவள் ஓட, பின்னோடு சென்று இறுக்கமாய் அணைத்துக்கொண்டான் ராம்.
அணைத்தவாக்கில் அவன் நல்லப்பிள்ளையாய் நிற்க, அவன் நெஞ்சில் இருந்து முகம் நிமிர்த்திய மைதிலி, "எப்போ கிளம்பனும் ராம்?" என்றாள்.
"எங்க?" என ஏகத்துக்கும் அதிர்ந்தான் ராம்.
"இங்க இருந்து எப்போ கிளம்பனும்டா?"
"அதுவ்வ்வா...? எனக்கு ஒரு குட் நியூஸ் வந்ததும் கிளம்பிடுவோம்..." என அவன் சொல்ல "என்ன குட் நியூஸ்?" என்றாள் மைதிலி.
"நான் டாடி ஆக போறேன்னு தெரிஞ்சதும்...." என அவன் சிரிக்காமல் சொல்ல, "அதுவரைக்கும் இங்கயேவா?? போடா லூசு..." என்றாள் மைதிலி.
"ஏன்? இருக்க கூடாதா?" என ராம் கேட்க, "ராம்? வி ஆர் நாட் கிட்ஸ்... வி டூ ஹாவ் சம் ரெஸ்பான்சிபிலிட்டீஸ்..." என்றாள் மைதிலி, அவன் சொல்ல வருவது புரியாமல்.
"பேபி.... நம்ம மட்டும் பொறுப்பா இருந்தா பத்தாது... நம்மளை சுற்றி இருக்கவங்களும் பொறுப்பா இருக்கணும் இல்லையா??" என அவன் கேட்க, எதையோ மனதில் முடிவு செய்துவிட்டுதான் சொல்கிறான் என்பதை உணர்ந்த மைதிலி மௌனமாய் தலையாட்ட, தொடர்ந்தான் ராம்.
"உனக்கு மும்பைல இருக்க கம்பனிய கவனிக்கணும். எனக்கு சென்னைல இருக்க கம்பனிய கவனிக்கணும். அதோட சென்னைல புதுசா கட்டிக்கிட்டு இருக்க நம்ம ஹாஸ்பிடல், அது ரெடி ஆச்சுன்னா என்னால எங்கயும் நகர முடியாம போய்டும்..." என சொன்னான் ராம்.
"ம்ம்ம்? சோ??"
"சோ..... நான் சொல்றதை இம்ப்லிமென்ட் பண்ணிட்டா, எல்லாருக்குமே நல்லது. முக்கியமா நமக்கு நல்லது..." என்றான் ராம்.
"சரி... என்னன்னு சொல்லு" என அவள் சொன்னதும், தன் திட்டத்தை விளக்கினான் ராம்.
"நீ ஆறு மாசம் மும்பைல இரு... ஆறு மாசம் சென்னை வந்துடு..." என அவன் சொன்ன உடனே மறுத்து ஏதோ சொல்ல வந்த மைதிலியை, "குறுக்க பேசாத, குறுக்க பேசுன்னா கடிச்சு வச்சுடுவேன்..." என அடக்கினான்.
"நீ ஆறு மாசம் சென்னைல இருக்கபோ மும்பை கம்பனிய யாரு பார்த்துப்பாங்க? இல்லையா? அதனால, நம்ம சந்தோஷ்க்கு பொறுப்பு கொடுத்து சீட்ல உட்கார வை... நீ இல்லனாலும் முழு வேலையும் அவனே பாக்குற அளவு ட்ரைனிங் ஆகட்டும்... அதேமாறிதான் சென்னை கம்பனியும். ரிஷிகேஷ் சென்னைல இருக்க நம்ம கம்பனிய மேனேஜ் பண்ணட்டும். நீ ஆறு மாசம் இங்க, ஆறு மாசம் அங்கன்னு எல்லாம் சரியா நடக்குதான்னு மட்டும் செக் பண்ணிக்கோ... எப்புடி?"
ராம் சொல்வதை யோசித்து பார்த்த மைதிலிக்கும் இது சரி வரும் என்றே தோன்றியது. யாரிடமோ கைகட்டி வேலை செய்வதைக்காட்டிலும் நம்மிடமே இருந்தால், உறவும் பலப்படும், அவர்களுக்கு பொறுப்பும் கூடும் என எண்ணி அவனிடம் சம்மதமாய் தலையாட்டினாள் மைதிலி.
"எல்லாம் சரிதான்... நான் மும்பை போய்ட்டா, என்னை விட்டுட்டு நீ ஆறு மாசம் தனியா இருப்பியா?" என்றாள் மைதிலி.
"நோ வே... ஆறு நிமிஷம் கூட இருக்க முடியாது..." என திட்டமாக மறுத்தான் ராம். "நீ மும்பை போய்ட்டா நானும் உன் பின்னாடியே வந்துடுவேன்..." என்றான் சீரியஸ்சாய்.
"என்னோடவே வந்துட்டா? சென்னைல இருக்க ஹாஸ்பிடல்ல யாரு கவனிப்பா??" என்றாள் குழப்பமாய்.
"அதுக்கு தான் ஒரு அடிமையை சோறு போட்டு வளர்க்குறோமே!! அவன் பார்த்துப்பான்" என ராம் கூலாக சொல்ல, "கெளதம் அண்ணாவ சொல்றியா?" என்றாள் மைதிலி.
"அவனேதான்...! பத்தாததுக்கு நம்ம திவ்யா இருக்கா! அவ மேனேஜ்மென்ட் பார்த்துப்பா... ரொம்ப திறமையான பொண்ணு... உன்கூட இருக்கபோ ஏதாது எமெர்ஜென்சி கேஸ் வந்துச்சுன்னா, ப்ளைட் ஏறி ரெண்டே மணி நேரத்துல சென்னை போய்டலாம்.. சோ ஐ வில் பி ஆல்வேஸ் வித் யூ மை மையூ பேபி..." என சொல்லிவிட்டு அவள் நெற்றியில் இதழ் பதித்தான் ராம்.
"இதெல்லாம் வொர்க் அவுட் ஆகுமா ராம்?"
"வொய் நாட்? கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும்... நடக்காத விஷயம் ஏதும் நான் சொல்லலையேடா...." என்றான் ராம்.
"அப்போ ஓகே... நம்ம எல்லார்டையும் இதைபத்தி பேசிடுவோமா?" என அவள் ஆர்வமாய் கேட்க, "நேர்ல போய்ட்டு பேசுவோம் மையூ...." என்றான் ராம்.
"அப்போ சீக்கிரமா கிளம்புவோமா?" என அவள் கேட்டதும், "அது உன் வாய்ல தான் இருக்கு,,,," என்றான் ராம் விஷமமாய்.
"என் வாய்லயா?" என அவள் புரியாது விழிக்க, "ஆமா... நீ குட் நியூஸ் சொன்னதும் உடனே கிளம்பிடுவோம்..." என சொன்னபடி அவளை இறுக்கமாய் அணைக்க, அவன் சொன்னதும் புரிந்ததும், "டேய்ய்ய்ய்..... போடா...." என அவனை தள்ளிவிட்டுக்கொண்டு உள்ளே ஓடினாள் மைதிலி.
"எங்க ஓடுனாலும் என்கிட்டதானே வரணும்..." என சிரித்துக்கொண்டே அவள் பின்னே சென்றான் ஸ்ரீராம்.
***