தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 068 ன் மனம் வேண்டிநிற்கும் வரம் எனது பார்வையில். குழந்தைகள் நல மருத்துவர் வைசாலிக்கும் மருத்துவர் மாதவனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் பொழுது வைசாலியின் சிறு வயது தோழன் அரசன் மாதவனுடைய நண்பனாக கலந்துக் கொள்ள வரும் பொழுது பழைய நட்பை புதுப்பித்துக் கொள்கிறார்கள். அரசன் காவல்துறை அதிகாரியாக தனது நண்பனின் தம்பி மனைவியின் இறப்பு கொலையாக இருக்குமா என்று துப்பறியும் பொழுது நண்பனின் தம்பி ஆதியின் மனைவி மனோகரியின் மரணத்திற்கும் மருத்துவர் மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக கைது செய்யப்படுவதால் வைசாலி மாதவன் திருமணம் நின்றுவிடுகிறது. சில மருத்துவ மனைகளில் உடல் உறுப்புகளுக்காக செய்யும் முறைகேடுகள், மருத்துவர்களே முறைகேடுகள் செய்வதும் மனதை வருந்த வைக்கிறது. அரசன் வைசாலியை திருமணம் செய்து கொள்ள கேட்கின்றான். அரசனின் உறவுப் பெண் மீனாட்சியை அரசனுக்கு திருமணம் செய்து வைக்க மீனாட்சியின் குடும்பம் முயற்சி செய்கிறார்கள். அரசன் வைசாலியை திருமணம் செய்து கொண்டானா. மனோகரியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கிடைத்ததா என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார். வாழ்த்துகள்.