பெல்சி பிரபுவின் சலசலக்கும் சொந்தங்கள் எனது பார்வையில். பெல்சியின் முதல் கதை இது என்று சொல்லியிருக்கிறார். சகோதரர்கள் இருவரின் திருமணங்கள் பெரிய அத்தை மகள்களுடன் நடைபெறவிருக்கும் நிலையில் ஒரு காதல் திருமணத்தால் ஏற்படும் சண்டையில் அவர்களின் சிறிய அத்தை வீட்டினருடன் பிரிந்திருக்கும் அவர்களின் சிறிய அத்தை வீட்டினரை திருமணத்திற்கு அழைக்க செல்கிறார்கள். அந்த நேரத்தில் மூத்தவன் பீட்டரின் திருமணத்தில் இன்னொரு காதல் திருமணத்தால் தடை ஏற்படுகிறது. பிரிந்த குடும்பங்கள் திருமணத்தில் இணைய முடிந்ததா என்பதை சரளமாக எழுதியுள்ளார். முதல் கதையில் இது நல்ல முயற்சி. அடுத்த கதைகளில் இன்னும் இவரின் எழுத்து மெருகேரும்.