அத்தியாயம் – 12
“இத்தனை நாள் வாய்ல என்ன வச்சிருந்த கமலி... கடைசி நேரத்துல வந்திட்டு இப்படி சொல்ற??” என்று சிவகாமியே மகளை கோபித்துக்கொண்டார்.
ஆனால் கமலியோ எதற்கும் அசருவதாய் இல்லை.. வீட்டினில் விருந்தாட்கள் நாளைய திருமணத்திற்காக வந்திருந்தனர். ஒருசிலர் சிவகாமி பக்கத்து உறவுகள், இன்னும் கொஞ்சம் பேர் மகுடேஸ்வரன் பக்கத்து உறவுகள். மிக மிக நெருங்கிய ஆட்களுக்கு மட்டுமே அழைப்பு வைத்திருக்க, அனைவரும் முதல்நாள் தான் வந்திருந்தனர்.
வந்தவர்கள் ஆளாளுக்கு பல கேள்விகள் கேட்டாலும் முடிவில் அனைவருக்குமே இதில் சந்தோசமே.
“பரவாயில்ல சிவா.. நல்ல முடிவு.. நாளைக்கு பின்ன ஒட்டு உறவுன்னு வேணாமா..” என்றுதான் சொன்னார்கள்..
கமலி அத்தனை நேரம் நன்றாகவே இருந்தவள், ராணி வந்து “கமலி தூங்க போ.. நேரமாச்சு.. நாளைக்கு அப்போதான் பிரெஷா இருக்கும்..” என,
“இருக்கட்டும் சித்தி.. கொஞ்சம் பேசணும்..” என்றாள் சிவகாமியைப் பார்த்து.
வீடிளிருந்தவர்களில் ஒருசிலர் உறங்கச் சென்றிருக்க, மற்றவர்கள் ஆங்காங்கே அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டு இருக்க, சிவகாமியின் அருகே இருந்த சங்கிலிநாதனோ “என்ன கமலிம்மா... இப்போ என்ன??” என்று கேட்க,
“நாளைக்கு கல்யாணம் தானே தாத்தா...” என்றார் ஒருவித யோசனையோடு..
“ஆமா...”
“எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு தாத்தா...” என்று அவள் ஆரம்பிக்கும்போதே சிவகாமி “கமலி என்ன இது??!!!” என்று அதட்டினார்..
“இரு சிவா கமலி சொல்லட்டும்..” என்ற சங்கிலிநாதன், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதனை எதிர்பார்த்து இருந்தாரோ என்னவோ.
“நாளைக்கு நான் கோவிலுக்கு வரணும்னா.. என்னோட கல்யாண முறைகள் எல்லாமே அந்த வீட்ல, அதாவது எங்க வீட்ல நடக்கணும்.. அவர் வீட்ல இருந்து என்னை யார் கூப்பிட வந்தாலும் சரி, அங்க வந்து தான் என்னை கூப்பிட்டு போகனும்.. அதேபோல, கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குற எல்லா சடங்கும் கூட அங்க அந்த வீட்ல தான் நடக்கணும்.. அம்மா.. நீ.. இனிமே அந்த வீட்ல தான் இருக்கணும்... இதுக்கெல்லாம் சம்மதம்னா... எனக்கும் இந்த கல்யாணத்துல மனப்பூர்வ சம்மதம்...” என்று அவள் சொல்லி முடிக்கவும் அப்படியொரு அமைதி அங்கே வீட்டினில்..
ஆனால் சங்கிலிநாதன் இதனை முன்னமே யூகித்திருப்பார் போல, பந்தல் போடும்போது கூட, வனமாலி வீட்டினில் ஆரம்பித்து, அப்படியே அந்த தெருவையே அடக்கி, மகுடேஸ்வரன் வீட்டினை கடந்து, இங்கே சிவகாமி வீடு முடிய போட சொல்லியிருந்தார்..
வனமாலி கூட கேட்டான் தான் “என்ன தாத்தா தெருவை அடக்கி போட்டு இருக்கீங்க..” என்று,
“இதுவும் நல்லாதானே இருக்கு வனா.. தெரியவேணாமா யார் வீடு கல்யாணம்னு.. சிம்பிளா பண்ணாலும் நமக்குன்னு ஒரு இது இருக்குல..” என்றுவிட்டார் அவர். சிவகாமி கேட்டதற்கும் கூட இதே பதில் தான்.
ஆனால் இப்போது கமலி இப்படி சொல்லவும் இவர் காரணமாகத்தான் செய்திருக்கிறார் என்று சிவகாமிக்குப் புரிய “கமலி.... இதெல்லாம் அத்தனை சீக்கிரம் நடக்காது...” என்றார் மகளிடம்..
“அப்போ இந்த கல்யாணம் நடக்கலைன்னா பரவாயில்லையாம்மா???”
“கமலி!!!!!!”
“ம்மா ப்ளீஸ்... நீ சொன்னதுக்கு நான் எந்த ரீசனும் கேட்காம சரின்னு சொன்னேன்.. ஆனா எனக்குன்னு சில நியாயமான விருப்பங்கள் இருக்கும்தானே.. அது ஏன் புரியலை உனக்கு.. ஏன் நான் அந்த வீட்டு பொண்ணு இல்லையா.. எனக்கு அங்க உரிமை இல்லையா...??” என, சிவகாமி வாயடைத்துப் போனார்..
மகள் கேட்பது சரிதானே... அவளும் அவ்வீட்டு மகள் தானே.. அந்த வீட்டில் பமீலாவிற்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேது கமலிக்கும் இருக்கிறது தானே. சிவகாமி வார்த்தைகள் அற்று அமைதியாகிவிட,
கமலியோ “ஏன்ம்மா நான் எதுக்குமே ஆசைப் படக்கூடாதா???” என்றாள் கண்களில் வழியும் ஏக்கத்தோடு..
“இல்ல.. இல்ல கமலி அப்படியில்லை..” என்று மறுக்க,
“வேற எப்படிம்மா.. எப்போவா இருந்தாலும் அதானே நம்ம வீடு..” என,
“ம்ம்...” என்று தலையை ஆம் என்று மேலும் கீழுமாய் ஆட்டியவர், “இதை சொல்ல உனக்கு இப்போதான் நேரம் கிடைச்சதா??” என்றார் வருத்தமாய்..
“ஹ்ம்ம் நீங்க யாராவது இதை செய்வீங்கன்னு நினைச்சேன் யாருமே இதை யோசிக்கலை.. நான் சொல்லிருந்தா கண்டிப்பா என்னை ஏதாவது சொல்லி வாய் மூட வைப்பீங்க.. அதான்..” என்றவள்,
“ம்மா இது நடக்கணும்...” என்றாள் உறுதியாய்..
மகளின் இப்பேச்சில் சிவகாமி சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தவர், “கமலி.. நீ சொல்றது எல்லாம் சரி.. ஆனா நான் எங்க இருக்கணும்னு முடிவு செய்ய வேண்டியது நான்தான்....” என,
“ம்மா...” என்றாள் அதிர்ந்து..
“நீ சொன்னது மத்தது எல்லாம் சரி.. ஆனா என்னை நீ அங்கதான் இருக்கணும்னு கட்டாயப் படுத்த முடியாது கமலி.. உங்கப்பா கூப்பிட்டே நான் போகலை அங்க.. இப்போ நீ சொல்லி நான் போனா அது அவருக்கு மரியாதை கொடுத்தா இருக்காது..”
இப்படி ஒரு கடினமான குரலில் சிவகாமி இத்தனை வருடங்களில் மகளிடம் பேசியதேயில்லை.. என்னதான் அம்மா மகள் என்றாலும் இது தான் உன்னுடைய எல்லைப் பகுதி என்று சிவகாமி கோடிட்டு காட்டிவிட்டார்.. அவருக்கு அவர் பக்க நியாயம்..
அன்றும் சரி இன்றும் சரி.. சிவகாமி தன் முடிவில் இருந்து மாற தயாராயில்லை.. அது கணவனுக்காக என்றாலும் சரி, மகளுக்காக என்றாலும் சரி.. எந்த சூழலிலும் சிவகாமி அங்கே அந்த வீட்டிற்கு செல்லும் எண்ணம் இப்போதில்லை. அதிலும் அங்கேயே வசிப்பது என்பது அவரால் முடியாத காரியம்.. கடந்து வந்த வாழ்க்கை, நினைக்கவே கூடாது என்று கடினப்படே விழுங்கிய நிகழ்வுகள் எல்லாம் அங்கே போனால் மீண்டும் காட்சியாய் விரியும்..
“இத்தனை நாள் வாய்ல என்ன வச்சிருந்த கமலி... கடைசி நேரத்துல வந்திட்டு இப்படி சொல்ற??” என்று சிவகாமியே மகளை கோபித்துக்கொண்டார்.
ஆனால் கமலியோ எதற்கும் அசருவதாய் இல்லை.. வீட்டினில் விருந்தாட்கள் நாளைய திருமணத்திற்காக வந்திருந்தனர். ஒருசிலர் சிவகாமி பக்கத்து உறவுகள், இன்னும் கொஞ்சம் பேர் மகுடேஸ்வரன் பக்கத்து உறவுகள். மிக மிக நெருங்கிய ஆட்களுக்கு மட்டுமே அழைப்பு வைத்திருக்க, அனைவரும் முதல்நாள் தான் வந்திருந்தனர்.
வந்தவர்கள் ஆளாளுக்கு பல கேள்விகள் கேட்டாலும் முடிவில் அனைவருக்குமே இதில் சந்தோசமே.
“பரவாயில்ல சிவா.. நல்ல முடிவு.. நாளைக்கு பின்ன ஒட்டு உறவுன்னு வேணாமா..” என்றுதான் சொன்னார்கள்..
கமலி அத்தனை நேரம் நன்றாகவே இருந்தவள், ராணி வந்து “கமலி தூங்க போ.. நேரமாச்சு.. நாளைக்கு அப்போதான் பிரெஷா இருக்கும்..” என,
“இருக்கட்டும் சித்தி.. கொஞ்சம் பேசணும்..” என்றாள் சிவகாமியைப் பார்த்து.
வீடிளிருந்தவர்களில் ஒருசிலர் உறங்கச் சென்றிருக்க, மற்றவர்கள் ஆங்காங்கே அமர்ந்து கதைகள் பேசிக்கொண்டு இருக்க, சிவகாமியின் அருகே இருந்த சங்கிலிநாதனோ “என்ன கமலிம்மா... இப்போ என்ன??” என்று கேட்க,
“நாளைக்கு கல்யாணம் தானே தாத்தா...” என்றார் ஒருவித யோசனையோடு..
“ஆமா...”
“எனக்கு ஒரு கண்டிசன் இருக்கு தாத்தா...” என்று அவள் ஆரம்பிக்கும்போதே சிவகாமி “கமலி என்ன இது??!!!” என்று அதட்டினார்..
“இரு சிவா கமலி சொல்லட்டும்..” என்ற சங்கிலிநாதன், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதனை எதிர்பார்த்து இருந்தாரோ என்னவோ.
“நாளைக்கு நான் கோவிலுக்கு வரணும்னா.. என்னோட கல்யாண முறைகள் எல்லாமே அந்த வீட்ல, அதாவது எங்க வீட்ல நடக்கணும்.. அவர் வீட்ல இருந்து என்னை யார் கூப்பிட வந்தாலும் சரி, அங்க வந்து தான் என்னை கூப்பிட்டு போகனும்.. அதேபோல, கல்யாணத்துக்கு அப்புறம் நடக்குற எல்லா சடங்கும் கூட அங்க அந்த வீட்ல தான் நடக்கணும்.. அம்மா.. நீ.. இனிமே அந்த வீட்ல தான் இருக்கணும்... இதுக்கெல்லாம் சம்மதம்னா... எனக்கும் இந்த கல்யாணத்துல மனப்பூர்வ சம்மதம்...” என்று அவள் சொல்லி முடிக்கவும் அப்படியொரு அமைதி அங்கே வீட்டினில்..
ஆனால் சங்கிலிநாதன் இதனை முன்னமே யூகித்திருப்பார் போல, பந்தல் போடும்போது கூட, வனமாலி வீட்டினில் ஆரம்பித்து, அப்படியே அந்த தெருவையே அடக்கி, மகுடேஸ்வரன் வீட்டினை கடந்து, இங்கே சிவகாமி வீடு முடிய போட சொல்லியிருந்தார்..
வனமாலி கூட கேட்டான் தான் “என்ன தாத்தா தெருவை அடக்கி போட்டு இருக்கீங்க..” என்று,
“இதுவும் நல்லாதானே இருக்கு வனா.. தெரியவேணாமா யார் வீடு கல்யாணம்னு.. சிம்பிளா பண்ணாலும் நமக்குன்னு ஒரு இது இருக்குல..” என்றுவிட்டார் அவர். சிவகாமி கேட்டதற்கும் கூட இதே பதில் தான்.
ஆனால் இப்போது கமலி இப்படி சொல்லவும் இவர் காரணமாகத்தான் செய்திருக்கிறார் என்று சிவகாமிக்குப் புரிய “கமலி.... இதெல்லாம் அத்தனை சீக்கிரம் நடக்காது...” என்றார் மகளிடம்..
“அப்போ இந்த கல்யாணம் நடக்கலைன்னா பரவாயில்லையாம்மா???”
“கமலி!!!!!!”
“ம்மா ப்ளீஸ்... நீ சொன்னதுக்கு நான் எந்த ரீசனும் கேட்காம சரின்னு சொன்னேன்.. ஆனா எனக்குன்னு சில நியாயமான விருப்பங்கள் இருக்கும்தானே.. அது ஏன் புரியலை உனக்கு.. ஏன் நான் அந்த வீட்டு பொண்ணு இல்லையா.. எனக்கு அங்க உரிமை இல்லையா...??” என, சிவகாமி வாயடைத்துப் போனார்..
மகள் கேட்பது சரிதானே... அவளும் அவ்வீட்டு மகள் தானே.. அந்த வீட்டில் பமீலாவிற்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேது கமலிக்கும் இருக்கிறது தானே. சிவகாமி வார்த்தைகள் அற்று அமைதியாகிவிட,
கமலியோ “ஏன்ம்மா நான் எதுக்குமே ஆசைப் படக்கூடாதா???” என்றாள் கண்களில் வழியும் ஏக்கத்தோடு..
“இல்ல.. இல்ல கமலி அப்படியில்லை..” என்று மறுக்க,
“வேற எப்படிம்மா.. எப்போவா இருந்தாலும் அதானே நம்ம வீடு..” என,
“ம்ம்...” என்று தலையை ஆம் என்று மேலும் கீழுமாய் ஆட்டியவர், “இதை சொல்ல உனக்கு இப்போதான் நேரம் கிடைச்சதா??” என்றார் வருத்தமாய்..
“ஹ்ம்ம் நீங்க யாராவது இதை செய்வீங்கன்னு நினைச்சேன் யாருமே இதை யோசிக்கலை.. நான் சொல்லிருந்தா கண்டிப்பா என்னை ஏதாவது சொல்லி வாய் மூட வைப்பீங்க.. அதான்..” என்றவள்,
“ம்மா இது நடக்கணும்...” என்றாள் உறுதியாய்..
மகளின் இப்பேச்சில் சிவகாமி சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தவர், “கமலி.. நீ சொல்றது எல்லாம் சரி.. ஆனா நான் எங்க இருக்கணும்னு முடிவு செய்ய வேண்டியது நான்தான்....” என,
“ம்மா...” என்றாள் அதிர்ந்து..
“நீ சொன்னது மத்தது எல்லாம் சரி.. ஆனா என்னை நீ அங்கதான் இருக்கணும்னு கட்டாயப் படுத்த முடியாது கமலி.. உங்கப்பா கூப்பிட்டே நான் போகலை அங்க.. இப்போ நீ சொல்லி நான் போனா அது அவருக்கு மரியாதை கொடுத்தா இருக்காது..”
இப்படி ஒரு கடினமான குரலில் சிவகாமி இத்தனை வருடங்களில் மகளிடம் பேசியதேயில்லை.. என்னதான் அம்மா மகள் என்றாலும் இது தான் உன்னுடைய எல்லைப் பகுதி என்று சிவகாமி கோடிட்டு காட்டிவிட்டார்.. அவருக்கு அவர் பக்க நியாயம்..
அன்றும் சரி இன்றும் சரி.. சிவகாமி தன் முடிவில் இருந்து மாற தயாராயில்லை.. அது கணவனுக்காக என்றாலும் சரி, மகளுக்காக என்றாலும் சரி.. எந்த சூழலிலும் சிவகாமி அங்கே அந்த வீட்டிற்கு செல்லும் எண்ணம் இப்போதில்லை. அதிலும் அங்கேயே வசிப்பது என்பது அவரால் முடியாத காரியம்.. கடந்து வந்த வாழ்க்கை, நினைக்கவே கூடாது என்று கடினப்படே விழுங்கிய நிகழ்வுகள் எல்லாம் அங்கே போனால் மீண்டும் காட்சியாய் விரியும்..