AshrafHameedaT
Administrator
அலை – 23
திருமணம் முடிந்து எப்படி இரண்டரை மாதம் கடந்ததேன்றே தெரியவில்லை நேத்ராவிற்கு. மறுவீடு, கோவில் பூஜை, தேன்நிலவு, உறவினர் வீட்டு விருந்துகள் என அது இது என்று அனைத்தையும் நினைக்கவே இப்போது மலைப்பாய் இருந்தது நேத்ராவிற்கு.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் சேர்ந்தார் போன்று எங்கும் செல்லாமல் மாமியார் வீட்டில் இருக்கிறாள் நேத்ரா.
விரும்பியவனின் கை சேர்ந்த நிறைவு, திருமணமான களை, சந்தோஷ வாழ்வின் பூரிப்பு, வஞ்சைனையில்லா விருந்து உபசாரம் என ஒரு சுற்று பெருத்துதான் போனாள் நேத்ரா.
மாமியாரோடு கேரம்போர்ட் விளையாடியபடி இருந்தவள் துரைச்சாமியின் திடீர் வருகையில் துள்ளிக்குதித்து வெளியே சென்றாள்.
இப்போதெல்லாம் அவளுக்கு எதுவும் காரியம் ஆகவேண்டும் என்றால் துரைச்சாமியை உடனடியாக தொடர்புகொண்டு விடுவாள். அதில் ரிஷிக்குத்தான் அத்தனை காண்டாக இருக்கும்.
“உனக்கு எதுவும் வேணும்னா என்னை கேட்கனும் தக்காளி. எப்போ பார் மீசையை பிடிச்சு இழுத்துட்டு வந்திடற?. என்னால முடியலைடி. இப்படி பாசத்தை பொழியறீங்க...” என மூக்கால் அழுது புலம்புவான்.
எந்தளவிற்கு ரிஷி அவர்களின் குடும்ப கட்டுதிட்டங்களை வெறுத்தானோ அதற்கு மேல் நேத்ரா அதே கட்டுதிட்டங்களில் கவரப்பட்டு ஒன்றிப்போனாள். முதலில் திணறியவள் பின் ஆர்வமாகவே அனைத்து சம்பிரதாயம் வாழ்க்கைமுறை என பின்பற்றதொடங்கினாள். அதில் துரைச்சாமிக்கு ஏக பெருமை.
“நான் கொண்டுவந்த பொண்ணாகிற்றே...” என மீசையை முறுக்கிக்கொள்வார்.
அவர் இதை சொல்லுபோதெல்லாம் சிவராமனை வாய் திறக்கவிடாமல் நிறுத்திவைக்க தான் பெரும்பாடாக இருக்கும் சுமங்கலிக்கு.
“டாட் ஏதோ சொல்ல பிரியப்படறார் மாம். விடுங்களேன் நீங்க...” என ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பான் ரிஷி. திலகா உசிதமணியின் முறைப்பில் அடங்கி நின்றாலும் அப்படி ஒரு கேலி சிரிப்பு பொங்கி தான் வரும் அவனுக்கு.
“மாமா நீங்களே வான்ட்டடா போய் சிக்கிடாதீங்க. இப்போதான் உங்க வொய்ப் ஆலமரத்தை கவுத்திருக்கா. ஓவர் பேச்சு ஊருக்கு ஆகாது...” காவேரி காதை கடிக்க அவளை ஒரு கொட்டு கொட்டி அடக்குவான்.
“நீயெல்லாம் என்னை கலாய்க்கிறியா?...” என்பதை போல. சூழ்நிலை அறியாத துரைச்சாமி,
“பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். என் பேரன் அதை புரிஞ்சு தான் செஞ்ச தப்பை உணர்ந்து நான் பார்த்த பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கறேன்னு எங்களுக்காகவே வந்து நின்னானாக்கும்...”
ஊர் மக்களிடம் பெருமை தாளிக்க அவர் கொஞ்சம் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என உசிதமணி சங்கடமாக பார்த்துவைப்பார்.
பின்னே துரைச்சாமியின் பேச்சில் சிவராமனின் குற்ற உணர்ச்சி அதிகரித்து சிறுபிள்ளை போல முகத்தை தூக்கிவைத்து பரிதாபமாக பார்க்கவே சகியாமல் போகும். சமாதானம் செய்து மீட்டெடுக்கும் முன் இவரின் பொறுமை பறந்தே போகும்.
“தாத்தா வாங்க வாங்க. நானே நாளைக்கு உங்களை பார்க்க வரனும்னு இருந்தேன். இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க...” என்றபடி நேத்ரா அவரின் கையை பற்றிக்கொள்ள சுமங்கலிக்குதான் வியப்பாக போயிற்று.
தங்கள் குடும்பத்தில் யாரும் அவ்வளவு இலகுவாக துரைச்சாமியிடம் நினைத்த நேரத்தில் நின்று பேசிவிட முடியாது. இப்பெண் அவரையே மாற்றிவிட்டாளே என்று ஆச்சர்யமாக பார்த்தாலும் மனதினுள் அத்தனை மகிழ்ச்சி.
“ஒண்ணுமில்லத்தா, நம்ம தோப்புல பனைமரம் இருக்கு. இன்னைக்கு நொங்கு வெட்டினோம். அதான் உனக்கு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்...”
வாசலிலேயே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டவர் அவளையும் தன்னருகில் அமர்த்தி,
“ஏலே பாண்டி, அங்க என்ன பராக்கு பார்த்துட்டு மசமசன்னு நிக்கித? நொங்கை எடுத்தாந்து தலையை சீவி எம்ட்டு பேத்திக்கிட்ட குடு...” மீசையை முறுக்கிகொண்டார்.
“உங்களுக்கு அழகும் கம்பீரமும் இந்த மீசை தான் தாத்தா...” என நேத்ரா சில்லாகிக்க அதில் சிலிர்த்துப்போனார் துரைச்சாமி. எப்போதும் போல நேத்ராவின் மீது அவருக்கொரு தனிப்பட்ட ப்ரியம் ஊற்றெடுத்தது.
“வாங்க மாமா. மாமா இந்தாங்க மோர்...” என சுமங்கலி வந்து நிற்க,
“இங்க வச்சிடும்மா. நான் பொறவு குடிக்கிறேன்...” என்றுவிட்டு,
“ஏலே பாண்டி இன்னுமா வேலையாவலை?...” என விரட்டினார் அவனை.
“இந்த வெயில்ல நீங்க வரனுமாங்க மாமா...” என வாய்வரை வந்துவிட்ட கேள்வியை வெளிவராமல் சிறைசெய்தபடி அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் ஒருவர் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் தாத்தாவும் பேத்தியும் அவர்களுக்குள்ளாக பேசி சிரித்தபடி இருக்க அதற்குள் நொங்கும் வர நேத்ரா சாப்பிடுவதை பார்த்துவிட்டு தானும் மோரை எடுத்துகொண்டார்.
வாரத்தில் ஒருநாள் எதையாவது கொண்டுவந்து கொடுப்பதும் இல்லை நேத்ராவை அங்கு வரவழைத்து ஒருவேளையாவது தன்னோடு உண்ணவைப்பதும் நேத்ரா வந்ததிலிருந்து வழக்கமாகிற்று அவருக்கு.
ஆரம்பத்தில் அனைவரும் இதனை கண்டு புருவம் உயர்த்தினாலும் போக போக அவர்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டனர்.
“என்ன உன் புருஷன் அந்த சண்டியர் இன்னும் வரலையா?...” துரைச்சாமி கேட்க,
“தாத்தா இது ஆப்டர் நூன். இப்போ காலேஜ்ல தான் இருப்பாங்க. ஈவ்னிங் தான் வீட்டுக்கு வருவாங்க...” நொங்கை தோல் எடுத்து வாய்க்குள் போட்டபடி சொல்ல,
“சரித்தா, சரித்தா...” என்று சொல்லியவருக்கு அவ்வப்போது ஆங்கில வார்த்தைகள் ஒன்றிரண்டை நேத்ரா கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருந்தாள். அவரும் அதை ஆட்சேபிக்காமல் கேட்டுகொள்வது தான் அதிசயத்திலும் அதிசயம்.
மாலை வரை இருந்து ரிஷி வரும் முன்னே கிளம்பியும் விட்டார். வெகு நேரம் கழித்து அலுப்போடு வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை தட்டு நிறைய நொங்கோடு வரவேற்றாள் நேத்ரா.
“என்னாச்சுங்க? ரொம்ப டயர்டா தெரியறீங்க? இதை சாப்பிடுங்க...” என்றபடி கொடுக்க அதில் ஒன்றை எடுத்துகொண்டவன்,
“என்ன மீசை வந்தாராக்கும்?...” என கேட்டு கொண்டவளின் முறைப்பை வாங்கிக்கட்டிக்கொண்டான்.
“ஓகே, ஓகே. பழகிடுச்சுடி தக்காளி. அதுக்கு இப்படி முறைக்காதே. ஏற்கனவே ரொம்ப டயர்ட்...” மாடியேற ஆரம்பித்தான் ரிஷி.
“அட்மிஷன் இந்ததடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ஹாஸ்டல் ரூம் பத்தாது. நியூ ஹாஸ்டல் கன்ஸ்ட்ரக்ஷன் வேற ஆரம்பிச்சிருக்கோம். அங்கயும் போய்ட்டு எல்லாம் பார்த்துட்டு வர டைம் வேற ஆகிட்டு...”
ரிஷியின் பேச்சை கேட்டவாறே அவனுக்கு தேவையான டவல் இத்யாதி இத்யாதிகளை எடுத்துக்கொடுத்துகொண்டிருந்தாள் நேத்ரா.
“காலேஜ்ல வேற ஒருத்தரும் வேலையே பார்க்கலையா? அத்தனை வேலையும் நீங்களே செய்யனுமா?...” என குறைபட்டுக்கொண்டே சொல்ல,
“என்னதான் ஆள் இருந்தாலும் நம்மோட கண்ட்ரோல்ல தான் எல்லாம் நடக்கனும் நேத்ரா...” என சொல்லி அவளின் கன்னம் தட்டி பாத்ரூமினுள் நுழைந்தான்.
குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வந்து நின்றவன், “அம்மா எங்க?...” என கேட்டபடி டிஷர்ட்டை எடுத்து போட்டுகொண்டான்.
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெற்றுப்பார்வை பார்க்க அதில் குழம்பி தெளிந்து தலையில் தட்டிக்கொண்டான்.
“சாரிடா நிஜமா மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஞாபகம் செய்திருக்கலாம்ல...”
“அக்கறை இருக்கிறவங்களுக்கு ஞாபகப்படுத்தனும்னு அவசியம் இல்லை. இந்நேரம் வந்திருப்பாங்க. கீழே போகலாம்...”
சமாதானம் வேலைக்காகாது என்பதை புரிந்து அவனும் எதுவும் பேசவே இல்லை. கீழே இவர்களுக்காக சுமங்கலியும் சிவராமனும் காத்திருக்க,
“மாம் ஸாரி மாம்...” அவரின் கையை பிடித்துக்கொண்டான்.
“உன்னை தெரியாதா ரிஷி. விடு. பூஜை ரூம்ல பிரசாதமும் அபிஷேக பாலும் வச்சிருக்கேன். போய் ரெண்டு பேரும் சாமிகும்பிட்டுட்டு எடுத்துக்கங்க. போடா நேத்ரா...” அவர்களை அனுப்பிவிட்டு சுமங்கலி இரவு உணவை எடுத்துவைக்க கிட்சனில் நுழைந்தார்.
ரிஷிக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக போனது. நேத்ராவை திரும்பி பார்த்தான். கை கூப்பி இறைவனை வணங்கி நின்ற அவளின் தோற்றம் இனிமையாக மனதில் நிறைந்தது.
கோவிலில் தாய் தங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அபிஷேகம். ஆனாலும் தன்னையன்றி நேத்ரா எங்கும், யாரோடும் செல்லமாட்டாள். ஆனந்தமாக இருந்தும் இன்னும் அரைமணி நேரத்தில் எப்படி வெடிக்குமோ என்ற அச்சமும் அவனுள். சமாளித்துதானே ஆகவேண்டும்.
கோவிலில் நடந்ததை சுமங்கலி கூற அதை மற்றவர்கள் கேட்டுகொண்டே அமைதியாக கழிந்தது இரவு உணவு நேரம்.
ஹாலில் வந்தமர்ந்ததும் மெதுவாக ஆரம்பித்தான் ரிஷி. இடம் பார்க்காமல் வெடித்தேவிட்டாள் நேத்ரா.
விஷயம் இதுதான் நேத்ராவின் மேல் படிப்பிற்காக சென்னையில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி இருக்கும் ரிஷி அப்ளிகேஷன் ஃபார்மில் அவளின் கையெழுத்தை அவனே போட்டு நாளை சென்னை கிளம்பவேண்டும் என்னும் முடிவோடு வந்திருந்தான்.
“யாரை கேட்டு என்னை காலேஜ்ல சேர்க்கனும்னு முடிவு பண்ணுனீங்க?...”
“யாரை கேட்கனும். எல்லாம் உன் நல்லதுக்குத்தான். நீ மேல படிச்சே ஆகனும்...”
“முடியாது. நான் போகமாட்டேன்...”
“போய் தான் ஆகனும். உன்னை லேசுல விடமாட்டேன்...”
“படிக்கனும்னா நான் நம்ம காலேஜ்ல படிக்கிறேனே...” கொஞ்சம் இறங்கி வந்தாள்.
“எதுக்கு? எதுக்கு? இங்க படிச்சு நித்தமும் ஒரு பஞ்சாயத்துன்னு என் உயிரை வாங்க. ஒன்னும் தேவையில்லை. நீ சென்னையில தான் படிக்கனும். இன்னும் ரெண்டே நாள்ல நீ அங்க இருக்கனும்...”
“நான் போகமாட்டேன். உங்களால ஆனதை பார்த்துக்கோங்க...”
“நீ போகனும். நான் உன்னை கூட்டிட்டு தான் போவேன். ரெடியாகிக்கோ...”
இருவரும் சண்டைகோழிகளாய் சிலிர்த்துக்கொள்ள யாரை அடக்குவதென்றே தெரியாமல் சிவராமனும் சுமங்கலியும் விழி பிதுங்கி நின்றனர்.
“ஹைய்யோ போதும் ரிஷி. இப்படித்தான் சந்தைகடை மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டு கட்டி உருளறதா?...”
சுமங்கலி என்னவோ சாதாரணமாக தான் கேட்டார். ஆனால் ரிஷியோ அவளை ரசனையாய் பார்த்து,
“நாங்க எப்போ எங்கம்மா கட்டி உருண்டோம்? அதுவும் ஹால்ல வச்சு...” விஷமமாய் நேத்ராவை பார்த்து கண்ணடித்தவன் சுமங்கலியிடம் பாவம் போல கேட்க சிவராமன் நழுவிவிட்டார்.
அவனின் முதுகில் பலமாய் அடித்த சுமங்கலி, “உங்க சண்டையை உங்க ரூம்ல வச்சிக்கோங்க...” என அடித்து துரத்தாத குறையாக இருவரையும் விரட்டினார்.
அறைக்குள் நுழைந்ததிலிருந்து நேத்ரா மிஞ்ச ரிஷி கெஞ்ச மீண்டும் அவன் மிஞ்ச நேத்ரா கெஞ்ச என சண்டைகள் நீண்டு சமாதானம் செல்லுபடியாகாமல் போக் நேத்ராவிற்கு கோபம் பயங்கரமாய் கொதித்துக்கொண்டு வந்தது.
“மிஸ்டர் கட்டுமரம். கெஞ்சி பார்த்தும்,சொல்லி பார்த்தும் நீங்க கேட்கலை. எனக்கென்ன? இங்க இருந்தா பக்கத்துலையே என்னை கூட்டி வச்சுதிட்டலாம். உங்க கண்ட்ரோல்ல வச்சுக்கலாம்...”
“சென்னைக்கு அனுப்பி வினையை தேடிக்கறீங்க. எனக்கென்ன? இனி வாராவாரம் பஞ்சாயத்துக்கு சென்னைக்கும் புதுக்கோட்டைக்குமா நீங்க தான் அல்லாடப்போறீங்க. அவங்களே என்னை காலேஜ்லை விட்டு அனுப்ப வைக்கிறேன். பார்த்துட்டே இருங்க...”
சபதம் போல விடைத்துக்கொண்டு விறைப்பாக பேசியவளை பார்த்து புன்னகை பொத்துக்கொண்டு வந்தது.
வாய்விட்டு சிரிக்காமல் இருந்தாலும் கண்கள் காட்டிக்கொடுக்க மீண்டும் அவனின் கன்னம் தாங்கி தாடை தடவி முத்தமிட்டு முடிவை மாற்ற நேத்ரா எத்தனை முயன்றும் வேலைக்காகாமல் மறுநாள் சென்னைக்கு கிளம்பவே செய்தாள்.
அவளின் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு செல்ல சொல்லியிருந்தவன் அடுத்த இரண்டு நாட்களும் அவளை ஒரு ஷணமும் பிரிந்து இருக்கவில்லை. வாகாக அவளும் அவனோடு ஒட்டித்திரிய,
“இரண்டுபேருக்குமே பிரிய மனமில்லை. இது எதற்கு வேண்டாத வேலை?...” என்றே எண்ண தோன்றியது நேத்ராவின் பெற்றோருக்கு.
அவளை சென்னையில் விட்டு வந்து ஒருவாரமாகிற்று. ஏனோதானோவென்று முகத்தில் அருளின்றி வளையவந்த மகனை காண சகியாத சுமங்கலி,
“ஏன் ரிஷி இப்படி உன்னையே நீ கஷ்டப்படுத்திக்கற? பேசாம நேத்ராவை கூட்டிவா...” என சொல்ல,
“நோ மாம். இது அவ ப்யூச்சர். நம்ம காலேஜ்ல ஒன்னை நேத்ரா பொறுப்பேத்து நடத்தற அளவுக்கு அவளுக்கு பொறுப்பு வரனும். இப்போ இருக்கிறது போல சின்னபிள்ளையா இருந்தா எப்படி?...”
“அதுக்கு அவ மேல படிக்கனும்னு என்ன இருக்கு ரிஷி? அதுவும் உடனே? அவளுக்கு எல்லா டேலேண்டும் இருக்கு. நானும் அப்பாவும் அவளுக்கு சொல்லி புரியவைக்கிறோம். புத்திசாலி, நிச்சயம் புரிஞ்சுப்பா...”
சுமங்கலியின் எந்த சமாதானமும் அவனிடம் எடுபடவில்லை. துரைச்சாமி வேறு வந்து கோபத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு குதித்துவிட்டு போனார். எதையும் ரிஷி கண்டுகொள்ளவில்லை.
இன்னும் ஒரு வாரம் செல்லவும் சென்று பார்த்துவருவோம். இதே மனநிலையில் சென்றால் நிச்சயம் தானே அவளை அழைத்துவந்துவிடுவோம் என்று பயந்து நேத்ராவை காணும் நாளை தள்ளிவைத்தான்.
திருமணம் முடிந்து எப்படி இரண்டரை மாதம் கடந்ததேன்றே தெரியவில்லை நேத்ராவிற்கு. மறுவீடு, கோவில் பூஜை, தேன்நிலவு, உறவினர் வீட்டு விருந்துகள் என அது இது என்று அனைத்தையும் நினைக்கவே இப்போது மலைப்பாய் இருந்தது நேத்ராவிற்கு.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் சேர்ந்தார் போன்று எங்கும் செல்லாமல் மாமியார் வீட்டில் இருக்கிறாள் நேத்ரா.
விரும்பியவனின் கை சேர்ந்த நிறைவு, திருமணமான களை, சந்தோஷ வாழ்வின் பூரிப்பு, வஞ்சைனையில்லா விருந்து உபசாரம் என ஒரு சுற்று பெருத்துதான் போனாள் நேத்ரா.
மாமியாரோடு கேரம்போர்ட் விளையாடியபடி இருந்தவள் துரைச்சாமியின் திடீர் வருகையில் துள்ளிக்குதித்து வெளியே சென்றாள்.
இப்போதெல்லாம் அவளுக்கு எதுவும் காரியம் ஆகவேண்டும் என்றால் துரைச்சாமியை உடனடியாக தொடர்புகொண்டு விடுவாள். அதில் ரிஷிக்குத்தான் அத்தனை காண்டாக இருக்கும்.
“உனக்கு எதுவும் வேணும்னா என்னை கேட்கனும் தக்காளி. எப்போ பார் மீசையை பிடிச்சு இழுத்துட்டு வந்திடற?. என்னால முடியலைடி. இப்படி பாசத்தை பொழியறீங்க...” என மூக்கால் அழுது புலம்புவான்.
எந்தளவிற்கு ரிஷி அவர்களின் குடும்ப கட்டுதிட்டங்களை வெறுத்தானோ அதற்கு மேல் நேத்ரா அதே கட்டுதிட்டங்களில் கவரப்பட்டு ஒன்றிப்போனாள். முதலில் திணறியவள் பின் ஆர்வமாகவே அனைத்து சம்பிரதாயம் வாழ்க்கைமுறை என பின்பற்றதொடங்கினாள். அதில் துரைச்சாமிக்கு ஏக பெருமை.
“நான் கொண்டுவந்த பொண்ணாகிற்றே...” என மீசையை முறுக்கிக்கொள்வார்.
அவர் இதை சொல்லுபோதெல்லாம் சிவராமனை வாய் திறக்கவிடாமல் நிறுத்திவைக்க தான் பெரும்பாடாக இருக்கும் சுமங்கலிக்கு.
“டாட் ஏதோ சொல்ல பிரியப்படறார் மாம். விடுங்களேன் நீங்க...” என ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பான் ரிஷி. திலகா உசிதமணியின் முறைப்பில் அடங்கி நின்றாலும் அப்படி ஒரு கேலி சிரிப்பு பொங்கி தான் வரும் அவனுக்கு.
“மாமா நீங்களே வான்ட்டடா போய் சிக்கிடாதீங்க. இப்போதான் உங்க வொய்ப் ஆலமரத்தை கவுத்திருக்கா. ஓவர் பேச்சு ஊருக்கு ஆகாது...” காவேரி காதை கடிக்க அவளை ஒரு கொட்டு கொட்டி அடக்குவான்.
“நீயெல்லாம் என்னை கலாய்க்கிறியா?...” என்பதை போல. சூழ்நிலை அறியாத துரைச்சாமி,
“பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும். என் பேரன் அதை புரிஞ்சு தான் செஞ்ச தப்பை உணர்ந்து நான் பார்த்த பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கறேன்னு எங்களுக்காகவே வந்து நின்னானாக்கும்...”
ஊர் மக்களிடம் பெருமை தாளிக்க அவர் கொஞ்சம் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என உசிதமணி சங்கடமாக பார்த்துவைப்பார்.
பின்னே துரைச்சாமியின் பேச்சில் சிவராமனின் குற்ற உணர்ச்சி அதிகரித்து சிறுபிள்ளை போல முகத்தை தூக்கிவைத்து பரிதாபமாக பார்க்கவே சகியாமல் போகும். சமாதானம் செய்து மீட்டெடுக்கும் முன் இவரின் பொறுமை பறந்தே போகும்.
“தாத்தா வாங்க வாங்க. நானே நாளைக்கு உங்களை பார்க்க வரனும்னு இருந்தேன். இன்னைக்கு நீங்க வந்துட்டீங்க...” என்றபடி நேத்ரா அவரின் கையை பற்றிக்கொள்ள சுமங்கலிக்குதான் வியப்பாக போயிற்று.
தங்கள் குடும்பத்தில் யாரும் அவ்வளவு இலகுவாக துரைச்சாமியிடம் நினைத்த நேரத்தில் நின்று பேசிவிட முடியாது. இப்பெண் அவரையே மாற்றிவிட்டாளே என்று ஆச்சர்யமாக பார்த்தாலும் மனதினுள் அத்தனை மகிழ்ச்சி.
“ஒண்ணுமில்லத்தா, நம்ம தோப்புல பனைமரம் இருக்கு. இன்னைக்கு நொங்கு வெட்டினோம். அதான் உனக்கு குடுத்துட்டு போகலாம்னு வந்தேன்...”
வாசலிலேயே சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டவர் அவளையும் தன்னருகில் அமர்த்தி,
“ஏலே பாண்டி, அங்க என்ன பராக்கு பார்த்துட்டு மசமசன்னு நிக்கித? நொங்கை எடுத்தாந்து தலையை சீவி எம்ட்டு பேத்திக்கிட்ட குடு...” மீசையை முறுக்கிகொண்டார்.
“உங்களுக்கு அழகும் கம்பீரமும் இந்த மீசை தான் தாத்தா...” என நேத்ரா சில்லாகிக்க அதில் சிலிர்த்துப்போனார் துரைச்சாமி. எப்போதும் போல நேத்ராவின் மீது அவருக்கொரு தனிப்பட்ட ப்ரியம் ஊற்றெடுத்தது.
“வாங்க மாமா. மாமா இந்தாங்க மோர்...” என சுமங்கலி வந்து நிற்க,
“இங்க வச்சிடும்மா. நான் பொறவு குடிக்கிறேன்...” என்றுவிட்டு,
“ஏலே பாண்டி இன்னுமா வேலையாவலை?...” என விரட்டினார் அவனை.
“இந்த வெயில்ல நீங்க வரனுமாங்க மாமா...” என வாய்வரை வந்துவிட்ட கேள்வியை வெளிவராமல் சிறைசெய்தபடி அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் ஒருவர் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் தாத்தாவும் பேத்தியும் அவர்களுக்குள்ளாக பேசி சிரித்தபடி இருக்க அதற்குள் நொங்கும் வர நேத்ரா சாப்பிடுவதை பார்த்துவிட்டு தானும் மோரை எடுத்துகொண்டார்.
வாரத்தில் ஒருநாள் எதையாவது கொண்டுவந்து கொடுப்பதும் இல்லை நேத்ராவை அங்கு வரவழைத்து ஒருவேளையாவது தன்னோடு உண்ணவைப்பதும் நேத்ரா வந்ததிலிருந்து வழக்கமாகிற்று அவருக்கு.
ஆரம்பத்தில் அனைவரும் இதனை கண்டு புருவம் உயர்த்தினாலும் போக போக அவர்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டனர்.
“என்ன உன் புருஷன் அந்த சண்டியர் இன்னும் வரலையா?...” துரைச்சாமி கேட்க,
“தாத்தா இது ஆப்டர் நூன். இப்போ காலேஜ்ல தான் இருப்பாங்க. ஈவ்னிங் தான் வீட்டுக்கு வருவாங்க...” நொங்கை தோல் எடுத்து வாய்க்குள் போட்டபடி சொல்ல,
“சரித்தா, சரித்தா...” என்று சொல்லியவருக்கு அவ்வப்போது ஆங்கில வார்த்தைகள் ஒன்றிரண்டை நேத்ரா கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருந்தாள். அவரும் அதை ஆட்சேபிக்காமல் கேட்டுகொள்வது தான் அதிசயத்திலும் அதிசயம்.
மாலை வரை இருந்து ரிஷி வரும் முன்னே கிளம்பியும் விட்டார். வெகு நேரம் கழித்து அலுப்போடு வீட்டுக்குள் நுழைந்த ரிஷியை தட்டு நிறைய நொங்கோடு வரவேற்றாள் நேத்ரா.
“என்னாச்சுங்க? ரொம்ப டயர்டா தெரியறீங்க? இதை சாப்பிடுங்க...” என்றபடி கொடுக்க அதில் ஒன்றை எடுத்துகொண்டவன்,
“என்ன மீசை வந்தாராக்கும்?...” என கேட்டு கொண்டவளின் முறைப்பை வாங்கிக்கட்டிக்கொண்டான்.
“ஓகே, ஓகே. பழகிடுச்சுடி தக்காளி. அதுக்கு இப்படி முறைக்காதே. ஏற்கனவே ரொம்ப டயர்ட்...” மாடியேற ஆரம்பித்தான் ரிஷி.
“அட்மிஷன் இந்ததடவை கொஞ்சம் அதிகமாவே இருக்கு. ஹாஸ்டல் ரூம் பத்தாது. நியூ ஹாஸ்டல் கன்ஸ்ட்ரக்ஷன் வேற ஆரம்பிச்சிருக்கோம். அங்கயும் போய்ட்டு எல்லாம் பார்த்துட்டு வர டைம் வேற ஆகிட்டு...”
ரிஷியின் பேச்சை கேட்டவாறே அவனுக்கு தேவையான டவல் இத்யாதி இத்யாதிகளை எடுத்துக்கொடுத்துகொண்டிருந்தாள் நேத்ரா.
“காலேஜ்ல வேற ஒருத்தரும் வேலையே பார்க்கலையா? அத்தனை வேலையும் நீங்களே செய்யனுமா?...” என குறைபட்டுக்கொண்டே சொல்ல,
“என்னதான் ஆள் இருந்தாலும் நம்மோட கண்ட்ரோல்ல தான் எல்லாம் நடக்கனும் நேத்ரா...” என சொல்லி அவளின் கன்னம் தட்டி பாத்ரூமினுள் நுழைந்தான்.
குளித்துவிட்டு தலையை துவட்டியபடி வந்து நின்றவன், “அம்மா எங்க?...” என கேட்டபடி டிஷர்ட்டை எடுத்து போட்டுகொண்டான்.
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெற்றுப்பார்வை பார்க்க அதில் குழம்பி தெளிந்து தலையில் தட்டிக்கொண்டான்.
“சாரிடா நிஜமா மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஞாபகம் செய்திருக்கலாம்ல...”
“அக்கறை இருக்கிறவங்களுக்கு ஞாபகப்படுத்தனும்னு அவசியம் இல்லை. இந்நேரம் வந்திருப்பாங்க. கீழே போகலாம்...”
சமாதானம் வேலைக்காகாது என்பதை புரிந்து அவனும் எதுவும் பேசவே இல்லை. கீழே இவர்களுக்காக சுமங்கலியும் சிவராமனும் காத்திருக்க,
“மாம் ஸாரி மாம்...” அவரின் கையை பிடித்துக்கொண்டான்.
“உன்னை தெரியாதா ரிஷி. விடு. பூஜை ரூம்ல பிரசாதமும் அபிஷேக பாலும் வச்சிருக்கேன். போய் ரெண்டு பேரும் சாமிகும்பிட்டுட்டு எடுத்துக்கங்க. போடா நேத்ரா...” அவர்களை அனுப்பிவிட்டு சுமங்கலி இரவு உணவை எடுத்துவைக்க கிட்சனில் நுழைந்தார்.
ரிஷிக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சியாக போனது. நேத்ராவை திரும்பி பார்த்தான். கை கூப்பி இறைவனை வணங்கி நின்ற அவளின் தோற்றம் இனிமையாக மனதில் நிறைந்தது.
கோவிலில் தாய் தங்களுக்காக ஏற்பாடு செய்திருந்த அபிஷேகம். ஆனாலும் தன்னையன்றி நேத்ரா எங்கும், யாரோடும் செல்லமாட்டாள். ஆனந்தமாக இருந்தும் இன்னும் அரைமணி நேரத்தில் எப்படி வெடிக்குமோ என்ற அச்சமும் அவனுள். சமாளித்துதானே ஆகவேண்டும்.
கோவிலில் நடந்ததை சுமங்கலி கூற அதை மற்றவர்கள் கேட்டுகொண்டே அமைதியாக கழிந்தது இரவு உணவு நேரம்.
ஹாலில் வந்தமர்ந்ததும் மெதுவாக ஆரம்பித்தான் ரிஷி. இடம் பார்க்காமல் வெடித்தேவிட்டாள் நேத்ரா.
விஷயம் இதுதான் நேத்ராவின் மேல் படிப்பிற்காக சென்னையில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி இருக்கும் ரிஷி அப்ளிகேஷன் ஃபார்மில் அவளின் கையெழுத்தை அவனே போட்டு நாளை சென்னை கிளம்பவேண்டும் என்னும் முடிவோடு வந்திருந்தான்.
“யாரை கேட்டு என்னை காலேஜ்ல சேர்க்கனும்னு முடிவு பண்ணுனீங்க?...”
“யாரை கேட்கனும். எல்லாம் உன் நல்லதுக்குத்தான். நீ மேல படிச்சே ஆகனும்...”
“முடியாது. நான் போகமாட்டேன்...”
“போய் தான் ஆகனும். உன்னை லேசுல விடமாட்டேன்...”
“படிக்கனும்னா நான் நம்ம காலேஜ்ல படிக்கிறேனே...” கொஞ்சம் இறங்கி வந்தாள்.
“எதுக்கு? எதுக்கு? இங்க படிச்சு நித்தமும் ஒரு பஞ்சாயத்துன்னு என் உயிரை வாங்க. ஒன்னும் தேவையில்லை. நீ சென்னையில தான் படிக்கனும். இன்னும் ரெண்டே நாள்ல நீ அங்க இருக்கனும்...”
“நான் போகமாட்டேன். உங்களால ஆனதை பார்த்துக்கோங்க...”
“நீ போகனும். நான் உன்னை கூட்டிட்டு தான் போவேன். ரெடியாகிக்கோ...”
இருவரும் சண்டைகோழிகளாய் சிலிர்த்துக்கொள்ள யாரை அடக்குவதென்றே தெரியாமல் சிவராமனும் சுமங்கலியும் விழி பிதுங்கி நின்றனர்.
“ஹைய்யோ போதும் ரிஷி. இப்படித்தான் சந்தைகடை மாதிரி ரெண்டு பேரும் சண்டை போட்டு கட்டி உருளறதா?...”
சுமங்கலி என்னவோ சாதாரணமாக தான் கேட்டார். ஆனால் ரிஷியோ அவளை ரசனையாய் பார்த்து,
“நாங்க எப்போ எங்கம்மா கட்டி உருண்டோம்? அதுவும் ஹால்ல வச்சு...” விஷமமாய் நேத்ராவை பார்த்து கண்ணடித்தவன் சுமங்கலியிடம் பாவம் போல கேட்க சிவராமன் நழுவிவிட்டார்.
அவனின் முதுகில் பலமாய் அடித்த சுமங்கலி, “உங்க சண்டையை உங்க ரூம்ல வச்சிக்கோங்க...” என அடித்து துரத்தாத குறையாக இருவரையும் விரட்டினார்.
அறைக்குள் நுழைந்ததிலிருந்து நேத்ரா மிஞ்ச ரிஷி கெஞ்ச மீண்டும் அவன் மிஞ்ச நேத்ரா கெஞ்ச என சண்டைகள் நீண்டு சமாதானம் செல்லுபடியாகாமல் போக் நேத்ராவிற்கு கோபம் பயங்கரமாய் கொதித்துக்கொண்டு வந்தது.
“மிஸ்டர் கட்டுமரம். கெஞ்சி பார்த்தும்,சொல்லி பார்த்தும் நீங்க கேட்கலை. எனக்கென்ன? இங்க இருந்தா பக்கத்துலையே என்னை கூட்டி வச்சுதிட்டலாம். உங்க கண்ட்ரோல்ல வச்சுக்கலாம்...”
“சென்னைக்கு அனுப்பி வினையை தேடிக்கறீங்க. எனக்கென்ன? இனி வாராவாரம் பஞ்சாயத்துக்கு சென்னைக்கும் புதுக்கோட்டைக்குமா நீங்க தான் அல்லாடப்போறீங்க. அவங்களே என்னை காலேஜ்லை விட்டு அனுப்ப வைக்கிறேன். பார்த்துட்டே இருங்க...”
சபதம் போல விடைத்துக்கொண்டு விறைப்பாக பேசியவளை பார்த்து புன்னகை பொத்துக்கொண்டு வந்தது.
வாய்விட்டு சிரிக்காமல் இருந்தாலும் கண்கள் காட்டிக்கொடுக்க மீண்டும் அவனின் கன்னம் தாங்கி தாடை தடவி முத்தமிட்டு முடிவை மாற்ற நேத்ரா எத்தனை முயன்றும் வேலைக்காகாமல் மறுநாள் சென்னைக்கு கிளம்பவே செய்தாள்.
அவளின் வீட்டிலிருந்தே கல்லூரிக்கு செல்ல சொல்லியிருந்தவன் அடுத்த இரண்டு நாட்களும் அவளை ஒரு ஷணமும் பிரிந்து இருக்கவில்லை. வாகாக அவளும் அவனோடு ஒட்டித்திரிய,
“இரண்டுபேருக்குமே பிரிய மனமில்லை. இது எதற்கு வேண்டாத வேலை?...” என்றே எண்ண தோன்றியது நேத்ராவின் பெற்றோருக்கு.
அவளை சென்னையில் விட்டு வந்து ஒருவாரமாகிற்று. ஏனோதானோவென்று முகத்தில் அருளின்றி வளையவந்த மகனை காண சகியாத சுமங்கலி,
“ஏன் ரிஷி இப்படி உன்னையே நீ கஷ்டப்படுத்திக்கற? பேசாம நேத்ராவை கூட்டிவா...” என சொல்ல,
“நோ மாம். இது அவ ப்யூச்சர். நம்ம காலேஜ்ல ஒன்னை நேத்ரா பொறுப்பேத்து நடத்தற அளவுக்கு அவளுக்கு பொறுப்பு வரனும். இப்போ இருக்கிறது போல சின்னபிள்ளையா இருந்தா எப்படி?...”
“அதுக்கு அவ மேல படிக்கனும்னு என்ன இருக்கு ரிஷி? அதுவும் உடனே? அவளுக்கு எல்லா டேலேண்டும் இருக்கு. நானும் அப்பாவும் அவளுக்கு சொல்லி புரியவைக்கிறோம். புத்திசாலி, நிச்சயம் புரிஞ்சுப்பா...”
சுமங்கலியின் எந்த சமாதானமும் அவனிடம் எடுபடவில்லை. துரைச்சாமி வேறு வந்து கோபத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு குதித்துவிட்டு போனார். எதையும் ரிஷி கண்டுகொள்ளவில்லை.
இன்னும் ஒரு வாரம் செல்லவும் சென்று பார்த்துவருவோம். இதே மனநிலையில் சென்றால் நிச்சயம் தானே அவளை அழைத்துவந்துவிடுவோம் என்று பயந்து நேத்ராவை காணும் நாளை தள்ளிவைத்தான்.