ஒன்னாங்கல்லு ஒசந்த கல்லு
இரண்டாங்கல்லு ராட்டினகம்பி
மூனாங்கல்லு முத்தரையன் பேட்டை
நாலாங்கல்லு நகமலைச் செண்டு
அஞ்சாங்கல்லு பஞ்சவர்ணம்
ஆறாங்கல்லு பாறைக்கல்லு
ஏலேலம்மா எமக்கொரு கல்லு
என்றவாறே கல்லை தூக்கிப் போட்டு மகிழினி பிடிப்பதற்குள் அதை பிடித்திருந்தான் நந்தா..
அவனை முறைத்தவள் "கல்லை கொடு நான் போகனும்" என கத்த துவங்க.. காதில் கைகளை வைத்து பொத்தியவன் "ஏன்டி இப்படி கத்துற.. அப்புறம் பாவாக்கு காது கேட்காம போயிட்டா உனக்கு தான் கஷ்டம் பாத்துக்கோ" என்றான் விஷமப் புன்னகையுடன்
அதைக் கேட்டு உதட்டை சுழித்த மகிழினி "நீ ஒன்னும் எனக்கு பாவா இல்லை.. அந்த கல்லை நீயே வச்சு உன் அப்பத்தாட்ட கொடுத்து பொறிச்சு சாப்பிடு" என நகர்ந்தவளை
"பாதி விளையாட்டுல எங்க போற.. கல்லு வேண்டாமா" என நந்தா நிறுத்த.. திரும்பி அவனை பார்த்தவள் "ம்ம்.. சத்தியமங்கலம் காட்டில புலி மேய்க்கப் போறேன்.. வரியா.. உன்கூட பேசறத என்னோட அவ்வா பாத்தா எனக்கு சங்கு தான்" என்றவாறே தன் கையில் மீதம் இருந்த கற்களையும் கீழே எறிந்துவிட்டு ஓடிவிட்டாள் பதிமூன்று வயது மகிழினி.
தலைமுறைகள் கடந்த நட்பில் ஏற்பட்ட விரிசலை.. உறவு என்ற இழை சரி செய்யுமா.. அல்லது இன்னும் விபரீதமாக்குமா..
-நாயகன் வருவான்...
வணக்கம் தோழமைகளே..
சிறு வயதில் இருந்து பார்த்த கேட்ட விஷயங்களை வைத்து.. நட்பு.. காதல்.. துரோகம் என கிராமத்து பின்னணியில் சொல்ல முயல்கிறேன்.. விரைவில் முதல் அத்யாயத்துடன் வருகிறேன்..
மதுகிருஷ்ணா?
இரண்டாங்கல்லு ராட்டினகம்பி
மூனாங்கல்லு முத்தரையன் பேட்டை
நாலாங்கல்லு நகமலைச் செண்டு
அஞ்சாங்கல்லு பஞ்சவர்ணம்
ஆறாங்கல்லு பாறைக்கல்லு
ஏலேலம்மா எமக்கொரு கல்லு
என்றவாறே கல்லை தூக்கிப் போட்டு மகிழினி பிடிப்பதற்குள் அதை பிடித்திருந்தான் நந்தா..
அவனை முறைத்தவள் "கல்லை கொடு நான் போகனும்" என கத்த துவங்க.. காதில் கைகளை வைத்து பொத்தியவன் "ஏன்டி இப்படி கத்துற.. அப்புறம் பாவாக்கு காது கேட்காம போயிட்டா உனக்கு தான் கஷ்டம் பாத்துக்கோ" என்றான் விஷமப் புன்னகையுடன்
அதைக் கேட்டு உதட்டை சுழித்த மகிழினி "நீ ஒன்னும் எனக்கு பாவா இல்லை.. அந்த கல்லை நீயே வச்சு உன் அப்பத்தாட்ட கொடுத்து பொறிச்சு சாப்பிடு" என நகர்ந்தவளை
"பாதி விளையாட்டுல எங்க போற.. கல்லு வேண்டாமா" என நந்தா நிறுத்த.. திரும்பி அவனை பார்த்தவள் "ம்ம்.. சத்தியமங்கலம் காட்டில புலி மேய்க்கப் போறேன்.. வரியா.. உன்கூட பேசறத என்னோட அவ்வா பாத்தா எனக்கு சங்கு தான்" என்றவாறே தன் கையில் மீதம் இருந்த கற்களையும் கீழே எறிந்துவிட்டு ஓடிவிட்டாள் பதிமூன்று வயது மகிழினி.
தலைமுறைகள் கடந்த நட்பில் ஏற்பட்ட விரிசலை.. உறவு என்ற இழை சரி செய்யுமா.. அல்லது இன்னும் விபரீதமாக்குமா..
-நாயகன் வருவான்...
வணக்கம் தோழமைகளே..
சிறு வயதில் இருந்து பார்த்த கேட்ட விஷயங்களை வைத்து.. நட்பு.. காதல்.. துரோகம் என கிராமத்து பின்னணியில் சொல்ல முயல்கிறேன்.. விரைவில் முதல் அத்யாயத்துடன் வருகிறேன்..
மதுகிருஷ்ணா?