தனம் தரம் கெட்டு போகலையா!!! என்னங்கய்யா தனத்தோட சட்டம்?
தம்பியும் தங்கையும் சரண்யாவ ஏத்துகிட்டா தான் அண்ணா இனி செய்வான்னு வந்துட்ட மாதிரி இருக்கே.... சரண்யா சொல்ற மாதிரி வெற்றிக்கு தாங்கி நிற்கிற உடன்பிறப்புகள் தான். என்னன்னாலும் நியாயம் பார்க்காம அவன் கூட தான்..
சரண்யா அவ குடும்பத்துக்கு boundaries set பன்னிட்டா. நல்லது தான்.
அபி குற்ற உணர்ச்சி தூண்டறான்னு புரிஞ்சிகிட்டானே...
இந்த மாமியார் கிழவி சும்மா இருக்கப்போறதில்லை. உரிமையாம் உரிமை.. சரண்யா இல்லாம குழந்தைகளுக்கு மொட்டையாம்... இந்த கெட்டவங்களுக்கெல்லாம் அவங்க மனசாட்சி "நீ செய்றது பேசறது தான் சரி, நியாயம்"னு சொல்லுமோ!!! கொஞ்சமும் ஒரு பொண்ணுக்கு இவளோ கஷ்டம் கொடுக்கறோம்னே புரியாதா? சினிமால எல்லாம் வில்லன்ஸ் ஆமா நான் வில்லன் தான்னு இருப்பாங்க.. இந்தம்மா சாபம் விடுது, சாமிகிட்ட வேண்டுது....
இப்பவும் வெற்றிக்கு பேச
தோணலையா? இல்ல சரண்யாவே முக்கியமா தெரியலையா? இல்ல சரண்யா பதிலடி கொடுக்கனும்னு அவ முகத்த பார்க்கறானா?